Sunday, March 9, 2008

மெல்லத் திறந்தது கதவு.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி கோவை மாநகரின் மையப் பகுதியில் 167 ஏக்கர் பரப்பளவில் படர்ந்து கிடக்கிற மத்திய சிறைக் கூடத்தின் கதவுகள் மிக மெல்லத் திறந்தன. ஒன்பதரையாண்டுகளாக இன்று திறக்கும் அல்லது நாளை திறந்துவிடும் என்று பரிதவித்துக் கொண்டிருந்தவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களுக்கும் ஏந்திய கரங்களுக்கும் ஒரு விடிவு பிறந்தது.
1998 பிப்ரவரி 14 ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனா. 250பேர் காயமடைந்தனர். பலகோடி மதிப்பள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்தக்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 168 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுமார் 60 வயதுடைய முஹம்மது தஸ்தகீர் முறையான சிகிட்சை தரப்படாதததால் இறந்துவிட்டார். மற்றொருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.
அரசின் கொள்கை முடிவிற்கேற்ப தீலிரவாத சிறைக்கைதிகளை அடைப்பதற்காக தொடக்கத்தில் கோவை சேலம் மற்றும் திருச்சியில் உயர் பாதுகாப்பு கட்டித் தொகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் பெருகி வரும் தீவிரவாத சிறைக்கைதி களை கையாளவும் அவர்களைப்பிரித்து தனிமைப்படுத்தி வைப்பதற்கும் ஏதுவாக இத்தைகயை உயர் பாதுகாப்பு கட்டிட தொகுதி முறையை ஏனைய ஒன்பது மத்திய சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது என்று தமிழக சிறைத்துறை குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. அதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் உள்ள சில பகுதிகள் உயர் பாதகாப்புச் சிறைகளாக மாற்றப்பட்டன. 10 ம் நம்பர் பிளாக்கும் வால்மேடும் மருத்துவமனையின் ஒரு பகுதியும் உயர் பாதுகாப்பு சிறைகளாக மாற்றப்பட்டன. மின்வேலி பல அடுக்குப் பாதுகாப்பு தனி செக்யூரிட்டிகள் என பல அம்சங்கள் பாதுகாப்பு கட்டிடத் தெகுதிகளில் அமைக்கககப்ட்டுள்ளன. 10 ம்பிளாக்கிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் தீவு மாதிரி தனி காம்பவுண்டுக்குள் தனி செக்யூரிட்டியடன் 120 செல்களைக் கொண்டிருந்த வால்மேட்டில் தான் பெரும்பான்மையான குண்டுவெடிப்புக் கைதிகள் அடைக்கப்படடிருந்தனர். 10 ம் நம்பர் பிளாக்கில் சுமார் 20 பேரும் மருத்துவமனையில் சுமார் 30 பெரும் அடைக்ப்பட்டிருந்தனர்;.
குண்டு வெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 166 பேர் விசயத்தில் நீதி தேவதை முதன்முறையாய் திருவாய் மலர்ந்தருளினாள். இந்திய நீதி அமைப்பின் மிகிமிக மோசமான பாசிச போக்கின் கொடுமையான ஒரு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வகை;கும் பணி அன்று தொடங்கியது.
166 நபர்களில் 158 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம் அவர்களில் 69 பேர் மீது கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய 84 பேருக்கும் கூட்டுச் சதியில் தொடர்பில்லை ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது. ஒரு கால் ஊனமுற்ற நிலையில் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு;க் கொண்டு 3390 நாட்கள் ஒரு பரேல் கூட வழங்கப்படாமல் சிறை வாசம் அனுபவித்த கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துன்னாஸர் மஃதனீ அன்று விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 8 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி உருத்திராபதி கூறினார். முன்னரே ஜாமீன் பெற்றிருந்த மூன்று போரைத் தவிர்த்து மற்ற ஐவரும் அன்று மாலை விடுதலையாகி வெளியே வந்தார்கள்.
கலவரங்களின் போது ஒரு கல்லை எடுத்து வீசியதை கூட பெரும் குற்றமாக கருதி, வாலிபத்தின் வாசலில் நின்ற இளைஞர்களை 9 ஆண்டுகள் சிறையில் வைத்த இறுக்கமான ஒரு நீதிமன்றம், அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் சிறு அளவிலேனும் கூட இல்லதிருந்தால் ஒழிpய 8 நபர்களை விடுதலை செய்திருக்காது. இத்தகையவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் தலையாய நீதிஅமைப்பான உச்ச நீதிமன்றம் கூட ஒரு நியாயத்தை வழங்க முடியாத நிலையில் இருந்தது என்றால் ஒட்டு மொத்த நீதி அமைப்பின் மீது ஒரு வகை ஆயாசம் படர்வதை தவிர்க்க முடியவில்லை. இவர்களது ஜாமீன் மனுக்கள் உயர்நீதி மன்றத்தாலும் உச்சநீதிமன்றத்தாலும் எத்தனை முறை நிராகரிக்கப்பட்டன? அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் அரங்கேற்றிய நாடகங்கள் எத்தனை? ஓரு நாகரீக சமுதயம் வெட்கித் தலைககுணிய வேண்டிய விசயங்கள் அல்லாவா அவை?
வக்கிரமான வாழ்கையையே தத்தவமாக கொண்ட இந்துத்தவா சக்திகள், அப்துல் நாஸர் மதானி நிரபராதி என்று அறிவிக்கப்ட்டதை அரசியல் காரணங்களுக்காக கொச்சைப்படுத்தினாலும் அவருடன் சேர்ந்து விடுவிக்கபட்ட கோவை லாலிரோட்டை சேர்ந்த நவுசாத், கரும்புக்கடையை சேர்ந்த சர்தார், குணியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது, சந்தராபுரத்தைச் சோந்த அக்கோஜி என்ற சிவக்குமார் கோழிக்கோட்டை சேர்ந்த அஸ்ரப், சுபேர், கொல்லத்தைச் சோந்த ஆர்மீ ராஜுஆகிய ஏழபேர் மீது அரசியலின் எந்த இழிபிறப்பு வார்ததையை பிரயோகிக்க முடியும்.? குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற ஒற்றை வார்த்தை அவாகளின் எதிர்கால வாழ்கையில் ஆயிரமாயிரம் மத்தாப்பூக்களை ஒளிரச் செய்தாலும், கடந்து போன ஒன்பதாண்டுகளின் கண்ணீர் வரலாற்றுக்கும் கவலைக்கும்; எந்த மருந்தை பூச முடியும்.
எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத சர்தாரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் படித்துக் கூடப் பார்க்காமல் தள்ளுபடி செய்தது. வழககை தினசரி நடத்தி விரைந்து முடிக்குமாறு அறிவுரை சொல்லி திருப்பி அனுப்பிவிட்டது.
கோவையில் நடைபெற்ற முறையற்ற குண்டு வெடிப்புக்களுகாக இங்கு வாழந்த முஸ்லிம் சமூகம் தலைகுணிய நேர்ந்தது என்றால் இந்த நிராபாதிகளை அவர்களின் அனைத்து விதமான அபயக்குரல்;களையும் நெறித்து 9 ஆண்டகள் சிறைவைத்ததற்காக இந்த தேசத்தின் நீதியமைப்பும் அதை ஆட்டிப்படைக்கிற உளவுத்துறை சக்திகளும் அதை நிருவகிக்கிற அரசம் தலைகுணியத்தான் வேண்டும்.
இங்கிலாந்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த கார்விபத்தை சத்திதிட்டம் என்று இங்கிலாந்து அரசு கூறிய போது அதில் தொடாபுடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸதிரேலிய அரசு டகர்டர் ஹனீப் என்ற 27 வயது பெங்களூர்காரை கைது செய்தது. அவரை 27 நாள் தனிமைச் சிறையில் வைத்துவிட்டு பிறகு விடுதலை செய்தது. அப்பொது ஹனீபின் விடுதலையை வரவேற்ற அத்தனைபேரும் ஆஸ்திரேலிய நீதி அமைப்பை பாராட்டினார்கள். சட்த்தை பாதுகாக்கிற காவல் துறையால் நிகழந்துவிட்ட ஒரு தவறை உடனடியாக சரி செய்த அந்நாட்டின் நீதி அமைப்பு ஒரு தனி மனிதனின் மரியாதையை மட்டும் மீட்டுத்தரவில்லை ஒரு தேசத்தையே தலைநிமிரச் செய்தது.
செழிப்பாக சென்று கொண்டிருந்த தன் வாழ்கையை ஒரு சில மணிநேரத்தில் ஆஸ்திரேலிய அரசு குப்புறக்கவிழ்த்தி விட்டதை, டாக்டர் ஹனீப் கொடுமையான அனுபவமாக உணர்ந்தாலும் கூட அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே திரும்பிச் செல்ல விரும்புகிறார். ஆந்நாடடின் நீதி அமப்பின் மீது அபரிமிதமான மரியாதை இருந்தால் தவிர இது சாத்தியமாகாது. ஐரோப்பிய சமுதாயம் தன்னை நாகரீக சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு வகையில் நியாயமிருப்பதாகவே அன்று பார்வையாளர்கள் பலரும் கருதினார்கள்.
ஆனால் மதானி விசயத்திலும் அவருடன் விடுதலை செய்யப்பட்ட மற்ற ஏழு பேர் விசயத்திலும் அவர்களது விடுதலை ஆரவாரமாக வரவேற்கப்பட்ட அதே சமயத்தில் இந்த நாட்டின் உளவுத்றையின் கோர முகத்தை கண்டு மக்கள் முகம சுளித்தார்கள். அதற்கு துணைபோகிற நீதிமன்றங்களின் போக்கு விமர்ச்சிக்கப்பட்டது. அதை ஆதரித்தும் அனுசரிததும் சென்ற அரசுகளின் மரியாதை கிழித்துக் குதறப்பட்டது.
இந்த எட்டு பேரைத் தவிர சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு அதிகபட்டசமாக வழங்கப்படத்தகுந்த தண்டணைகாலத்தை ஏற்கெனவே அனுபவித்துவிட்ட சுமார் 84 பேரும் தொடாந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஒன்பதாண்டு சிறைவசாம் அவர்களை பெரும்பாலும் மௌனிகளாக மாற்றியிருக்கிறது. சிறை சென்ற தொடக்க நாடகளில் நடந்த கொடுமைகள் சமூகத்தால் புறக்கணிக்கபட்ட சூழல் குடும்பத்தினருக்கு நேர்ந்த திடீர்ச் சிரமங்கள் அவர்களை கண்களை மூடி மீண்டும் ஒரு முறை அந்த வலியை நினைத்து துடிக்க வைக்கிறது. ஒரு நான்கு முறையேனும் அழாமல் தொடாந்து 10 நிமிடங்களுக்கு அவாகளிடம் பேச முடியாது. இவர்களில் பெரும்பாலானோர் சிறையை முதன்முறையாகப் பார்த்தவர்கள். தனித்தனியாக அடைக்கப்படுகிற செல்களைக் கொண்ட வால்மேடும், 10 ம்நம்பர் பிளாக்கும் சிறை மருத்துவமனையும் அவர்களை கதிகலங்கச் செய்தள்ளது. குடும்பத்திற்கேற்பட்ட சிரமங்கள் மனைவி குழந்தைகளை பிரிந்த வாழ்தல் சம்பாதித்து தருபவர்கள் யாரும் இன்றி குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் இவைஎல்லாம் இடைவெளி இல்லாமல் அவர்களை அழ வவைத்திருக்கிறது.
ஆரம்பத்தில் அழுது அழுது என் கண்ணீரே வற்றிவிட்டது. கடைசி சில ஆண்டுகளில் நான் அழவேண்டும் என்று நினைத்தால் கூட கண்ணீர் வராது. விடுதலையாகி வெளியே வந்து திறந்த வெளியில் கம்பிகளின் இடையூறு இல்லாமல் என் குடும்பத்தை பார்த்தபோது பலவருடங்களுக்குப்பிறகு ஆனந்தத்தால் என்களில் கண்ணீர் வந்தது என்று ஒருவர் சொன்னார்.
