<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501</id><updated>2011-11-01T15:51:57.433+05:30</updated><title type='text'>சமநிலைச் சமுதாயம் கட்டுரைகள்</title><subtitle type='html'>சமநிலைச் சமுதாயம் மாத இதழில் வெளியான இஸ்லாமிய சமூகம் சார்ந்த கட்டுரைகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>23</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-7163262902937791842</id><published>2010-09-27T13:50:00.002+05:30</published><updated>2010-09-27T13:50:43.403+05:30</updated><title type='text'>பெருநாள் சிந்தனை</title><content type='html'>இனி இஸ்லாம் வெல்லும் &lt;br /&gt;&lt;br /&gt;“அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதின் 8 வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுகிறார்கள்”இணைய தளங்கள் பலவற்றிலும் தற்போது பரபரப்பாக இருக்கிற செய்தி இது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் செப்டம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் படக்கூடும். ஒரு வேளை செப்டம்பர் 11 ம் சனிக்கிழைக்கு அது தள்ளிப் போகவும் இடமுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் பிறையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படுகிறது.  ரம்லான் 29 முடிந்த பிறகு அன்றைய  இரவு அந்தி வானத்தில் சந்திரன் இளம் பிறையாகக் கண்ணுக்கு தென்பட்டால் அது ஷவ்வால் மாத்த்தின் முதல் தேதியாக அமையும் என்ற   இஸ்லாமிய சட்ட விதியின் படி பிறை தெரிகிறதா உலகெங்கிலும் இருக்கிற முஸ்லிம்கள் ஆர்வத்தோடும் ஆசையோடும் அந்தி வானத்தை அன்னாந்து  பார்க்கிறார்கள். பிறை தென்பட்ட தென்றால் எங்கும் மகிழ்சி பீரிட்டுக் கிளம்புகிறது. தக்பீர் முழக்கம் வானை நிறைக்கிறது. முஸ்லிம்கள் பெருநாளை வரவேற்கத் தயாராகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அனறு இரவு பிறை தென்படாவிட்டால், இன்னொரு நோன்பு நோர்க்கவும், இன்னும் ஒரு தராவீஹ் எனும் ரமலானின் விஷேச இரவுத் தொழுகைக்கு வாய்புக் கிடைத்த்தென முஸ்லிம்கள் ஆனந்தமடைகிறார்கள். அதற்கடுத்த நாளில், ஈத்பெருநாள்  கம்பீரமாக களை கட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உலக முஸ்லிம்களின் இந்த உன்னதமான கலாச்சாரம் இப்படியே ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்து அற்புதமான ஒரு நிகழ்வாக நடை பெற்று வருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடை முறையால் இயந்திரத்தனமான திட்டமிடுதல் தவிர்க்கப் பட்டு ஒரு பிள்ளைப் பேற்றின் இயல்பான மகிழ்ச்சியும் குதூகலமும் பெருக்கெடுப்பதை முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில அவசரக் குடுக்கைகளும் அதிருப்தி ஜீவிகளும் இஸ்லாமின் இந்தக் கலாச்சாரத்திற்கு எதிராக செய்ல்படக் கிளம்பினார்கள். அவர்களின் சரியாக வேகாத அவியல் அறிவியல் த்த்துபித்துக்களை சமூகம் புறந்தள்ளி தனது இஸ்லாமிய மரபு வழியான கலாச்சார வேர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்ட்து. அதனால் ஈதுல் பித்ர் செப்டம்பர் 10 தேதி கொண்டாடப்படலாம். அல்லது செப்டம்பர் 11 ம் தேதி கொண்டாடப்படலாம் என்ற அறிவிப்பை சரியாகப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம்  சமூகத்திற்கு பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈதுல் பித்ர் பெருநாள், ரமலானின் ஒரு மாத பட்டினி வணக்கம் நிறைவடைவதை ஒட்டி வருவதால் அதை உண்டு மகிழ்ந்து கொண்டாடும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்ரீத் எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகு சாப்பிடாமல் கிளம்புவதும் ஈதுதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பிறகு கிளம்புவதும் இஸ்லாமிய கலாச்சாரமாகும்.  “நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடாமல் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு புறப்படமாட்டார்கள்” என பெருமானாரின் பணியாளர் அன்ஸ் (ரலி) கூறுகிறார்.  அதிலும் குறிப்பாக பேரீத்தம் பழத்தை ஒற்றை எண்ணிக்கையில் சாப்பிடுவது பெருமானரின் பழக்கம் என அவர் மேலும் தெரிவிக்கிறார். (ஸஹீஹுல் புகாரி 952)&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது ஊரின் சில பள்ளிவாசல்களில் ரமலானுக்கு கஞ்சி காய்ச்சுவது போலவே  பெருநாள் அன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு வரும் மக்களுக்கு பேரீத்தம் பழங்களை தட்டில் வைத்து நீட்டுகிற பழக்கம் இருக்கிறது. நபிகள் பெருமானாரின் ஒரு வழி முறையை கடைபிடிப்பதோடு  அற்புதமான பெருநாள் வாழ்த்தாகவும் அது அமைந்து விடுகிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;தாம் உண்டு மகிழ்ந்த்தின் அடுத்த தொடர் நடவடிக்கையாக பிறருக்கு கொடுத்து மகிழும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பெருநாள் அன்று அன்றைய செலவுக்கு போக அதிகமாக காசு வைத்திருப்பவர்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தலைகட்டு தர்ம்மாக “பித்ரா” எனும் தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுத்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தலைக்கும் 1.700 கிராம் கோதுமை அல்லது 2.400 கிராம் நடுத்தர அரிசி வீதம் பித்ரா தர்ம்ம் வழங்கப்ப்ட வேண்டும். உண்வுப் பொருளாக வழக முடியாதவர்கள் பணமாக வழங்குவ்தெனில் குறைந்த பட்சம் தலைக்கு ரூபாய 35 என்று கண்க்கிட்டு வழங்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இது குறைந்த பட்ச அளவு தான். விரிந்த உள்ளம் கொண்ட தயாபரர்கள் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி என்ற அளவில் கூட “பித்ரா” தர்ம்ம் வழங்கலாம். லட்சாதிபதிகளும் கோடீஸ்வர்ர்களும் அளந்து பார்த்து வழங்க வேண்டியதில்லை. அரிசி வழங்குபவர்கள் கூட வசதி இருந்தால் பிரியாணி அரிசி வழங்குவது ஏழை எளியவர்களின் பெருநாள் செலவின் சுமையை குறைக்கும். அதுமட்டுமல்ல செல்வந்தர்களின் கௌரவத்திற்கு அது அழகு சேர்க்கும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுரையாகும்.    &lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுக்கைக்கு முன்னதாகவே பித்ரா தர்மத்தை வழங்கி விட  வேண்டும் என்பது இஸ்லாமின் உறுதியான அறிவுரையாகும். தொழுக்கைக்குப் பின்னால் வழங்கப்படும் தர்ம்ம்  சாதாரண தர்ம்மாகவே கணிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (இப்னுமாஜா 1817) என்வே பெருநாள் தொழுகைக்குப் பின்னால் தொழ்கைத்திடல்களின் வாசலில் காத்திருக்கிற யாசகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சில்லரை காசுகளாக பித்ரா தர்மத்தை மாற்றி விடக்கூடாது என்பதை சமுதாரப் பிரமுகர்கள் கவனிக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஈதுல் பித்ர் பெருநாள் அன்று, அந்த மகிழ்ச்சியை வழங்கிய இறைவனை வணங்குவதற்கு முன்னதாக ஏழைகளை மகிழ்ச்சிப் படுத்திவிட வேண்டும் என்ற இஸ்லாமின் இந்தக் கோட்பாடு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மனப்பக்குவத்தை சமுதாயத்திற்கு வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தர்மத்தை முதலில் தம் உறவினர்களிடமிருந்து தொடங்குவதே உண்மையான இஸ்லாமிய அக்கறையாகும். உறவினர்களுக்கு அடுத்தபடியாக தமது பகுதியில் இருக்கிற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவைப் பெருத்தவரை அது கடினமான வேலையல்ல. வீட்டு வாசலை விட்டு கீழே இறங்கினால் தகுதியுள்ள பலர் தாராளமாக கிடைப்பார்கள். அவர்களை தேடிச் சென்று சென்று தர்ம்ம் வழங்குகையில் ஒரு ஆனந்தம் கிட்டும். அந்த ஆனந்தம் தர்ம்ம் செய்த நிறைவை விட பேரானந்தமாக அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் இரத்தப்புற்று நோயாளல் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனைத்தேடி தன்னுடைய தர்மத்தை வழங்குவதற்காக ஒருவர் என்னோடு காரில் வந்தார். சுமார் 40 கீலோ மீட்டர் சுற்றி அலைந்த பிறகு அந்த இளைஞன் வீட்டை கண்டுபிடித்தோம். அவர்க் கொடுத்த பணம் 5000 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அதற்காக தகுதியுள்ளவரை தேடிச் சென்ற மகிழ்ச்சியும் மன திருப்தியும் அந்த சகோதர்ருக்கு 5000 ரூபாயை விட அதிகமாக இருந்த்து. ஒன்றுக்கு எழுநூறு மடங்கு அதிகம் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அது எப்படி இருக்கும் என்பதன் அட்வான்ஸாக இந்த மகிழ்ச்சி அவருக்கு அமைந்த்து.  &lt;br /&gt;&lt;br /&gt;ரகசியமாக தர்ம்ம் செய்வதிலும், அதுபோல தகுதியுள்ளவர்களை - யாரிடமும் கேட்கத் தயங்க்கிக் கொண்டிருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தர்ம்ம் செய்வதிலும் கிடைக்கிற பேராணந்த்தமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் சிலருக்கு கிடைக்காமலே போய்விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிலும் காசுபார்த்து பழகிவிட்ட அமைப்புக்களிடமும் இயக்கங்களிடமும் “பித்ரா” தர்மத்தை வழங்குவது முஸ்லிம் சமூகத்துக்குள் புதிய பிரச்சினைகள் உருவாவதற்கே வழி செய்கிருக்கிறது ஈந்துவத்தலின் இன்பத்தை அனுபவிக்க்விடாத இயக்கப் பற்றாக அது மாறிவிட்ட்து என்பதும் இங்கே கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஈதுல் பித்ர் பெருநாளின் இன்னொரு சிறப்பு.  அது கடந்த கால நினைவை போற்றுவதாகவோ, ஏதாவது ஒரு தலைவர் அல்லது வரலாற்றுப் பாத்திரத்தின் ஞாபகார்த்தமகவோ அமைந்த்து அல்ல. அது முஸ்லிம்களது நிகழ்கால வாழ்வின் பக்தியையும் சந்தோஷத்தையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இனி வரும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாகவும் திகழ்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு ஈதுல் பித்ர்  பெருநாள் வருவதற்கு முன்னதாக ஒரு சர்ச்ச்சை முஸ்லிம்களின் வட்டாரத்தில் ஒரு பேச்சாக கிளம்பியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில்  இரட்டை கோபுரங்கள தகர்க்கப் பட்ட நிகழ்ச்சியின் எட்டாவது நினைவு செப்டம்பர் 11 அன்று அனுஷ்டிக்கப் பட இருக்கிறது. அது ஈதுல் பித்ர் பெருநாளில் அல்லது பெருநாளை ஒட்டிவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சில இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட பத்ரிகைகளும் இணைய தளங்களும் அமெரிக்க முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டங்களைப் பற்றி கேள்வி எழ்ப்பிவருகின்றன. சில இணைய தளங்கள் பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வண்ணம் கலக்கத்தையும் பீதியையும் எழுப்பி வருகின்றன. பிரஞ்சுப் பத்ரிகையான “லுமோன்ட்”இதில் வெறுப்பை உமிழும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது, &lt;br /&gt;&lt;br /&gt;அமரிக்க முஸ்லிம்களின் தகவல் தொடர்பு மையத்தின் சார்பாக பேசுகிற இபுறாகிம் ஹூபர் என்பவர் மின்னணு ஊடங்கள் செய்து வருகிற பிரச்சரம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது பெருநாளை கொண்டாடுவதில் கலக்கமுற்றிருப்பதாகவும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களது பெருநாள் நிகழ்ச்சிகளை இரத்து செய்திருப்பதாகவு கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பெருநாள் கொண்டாட்டங்களை செபடம்பர் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த் தகவல்கள் விஷமத்தனமாக கிளப்பட்டிருக்கலாம்.. ஏனெனில் பெருநாள் கொண்டாட்டம் என்பது முஸ்லிம்களை பொருத்தவரை அது இறைவனால் வழங்கப் பட்ட்து. இறைவனால் தீர்மாணிக்கப் பட்ட்து. பெருநாட்களை எதன் பொருட்டும் துக்கமாக அனுஷ்டிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது பெருநாள் கொண்டாட்டங்கள் என்பது இறைவனை வணங்கி இல்லாதோர்க்கு வழங்கி மகிழ்வ்தேயாகும். குடித்து கூத்தாடி கும்மாளம் அடிக்கும் கொண்டாட்டங்கள் அல்ல. கொண்டாட்டம் என்ற வார்த்தையே கூட இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேச பொருத்தமற்றதாகும். வழக்குச் சொல் என்பதற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை என்பதற்காகவுமே அச்சொல் இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேசப்படுகிறது.   என்வே இஸ்லாமிய பெருநாட்கள் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை தருவதாக இருப்பதில்லை, &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மேற்குல நாடுகளும் இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதயாத்திற்கும் செய்துள்ள் தீமைகளும் கொடுமைகளும் ஏராளம். இப்போது செய்துவருகிற சதிச் செயல்களும் ஏராளம். அவற்றோடு ஒப்ப்டுகையில் இரட்டை கோபுரத் தகர்ப்பின் கொடூரம் என்பது சாதாரணமானதே!  ஆயினும் முஸ்லிம் சமுத்யாம் அந்த அநியாயத்தை அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய நீதி என்பது ஒளிவு மறைவற்றது. சுதி பேதம் இல்லாதது. அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்வது மொத்த மனித சமூகத்தையும் கொலை செய்வது போன்றது எனப் பகிரங்கமாக பிரகடணப் படுத்திய சமயம் இஸ்லாம். மனிதாபிமானத்தில் வேஷம் போட முஸ்லிம்களுக்கு இஸ்லாம் கற்றுத்தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்வே இரட்டை கோபுரத் தகர்ப்பில் அப்பாவிகள் கொல்லப் பட்ட்தற்கு முழு முஸ்லிம் உலகும் தங்களது கண்டனத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட்து. இப்போதும் முஸ்லிம்கள் அந்த விபத்தில் தங்களது உறவுகளை இழந்தவர்களுக்காக தங்களது ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இறைவா! அந்த கொடுமையான விபத்தில் தங்களது பாசத்திற்குரிய உறவுகளை இழந்து வாடுவோருக்கு நீ தகுந்த ஆறுதலை கொடு! வாழ்வின் நம்பிக்கை இழந்து நிற்போருக்கு நீ தகுந்த பரிகாரம் செய்! என்று பிரார்த்தனை செய்யத்தான் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்க மக்களுடைய உயிர் ம்ட்டுமே உன்னதமானது. மற்ற்வர்களின் உயிர்களும் உடமைகளும் மசுறுக்கும் மதிப்பற்றவை என்ற அமெரிக்க மனோபாவத்தை எந்த நாகரீகமுள்ள மனிதனும் ஒத்துக் கொள்ள மாட்டான. முஸ்லிம்களாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;சில அமெரிக்க்க அரசியல் வாதிகளும், வகுப்புத் துவேஷம் கொண்ட சில செய்தி ஊடகங்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பு நிகழ்வை இத்தகைய அமெரிக்க மனோபாவத்தோடு தொடர்ந்து அணுகுகிறார்கள். இஸ்லாமிய கருவறுக்க உதவும் சாதனமாக அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், இந்தப் போக்கின் காரணமாக் இரட்டை கோபுர விபத்தை நிய்யப் படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் செல்லக் கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சத்திதிட்டமான இரட்டை கோபுரத் தகர்ப்பும் முஸ்லிம்களின் சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று வலுவாகப் பிணைந்திருக்கின்றன. அந்த நிகழ்வுக்குப் பின் அமெரிக்காவிலுள்ள முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம் சமூகமும் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் அளவுக்கு மீறிய ஆணவப் போக்கினாலும், அரபு தீபகற்ப பகுதிக்குள் அவர்கள் நட்த்திய வன்முறை வெறியாட்டங்களாலும் பாதிக்கப் பட்ட மக்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து இவனுக்கு இப்படி கொடுத்தால் தன் வலிக்கும் என்று நட்த்திய தாக்குதலே இரட்டை கோபுரத் தகர்ப்பு. ஆனால் இத்தாக்குதலுக்கு மூலமான பிரச்சினையை என்ன என்பதை மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்பியதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெய்ரை பரப்புவதிலும் முஸ்லிம்களின் மரியாதையை பங்கப் படுத்துவதிளும் அமெரிக்கா தற்போது வெற்றிய்டைந்திருக்கிறது. அதனால் சர்வதேச அளவில் முஸ்லிம்களின் நிலை இப்போது சிக்கலுக்குள்ளாக்ப் பட்டு வருகிறது. 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் மிக்ச் சவலான் சூழ்நிலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;தந்திரம் மிக்க எதிரிகள், கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களிடமிருக்கிற எல்லாவகையான நவீன ஆயுதங்களையும் ஊடகங்களையும் பய்ன்படுத்தி இந்த பூமிப்பந்தின் மேற்பரப்பின் பெரும் பகுதியை பன்னூறு ஆண்டுகள் கோலாச்சிய சமூகத்தை, உலகத்திற்கு சுதந்திரத்தையும் நாகரீகத்தையும் முன்னேற்றத்தையும் அறிமுகப் படுத்திய சமூகத்தை ஒரு குற்றவாளிச் சமூகமாக, பிற்போக்கான சமூகமாக சித்தரித்து, ஆதிவாசிப் பழங்குடிகளை அழித்த்து போல் அழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிய மண்ணிலும் வேட்டையாடப் படுகிற மக்களைப் பற்றிய காட்சிகள் இந்த வேட்டைக்கார்ர்களின் இரத்த வெறிக்கு சாட்சியாக நிற்கின்றன. இந்தப் படு கோரமான சூழ்நிலையை வென்றெடுக்கிற சக்தி முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்பதில் சந்தேகத்திற்கு இடமிருக்கலாம். ஆனல் இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல இதைவிடக் கடுமையான பகையாளிகளையும் வாகை சூடுகிற சக்தி இஸ்லாத்திற்கு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமின் வெற்றிப் பாதை பெரும் பாலும் மலர் படுக்கையாகத்தான் இருந்த்து. காரணம் இஸ்லாம் மனிதர்களை ஆக்ரமிப்பதில்லை ஆட்கொள்கிறது. இஸ்லாமின்  நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் அவ்வப் போது  இது போன்ற டுரமான மிருக வெறித் தாக்குதல்கள் ஏற்பட்ட்துண்டு. அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் இப்போதைய நிலையை விட மோசமாக கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இனி எதிர் காலமே இல்லை என்று எதிரிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாம் சாமப்லில் இருந்து உயிர் பெற்று எழும்  பீனிக்ஸ் பறவையை போல -  அல்ல -   நம்ரூதின் நெருப்புக் குண்ட்த்திலிருந்து மீண்ட தீர்க்கதரிசி இபுறாகீமைப் போல பல முறை புத்துணர்வோடு  எழுந்திருக்கிறது.     &lt;br /&gt;&lt;br /&gt;13 ம் நூற்றாண்டில் மங்கோலியப் பழங்குடியினரான தாதாரியர்கள் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கரும்புக்காட்டுக்குள் புகுந்த யானை போல திடுமெனப் புகுந்து விவரிக்க முடியாத நாசத்தை விளைவித்தனர். சமர்கண்டு முதல் பக்தாது வரை வாழ்ந்த முஸ்லிம் உலகம் அந்த வெறி பிடித்த கூட்ட்த்தின் சண்டித்தனத்திலும் அமலியிலும் சிக்கி சின்னா பின்னமாகியிருந்த்து. த்தாரியர்களைப் பற்றி முஸ்லிம் சமூகத்தில் ஊடுறுவியிருந்த அச்சம் எத்தகையது என்பதை ஒரு அரபுப் பழமொழி படம் பிடிக்கிறது. அரபுகள் சொல்வார்களாம் : இதா கீல லக்க இன்னத் த்தர இன்ஹஸமூ பலா துசத்திக் &lt;br /&gt;“தாதாரியர் தோற்று விட்டார்கள் எனறால் நம்பக் கூடாது”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாதாரியப் பெண் தங்கள் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞனைப் பார்த்து விட்டால் “அங்கேயே நில்: என்று எச்சரிப்பாள். அவன் அங்கேயே நின்று விடுவான். அவள் வீட்டுக்குள் சென்று வாளை எடுத்து வந்து அவன் தலையை சீவுவாள் என்று தாதாரியரின் ஆதிக்கத்தையும் அதை கண்டு எதையும் செய்ய்ய முடியாதிருந்த முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையையும் வரலாற்றாசிரியர்கள் விவரிக்கிறார்கள்.  ஆனால் மிகச் சீக்கிரத்தில் முஸ்லிம்கள் இந்தச் சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. அந்த மீட்சிக்கு இஸ்லாம் காரணமாக இருந்த்து,&lt;br /&gt;&lt;br /&gt;எத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. அவர்கள் தோற்றுத்  துவண்டு போன களங்களில்  இஸ்லாம் வெற்றியடைந்திருக்கிறது, நவீன் ஆயுதங்கள் தொழில் நுட்பம் மிகுந்த ஊடகங்கள் என்ற எத்தைய எதிர்ப்புச் சூழ்நிலையும் மீறி தனது மக்களை காப்பற்றுகிற வலிவும் சாதுர்யமும் சாமார்த்தியமும் இஸ்லாத்திற்கு இருக்கிறது.  அதற்கான அடையாளங்கள் இப்போது தென்பட்த்துவங்கி விட்டன. இஸ்லாமையும் முஸ்லிம்களை எதிர்த்து முழங்குவதயே வாடிக்கையக கொண்டிருந்தவர்கள் ஒருவனை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்ப உதைப்பது அவன் பக்கம் இருக்கிற நியாயம் என்ன என்று கேட்க வேண்டிய இயற்கையின் ஒரு கட்டாய்த் திருப்பத்திற்கு ஆளாகி இந்தப் பக்கமிருக்கிற நியாயத்தையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இனி இஸ்லாம் பேசும். அது தனது எதிரிகளை வெல்லும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கிரமிப்புச் சக்திகளை தனது சத்திய வெளிச்சத்தால் இஸ்லாம் எதிர் கொள்கிறது என்பதே இஸ்லாமிய வெற்றியின் பின்னணியில் இருக்கிற ரக்சியம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியின் வாசலிலும் விரக்தியின் விளிம்பிலும் நிற்கிற முஸ்லிம்கள் இஸ்லாமின் வழிகாட்டும் இந்த சத்திய விரலைப் பிடித்துக் கொண்டால் வரலாற்றின் சதிப்பள்ளங்களை அவர்கள் தாண்டிக் குதித்து விட முடியும். இரண்டாம் உலக யுத்த கால கட்ட்த்தில் துருக்கிய மக்கள் செய்த தவறை முஸ்லிம்கள் செய்து விடக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு துருக்கியில் ஐரோப்பிய மோகம் கொண்ட ஒரு தலை முறை உருவானது. அவர்கள் இஸ்லாம் என்ற கீரீட்த்தை தங்கள் தலை மீது ஏற்றப் பட்டிருக்கிற சுமையாக கருதினார்கள். தங்கது அனைத்து வகையான பின்னடைவுகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று நினைத்தார்கள். உலகப் புகழ் பெற்ற துருக்கிக் தொப்பியை உதறினார்கள். தாடியை மழித்துக் கொண்டார்கள். பெண்கள் புர்கா அணியக் கூடாது என்றார்கள். ஐரோப்பியர்களைப் போல ஹட் தொப்பி வைத்துக் கொண்டார்கள். சுருட்டு பிடித்தார்கள். கோட் அணிந்து கொண்டார்கள். இப்படிச் செய்து விட்டால் ஐரோப்பியர்களாகி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்த்து. துருக்கிய மக்கள் தங்களது பழைய பெறுமையையும் இழந்தார்கள். புதிய முன்னேற்றத்தையும் இழந்தார்கள். இன்றும் ஐரோப்பாவின் நோயாளிகளாகவே இருக்கிறார்கள். இப்போது அங்கு ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. இஸ்லாமை தங்களது வாழ்க்க்கைகுள் மீட்டு வந்தாக வேண்டும் என்ற முனைப் போடு அங்குள்ள இளம் த்லைமுறை இஸ்லாம் வேண்டும் என்று கேட்டு போராடிவருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;சிறிது காலம் ஐரோப்பிய உலகு செய்த மூளைச் சலைவைக்கு இடம் கொடுத்த்தால் துரூக்கியின் வளர்ச்சி இன்னும் ஒரு 50 ஆண்டு காலத்திற்கு பின்னுக்குச் சென்று விட்ட்து. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தைகைய விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் நெருக்கடிகளில் இருந்து மீளவும் முஸ்லிம்களுக் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. தங்களது சமயத்தை உறுதியாக பற்றிக் கொள்வதே அது! &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமின் அடிப்படையான நீதி உணர்வுக்கு எதிராக தங்களது சுய உணர்ச்சிகளுக்கு சம்யச் சாயம் பூசிக் கொள்ளும் போலி புரட்சியாளர்களையும் தூய்மை வாதிகளையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள தவறி விடக்கூடாது. அவர்களை தங்களது சமூகத்தின் எல்லா மட்ட்த்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும். கட்டுச் சோற்றுக்குள் எலிகளையும் சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டு நீண்ட பயணம் போக முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்குமான நீதி எல்லோருக்குமான சட்டம் எல்லோருக்குமான கருணை என்ற தெய்வீக கோட்பாடே இஸ்லாமின் லட்சியம் என்ற சுத்தமான உணர்வு முஸ்லிம்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சாரார் புரிகிற அட்டூழியம் நீதி தவறும் துணிச்சலை அவர்களுக்கு தந்து விடக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;கொள்கையற்றவர்களும், மதமற்றவர்களும், வழிகாட்டிகளை தொலைத்தவர்களும் நட்த்திக் காட்டுகிற  கூத்தாட்ட்த்தில் மயங்கிவிடாமல், முஸ்லிம்கள்  தங்களது கிடைத்திருக்கிற உறுதியான சம்யக்கயிற்றை பலமாக பற்றிக் கொண்டால் போதுமானது.  மார்க்கம் அவர்க்களை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டுவந்து விடும்; மக்காவின் ஒட்டகம் மேய்க்கத் தெரியாத உமர்களை உலகச் ச்கரவர்த்திகளாக உயர்த்தியது போல.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய ஈத் நல்வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-7163262902937791842?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/7163262902937791842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=7163262902937791842' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/7163262902937791842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/7163262902937791842'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2010/09/blog-post.html' title='பெருநாள் சிந்தனை'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-3250118927662883513</id><published>2010-08-04T23:39:00.007+05:30</published><updated>2010-08-04T23:39:47.955+05:30</updated><title type='text'>பத்ரின் வரலாறு</title><content type='html'>கி.பி. 571 ம் ஆண்டு மக்கா நகரில்  பிறந்த முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது நாற்பது வயதில் இறைச் செய்திகளை பெறத் தொடங்கிய பிறகு  உருவமற்ற ஒரு இறைவனையே வணங்கவேண்டும் பிரச்சாரம் செய்தார்கள். ஆண்டாண்டு காலமாய் சிலை வணக்கத்தில் முழ்கிப் போய் பூம்யில் கட்டப்பட்ட முதல் இறையில்லமான கஃபாவிலேயே சிலைகளை வைத்து வழிப் பட்டுக் கொண்டு அதன் மூலம் தங்களை உயர்ந்த இனமாக அடையாளப் படுத்திக் கொண்டிருந்த குறைஷிக் குடும்பத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. &lt;br /&gt;மக்காவில் அவரும் அவரது தோழர்களும் நியாயமற்ற சொல்லனா துயரங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளானானார்கள். கடுமையான சமூக ஒதுக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். அதன் காரணமாக அவர்களது துணைவியார் அன்னை கதீஜாவின் திரளான சொத்துக்கள் காலியாயின. பல தோழர்கள் கடும் சித்தர்வதைக்கு ஆளானார்கள். சிலர் அந்தச் சித்திரவதைகளில் தம் இன்னுயிரை இழந்தார்கள். பக்கத்திலிருந்த வேறு ஏதாவது ஊரில் அடைக்கலாம கோரலாம் என்றால் மக்காவி குறைஷியர் அதற்கும் இடையூறு செய்தார்கள் விதித்தார்கள். எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் இஸ்லாமை தழுவிய ஒரு காரணத்திற்காக இந்தக் கொடுகைக்கு அவர்கள் ஆளாக்கப் பட்டார்கள். எந்த வகையிலிம் பதிலடி தருவதற்கு முஹம்மது (ஸல்) முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கவுமில்லை.  பொறுமை பொறுமை என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது, எதுவரை பொறுமையாக காப்பது? என்று உணர்ச்சிவசப்பட்ட தோழர்களைப் பார்த்து முஹம்மது (ஸல்); “ நீங்கள் அவசர ப் படுகிறீர்கள். உங்களது தலை இருபுச் சீப்பால் வாரப்படலாம். அப்போதும் பொறுமையாக இருங்கள். ஒரு நல்ல காலம் பிறக்கும் அப்போது அரபு தீபகற்பம் முழுதும் அக்கிரமம் ஒழிந்து அமைதி தவழும் அது வரை பொறுமையாக இருங்கள் என்றார்கள். தோழர்கள் அடக்கு முறைகளை சகித்துக் கொண்டார்கள். எல்லவகையான இழப்புகளுக்கும் சம்மதித்தார்கள். மக்காவிலுர்ந்து வெளியேறுவதற்காக பல தோழர்களும் தங்களது வீடு, வாசல், தொழில் நிறுவனங்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் அத்தனையையும் மக்கா குறைஷிகளிடம் கொடுத்து பிறகே வெளியேற முடிந்தது. &lt;br /&gt;முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தளம்  அமைந்தது. மதீனா இஸ்லாமிய நகராக உருவாகியிருந்தது.மக்காவின் குறைஷிகள் முஹம்மது ஸல்) அவர்களை நிராகரித்த போது மதீனா நகரத்து பிரபலங்கள் பலர் மக்காவிற்கே வந்து அவரை ஏற்றனர். தங்களது ஊரில் அவரை வரவேற்கத் தயாராயினர்.  &lt;br /&gt;தலைவர்கள் முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது இன்றைய அரசியலின் இயல்பு. ஆனால் மதீனாவில் தனக்கு ஒரு வசதியன தளம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகும் கூட முஹம்மது (ஸல்) அவர்கள் உடனடியாக மக்காவை விட்டு வெளியேறி விடவில்லை, தோழர்களை முதலில் அனுப்பி வைத்தார். இறுதியில் அவரது  உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது மக்கா நகரிலிருந்து வெளியேறி மதீனாவில் குடியேறினார்.&lt;br /&gt;அங்கு வசதியான இடம் கிடைத்தது என்ற போதும்  ஒரு கொள்கையை ஏறுக்கொண்டதற்காக மக்காவின் மக்கள் மதீனாவில் அகதிகளாக வசதி வாய்ப்புக்களை இழந்து குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வது நபிகள் நாயகத்திற்கு கவலையளிப்பதாகவே இருந்தது. அல்லாஹ் அந்தக் கவலைக்கு ஒரு தீர்வு சொன்னான.&lt;br /&gt;அதுவரை திருப்பித்தாக்குவதற்கு தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம்கள் இனி தங்களது தாக்குதலை தொடங்கலாம் என்று அனுமதி யளித்தான், திருக்குரானின் அந்த உத்திரவு இப்படி அமைந்தது. அதி அற்புதமாக சொல்லப் பட்ட உத்திரவு அது&lt;br /&gt;யுத்தம் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானோருக்கு எதிர்த்து போராட அனுமதிக்கப் படுகிறது. அவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. தங்களது வீடுகளை விட்டு அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றலுடையவன் &lt;br /&gt;இந்த வசனத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவரளின் அரசியல் நடவ்டிக்கைகள் தீவிரம்டைந்தன. நமது பொருட்களை அபகரித்தவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என பெருமானார் நினைத்தார்கள். &lt;br /&gt;அப்போதுதான் தான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. மக்காவிலிருந்து 43 வியாபாரிகளைக் கொண்ட பெரும் வியாபாரக் கூட்டமொன்றூ அபூசுப்யானுடைய தலைமையில் சிர்யாவுக்கு புறப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது.அந்த வியாபாரத்தில் மக்காவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கிருந்தது. &lt;br /&gt;மக்காவிலிருந்து சிரியாவுக்கு செல்வதானால் மதீனாவை கடந்து தான் செல்ல வேண்டும். செங்கடலை ஒட்டு ஒரு பாதை இருந்தது அது தொலைவு அதிகம், எனவே மதீனா வழியாக கடந்து செல்லும் மக்காவின் வியாபரக் கூட்டத்தை கைப்பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க முஹ்மமது (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். &lt;br /&gt;சில குழுக்களை அனுப்பி வியாபாரம் கூட்டம் குறித்து விசாரிக்க அனுப்பினார்கள். நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் தலைமயில் சென்ற ஒரு குழு மக்காவின் வெறு ஒரு சிறு வியாபாரக் கூட்டத்தை சந்தித்தது. அவர்களிடையே நடைபெற்ற மோதலில் அம்ரு பின் ஹழ்ரமீ என்ற மக்கா காரர் கொல்லப் பட்டார். ஆனால் அபூசுபயானுடைய வியாபாரக் கூட்டம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. &lt;br /&gt;பெருமானார் (ஸல்) அவர்கள் தானே தேடிச் செல்வது என்று முடிவு செய்தார்கள். தோழர்களை திரட்டினார்கள். அது ஒரு திட்டமிட்ட திரட்டுதலும் இல்லை. வருவோர் வரலாம் என்று அழைத்தார்கள். புறப்படுகிற போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கூட கணக்கிடப் படவில்லை. இடைவழியில் ஆட்களை எண்ணும்படி பெருமானார் உத்தரவிட்டார்கள். ஒருவர் எண்ணிப் பார்த்து விட்டு 313 பேர் இருக்கிறார்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அந்த எண்ணிக்கையை கேட்டு மகிழ்ச்சிய்டைந்தார்கள். முற்காலத்தில் ஒரு முறை தங்களது தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடந்து கொண்ட யூதர்க்குழுவினர் 313 பேர் இருந்ததனர் என்பதால் அந்த எண்ணிக்கை பெருமானாருக்கு மகிழ்சியளித்தது. &lt;br /&gt;இதற்குள் சிரியா சென்று சேர்ந்து விட்ட அபூசுப்யானுக்கு நபிகள் நாயகத்தின் திட்டம் தெரிய வந்தது, அவர்  ழம்ழம் என்ற ஒரு நபரை கூலிக்கு அமர்த்தி மக்கா குறைஷியரின் வியாபாரக் கூட்டத்திற்கு முஹம்மதால் ஆபத்து என்ற செய்தியை சொல்லுமாறு அனுப்பி வைத்தார். &lt;br /&gt;ஏற்கென்வே ஒரு கொலையால் கோபம் கொண்டிருந்த மக்காவிற்குள் இந்தச் செய்தி பெரும் புயலை உண்டு பண்ணியது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொட்டிருத பிரதான எதிரி அபூஜஹ்ல் வெறித்தனமாக மக்காவின் ஆட்களை திரட்டினான். 