17 வயது பாஷா, அபுதாஹரிர் முதல் 60 வயது தஸ்தகீர் வரையிலும், திருமணமாகாத இளைஞர்கள், திருமணமாகி குழந்தைகள் உள்ளோh,;புதிதாக திருமணம் செய்தோர் என பலதரப்பட்டவர்களும் அவரவர் சூழ்நிலைக்கும் சிரமத்திற்கும் ஏற்ப அனுபவித்தி வேதனை கதைகள் அத்தனையும் அவ்வளவு எளிதில் சொல்லி முடியக் கூடியவை அல்ல.
சுமநிலைச்சமுதயாத்தின் வாசகர் ஒருவர் நான் சிறைக்குள் சென்ற போது என் முதல் குழந்தைக்கு ஒண்ணரைவயது இரண்டாவது குழந்தைக்கு ஆற வயது என்றார்.
சூரிய ஒளியை பார்க்காமல் ரெம்ப நாட்களாக இருந்தோம், ஆரம்பத்தில் ஏட்டு மாதங்கள் நான் வானத்தையே பார்க்க முடிந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு நண்பர் பேசத் தொடங்கினார். அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் நானும் என்னோடிருந்த சிலரும் பேசச் சக்தியற்றவர்களானோம். அடைக்கப்ட்ட சிறைக்குள்ளேயே சிலருக்கு ஒரு வருடம் கழிந்திருக்கிறது. எப்போதாவது சவரம் செய்வதற்கு திறந்துவிடுவதை தவிர மற்ற நேரங்கள் முழவதும் அடைத்தே வைப்பார்களாம். மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று யாராவது சற்று கோபமுற்று கேட்டுவிட்டால் அடிதான். ஆரம்பத்தில் திடீர் திடீர் என்று செல்களைத் திறந்த அடிப்பார்கள். என்ன ஏது என்று காரணம் புரியாது என்று ஒருவர் சொன்னார். ஆறுமாதம் வரைக்கும் திடீர் திடீர் என செல்களை திறந்து அடிப்பது தொடர்ந்திருக்கிறது.
சிறைக் கைதிகளுக்கு சாதாரணமாக தரப்பட வேண்டிய உரிமைகளும் சலுகைகளும் குண்டு வெடிப்புக் கiதிகளுக்கு மறுக்கப் பட்டுள்ளது. 1998 மார்ச் 3 ம்தேதி அனைத்து கைதிகளையும் வார்டர்கள் கூட்டமாக தாக்கியுள்ளனர். ஏதோ அராசங்கமே திட்மிட்டு நாள் குறித்து கொடுத்தது போல தமிழகத்தில் குண்டு வெடிப்பக் கiதிகள் சிறை வைக்கப்பட்டள்ள அனைத்து இடங்களிலும் இது நடந்துள்ளது. உச்ச கட்டமாக வேலூர் ஜெயலில் ஒருவருக்கு அவரது முதுகந்தண்டில் பலமான அடி விழுந்தத்தில் இன்று வரை பெல் அணிந்து நடமாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிரக்கிறார்.
இந்தத் தொல்லைக்ள குறித்து தெரிவிக்கவோ, நிவாரணம் பெறவோ போதிய வசத்திவாய்ப்புக்கள் எதுவும் அப்போது எங்களிடம் இருக்கவில்லை இந்த எங்களின் நிலைக்காக குரல் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று ஒருவர் கூறனார்.
பல மாதங்கள் எங்களில் பலர் குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முதன்முதலாக சென்னiயில் ஒரு பெண் என் மகனை காட்ட மறுக்கிறார்கள் என்று ரிட் மனுத் தாக்கல் செய்த பிறகு அவரை மட்டும் குடும்பத்தினர் சந்திக்க அனுமதித்தார்கள். பிற்காலங்களில் எங்களை குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கும் போது உள்ளே செமையாக அடித்து விட்டு குடும்பத்தாரிடம் எதையும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். நாங்களும் இதை சொன்னால் குடும்பத்தினர் வேதனைப்படுவார்களே என்ற கவலையில் அவர்களிடம் இதை மறைத்து விடுவோம். குடும்பத்தினரைச் சந்திக்கும் போது உருதுவில் பேச் கூடாது என்று ஒவ்வொரு முறையும் எச்சரித்து அனுப்பப்படுவார்களாம்.
குண்டு வைத்தவர்கள் என்ற தாக்கமும் கோபமும் தொடக்கத்தில் மூன்று வருடங்களுக்கு சிறைக்காவலர்கள்,மருத்துவர்கள்,மற்ற கைதிகள் என அனைத்தது தரப்பினரிடமும் இருந்தள்ளது. கைது செய்யப்பட்ட எல்லோரையும் தீவிரவாதி என்ற கண்ணோட்த்திலேயே நடத்தியுள்ளனர். குண்டு வெடிச்சவனா நீ என்று என்று கேட்டுக் கேட்டுத் தொல்லை செய்துள்ளனர். மருத்துவத்திற்கு சென்றால் கையை தொட்டுக் கூடப் பார்க்காமல் திருப்பித்திருப்பி உள்ளே அனுப்பியயுள்ளனர். சில சந்தர்ப்பத்தில் மருத்துவர்களும் சேர்ந்து அடித்துள்ளார்கள். சிலரை நர்ஸுகள் கூட அடித்துள்ளனர்;. எனக்கு பைல்ஸ் இருந்தது என்று சொன்ன ஒருவர் நான் வேதனையோடு சென்றால் பேருக்கு சாதாரணமாக சில மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். சரியான சிகிட்சை தரப்படவில்லை என்;றார். 60 வயதான தஸ்தகீருக்கு சரியான சிகிட்சை தரப்படவில்லை. அவரது வியாதி அதிகரித்தக் கொண்டே சென்றது. எல்லோருமாக சென்று பிரச்சினை செய்த பிறகே வெளியே கிசிட்கை;கு அனுப்பியுள்ளார்கள். அவரது வயிற்றிலிருந்து 18 லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. சிகிட்கை பலனின்றி அவர் இறந்தார். அவரது நோயின் தீவிரத்தன்மையை கவனிக்காமல் வெறும் கேஸ் டிரபிள் என்று சொல்லி அவரை பல முறை திருப்பியனுப்பியுள்ளார்கள். ஒரு கiதிக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அவருக்கான மருத்துவ உதவியும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது.