100 குதிரைகள் ஆயிரம் காலாட்ப்டையினரோடு அவன் படை எடுத்து புறப்பட்டன். ஆட்டம் பாட்டத்தோடு அவனது படை மதீனாவை நோக்கி நகர்ந்தது. &lt;br /&gt;அபூசுப்யானின் வியாபாரக்  கூட்டத்தை எதிர்பார்த்து மக்காவின் பாதையில் பயணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுமார் 80 மைல்கள் பயணம் செய்து பத்ரு கிணறு இருக்கிற பகுதிக்கு  வந்து சேர்ந்தார்கள். அபூஜஹ்லின் படை அதன் இன்னொரு முனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. &lt;br /&gt;ஒரு இடையன் கொடுத்த தகவலால் மக்காவின் குறைஷிகள் படை எடுத்து வந்திருபதை அறிந்து கொண்ட பெருமானார் தோழர்களோடு ஆலோசனை செய்தார்கள். வியாபாரக் கூட்டத்தை சாதாரணமாக பிடித்து விடலாம் என்ற மனக் கோட்டையில் இருந்த தோழர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் தான் புறப்பட்ட போது அல்லாஹ் ஒன்றூ வியாபாரக் கூட்டம் அல்லது வெற்றியை தருவதாக அல்லாஹ் வாக்களித்த திருக்குரானிய வசனத்தை எடுத்துக் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்த பிறகு அவர்களை எதிர் கொள்வதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டார்கள். எந்த வகையான முன்னேற்பாட்டுக்கும் தயாராக இல்லாத நிலையிலும் கூட நபிகள் நாயகத்தின் தோழர்கள் அந்த முடிவுக்கு தங்களது பரிபூரண சம்மதத்தை வெளிப்படுத்தினார்கள்.&lt;br /&gt;அதன் பிறகு  யுத்ததிற்கான ஆயத்ததில் இறங்கிய தோழர்களை வரிசைப் படுத்தினார்கள். அது ஒரு வியாழக் கிழமையின் மாலை நேரம். இரு தரப்பாரும் ஒருவர் மற்றவர் வருகைப் பற்றி அறிந்து சண்டைக்கு தயாராக இருந்த சூழலில் வெள்ளிக்கிழமை பொழுது புலர்ந்தது. &lt;br /&gt;மக்காவில் சந்தித்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவரகள் தன்னுடன் மக்காவிலிருந்து வந்த சுமார் நூறு பேருடனும் மதீனாவின் தோழர்கள் சுமார் இருநூறு பேர்களுடனும் அபூஜஹ்லின் தலைமையிலான எதிரணியினரைச் நேருக்கு நேர் சந்தித்தார்கள், முஸ்லிம்களின் அணியில் ஒரு ஒருங்கிணைப்பு ஒழுங்கும் இருந்தது, எதிரணியில் அது இல்லை, &lt;br /&gt;யுத்தம் தொடங்கியது.முதலில் தனி நபர்கள் மோதினாரர்கள்.அது கொடுத்த ஆக்ரோஷத்தில் பிறகு அணியாக மோதினார்கள். காலையில் தொடங்கிய யுத்தம் லுஹர் நேரத்திற்குள்ளாக முடிந்து போனது. &lt;br /&gt;முஸ்லிம்கள் வெற்றிய்டைந்தனர். எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் 14 பேரும் எதிரிகளின் தரப்பில் எழுபது பேரும் கொல்லப்பட்டிருந்தனர். எதிரிகளில் 74 பேர் சிறை பிடிக்கப்பட்டவரகள் போக மற்றவர்கள் யுத்த களத்திலிருந்து விரண்டோடினர். எதிரிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் கொல்ல்பபட்டிருதனர். &lt;br /&gt;313 நபர்களை மட்டுமே கொண்ட அனுபவமும் ஆயுதங்களும் அற்ற சிறு படையினர் இறை விசுவசம் தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற ஒரு அம்சத்தை ,மட்டுமே கொண்டு அவர்களை விட வலிமையான போர்த்திறன் அதிக எண்ணிக்கையினரை வெற்றி கொண்டது ஒரு வரலாற்று அதிசயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-3250118927662883513?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/3250118927662883513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=3250118927662883513' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/3250118927662883513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/3250118927662883513'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2010/08/blog-post_7464.html' title='பத்ரின் வரலாறு'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-1394353474145542025</id><published>2010-08-04T23:39:00.001+05:30</published><updated>2010-08-04T23:39:06.603+05:30</updated><title type='text'>பத்ரின் அரசியல்</title><content type='html'>பத்ரின் அரசியல்&lt;br /&gt;&lt;br /&gt;நாற்காலிக்காக இருகாலிகள் நாற்காலி ஆகிறார்கள் என்று  கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வார். பதவிக்காக் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிற இன்றைய அரசியல் அவலத்தை அந்த வரிகள் படம்பிடிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பத்ரு யுத்தம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசியல் நடவ்டிக்கைகளில் காணப்பட்ட பிரமிப்பூட்டும் நுட்பத்தையும் நாகரீகத்தையும் அடையாளப் படுத்துகிறது. பத்ரு யுத்ததின் அரசிய்ல் கூறுகளில் உலக அரசியலுக்கு எழுதப்படாத பாடங்கள் ஏராளமாக இன்றளவும் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624 மார்ச் 14 ம் தேதி) ரம்லான் மாதத்தின் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி சூரியன் சுடத் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்து போன அந்த யுத்தத்த்தின் நிகழ்வுகளையும் அதன் நாயகர்களையும் அதில் களப்பலியானவர்களயும் ஒவ்வொரு ஆண்டும் உலக முஸ்லிம்கள் ரமலான் 17 ம் நாள் அன்று நினைவு கூறுகிறார்கள். இன்றும் கூட அந்தப் பொட்டல் வெளியில் அதே தினத்தன்று திரளாக கூடுகிற முஸ்லிம்கள் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த நிகழ்வை உணர்வுப் பூர்வ்மாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபிகள் நாயகத்தோடு கலந்து கொண்ட நபிதோழர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். மலேஷியாவில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாலை வனப் பிரதேசத்தில் இரண்டு பழங்குடி இனத்தவரின் மோதல் அல்லது ஒரு சகோதர யுத்தம் என்பதை தாண்டி வரலாற்றை கவர்ந்திழுக்கிற சிறப்பம்சங்கள் எதுவுற்ற அந்த சண்டை, வரலாற்றை தலை கீழாகப் புரட்டிப் போட்டது. மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியலை மட்டுமல்ல உலக அரசியலின் போக்கிலும் அது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்ற்குப் பின்னால் ஏற்பட்ட எழ்ச்சியில் அன்றை இரு பெரும் வல்லரசுகளான பாரசீகத்தின் சாசானியப் பேரர்சும் ரோமின் பைஜாந்தியப் பேரரசும் சபதமில்லாமல் சாய்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கண்டுபிடிக்கப் ப்டுவதற்கு முன்னாள் அன்றை உலகம் என்பது ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா என்ற மூன்று கண்டங்களை மட்டுமே கொண்டிருந்தது. அன்றைய அந்தபூமியின் நிலப்பரப்பில் சுமார் 70 சதவீத பரப்பிற்கு இஸ்லாம் பரவியது என்றால் அதற்கு மூல வித்தாக அமைந்தது பத்ரு யுத்தம்&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் ஆசியக் கண்டத்தின் வரலாற்றை திசை திருப்பிய இருபது யுத்தங்களை வரிசைப் படுத்துகிற வர்லாற்றாய்வாளர்கள் பத்ரு யுத்ததிற்கு இரண்டாவது இடத்தை தருகிறார்கள்.  .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிசையில் முதல் யுத்தமாக ம்கா அலக்ஸாண்டர் பாரசீகத்தின் மீது நடத்திய யுத்தம் குறிப்பிடுகிற்து. அதற்கு காரணம் அது காலத்தால முந்தியது என்பது மாத்திரமே!  அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யுத்தம் என்று எடுத்துக் கொண்டால் பத்ரு யுத்தம் தான் ஆசிய வரலாற்றின் பெரும் திருப்பு முனையான யுத்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உள்ளூர் சண்டயாக நடைபெற்ற அந்த யுத்தம் உலக யுத்தங்களை விட வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அதிக தாக்கத்தை செலுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;பானிபட் யுத்தம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு வழி கோலியது. பிளாசிப் போர் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவை கைகொள்ள காரணமாகியது முத்துது துறை முகத்தின் மீது ஜப்பான் தொடுத்த தாக்குக்தல் ஜப்பானின் சித்தைவுக்கு வழிவகுத்தது. இந்த யுத்தங்களும் இது போன்ற இன்னும் சில யுத்தங்கள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றாலும் அவற்றின் தாக்கம் அதிகபட்சமாக இருநூறு வருடங்களை தாண்டவில்லை. ஜப்பான் 50 ஆண்டுகளில் மீண்டெழுந்தது விட்டதை இன்றைய தலை முறை பார்த்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரு யுத்தத்தின் புறத் தாக்கம் 15 ஆண்டுகள் தங்களிடையே இருந்தது என்று நபிதோழர்கள் கூறுகிறார்கள். அதன் அகத்தாக்கமோ கால வரையறைக்கு அப்பாற்பட்டு விசுவரூபம் எடுத்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் தொடங்குவத்ற்கு சற்று முன்னதாக யுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்து விட்டு தனது கூடாரத்திற்கு திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனையின் வாசகத்தை கவனித்துப் பார்த்தால் .அன்றைய சூழ்நிலையின் கையறு நிலையையும் அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிய்ன் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;“இறைவா! இந்தச் சிறு கூட்டத்தை இப்போது நீ அழித்து விட்டால இனி இந்த பூமியில் உன்னை வணங்க யாரும் மிஞசமாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்த்னை செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்திருக்கிற மூன்னூறு நண்பர்களை பாதுகாக்கிற ஒரு தலைவரின் பொறுப்புணர்வும் கவலையும் அக்கறையும் அந்த இறைஞ்சுதலில் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல அந்த யுத்தத்தில் கிடைக்கிற வெற்றி இந்தப் பூமியில் ஏற்படுத்தப் போகும் மாற்றத்தையும் அது பிரதிபலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மெல்போர்ன் நக்ரத்தின் தெருக்கலில், சிகாகோவின் வீதிகளில் மாஸ்கோவின் மைதானங்களில் அல்லாஹு அக்பர் என்ற சப்தம் ஒலிக்கிறது என்றால் அதற்கு பத்ரின் வெற்றி தான் காரணம். இந்த வெற்றியில் நபிகள் நாயகத்தின் அரசியல் முதிர்ச்சியும் நேர்மையும்  மறைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாபெரும் தலைவரின் அரசியல் வாழ்வில் போராட்டங்களும் யுத்தங்களும் சகஜம். அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதிலும் அவற்றுக்கு பின் கிடைத்த வெற்றி தோல்விகளை அவர் எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதும் அவரை வரலாற்றின் சிறபான உய்ரங்களுக்கு எடுத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரு யுத்தத்திற்கான ஆயத்தங்களின் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கையாண்ட நெறி முறைகளில் நாகரீகம் மிளிர்ந்தது.    &lt;br /&gt;&lt;br /&gt;பின்னாட்களில் நபிகள் நாயகத்தின் உளவாளி என்று பெயர் பெற்ர ஹுதைபா பின் யமான் (ரலி) கூறுகிறார் :&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அபூ ஹுசைலும் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து பத்ரில் பங்கேற்ப்பதற்காக ரக்சியமாக மதீனாவுக்குப் புறப்பட்டோம். மக்காவின் எதிர்கள் எங்களை இடை மறித்து தடுத்து முஹம்மதுடன் சேர்ந்து கொள்ளத்தானே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்காக அல்ல வேறு ஒரு வேளையாக நாங்கள் மதீனாவுக்கு செல்கிறோம் என்று சொன்னோம். அப்படியானால் முஹம்மதுவுடன் சேர்ந்து யுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று வாக்குறுதி தருமாறு கேட்டார்கள். வேறு வழியின்றி வாக்குறுதி கொடுத்து விட்டு புறப்பட்டோம். நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து நடந்த வற்றைச் சொன்னோம் . பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்: (இன்சரிஃபா! நபீ லஹும் பி அஹ்திஹிம் வ நஸ்தஈனுல்லாஹ அலைஹிம்) “நீங்கள் இருவரும் திரும்பிச் செல்லுங்கள். எதிரிகளுக்கு கொடுத்த வாக்கை நாம் நிறைவேற்றுவோம். யுத்தத்தில் வெற்றி பெற அல்லாஹ்விடம் உதவி கேட்போம். என்றார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 3342)&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரின் அரசியல் என்பது முதலில் அதன் நேர்மையான அனுகுமுறைகளாலேயே அதிக பொலிவு பெற்றுத் திகழ்கிறது. புற வெளியில் வெற்றி வாய்ப்பு சாத்தியமற்றயதாக தோன்றிய அந்த சூழலில் நபிகள் நாயகத்தின் அந்த அகஎழில் அவரை மட்டுமல்ல அவரது நண்பர்களையும் காப்பாற்றியது.  மாத்திரமல்ல; அவர்களது இருப்பை உறுதியாக நிலைப்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் இத்தகைய நேர்மை எல்லோருக்கும் சாத்தியமா? எனக் கேட்கத் தோன்றலாம். வரலாற்றில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அது சாத்தியமே!&lt;br /&gt;&lt;br /&gt;இற்கு நேர்மாறான ஆர்ப்பாட்ட அரசியல் வாதியான அபூஜஹ்ல் தானும் அழிந்து தனது சமூகத்தையும் அநாதையாக்கியதையும் பத்ரு சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அபூஜஹ்லுக்கு நபிகள் நாயகம் உன்மையானவர் என்பது தெரிந்தே இருந்தது. அவனே ஒப்புதல் வாக்கு மூலமும் வழங்கி இருக்கிறான் ( இன்னா லா நுகத்தீபூக வலாகின் நுகத்திபு பிமா ஜிஃத பிஹி ) முஹம்மதே ! உம்மை பொய்ய்ரென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் உனது கொள்கையை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று சொன்ன அவன் அதற்கான காரணத்தையும் கூறினான் குறைஷிகளின் உட் பிரிவான உங்களது ஹாசிம் குடும்பத்திற்கும் எங்களது அப்து ஷம்சு குடும்பத்திற்கு தலைமை யாருக்கு உரியது என்பதில் கடும் போட்டி இருக்கிறது. இந்தச் சூழலில் உம்மை இறைத் தூதர் என்று ஒப்புக் கொண்டால் எங்களால் அது விசயத்தில் போட்டி போட இயலாதல்லவா ? எனவே உம்மை நான் ஒத்துக் கொள்ள முடியாது என்று அவன் கூறினான்.&lt;br /&gt;முஹம்மது (ஸல்) அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியிம் அவனுக்குள் பழைய போட்டி பொறாமை உணர்வையே கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. அதனாலேயே மக்காவிலிருந்து வெளியேறிய முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தலைமக்கான தளம் அமைந்ததை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவரை அழித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருதவனுக்கு அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்திற்கு ஆபத்து என்ற செய்தி பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதை வைத்து மக்காவின் மக்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டு பன்னி அவர்களை திரட்டிக் கொண்டு வந்திருந்தான். அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாப்பதை விட தனது போட்டியாளரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சுய வஞ்சமே மேலோங்கியிருந்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய தலைவர்கள் அமைவதை விட ஒரு சமூகத்திற்கு பெரிய துரதிஷ்டம் வேறு இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரு யுத்தம் தொடங்கு வதற்கு முதல் நாள் ஒரு பெரும் அழிவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு யுத்தத்திலிர்ந்து தன் சமூக மக்களை காப்பாற்றூவதற்கு அபூஜஹ்லுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வியாபாரிகளின் தலைவர் அபூசுப்யானின் கடிதம் அன்று அவனுக்கு வந்து சேர்ந்தது.  தனது வியாபாரக் கூட்டம் செங்கடலின் கரையோர மார்க்கமாக பத்திரமாக திரும்பி விட்டது. என்வே மக்காவுக்கு திரும்பி வருமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;எவரையும் அழித்தொழிப்பதற்கு முன்னாள் இறைவன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கத் தவறுவதில்லை. அபூஜஹ்ல் அந்த வாய்ப்பை வீணடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடித்தத்தின் செய்தியை அறிந்து கொண்ட மக்காவிம் இன்னொரு தலைவரான் அஹ்னஸ் பின் ஷுரைக் அபூஜஹ்லிடம் எவ்வள்வோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;அபுல் ஹிகம்! உங்களது சகோதரரின் மகன் உண்மையானவர் என்று உங்களுக்கு தெரியும் என்று நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வியாபார்ககூட்டத்தை பாதுகாக்கத்தானே வந்தோம் அது பத்திரமாக வ்ந்து சேர்ந்து விட்டது வாருங்கள் திரும்பி விடுவோம் என்று அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் மசியவில்லை. தனது கருத்தை மறுப்பவர்கள் அத்தனை பேர்ரையும் கோழைகள் என்று ஏசினான். அவனது இந்தப் போக்கை ஏற்ற்குக் கொள்ளாத அஹ்னஸ் தனது ப்னூ சுஹ்ரா குடும்பத்தை சார்தோரை சுமார் 100 நப்ர்களை பத்ருக் களத்திலிருந்து திரும்ப அழைத்துச் சென்று விட்டார். அதனால் பனூ சுஹ்ரா குடும்பத்தினர் எவரும் பத்ரில் பலியாகாமல் தப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அபூஜஹ்லின் சுய வஞ்சம் அவனையும் அவனோடிருந்த பலரையும் மோசமாக பலி கொண்டது. அவனது சமூகத்தின் முதுகெலும்பை முறித்து போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணாமாக அரபு தீபகற்பத்தில் மக்காவின் குறைஷியருக்கு எதிர்ப்பே கிடயாது. மத ரீதியாக மிக பாதுகாப்பான பகுதியில் அவர்கள் வசித்தார்கள். அவர்கள் இருக்கிற இடம் தேடி யானைகளோடு வந்த படைகளே கூட சின்னபின்னமாகி  சிதறிப்போனது என்பது தான் அதுவரைக்குமுண்டான வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் முத்தலிபின் பண்பினால் பாதுகாக்கப் பட்ட மக்காவின் மக்கள் அபூஜஹ்ல் என்ற மோச்மான அரசியல் தலைமையினால் வரலாறு காணாத சோகத்தை முதல் முறையாக அனுபவித்தார்கள். மக்காவில் ஒரு மாத காலம் ஓலம் ஓயவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;தன் சொந்த வெறுப்பை பிரதானப்படுத்திய ஒரு தவறான அரசியல் தலைமையின் அழிவும், அவனது சமூகத்திற்கேற்பட்ட கோரமான முடிவும் பத்ரின் அரசிய்ல பாடங்களில் மறந்துவிடக் கூடாது ஒரு பாடமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்க்ள் தன் தோழர்களோடு ஆலோசனை கலந்தார்கள். ஒரு இறைத்தூதராக அவர் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இல்லைதான் என்றாலும் ஒரு சிற்ந்த அரசியல் தலைவருக்கு முன்னுதாரமான தனது நடைமுறையை நபிகள் நாயகம் அமைத்துக் கொண்டார்கள். தனது கருத்தை தொண்டர்கள் மீது வலிந்து திணிக்கும் மலிவான ஆதிக்க மனப்பான்ம்மை அவரிடம் இருக்கவில்லை. ஒரு களத்தில் எதிரிகளை சந்திக்க நேர்ந்த பிறகு அவர்களை எதிர்கொள்ளாமல் புறமுதுகிட்டுச் செல்வது சரியல்ல என்ற நபிகள் நாயகத்தின் கருத்துக்கு தொண்டர்கள் அமோகமாக இசைவு தெரிவித்தார்கள்.&lt;br /&gt;தன்னுடைய யோசனைக்கு மற்றவர்கள் இணங்கியது போலவே மற்றவர்களது யோசனைக்கு பெருமானாரும் இணங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் பிரதேசத்திற்குள் நுழைந்த போது அதன் ஓரு ஒரத்தில் உள்ள நீர்நிலைக்கு அருகில் தங்குவதற்கு முடிவு செய்தார்கள். அப்போது குறிக்கிட்ட ஹப்பாப் பின் முன்திர் (ரலி)  என்ற தோழர் “இல்லை. இன்னும் உள்ளே சென்று எதிர்களுக்கு நெருக்கமான இடத்திலிருக்கிற நீர் நிலைக்கு அருகே சென்று  தங்குவோம் அப்போது நம்மிடம் தண்ணீர் இருக்கும் எதிரிகளிடம் தண்ணீர் இருக்காது என்று ஆலோசனை சொன்ன போது அந்த யோசனையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதோடு நல்ல யோசனை என்று பாராட்டவும் செய்தார்கள்&lt;br /&gt; &lt;br /&gt;இத்தகைய நடவடிக்கைகளால் தொண்டர்களின் முழு ஈடுபாடும் பெருமானாருக்கு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் தொடங்கிய போது போர் முனையின் வாசலில் நின்று கொண்டு குறைஷியரான உதபா ஷைபா, வலீத் பிப் உத்பா ஆகியோர் தங்களோடு சண்டையிட வருமாறு கொக்கரித்தனர். அப்போது மதீனாவைச் சார்ந்த அன்சாரித் தோழர்களான அவ்பு முஆத் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் அவர்களை எதிர்கொள்ளச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை அது காட்டியது. இஸ்லாத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது என்ற உணர்வு பிரதானப்பட்டு விட்டதை அது வெளிப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மதீனாவீன் வீரர்களை கண்ட எதிரிகள் தம்முடம் மோதுவதற்கு தமது சொந்தக் குலத்தவர்களை அனுப்புமாறு கோரினர். அவர்கள்  குலப் பெருமையின் அடிப்பாடையில்  யுத்தத்தை எதிர்கொண்டார்கள் என்பதை அது காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரி யுத்ததில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றத்ற்கு அதுவே பிரதான காரணம். கொள்கை வழியில் போராடியவர்கள் ஜாதிய உணர்வில் போராடியவர்களை வென்றார்கள் என்பது பத்ரின் அரசியல் தரும் பிரதானச் செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுகிய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது இன்றைய அரசியலின் சூத்திரமாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் உன்னதமான பண்புகள் தருகிற வெற்றியே அதன் களப்பகுதிகளை கடந்து வரலாற்றில் வாழும் என்பதே பத்ரின் அரசியலாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-1394353474145542025?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/1394353474145542025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=1394353474145542025' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/1394353474145542025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/1394353474145542025'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2010/08/blog-post_5981.html' title='பத்ரின் அரசியல்'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-8837608041527454316</id><published>2010-08-04T23:33:00.002+05:30</published><updated>2010-08-04T23:33:30.170+05:30</updated><title type='text'>கைவிடப்பட்ட காஸா</title><content type='html'>சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட அநாதை போல, சுற்றி இருந்த அரபுநாடுகளாலும், உதவிக்கு வந்து ஊரை அடித்துத் தின்கிற ஐரோப்பிய நாடுகளாலும் ஏன் தன் சொந்த தேசத்தின் அதிபரால் கூட கைவிடப் பட்ட பரிதாபத்திற்குரிய காஸா நகரம் வரலாற்றில் மற்றுமொரு கருப்பு அத்தியாயாயத்தை சந்தித்தது. 2008 டிஸம்பர் 26 ம் தேதி முதல் 2009 ஜனவரி 17 வரை Operation Cast Lead என்று பெயரிட்டு இஸ்ரேல் நடத்திய பேயாட்டத்தால் நிலை குலைந்து போனது. கதறி அழ மட்டுமே காப்புரிமை பெற்ற சமுதாயம் மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்தது.