ஒருவருக்கு அக்குளில் ஒரு கட்டி வந்தததற்காக சிறைக்கைதிகள் போராடி வெளி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியுள்ளது. ஒருவருக்கு இப்படி எற்பட்டதுதெரிந்தவுடன் அனைத்து குண்டு வெடிப்புக் கiதிகளும் எய்ட்ஸ் பரிசாதனை செய்துள்ளனர். அல்லாஹ்வின் கிருபையால் மற்ற யாருக்கும் அந்தக் கொடுமை நிகழவில்லை.
திருமணமான புதிதில் மனைவியை பிரிந்த இளைஞனின் விரக தாபம் நாச10க்காக சொல்லப்பட்டாலும் அதில் வெளிப்படும் வேதனையின் ஆழம் எந்த அளவகளுக்குள்ளும் அடங்காதது. என் மனைவி என்னை பார்க்க வருவாள் கண்ணால் பார்க்க முடிந்த அவளை விரலால் தொடக் கூட முடியாது. இரண்டு பெருக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்தது.
குடும்பஸ்த்தர் ஒரவரின் பரிதவிப்பு வித்தியாசமானது. வாரத்திற்கு ஒரு மறை வீட்டிலிருந்து வருவார்கள். பழம் பிஸ்கட் கொண்டு வருவார்கள். சம்பாதித்து தரவேண்டிய நான் உளளே இருக்க என் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் இவைகளை நான் சாப்பிடுவதா என்ற எண்ணத்தில் இது போல் ஒன்னும் வாங்கி வர வேண்டாம் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிட்டுப் போ என்று சொல்வேன். மனைவி பராவயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வலக்கட்டாமாக கொடுத்து விடு;ச் செலவாள். மாதத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பையனும் பொன்னும் வருவார்கள் அவர்களை தூக்க முடியாது என்னும் அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் தவிப்பு தளும்பகிறது. மனைவி விடை பெற்றுச் செல்லும் போது முடிந்தால் அடுத்தவாரம் வா. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி அனுப்புவேன் என்று அவர் வெளிப்படையாக கூறுவதை கேட்கையில் ஒரு பெருமூச்சு பிறக்கிறது.
குடும்பத்தினர் வந்து பாhக்கவில்லையே என்று சிலர் மிகவும் வருத்த மடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தயங்கிக் கொண்டு பாhக்க வராமல் இருந்தவர்கள் பிறகு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அலைச்சல், காவல் துறையின் கடுமையான செக்கப் அகியவற்றை தாண்டி காத்திருத்து அவர்களை சந்திக்க வேண்டியிருந்தது.அதில் ஒரு நாள் கழிந்துவிடும். யாராவது வந்து பாருங்கள் என்று கெஞ்ச வேண்டிய சூழலும் சிலருக்கு நேர்ந்திருக்கிறது.
சிறைவாசிகளில் 4 பேருக்கு சிiறியலிரக்கும் போதே திருமணம் நடந்தள்ளது. சில மணிநேர பரேலில் வந்த அவர்கள் திரமணத்தை முடிந்து கொண்டு திரம்பியுள்ளார்கள். சிறையில் கிடைக்கிற உயர் கல்வி கற்கும் வசதியை பயன் படுத்தி 5 பேர் முதகலை பட்டம் பெற்றிரக்கிறார்கள். 15 க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியுள்ளார்கள்.
ஊங்களுக்கு எற்பட்ட சிரமங்கள் என்ன என்று கேட்டால். சொல்ல முடியாத சிரமங்கள் ஏராளம். அல்லாஹ்விடம் தான் அவற்றை சொல்ல முடியும் என்று சொன்ன அவர் அடுத்துச் சொன்ன வார்த்தைகள் தேவைனயின் உச்சம். இஸ்லாத்தில் அனுமதியிருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து விட்டு பேசாமல் இருந்துவிட்டோன். 48 கிலோ குற்றப்பத்hகை கொடுத்தார்கள் அதை நான் தொடக் கூட இல்லை. குற்றம் செய்திருந்தால் தானே தொடனும்?
கைதிகள் சிறை வகை;கப்பட்ட இடத்திலிருந்து சிலரது குடும்பம் இரண்டே கிலோ மீட்டர் தொலைவில் வசித்தாலும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்க முடியாமல் போன சோகம் பலரை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். அவரை இறுதியகப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள்தான் எனக்கு செய்தியே கிடைத்தது. சிறையில் என்னை அடிக்கடி சந்தித்து இன்னும் ஒரு மாத்தததில், இன்னும் மூன்று மாதத்தில் நீ விடுதலையாகிவிடுவாய் என்று எனக்கு ஆறதல் கூறி வந்த என் தாயையும் நான் சமீபத்தில் இழந்தேன். அப்பொது பரேலில் வர அனுமதி கிடைத்தது என்கிற அவர் சிறையிலிருந்து திரும்பியதும் நேரே தன் தாயாருடைய ஜியாரத்திற்கு சென்றுவிட்டே வீட்டிற்று சென்றிரக்கிறார். சுமார் 40 பேர் இந்நீண்ட சிறை வாசத்திற்கு இடையே தங்களத பெற்றோரை இழந்திரக்கிறார்கள். மற்ற சிலர் சகோதரன் தங்கையின் கணவர் போன்ற நெருங்கிய உறவுகளை இழந்திரக்கிறார்கள்.
குடும்ப வறுமை குழந்தைகள் படிப்புக்கு பீஸ் கட்ட இயலாமை சாப்பாடு இல்லாமை வீட்டுக்கு வாடகை தர முடியாமை மருத்துவ செலவுக்கு வழின்மை ஆகிய காரணங்களால் சிலர் விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர்.
சிறைக் கைதி ஒருவருடைய மாமியார் வீட்டு வேலை செய்து தன்னுடைய மகளையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பக்கவாததில் விழுந்து கிட்க்கிற தன்னுடைய கனவனையும் கவனித்திரக்கிறார்.