&lt;br /&gt;எந்த சோகத்திலும் தம் சுதந்திர வேட்கையை விட்டுக் கொடுக்காத காஸா நகரத்து மக்கள் உலகத்தின் ஒப்பாரியை ஒரு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறு கரத்தில் ராக்கெட் லாஞ்சர்களை ஏந்தி நின்றனர். யுத்தம் கொடுரமாகத் தொடர்ந்தது. நிலம், நீர், ஆகாயமென தன் சக்திக்கு உட்பட்ட  அத்தனை திசைகளிலிர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்ததது. உலகமெங்கிருந்தும் கண்டனக் கனைகள் பறந்தன. கண்டன ஊர்வலங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் நாடுகள் குலுங்கின.  புதிய அதிபரை பார்த்த மயக்கத்தில் அமேரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மறந்திருந்த ஒரு பொன்னான  சந்தர்ப்பத்தில் ஐநா சபை ஒரு தீர்மாணம் நிறைவேற்றிக் கூட போரைத் தடுக்கப் பார்த்தது. வழக்கப் படி "மசுறு" என்று அதை ஊதித் தள்ளி நிராகரித்த இஸ்ரேலிய அரசு மேலும் வேகமாக தாக்கத் தொடங்கியது. சமாதான முயற்சிகள் எகிப்து துருக்கி உள்ளிட்ட பல மட்டத்திலும் நடந்து கொண்டிருந்தன. எதுவும் உடனடி தீர்வுக்கு வழி செய்யவில்லை.   . பலியானோர் எண்ணிக்கை நூறுகைளை தாண்டி ஆயிரத்தை தொட்டது.    &lt;br /&gt;திடீரென்று இஸ்ரேல் போரை நிறுத்தி விட்டது! அதுவும் ஒரு தரப்பாக!. இஸ்ரேலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஹமாஸ் கூட சற்றே அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும்.  எதனால் இந்த திடீர் மாற்றம்? &lt;br /&gt;ஹமாஸ் அமைப்பின் ஏவுகனை ஏவு தளங்களை அத்தனையும் அழிந்துவிட்டதா ?  அல்லது நமது பெருமைக்குரிய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற மஹானுபவர்கள் இஸ்ரேல் என்று பெயர் குறிப்பிட அஞ்சி பொத்தம் பொதுவாக அமைதிக்காக குரல் கொடுத்தார்களே அதனாலா?  அல்லது அப்பாவிகளை கொல்வது அநியாயம் என்று இஸ்ரேலுக்கு யாரவது புதிதாக ஞானதீட்சை வழங்கினார்களா? அதில் இஸ்ரேல் திருந்திவிட்டதா? இதில் எதுவும் இல்லை. &lt;br /&gt;பிறகு எதனால் இந்த அக்கிரமப் போர் அவசரமாக முடிவுக்கு வந்தது ?&lt;br /&gt;அமெரிக்க அதிபராக புதிதாக பொறுப்பேற்க இருக்கிற ஒபாமா ஜனநாயகக் கட்சிக்காரர். அவர் இஸ்ரேலை சற்று நிதானப் படுத்தக் கூடும். அதற்கு முன்னதாக அரபகத்தில் உள்ள தனது எதிர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவே இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு ஞாககத்தில் வைத்திருக்கத் தக்க அழிவுகளை ஏற்படுத்தி விட்டதால் இது போதும். புதிய அதிபர் பொறுப் பேற்கிற போது அவருக்கு அதிக சிரமம் தரக்கூடாது என்பதற்காகவே அமெரிக்காவின் புதிய அதிபர் பொறுப்பேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இந்த யுத்ததை நிறுத்தி விட்டது. &lt;br /&gt;இது ஒரு யூகம்.  &lt;br /&gt;கடந்த ஆண்டு லெபனானுடன் சண்டையிட்டதில் மத்தியக் கிழக்கின் சூப்பர் பவர் என்ற இஸ்ரேலின் பெருமை அடிவாங்கியது. அதை மீட்கவே இந்த கொடூரத்தாக்குதல் நடத்தப் பட்டது. இதன் மூலம் இஸ்ரேலின் ஆளும் கட்சி ராணுவத்தின் ஆளுமையை காப்பாற்ற முயன்றது.  ஆனால் இப்போது இவ்வளவு கடும் தாக்குதலுக்குப் பின்னரும் மக்களை தொல்லைப் படுத்த முடிந்ததே தவிர ஹமாஸின் ராணுவ வலிமை ஒழிக்க முடியவில்லை. ஹமாஸின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கடந்த ஜனவரி 18 ம் தேதி ஞாயிரன்று பேசிய ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா "காஸா முனை மீதான இஸ்ரேலின் மூன்று வாரத் தாக்குதல் தோல்வியடந்து விட்டது. எதிரிகள் தங்களது நோக்கத்தில் தோற்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.   எனவே மக்களை அழித்ததில் ஓரளவு திருப்தி கொண்டு இஸ்ரேல் பின்வாங்கி விட்டது. &lt;br /&gt;இப்படியும் ஒரு யூகம். &lt;br /&gt;இப்படியாகத் தொடர்கிற யூகங்களில் சில உண்மை இருந்தாலும் இருக்கலாம். ஆனால் இது இதைக் தாண்டி இஸ்ரேலின் தீடீர் தாக்குதலிலும் திடீர் சண்டை நிறுத்தத்திலும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கிறது. சர்வதேச சமுதாயம்  கவனிக்க வேண்டிய விசயம் அது.  அதுவே இஸ்ரேலின் இன வெறி. &lt;br /&gt;அப்பாவிக் முஸ்லிம் குழந்தைகளையும் நிராயுதபாணி முஸ்லிம் பொதுமக்களையும் கொல்வதை இஸ்ரேல் பாவம் என்று கருதுவதில்லை. தவறு என்றே கூட நினைப்பதில்லை. அதனால்தான் காஸாவில் ஏற்பட்ட மிகமோசமான மனிதக் படுகொலைகள் பற்றிய எந்தக் கோரக் காட்சியும் அதன் இதயத்தை தொட வில்லை. தொடாது. திருக்குரான் கூறுகிறது. (யூதர்களே! பிறகு உங்களது இதயங்கள் இருகிவிட்டன. அது பாறை போன்றதாக ஆகிவிட்டது. இல்லை. பாறயைவிட அது இன்னும் கடினப் பட்டுவிட்டது. பாறைகளில்  கூட சில நேரங்களில் நீர் கசியும் (உங்கள் இதயங்களில் அதுவும் இல்லை) &lt;br /&gt;15 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருக்குரானின் இந்த விமர்சனம் இன்றளவும் யூதர்களுக்குப் பொருந்தும்.     &lt;br /&gt;இரண்டாம் உலக யுத்தத்திற்கு சற்று முன்னதாக ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஒரு யூதனை பிடித்த ராணுவ வீரன் அவனை கொல்ல முயன்றான். அப்போது அந்த யூதன் அலறினான்,  "என்னை எதற்காகா கொல்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான். &lt;br /&gt;நீ யூதன்.  அதனால் தான் உன்னை கொல்கிறேன் என்று அந்த ஜெர்மனிய வீரன் சொன்னானாம்.&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நடைபெற்ற இந்த உரையாடல் அநீதியானதாக மனிதாபிமானமற்றதாக தோன்றினாலும்  இருபத்த்தி ஒன்றாம் நூற்றாண்டு இதில் சில தர்ம நியங்கள் புதைந்து கிடப்பதை உணர்ந்து கொள்ளும் போல தெரிகிறது. &lt;br /&gt;காஸா முனை மீதான் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இஸ்ரேலியர்களின் மிருகத்தனம் அல்லது இஸ்ரேலிய மிருகங்களின் குணம் மீண்டும் ஒரு முறை அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை உலகிற்கு புரிய வைத்துள்ளது. &lt;br /&gt;மூன்று வாரங்களாக காஸாமீது பொழியப் பட்ட குண்டு மழை எந்த காரண்த்தை கொண்டும் நியாயப் படுத்த இயலாது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட அமெரிக்க பத்ரிகைகளே கூட ஒத்துக் கொண்டன. இஸ்ரேலின் உரிமையை நிலைநிறுத்துவது அல்லது இஸ்ரேலின் நலனை பாதுகாப்பது அல்லது ஹமாஸை ஒழிப்பது என்ற தேவையை விட இந்த தாக்குதல்கள் மிக அதிகம் என அவை நாசூக்காக கூறின. சில பத்ரிகைகள் துணிந்து இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்து வருவதாக கூறின. &lt;br /&gt;ஜெரூஸலம் போஸ்ட் பத்ரிகை தரும் தகவலின் படி டிஸம்பர் 26 ம் தேதி இஸ்ரேல், 100 பைட்டர் ஜெட் விமானங்களையும் குண்டு வீசும் ஹெலிகாப்டர் களையும் அனுப்பி காஸாமுனையின் மீது 200 குண்டுகளுக்கும் மேலாக வீசியது. 170 இலக்குகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப் பட்டது என்று இஸ்ரேல் கூறீய அந்த இலக்குகளில் பள்ளிவாசல்கள் பள்ளிக் கூடங்கள் மருத்துவ மனைகள் காவல் நிலையங்கள் அரசு கட்டிடங்கள் பொதுமக்கள் வாழ்விடங்கள் அனைத்தும் அடங்கும். முதல் நாள் தாக்குதலில் மட்டும் சுமார் 240 பேர் கொல்லப் பட்டார்கள். முதல் வாரத்தில் மட்டும் 12 பள்ளிவாசல் தரை மட்டமாக்கப் பட்டிருந்த தாக ராபிதததுல் ஆலமில் இஸ்லாமியா எனும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு கூறியது. &lt;br /&gt;ஒருபெரும் பூகம்பத்  தாக்குதலுக்குள்ளான நகர் போல் காஸா காட்சியளிக்கிறது என பி.பி.சி கூறுகிறது. போர்நிறுத்ததிற்குப் பிறகு காஸாவை நேரில் பார்த்த ஒருவர், காஸாவில் ஏங்கு நோக்கினும் உடைந்த மரச்சாமான்களும் உருக்குலைந்த இரும்புச் சட்டங்களும் சிதறிக்கிடக்கின்றன, அவை மட்டுமே அங்கே இருக்கின்றன என்று பி.பி.சிக்கு எழுதுகிறார்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றின் மேல் ஒன்றாக சிதைந்து விழுந்துள்ள கட்டிட இடுபாடுகள் காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறிய பி.பி.சி இடிபாடுகளுக்கு இடையே இருந்து இன்னும் சடலங்கள் எடுக்கப் படுவதாக கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை  50800  பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறுகிற ஐநாவின்  அறிக்கை ஒன்று  40,000 பேர் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதியுறுகின்றனர் என்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களைகண்க்கிடும் பணி இஸ்ரேலின் முற்றுகை அகன்ற பிறகுதான் ஆரம்பித்துள்ளது என்பதனால் இத்தாக்குதலில் காஸாவுக்கு ஏற்பட்ட சேத விவரம் இன்னும் முழுமையாக தெரிய வில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி இஸ்ரேலின் வெறியாட்டத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளுக்கான சீரழிவிலிருந்து காஸாவை காப்பாற்ற இனி ஒரு தலைமுறை பிடிக்கும்.   &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் பிறகு தொடர்ந்து இஸ்ரேல் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தேவையான நிவாரண உதவிகள் காஸாவுக்குள் அனுப்பப் பட்டுள்ளதாக இஸ்ரேலின் ராணுவப் பேச்சாளர் மார்க் ராக்யோ கூறுவதாக சொல்கிற  பி.பி.சி ஆனால் இப்பொருட்கள் பாதிக்கப் பட்டமக்களை சென்றடைந்ததா என்பதை தம்மால் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவிலை என்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 13 இஸ்ரேலியர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் பாலஸ்தீனின் மருத்துவ வட்டாரங்களின் தகவலின் படி இதுவரை காஸாவில் 1300 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டிருக்கிறாகள். 5500 காயமடைந்திருக்கிறார்கள். கொல்லப் பட்டவர்களில் 300 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அழகிய பிஞ்சுக் குழந்தைகள் அழுகிய காய்கறிகள் போல கொத்துக் கொத்தாக கொட்டப் பட்டுக்கிடந்த காட்சியை கண்ட உலகம் குலுங்கியது. இஸ்ரேலியர்கள் மனிதர்கள் தானா என்று மக்கள் குமுறினர். ஆனால் இஸ்ரேல் எதெற்கும் அலட்டிக் கொல்லவில்லை. குறைந்த பட்சம் குழந்தைகள் கொல்லப் பட்டதற்கு, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் ஒரு பாலர் பள்ளிக் கூடத்தின் மீது குண்டு விழுந்து அதிலிருந்த அத்தனை குழந்தைகள் மாண்டுபோனதற்கும் - ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தெரிவிக்காது. ஏனேனில் இவை எதுவும் எதோச்சையாக நடந்தது அல்ல. &lt;br /&gt;இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவின் பென்குரியனிடம் David Ben-Gurion இஸ்ரேல் படைகளின் தளபதி ஈகல் அலன் Yigal Allon அரபுகளை நாம் என்ன செய்வது "What shall we do with the Arabs?" என்று கேட்டபோது அவர் என்ன பதில் சொன்னார் என்பதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்  ஒருவர் விவரிக்கிறார். கைககளை அலட்சிய்மாக உதறியபடி பென் கூரியன் சொன்னார்  'Expel them'". அவர்களை வெளியே தள்ளிவிடுங்கள் &lt;br /&gt;இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் அந்த வார்த்தைகளே இலட்சிய எல்லைகளாக இருக்கின்றன. கூடுமானவரை வாய்ப்புக்களைஉரூவாக்கி பாலஸ்தீனர்களை கொல்லுவது. முடிந்தவரை அவர்களது நிலங்களை திருடுவது என்பது மாத்திரமே இஸ்ரேலின் தாரக மந்திரம். &lt;br /&gt;Peacemaker அமைதியை உருவாக்கியவர் என்று மீடியாக்களால் விளம்பரப் படுத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்ட இட்சாக் ரபீன் Yitzhak Rabin யாசிர் அரபாத்துடனான அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது கூட இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான். &lt;br /&gt;பாலஸ்தீன பிரச்சினைக்கு தனது வாழ்நாளுக்குள் தீர்வுகண்டு விட வேண்டும் என்று துடித்த யாசிர் அரபாத் ஓஸ்லோ உடன்படிக்கை என்ற அந்த மாசு நிறைந்த ஒப்பந்தத்தில் கயெழுத்திட்டார். யுத்த அபாயங்களை பற்றி கவலை எதுவுமின்றி பல தலைமுறைகளாக கவுரமாக வாழ்ந்த ஒரு சமுதாயம், வாழ்கையின் சகல விதமான சிரம்க்களை யும் கடந்த இரண்டு தலைமுறையாக அனுபவித்து வருவதை மேலும் சகிக்கப் பொருக்காமல், இந்த ஒப்பந்தத்தில் யாசிர் அரபாத் கையெழுத்திட்டிருக்கலாம். ஆனால் அது 'Expel them' என்ற பென்கூரியனின் வார்த்தைக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை பெற்றுத்தரும் ஒரு நடவ்டிக்கை என்பதை அவர் ஆரம்பத்தில் உணர்ந்தாரில்லை. பின்னால் உணர்கிற ஒர் சந்தர்ப்பம் வந்த போது அவர் வீட்டுக்காவலில் இருந்தார்.&lt;br /&gt;இந்த அபாக்கிய நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறா? பாலஸ்தீனின் அதிபரான யாசிர் அரபாத் அவரது சொந்த தேசமான  பாலஸ்தீனிற்குள்ளேயே வீட்டுக்காவலில் இருந்தார். பக்கத்து நாட்டின் ரானுவம் அவரது உதவியாளர்களை கொன்றொழித்து அவரது வீட்டுச் சுவர்களை கூட புல்டோஸரால் உடைத்துக் கொண்டிருந்தது என்றால் அது என்ன தேசம்? இப்படி ஒரு நாடா என்ற கேள்வி உங்கள் மனதில் உலாவருகிறதல்லவா? &lt;br /&gt;இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில்  இப்படிப் ப்ட்ட ஒரு பரிதாபகரமான நிலைமைக்குத் தான் பாலஸ்தீனர்கள் ஆளானார்கள். ஆனால் இஸ்ரேலோ இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு வழிகளில் மிக ஏராளமான அனுகூலங்களை அடைந்தது. அதில் முக்கியமானது. இஸ்ரேலை தீண்டத்தகாத நாடாக ஒதுக்கிவைத்திருந்த சவதேச நாடுககள் பலவும் இஸ்ரேலுடன் கைகுலுக்கத்தொடங்கின. அது பாலஸ்தீனர்களின் பரிதாப நிலையை மேலும் சிக்கலாக்கியது. அனுதாபத்திற்கு கூட அருகதை அற்றவர்களாக அவர்கள் ஆகிப் போனார்கள். &lt;br /&gt;இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். முன்னர் பாலஸ்தீனர்கள் துன்பப் படுகிற சந்தர்பத்திலெல்லாம் இந்தியா அவர்கள்து இதயங்களுக்கு அருகே இருந்து ஆறுதல் சொன்னது. உதவிகளை வாரி வழங்கியது. சர்வதேச அரங்குகளில் அவர்களுக்காக பரிந்து பேசியது. திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டிற்கு யாசிர் அரபாத் அழைக்கப் பட்டார். அப்போது அவருக்கு சொந்தமாக ஓரடி நிலம் கூட இருக்கவில்லை. ஆனால் ஒரு தேசத் தலைவருக்குரிய மரியாதை அவருக்கு வழங்கப் பட்டது. இந்திர அம்மையாரோடு சேர்ந்து இந்திய தேசமே அவரை வரவேற்று ஆர்ப்பரித்தது. அத்தோடு இந்தியா   இஸ்ரேலிடமிருந்து வெகு தூரம் விலகி இருந்தது. இந்தியாவின் கடவுச் சீட்டுக்களில் இஸ்ரேலுக்கு பயணம் செய்யமுடியாது என்ற முத்திரை இருந்தது. விளையாட்டு வீரர்கள் இஸ்ரேலுக்குச் சென்றால் இந்தியாவுக்கு வர முடியாது என்ற நிலை இருந்தது. 1988 ல் இஸ்ரேல் பாலஸ்தீன் உடன்பாடு, இல்லை இட்சாக் ரபீன் யாசிர் அரபாத் உடன் பாடு ஏற்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.  1992 ல் இந்தியா இஸ்ரேலுடன் தூதரக உறைவை வைத்துக் கொண்டது. அந்த உறவை இஸ்ரேல் வேகமாக வளர்த்துக் கொண்டது. இப்போது இந்தியாவும் இஸ்ரேலும் சுமார் 6200 கோடிக்கு ஆயுத வியாபாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னர் ரஷ்யாவுக்கு கொடுத்திருந்த இடத்தில் இப்போது இந்தியா இஸ்ரேலை இருத்தி இருக்கிறது.  (அமெரிக்காவுக்கு தன்னையே தாரை வார்த்துவிட்டது என்பது வேறு விசயம்.) காஸாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப் படுகிறார்கள் ஊரே தரைமட்டமாக்கப் படுகிறது. இந்தியாவும் அதை கண்டிக்கிறது. ஆனால் அதன் குரலில் ஜீவன் இல்லை. சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் காஸாவின் மீதான தாக்குதலை கண்டித்த பாரதப் பிரதமர் திருமிகு மன்மோகன் சிங் அவர்களின் உரையை நான் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன் அவரது திருவாய் ஒரு தடவை கூட "இஸ்ரேல்" என்று சொல்லவே இல்லை. &lt;br /&gt;இந்த மந்திர மாற்றத்திற்கான முக்கியக் காரணம் இஸ்ரேலும் பாலஸ்தீனும் செய்து கொண்ட உடன்படிக்கைதான். பாலஸ்தீனே இஸ்ரேலோடு கைகோர்த்து விட்ட பிறகு நாம் ஏன் விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணமே இந்திய ராஜ தந்திரிகளை இஸ்ரேலோடு கைகோர்க்க வைத்தது.  அது முஸ்லிம்கள் விசயத்தில் ஈவுஇரக்கத்திற்கி இடம் விடாதவாறு இறுகியும் விட்டது.   &lt;br /&gt;உலக மகா அயோக்கிய சிகாமணிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும், உலகத்தை ஏமாற்ற போட்ட திட்டம் தான் பாலஸ்தீனின் சுயயாட்சி என்பது. அது பாலஸ்தீன மக்களை அடக்கியாளும் அதிகாரத்தை இஸ்ரேல் சட்ட பூர்வமாக பெறுவதற்கு வழி வகுத்ததே தவிர பாலஸ்தீன மக்களின் கண்ணீரைத்துடைக்க கைக்குட்டையை கூட நீட்டவில்லை. &lt;br /&gt;இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய பொய் எது தெரியுமா? பாலஸ்தீன் என்று ஒரு நாடு இருப்பதாக கருதுவதுதான். இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய வேடிக்கை எது தெரியுமா? உலகின் 117 நாடுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு தூதரக உறவு இருப்பது தான்.&lt;br /&gt;இப்படி ஒரு விசயத்தை உலகம் நம்பியதால் அதற்கு  பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இதையே உலக முஸ்லிகளும் நம்பிவிட்டதில் தார்மீகமாவும் செயல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின் தங்கிவிட்டார்கள்.ஏமாந்து போய்விட்டனர்.  இன்னொரு வார்த்தையில் சொவதானால் ஈஸா சிலுவையில் அறையப் பட்டார் என்று நம்புகிற கிருத்துவர்களை போலவே இதுவிசயத்தில் முஸ்லிம்கள் சரியான பாதையிலிருந்து சருகிவிட்டார்கள். &lt;br /&gt;பாலஸ்தீன் எனபது இன்றைய நிலையில் இஸ்ரேல் நாட்டிலிருக்கிற ஒரு முன்சிபாலிட்டிக்கு பெயர். அதுவும் கிழக்கில் ஒரு துண்டு மேற்கில் ஒரு துண்டு என பிரிந்து கிடக்கிற நிலத்தை இணைத்து உருவாக்கப் பட்ட ஒரு முனிசிபாலிட்டி.  விலக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் என்பது போல அதன் மேயர் அதிபர் என்று அழைக்கப் படுகிறார். ஆணையாளர் பிரதமர் என்றும் கவுன்சிலர்கள் அமைச்சர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். இதற்கு மேல் எதுவும் இல்லை. &lt;br /&gt;அந்த முனிசிபாலிட்டிக்கு உள்ளும் பிரச்சினை. நம் ஊரில் பஞ்சாயத்து தலைவரும் கவுன்சிலர்களும் மோதிக் கொள்வார்கள் இல்லையா? அது போல அங்கும் ஒரு மோதல் அந்த மோதலை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் எண்ணப் படி ஊதிப் பெரிதாக்கின அதன் விளைவாக பாலஸ்தீன நகராட்சியின் ஒரு பகுதியின் மீதான தாக்குதல் அதன் மேயரின் ஒப்புதலுடன் நடக்கிறது. புரிகிற வார்த்தையில் சொல்வதானால் பாலஸ்தீன் ஒரு பகுதியிலிருக்கிற முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மற்றொரு பகுதியிருக்கிற முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆதரிக்கிறார்கள். &lt;br /&gt;மளையாள தொலக்காட்சியான கைரளியில் ஓளிபரப்பான கிராஸ்பையர் நிகழ்சியில் ஒரு இளைஞன் கேட்ட கேள்வி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த என்னை மட்டுமல்ல நிகழ்சியை நடத்திக் கொண்டிருந்த பிரணாய் அதிர்ச்சிக் குள்ளாக்கிவிட்டது. இந்தியாவில் இஸ்ரேலுக்கு இவ்வளவு ஆதர்வு இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் ஆச்சரியத்தோடு கூறினார். அந்த இளைஞனின் கேள்வி இது தான். பாலஸ்தீனி ஒரு பகுதியான மேற்கு கரையில் இருக்கிற முஸ்லிம்களே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் நீங்கள் எதற்கு இங்கிருந்து கொண்டு இஸ்ரேலை எதிர்த்துக் குதிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியை காது கொடுத்து கேட்டதற்கே மிகவும் வலித்தது. என்றால் அந்த வலியை நேரிட்டு அனுபவிக்கிற மக்களின் வேதனை எத்தகையதாக இருக்கும்.?&lt;br /&gt;தங்களது தேசம் திருடப் பட்டதை எதிர்த்தும் தங்கலது மக்களின் சுத்தந்திரத்திற்காகவும் சில தலைமுறைகளாக தீரமாக போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு அற்பமான ஒரு மகிழ்சியை கொடுத்து பிறகு அவர்களை வைத்தே அவர்களது கண்களை குத்த்வைக்கிற ஏற்பாட்டை எவ்வளவு கச்சிதமாக இஸ்ராலும் அதன் கள்ளக் கூட்டாளிகளும் செய்துவிட்டார்கள்? அந்த திருட்டு ஏற்பாட்டை நிலை நிறுத்தி விடுவதற்காக எத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள்? &lt;br /&gt;காஸாவின் வரலாற்றை சற்றே அகழ்ந்து பார்த்துவிட்டு வந்தால்தான் இதிலுள்ள எதார்த்தமும் வேதனையும் புரியும். பாலஸ்தீன் விசய்த்தில் எத்தகைய நிலைப் பாட்டை மேற்கொள்வது என்ற தெளிவும் கிடைக்கும். &lt;br /&gt;காஸா உலகின் புராதான நகரங்களில் ஒன்று. அரபியில் ஃகஸ்ஸா என்று அழைக்கப்டும் நகரே ஆங்கில வழக்கிலும் அதன் வழியாக தமிழ் உருமாற்றத்திலும் காஸா என்றழைக்கப் படுகிறது. மஸ்ஜிதுல் அக்ஸா எனும் இஸ்லாமின் மூன்றாவது புனித பள்ளிவாசலையும் இதையும் சேர்த்து சிலர் குழப்பிக் கொள்வதுண்டு. அது வேறு.இது வேறு. ஃகஸ்ஸா என்ற வார்த்தைக்கு மரியாதை என்று பொருள். கஸ்ஸாவில் தன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் ஹாஷிமின் கல்லறை உள்ளது. இதன் காராணமாகவே அது "கஸ்ஸத்து ஹாஷிம்" ஹாஷிமின் கல்லறை உள்ள மரியாதைக்குரிய இடம் என்று அழைக்கப் பட்டதாக விக்கிபீடியா கலைக்களஞ்சியம் கூறுகிறது. இஸ்லாத்தின் நான்கு சட்டப் பிரிவுகளில் ஒன்றான ஷாபி பிரிவின் முன்னோடியான இமாம் ஷாபி இங்கு பிறந்தவர்தான்.   &lt;br /&gt;இவற்றை எல்லாம் விட  மத்தியத்தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்நகரம் அதன் கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாக அது பல்வேறு வடிவங்களைப் பெற்று பிரபலமடைந்து வந்தது. பழங்காலத்தில் அது சுறுசுறுப்பான வியாபார மையாகவும் எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையே பயணம் செய்யும் வியாபாரக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாகவும் இருந்தது. &lt;br /&gt;காஸாநகரத்தை உள்ளடக்கிய மத்தியத்தரைக்கடலை ஒட்டிய கடற்கரை பிரதேசம் காஸாமுனை என்று சொல்லப் படுகிறது. அது இப்போது எகிப்தின் தென்மேற்கு எல்லையாகவும், இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது 41 கிலோமீட்டர் நீளமும் 6 முதல் 12 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டது. &lt;br /&gt;காஸா, உமர் ரலி அவர்கள் ஆட்சிக் காலத்தில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களால் கி.