வறுமையின் உச்சகட்டத்தில் இரண்டு கைதிகiளுடைய மனைவியர் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டனர். ஓருவர் தன் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டார். மற்றொருவருடைய மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆந்த வழக்கு இழுத்துக் கொண்டு போகவே கணவர் வெளியே வந்தவுடன் இப்பொது தம்பதிகள் ஒன்று செர்ந்து விட்டனர். அல்லாஹ் அத்தம்பதிகளுக்கு அருட் செய்யட்டும்.
சுpறையில் கொடுத்த உணவை நான் பசிக்கு சாப்பிட்டேனே தவிர ருசித்து சாப்பிடவில்லை. அவர்கள் கொடுத்த கறி மீன் முட்டை எதையும் நான் தொடவில்லை என்கிறார் ஒருவர்.
குண்டு வெடிப்போடு எந்தத் தொடர்பும் இல்லாத 40 லிருந்து 50 பேர் மிகச்சிறிய குற்றங்களுக்காக கடும் தண்டனை அடைந்துள்ளனர். கலவரம் செய்தவர்கள்மீது கல்லெடுத்து விசயதற்காக சிலர் 9 ஆண்டு சிறை வாசம் அனுபவித்திருக்கிறார்கள்.
எந்த தகவலும் சொல்லப்படாமல் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள் சிலர் மிகுந்த வேதனையளிக்கிற வகையில் இந்நிண்ட சிறை வாசத்தை அனுபவித்திரக்கிறார்கள். இந்த ஆளுகளெல்லாம் இந்த இயக்கத்தினர் என்று உங்களுக்குத் தெரியாதா? என் அவர்களோடு போனீர்;கள் என்று என்னைப்பார்த்து என் மனைவி கதறினாள். ஏன்னுடைய அப்பாவித்தனம் எனக்கு அப்போது தான் புரிந்தது என்று ஒருவர், எனக்கு தெரிந்தது முஸ்லிம்லீக், தி.மு.க, ஆ.தி.மு.க, ஜனதா ஆகிய கட்சிகள் தான். இந்த இயக்கங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று சொன்னார். அவரை ஊடுறுவிப்பாhத்தால் அந்த வெகுளித்தனத்தனம் உண்மையானதாகவே படுகிறது. காவல் துறை என்னை சாட்சியாக வைத்திருக்கலாம். நான் முஸ்லிம் என்பதற்காக என்னையும் iகிதியாக்கிவிட்டார்கள். என்னை விசாரித்த என்னுடைய விவகாரங்களை நன்கு தெரிந்து கொண்ட விசாரனை அதிகாரிகள் என்னை விடுவித்து விடவதாகச் சொன்னார்கள். ஆனாலும் ஏனோ அப்படிச் செய்யவில்லை என்று சொன்ன அந்த சகோதரரின் இரண்டு மகன்களுடைய படிப்பு எட்டாம் வகுப்போடும் ஆறாம் வகுப்போடும் நின்றுபோனது. புடிப்பில் அதிக ஆர்வமுடைய அவர்கள் தாயைiயும் குடம்பத்தையும் காப்பாற்றுவதற்காக வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது என்று அவர் சொன்னார். அத்தா நீ ஏன் ஜெயிலக்குப் போனாய் ? அதனால் தானே நாங்கள் படிக்க முடியாமல் போயிற்று என்று பையன்கள் கேட்கிறார்கள் என்று சொல்லுகிற போது அவரது கண்கள் மட்டும் குளமாகவில்லை. அங்கிருந்த அனைவருக்கும் தான்.
அத்த வெளியே வந்தால் போடுவதற்கு புதிய சட்டை வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்க வேண்டிய என் மகன் கொடுத்த புதிய சட்டை இது என்று காலைரை இழுத்துக் காட்டிய போது அவர் சிரித்தார். அங்கிருந்தோரால் சிரிக்க முடியவில்லை.
யாராவது உதவி செய்தார்களா என்று கேட்டேன். நான் ஜெயிலில் இருந்த போது இரண்டு முறை 500 ரூபாய் வீட்டிற்கு செலவுக்கு வழங்கினார்கள். என் மகளின் படிப்புச் செலவை கோயை சிறுபான்மை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. வெளியே வந்த பிறகு கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் 5000 ரூபாய் கொடுத்து என்றார். குடும்ப கௌரவம் கருதி அதை கூட வாங்க வேண்டாம் என்று தான் நான் நினைத்தேன்.மனைவயிடம் கேட்டேன் சரி வாங்குங்கள் என்றார். தயக்கத்துடன் வந்து வாங்கிக் கொண்டேன் என்று அவர் தொடர்ந்து கூறினார். த.மு.மு.க இயக்கத்தை சார்ந்தவர்கள் கன ஜோராக வந்து பேசினார்கள். எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்றார்.
இவரைப்போலவே விடுதலையாகி வெளியே வந்த பலரும் த.மு.மு.க தங்களை வைத்து அரசியல் நடத்திவிட்டு தங்களைது பெற்றோரை அழுகிறவர்களாக படம்பிடித்து அதை காட்டி வசூல் செய்து விட்டு சும்மாவிட்டு விட்டது என்று குறிப்பிடுவதாக செய்திகள் தொடர்நது வருகின்றன. எங்களை வைத்து லாபமடைந்து கொண்டனர். ஆனால் எங்களை கவனிககவில்லை என்று பலரும் வெளிப்படைகவே பேசினார்கள்.
இதற்கிடையே கைதிகள் விடுதலை ஆவதற்கு ஓரிரு தினற்களுக்கு முன்னதாக கோவையின் பிரதான பளளிவாசல்களில் அனைத்து குண்டு வெடிப்பு சிறைவாசிகள் சார்பாகவும் ஒரு பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. தங்களை வைத்து ஆதாயம் தேடி கட்சியை வளர்த்துக் கொண்ட த.மு.மு.க தங்களது விடுதலையை பயன்படுத்தி லாபம் அடைய முயறச்சதித்திருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிரந்தது. அதனால்தானோ எனனவோ ஆயிரம் ரூபாய் நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கு 10 ஆயிரம் நோhட்டீஸ்கள் வால்போஸ்டர்கள் அச்சடித்து விளம்பரம் செய்து விடு;ம் த.மு.மு.க.விடுதலையான கைதிகள் விசயத்தில் வாய்முடி மௌனம் காக்கிறது. அதன் தலைவர் பேசுவதாக திட்மிட்டிருந்த பத்ரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் சிலர் எந்த இயக்கம் குறித்தும், தனிப்பட்டவர்கள் குறித்தும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அனைத்து தரப்பினரின் துஆ வும் அனுசரனையும் இப்பொது தங்களுக்கும் இன்னும் உள்ளே இருக்கிற மற்ற சகோதரர்களுக்கும் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதை உணாந்தேன்.
கைதானவர்களில் ஓரிருவருக்குத்தான் உறவுகக்hரர்கள் உடனிருந்திரக்கிறார்கள். மற்றவர்கள் மொழி மாநிலம் கடந்து கவலைகளைப் பரிமாறிக் கொள்வதில் சகோதரர்களாகியிருக்கிறார்கள். அதனால் தான் தாங்கள் விடுதiலாயிகிவிட்டாலும் கூட இன்னும் சிறையிலிருக்கிற நண்பர்களை நினைத்து உருகுகிறார்கள்.
வெளியே வந்த விட்டதில் மகிழ்தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்ற பதில் சிலரிடமிருந்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. உள்ளே இருக்கிற நண்பர்களை நினைத்துக் கொள்கிறார்கள் போலும். தொண்டை கரகத்து குரல் கம்மிக் கொள்கிறது. சிரமப்பட்டு தங்களது துக்கத்தை அடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் முடியவில்லை. திடகாத்திரமாக அந்த இளைஞனின் அந்த நேரத்து அவஸ்த்தையை கண்ணால் பார்ப்பதற்கு சங்கடப்பட்டு அனைவரும் பார்வைய தாழத்திக் கொண்டீடாம். கைதிகளில் 42 பெர் மீது பிரிவு எண் 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒரவர் மீது 23 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கத் தருவோம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களுடன் சிறையில் வாடிய அவர்களுக்காக அந்த சகோதரன் அழவது இதயத்தை பிழிகிற நெகிழச்சியாக இருந்தது.
கைதிகளுக்குள்Nயும் அவ்வப்போது கைகலைப்பு, முனாபிக், முர்ரதத் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் நடந்தது உண்டு. சிறை வாசம் என்பத அப்படித்தான் கணவன் மனைவியாக இரந்தால் கூட மூன்று நாட்களில் அவர்களுக்குள் சண்டை வந்து விடும் என்று கூறிய ஒரு நண்பர் எப்படி இரப்பினும் மிக கடுமையாக குற்றம் சுமத்தப்படடிருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னும் வழக்கை இழுத்திருக்க முடியும் என்றாலும் சாதாரண குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதற்கு வசதியாக தம்தரப்பு வாதத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள் என்ற ஒரு செய்தியை சொன்னார். அரசாங்கமோ இயக்கங்களோ விரும்பியதாலோ அல்ல கைதிகளின் ஒத்துழைப்பினாலேயே சிறை வாசம் இந்த அளவில் முடிந்தது என்று அவர் கூறினாலும் மற்ற ஒரவர் சிலர் ஏற்படுத்திய தாமதத்தினால்தான் இவ்வளவு காலம் தாங்கள் சிறையிருக்க வேணடியிரந்தது இல்லை என்றால் சற்று முன்னதாக வந்திரக்கலாம் என்றும் இந்தக் கட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தது தங்களின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார்.
முந்தைய ஏழவருடங்களில் சமுதாயத்தின் உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும அவர்கள் ஆரம்ப கட்த்தில் வழக்குச் செலவுக்காக சிறையில் கிடைத்த உணவுகளை விற்று பணம் சேர்த்ததாக சொல்கிறார்கள்.
ஜெயலலதா ஆட்சியின் போது அடி நின்று விட்டது ஆனாலும் தொடாந்து நெரக்கடி இரந்து வந்தது என்கிறார்கள். சோதனைகைள் அடிக்கடி நடக்கும் குர்ஆனைத்தவிர உள்ள இஸ்லாமிய புத்தகங்கள் துணிமணிகளை எடுத்துச் சென்று விடுவார்கள்.
ஊள்ளே என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கௌ;விக்கு பலருடைய பதில் நேரத்திற்கு தொழுதோம் இஸ்லாமைத் தெரிந்து கொண்டோம் என்பது தான். கைதிகளில் பெரும்பாலோர் குர்ஆன் ஓதக் கற்றிருக்கிறார்கள். சிலர் குர்;ஆன் மனனம் செய்திருக்கிறார்கள்;. ஓருசிலர் 5 ஜுஸ்வு வரை மனனம் செய்துள்ளார்கள். வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக கோவை சிiறியிலிருக்கும் ஒரு கைதி முழவதமாக குர்ஆனை மனனம் செய்தள்ளார். படிப்பதற்கு தினமனி தினமலர் தினத்தந்தி ஆகிய நாளிதழ்கள் வழங்கப்படடுள்ளன. ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. பொதிகை சானல் அதில் தெரியுமாம். சிலர் தான் அதைப் பார்க்க செல்வார்களாம் பலர் செல்ல மாட்டார்களாம். கிரிக்கெட் வாலிபால் கேரம் போர்டு ஆகிய விளையாட்டுக்களிலும் சில சமயம் ஈடுபடுவார்களாம்.
சமநிலைச்சமுதயத்தை விரும்பிப் படிப்பார்களாம். அதன் நடுநிலைப்போக்கு அவர்களுக்கு பிடித்திருந்திரக்கிறது. ஒரிருவருக்கு மட்டும் தான் அந்தப் பத்ரிகை வந்து கொண்டிருந்தது அது தொடாந்த படிக்கப்படும் ஆகையால் எங்களுக்கு அது கிடைக்காது என்று ஒருவர் சொன்னார். மதனியயுடைய பேட்டி வெளிவந்த இதழை சிறை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. நீதிபதியிடத்தில் முறையிட்டு வக்கீல்கள் மூலம் அந்தப்பக்கங்களை மட்டும் கிழித்துப் பெற்றோம் என்று சொல்கிற அவர்கள் இலங்கையிலிரந்து வெளிவரகிற அல்ஹஸனாத் மீள் பார்வை ஆகிய பதரிகைகளை வெகுவாக பாராட்டுகிறார்கள்.
தொழுகைக்கான ஜமாத்துகள் ஆங்காங்கே நடந்திருக்கிறது. ஜும்ஆ தொழுகை ஜமாத்தாக வால்மேட்டிலும் 10 ம்நம்பர் பிளாக்கிலுமாக இரு இடங்களில் நடந்திருக்கிறது. வால்மேட்டிற்கும் மருத்துவமனைக்கும் அதிக தூரம் இருந்ததால் மதனீ யுடன் சிலர் மருத்துவ மனையிலேயே தொழுது கொள்வார்களாம். லுஹர்(மதியம்), அஸர் (முன்மாலை) ஆகிய இரண்டு நேரத் தொழுகைகளை வெளியில் தொழும் அவர்கள் பஜர் (அதிகாலை) மஃரிப் (பின்மாலை) இஷா (இரவு) தொழுகைகைள செல்லுக்கள் இருந்தபடியே ஜமாத்தாக தொழுவார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. தனித்தினயாக அடைக்கப்டடிருந்த செல்லுக்குள்ளே எப்படி ஜமாத்தாக தொழுவீர்கள் என்று கேட்டால். முதல் செல்லில் இருப்பவர் இமாமத் செய்வார். ஆவருடைய சப்தத்தை கேட்க முடிந்தவர்கள் அவரைப் பின்பற்றித் தொழுவார்கள் என்று பதில் கிடைத்தது. பயணத் தொழுகை அச்ச நேரத் தொழுகைகளை தெரிந்த எங்களுக்கு இந்த சிறைச்சாலைத் தொழுகை அச்சரியத்தை அளித்தது. ரமலான் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறிய பலரும் சிறை நிர்வாகம் அதற்கு தகுந்த எற்பாடுகளைச் செய்து தரும் என்று கூறினர். பெருநாள் தொழுiயை ஒன்றாக மகிழ்ச்சியாக தொழுவொம் எனறு கூறிய அவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த பெருநாளுக்குள் நாம் விடுதiலாயகி குடும்பத்தோடு மகிழ்சியாக இருப்போம் என்ற எதிர்பார்ப்பு தான் எங்களை அந்தப் பெருநாட்களில் மகிழ்சிசயாக வைத்திருந்தது என்று கூறும் போது சிறைச்சாலைப் பெருநாள் என்ற ஒரு புதிய வபை; பெருநாளின் துக்கம் கலந்த மகிழ்சியை அவர்களுடைய முகங்களில் பார்க்க முடிந்தது. அப்பொது இடை மறித்த ஒரு நண்பர் சொன்னார். இவர்களுடைய ஒவ்வொரு நாளும் மே இப்படித்தான் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும் பொது இன்று விடுதiலாகிவிடுவொம் என்ற ஆசையிலும் இஷா தொழுகிற பொது நாளை விடுதலையாகி விடுவொம் என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்திரக்கிறது என்று சொன்னார். அது தான் உண்மை. ஓன்பது கடுமையான ஆண்டுகளை இந்த தருணத்தை எதிர்பாhத்துத்தான் அவர்கள் கடத்தியிருக்கிறார்கள்.
முதானி மூன்று முறை பயான் செய்திரக்கிறார். பிறகு செய்ய வில்லை. அவர் பலருக்கும் உதவி இருக்கிறார். அவருடன் பேசுவது ஆறதல் அளிக்கும் என்பதால் பலரும் அவருடன் பேசச் செல்வார்களாம். ஒரு முறை அஅவரை சந்திக்க சென்ற ஒருவர் அவரிடம் உங்க வயசு என்ன எனறு கேட்டிருக்கிறார். எவ்வளவு இருக்கும் நிங்களே சொல்லுங்களேன் என்று அவர் திருப்பிச் கேட்டராம். 50 என்று பதிலளித்த நண்பரிடம் அது உங்க வயசு என் வயதைச் சொல்லங்கள் என்று கேட்டாரம். நாங்கள் எல்லோரும் அந்த 40 வயதுக்காரரைச் சுற்றி வாய்விட்டுச் சிரித்தோம் என்று ஒரு இனிய நினைவை அசை போhட்டார் ஒரு நண்பர்.
கடைசி ஒரு வருடமாக சிறையில் கைதிகள் அனைவரிடமும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளப்பட்டதாக கூறும் அவர்கள் தற்போதைய ஜெயிலர் சிறைத்துறை டி ஐ ஜி ஆகியோரை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகின்றனர்.
இது வரை ஜாமீனில் விடுதiலாகிp வெளியே வந்தள்ள 91 நபர்கள் அனைவருக்கும் அவாகள் மீத சுமத்தப்பட்டள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அதற்கான அதிகபட்ச தண்டனை காலத்தைவிட அதிகமாக அவர்கள் சிiறியல் இருந்து விட்டார்கள். ஆகவே இனி அவர்கள் முறறிலமாக அவர்கள் மீதான வழக்கு முடிக்கப்படுவதற்குத்தான் காததிரக்கிறார்கள். தங்களது வழக்கை கூட சட்ட உதவி மூலமே நடத்தியுள்ள காரணத்தால் தங்களது ஏழ்மை நிலை கருதி அபாராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என்று அவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டள்ளார்கள். அவர்களில் 98 சதவீதம் பேர் சதவீதம் பேர் இனி ஒரு நல்ல வாழ்கையை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள். அதற்கு அரசு உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மிக முக்கியமாக நாம் எதிர்பார்த்தது போலவே குண்டுவெடிப்பு குறித்து அவர்களில் பெரும்பாலேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தங்களிடையே அது குறித்து ஒரு விவாதம் நடந்தததாக கூறுகிற அவர்கள் அப்பாவிகள் பலியானது குறித்து கடும் வேதனை தங்களுக்கும் எற்பட்டது என்று கூறுகிறார்கள். இதன்வழியாக சமதாயத்தின் சுய மரியாதை காப்பாற்றப்பட்டது என்ற தப்பான எண்ணம் மக்களில் சிலருக்கு இருந்தது போல அவர்களில் சிலருக்கும் இருந்ததாக கூறினர். சிறைபட்டு விடுதலையானவர்களின் குடும்பத்தினரின் மனோ நிலை கதம்பமாக இருக்கிறது. தங்களைச் சார்ந்தவர் நீண்ட சிறைவசத்திலிருந்து விடுதலை பெற்று விட்டதில் மகிழ்ச்சி ஒரு புரம் இருந்தாலும் எதிர்காலத்தை பற்றிய அச்சம், தேவைகளின் பயமுறுத்தல், 23 வயதாகிவிட்ட மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்;: எப்படிச் செய்வது என்ற மலைப்பு சிலரது பெற்றோர்களுக்கு எற்பட்டுள்ள பெரிய மருத்துவச் செலவு ஆகியவை அந்த மகிழ்ச்சியில் தடைக்கற்களை எற்படத்தியுள்ளது. நான்; இத்தனை நாள் துபாயில சம்பாதித்து விட்டு வந்தவனா என்ன? முழு மகிழ்ச்சி என்று சொல்வதற்கு என்ற ஒருவர் கேட்கிறார். அவர்களில் சிலருடைய மனதோரத்தில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட வலி இருந்து கொண்டிருக்கிறது. என் மனைவி குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொள்வதை கூட நிறுத்திக் கொண்டு விட்டாள் என்று ஒருவர் சொன்னார். தந்தையின் அரவனைப்புக் கிடைக்காமல் வளர்ந்த குழந்தைகளின் சோகம் எத்தகையது என்பதை சிறையிலிருந்து விடுதலையான மறநாள் திருவனந்தபுரத்தில் அப்துல் நாஸர் மதானி உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டு அவரது இளைய மகன் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்த நெஞசை உலுக்கும் காட்சியை கண்ணால் கண்டவர்களுக்கு புதிதாக விளக்கத் தேவையிருக்காது. 91 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட குற்றம் சாட்டப்பட்ட 166 நபர்களில் 158 குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்ப்ட்டிருப்பது சிறைக்கiதிகiளிடையே கேபத்தை எற்படுத்தியிருக்கிறது. 250 பேரை பலி கொண்ட பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் 128 பேர் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டாலும் நீதிபதி கோடே 28 நபர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறார். கோவை தனி நிதிமன்றம் இந்தப் பெரிய வழக்கில் 8 பேரை மட்டுமே விடுவித்து விட்டு 158 நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிரப்பதாக கூறுவதும் சாமான்ய குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருப்பதும் சிறைவாசிகளிடையேயும் பொதப்பார்வையாளர்கள் பலரிடையேயும் ஒரு வகை அதிருப்தியையும் கோபத்தையும் எற்படுத்தியிரக்கிறது. வழக்கு அவ்வாறு பின்னப்பட்டுள்ளதே காரணம் என்று சட்டம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்த வழக்கில் சிறைக் கைதிகள் அவர்களது குடும்பம் எனபதற்கு அடுத்தபடியாக கோவை நகர மக்கள் என்ன நினை;க்கிறர்ள் என்பதும் ஒரு பிரதான அம்சமே. காரணம் சிறைக் கொடுமைக்கு நிகராக இல்லாவிட்டாலும் தவறே செய்யாமல் தண்டனை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அனுபவித்த வெதனைகள், இடையீறுகள் இழப்க்கள் அவமானங்கள் அதிகம்.பல்லாண்டகளாக வாழந்த மஹல்லாவை காலிசெய்து விட்டுச் சென்றவர்கள்.வீடு வியாபாத்தை விட்டு சொந்த ஊரக்கு திரும்பிச் சென்றவர்கள். ஏழைகாளகிவிட்ட பணக்காரர்கள் தொழில் இழந்தவர்கள், வியாபாரத்தில் நொடிந்தவர்கள் என தொடரும் அந்தக் கஸ்டங்களும் பெரிதுதான். அதனாலேயே கூட என்னவோ சிறைவாசிகள் விசயத்தில் உலகம் முழவதிலும் வெளிப்பட்ட ஆதங்கத்தையும் ஆர்வத்தையும் கோவை மக்களிடையே பார்க்க முடியவில்லை. தங்களது குடும்பத்தில் அல்லது தங்களுக்கு வேண்டப்படட்டவர்களில் அல்லது தங்களது மஹல்லாவில் சிறை சென்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைத்து அவர்கள் அனுபவிக்கும் வேதனை கண்டு உள்ளுக்குள் கலங்கிய போதும் அதற்கான ஆறுதலையே அதரவையோ அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் கோவை நகர முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டவ்களுக்கான தார்மீக கொள்கைப்பூர்வ அதரவை தெரிவிக்க வில்லை எனலாம்;. ஆயினும் விடுதலையாகி வந்தவர்களை தாயுள்ளத்தோடு ஆதரிக்கத் தயாரானார்கள். கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் விரைவாக செயல்பட்டு அவர்களுக்கு உடனடிகத் தேவைப்படகிற உதவிகளச் செய்திருக்கிறது. விடுதலையானவர்களி டமிருந்து சமுதாயம் என்ன எதிர்க்கிறது என்ற கேள்விக்கு ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ஜப்பார் கூறிய வாhத்தைகள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கவை. கடந்த காலத்தில் நடந்தது போன்ற தவறுகள் இனி ஒருபோரும் நடக்க சிறை மீண்டவர்கள் அனுமதிக்கக் கூடாது.
அவருடைய அந்தக்கருத்து சரியானது தான் என்பதை சிறை மீண்டோர் பலரும் வலியுறுத்திச் சொன்ன போது அதில் nளிப்பட்ட நல்ல மனமாற்றம் இந்த நகரத்திற்கு நல்ல காலம் பிறந்து விட்டது என இனி ஒரு குடுகுடுப்பை அடிக்கத் தேவை இல்லை என்பதை சொல்லாமல்சொல்லிற்று.
கடைசியாக சமநிலைச்சமதாயத்தின் தீவிர வாசகராக இருந்து விடுதலை பெற்ற சகோதரர் சொன்ன ஒரு வாhத்தை இந்தக கட்டுரைய நிறைவு செய்யப் பொருத்தமானது. கலிமா சொன்ன எவரும் இனி சிறைக்கூடம் செல்லக் கூடாது.