பி.637 ல் கைப் பற்றப் பட்டது. அன்றிலிருந்து இடையில் ஏற்பட்ட சில சிலுவைப் போர் விபத்துக் களை தவிர்த்து சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்கள் அது முஸ்லிம்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின் துருக்கிய கிலாபத் வீழ்ந்த போது 1917 ல் பிரிட்டிஷ்காரர்கள் துருக்கியிடமிருந்து காஸாவை கைப்பற்றினார்கள். தொடர்ந்து பிரிட்டிஷாரால் நிர்வகிக்கப் பட்ட பாலஸ்தீனின் ஒரு அங்கமாக காஸா இருந்தது. பிறகு சர்வதேச நாடுகள் சபையின் பொறுப்பில்  அது விடப்பட்டது. &lt;br /&gt;இரண்டாம் உலக யுத்தம் ந்டை பெற்ற காலகட்டத்தில் யூதர்கள் பிரிட்டிஷிற்கும் அமெரிக்காவிற்கும் பெருமளவில் உதவினார்கள். அற்கு பதிலாக ஜெருசலத்தை தலிமையிடமாக கொண்டு தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று தொடர்ந்து பிரிட்டனையும் அமெரிக்காவையும் அவர்கள் கோரி வந்தனர். அதன் விளைவாக பாலஸ்தீன அரபுகளிடமிருந்து நிலத்தை திருடி பாலஸ்தீனிற்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வல்லரசுகள் திட்டமிட்டன. தங்களது நாட்டில் குடியேறியிருக்கிற ஆபத்தான சக்திகளான யூதர்களை தங்களது நாடுகளிலிருந்து வெளியே இனுப்ப இது தான் நல்ல தருணமென்று நினைத்த ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அதை ஆதரித்தன.  இஸ்ரேலியர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கும் பல்போர் தீர்மாணம் உருப்பெற்றது. &lt;br /&gt;ஜோர்டான் நதியிலிருந்து மத்தியத்தைர்க்கடல் வரை பரவியிருந்த பாலஸ்தீனிற்குள்1948 ம் ஆண்டு திருட்டத்தனமாக இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது மட்டுமல்லாது அதை பாலஸ்தீனின் நடு மார்பில் அமைத்தனர்.பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அமைந்துள்ள ஜெருஸலத்தை யூதர்கள்சொந்தம் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு நடைபெற்றது. இதனால் ஜோர்டான் நதிக்கரைய ஒட்டிய பாலஸ்தீனின் பகுதிகளும் அதன் இன்னொரு எல்லையான மத்தியத் தரைக்கடலை ஒட்டிய காஸாபகுதியும் தனித்தனி துண்டுகளாக பிரிந்தன. இரண்டு தனித்தனி துண்டுகளை சேர்த்துத்தான் இப்போது பாலஸ்தீன் என்று அழைக்கப் படுகிறது. இரண்டுக்கும் இடையே இரும்புத்திரையாக இஸ்ரேலின் ராஜாங்கம் நடக்கிறது. அரபுகள் ஒன்று திரண்டு விட முடியாத படி செய்யப்பட்ட சதி அது.&lt;br /&gt;இஸ்ரேல் அமைக்க்ப பட்ட போதே பாலஸ்தீனமும் அமைக் கப்பட்டது. ஆனால் அரபுகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலின் வலிமை அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்ளாத அரபு நாடுகள் இஸ்ரேல் பிறந்த அன்றே அதன் மீது அவசரமாக யுத்தம் தொடுத்தன. யுத்தத்தில் அரபு நாடுகள் மோசமாக தொற்ற போது பாலஸ்தீனம் சிதைந்து போனது. 1948 ல் 369 பாலஸ்தீன ஊர்களை இஸ்ரேல் அழித்தது. யுத்தத்தில் ஈடுபட்ட அரபு நாடுகள் தம் பங்கிற்கு பாலஸ்தீனை மேலும் சிதைத்தன. பாலஸ்தீனின் பகுதிகளாக அறிவிக்கப் பட்டிருந்த காஸாவை எகிப்து கைப்பற்றி கொண்டது. மேற்கு கரையை ஜோர்டான் கைப் பற்றிக் கொண்டது. காஸாவை 1948 லிருந்து காஸா எகிப்திடமிருந்தது. 1967 ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மற்றொரு போர் நடந்தது அதில் அரபு நாடுகள் மிக மோசமாக தோற்றன. எகிப்திடமிருந்து காஸா ஜோர்டானிடமிருந்து மேற்கு கரை ஆகிய வற்றை மட்டுமல்லாது அதுவரை அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இருந்த பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அடங்கியிருக்கிற ஜெரூசலம் நகரத்தையும் சேர்த்தே கைப்பற்றியது. தங்களது கள்ள்க் குழந்தை அரபு நாடுகளை கப்ளீகரம் செய்வதை அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்த்தன. &lt;br /&gt;1948 லிலிருந்து பாலஸ்தீன்னின் விடுதலைக்காக பாலஸ்தீன மக்கள் பல்வேறு குழுக்களாக போராடினர். அதில்  பிரதானமானது யாசிர் அரபாத்தின் அல்பதாஹ் இயக்கம். வேறு பல குழுக்களும் இருந்தன.1963 ம் ஆண்டு விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அந்த குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பி.எல்.ஒ என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்து தரப் பட்டது. தான் உருவாக்கிய ஒரு ரவுடி தேசத்தினால் பாரம்பரையமான ஒரு நாடு காணாமல் போனதற்காக ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்திய அதிகபட்ச நல்லெண்ணம் இது. இதைதான் வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பார்கள். இந்த நடவடிக்கையின் அல்லது இந்தப் புதிய அந்தஸ்தின் காரணமாக அல்லது மயக்கத்தினால் பி.எல்.ஓ அமைப்பு போராட்ட வழி தவிர்த்து வேறு வழியான அரசியல் தீர்வுகளையும் தேடியது. எப்படியாவது ஒரு சமாதானம் ஏற்பட்டாக வேண்டும் என்று அவர்கள் யோசிக்க வேண்டிய நிர்பந்ததத்தை இஸ்ரேல் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தது. பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு மிக மோசமான கொடுமைகளை இஸ்ரேலிய அரசு இழைத்தது. &lt;br /&gt;இப்போதைய தாக்குதலுக்கு ஹமாஸின் ராக்கெட் தாக்குதலை காரணமாகச் சொல்வது போல ஏதாவது ஒரு சப்பையான காரணத்தை சொல்லிக் கொண்டு அரபுகளை சூரையாடியது. அவர்களது வீடுகளை கணக்கின்றி இடித்துதள்ளியது. அரபுகளின் வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர்களை உருவாக்கியது. &lt;br /&gt;Caterpillar Tractor என்ற கம்பெனி பாலஸ்தீனர்களின் வீட்களை இடிப்பதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர்களை இஸ்ரேலுக்காக தயார் செய்து கொடுத்தது. மனித உரிமை ஆர்வலரான Rachel Corrie என்பவர் அந்த புல்டோஸர்களில் ஒன்றின் முன் அதை அறவழியில் தடுத்து நிறுத்த போராடினார். இஸ்ரேலியர்கள் அவரை கைது செய்திருக்கலாம். அல்லது அப்புறப்படுத்தி இருக்கலாம். ஆனால் சர்வசாதரணமாக அவர் மீது புல்டோஸை ஏற்றி சிதைத்தார்கள். இதுதான் இஸ்ரேலின் அணுகுமுறை.&lt;br /&gt;இத்தகைய அணுகுமுறையில் இஸ்ரேலின் கொடூரம் உச்ச கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த சூழலில் பாலஸ்தீன போராளிகளும் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள். வரலாற்று ச்சிறப்பு வாய்ந்த முதலாவது இன்திபாதா போராட்டம் நடந்தது. பல லட்சக்கணக்கான மக்கள இஸ்ரேலின் சர்வ வல்லமை படைத்த ராணுவத்தை எதிர்த்து வெறும் கற்களை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர். &lt;br /&gt;இந்தச் சூழலில் தான் இஸ்ரேலிய அரசு அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மூலமாக பாலஸ்தீனர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது. அதுதான் பாலஸ்தீனிற்கு தன்னாட்சி வழங்கும் திட்டம். நார்வேயின் தலைகர் ஒஸ்லே வில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் யாசிர் அரபாத்தின் பிரதிநிதியும் அரபாத்தின் பிரதிநிதியும் கையெழுத்திட்டனர். பிறகு அதே ஒப்பந்தததை அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் யாசிர் அரபாத்தும் இட்சாக் ரபீனும் ஒப்பமிட்டனர்.  &lt;br /&gt;நடுவே இஸ்ரேல் கொலுவிருக்க ஒரு பக்கம் காஸாவும் மறுபக்கம் மேற்குகரையும் கொண்ட ஒரு பகுதியை பாலஸ்தீனின் தன்னாட்சிப் பகுதியாக வரையறுத்தார்கள். நிலம் பாலஸ்தீனர்களிடம் இருக்கும் ஆனால் அதன் வானம் இஸ்ரேலுக்குச் சொந்தம். காஸாவும் அதன் கடற்கரையும் பாலஸ்தீனிடமிருக்கும் ஆனால் கடல்வழி இஸ்ரேலுக்குச் சொந்தம். ஒரு ஊசிமுனையளவு பொருளாக இருந்தாலும் அது இஸ்ரேலின் கஸ்டம்ஸை கடந்து தான் உள்ளே வரவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி அதிகாரம் பாதுகாப்பு ராணுவம் அனைத்தும் இஸ்ரேலிடம் இருக்கும். இஸ்ரேலிடம் அனுமதி பெற்ற யாரும் பாலஸ்தீனிலிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியும். பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு வரியும் செலுத்த வேண்டும். பாலஸ்தீனில் விழுகிற குப்பைகளை அள்ளவும் மருத்துவ மனைகளை பராமரிக்கவும் பாலஸ்தீன நகரங்களை பராமரிக்கவும் மட்டுமே பாலஸ்தீன தன்னாட்சி அமைப்புக்கு அதிகாரம் இருக்கும். அது வரை ஒரு தீரமிக்க போராளியாக இருந்த அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரபாத் ஏற்றுக் கொண்டார். தனது மக்களின் மிக மோசமான வாழ்வில் அது கொஞ்சமாவது நிம்மதியை உண்டு பண்ணும் என்று அவர் நம்பினார். தற்காலிக தீர்வுகள் மூலமாக நிரந்தர தீர்வை நோக்கி நகர முடியும் என்று அவர் நம்பிதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் யூதர்களின் ஒப்பபந்தங்கள், வாக்குறுதிகள், நம்பிக்கை குறித்து எந்த அளவு எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம் என்று திருக்குரான் கூறுகிற வழிகாட்டுதல்களை அவர் கவனத்தில்  கொண்டாரில்லை. &lt;br /&gt;இந்த  ஒப்பந்தத்தினால பாலஸ்தீனர்களுக்கு கிடைத்த ஒரே பலன் மேற்குக் கரையிலும் காஸா முனைப் பகுதியிலும் இஸ்ரேல் அமைத்திருந்த யூத  குடியேற்றங்களை காலி செய்தது தான். இஸ்ரேல் இதைச் செய்ததேகூட பாலஸ்தீனர்களின் நன்மைக்காக அல்ல. பாலஸ்தீன பகுதியில் குடியிருக்கிற யூதர்களை பராமறிப்பதற்கு ஆகிற ராணுவச் செலவு எல்லை கடந்து செல்கிறது என்பதற்காகத் தான் என மேற்கத்திய உடகங்கள் கண்சிமிட்டி பேசிக் கொள்கின்றன. &lt;br /&gt;அரபாத் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அப்போதே பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக காஸா முனைப் பகுதியில் வலுவாக செயல்பட்டு வந்த ஒரு மாபெரும் அர்பனீப்பு இயக்கமாக கருதப் பட்ட ஹமாஸ் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. &lt;br /&gt;ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலினால் பாதிக்கப் படும் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவும் அவர்களது ஒவ்வொரு பிரச்சினையிலும் உதவுவதற்காக மார்க்க அறிஞர்கள் பட்டதாரிகளால உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. ஹர்கத் அல்முகாவமுதுல் இஸ்லாமியா என்ற முழு பெரை சுருக்கமாக ஹமாஸ் ( தற்காப்பு அல்லது தடுப்புப் படை) என்று அழைத்துக் கொண்டனர். இஸ்ரேலினால் ஆக்ரமிக்கப் பட்டு நிராதவராக எந்த வித கவனிப்பும் அற்றிருந்த பகுதிக்குள் ஒரு அரசு நிர்வாகம் போல் செயலாற்றியது. அரசியல் ரீதியாக பிரபலமடைவதை மார்ர்க ரீதியாக பிரச்சினையை கையாள்வதில் ஹமாஸ் அக்கறை செலுத்தியது. உலமாக்கள் எனப்படும் மார்க்க அறிஞ்ர்களே அதன் தலைமை பொறுப்பிற்கு வர முடியும். இப்போதைய தலைவரான இஸ்மாயில் ஹனியாவும் ஒரு மார்க்க அறிஞ்ர்தான்.  யூதர்கள் விசயத்தில் மார்க்கம் கற்றுத்தரும் எச்சரிக்கைகளை அவர்கள் மறக்கவில்லை. அதனால் ஒரு போதும் இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் உறுதிபடக் கூறினார்கள். அதனல். அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்குள் (பி.எல்.ஓ) அவர்கள் இணைய வில்லை. தொடர்ந்து தனி அணியாகவே செயல்பட்டு இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். அயினும் யாசிர் அரபாத்தின் முயற்சிக்கு அவர்கள் தொல்லை எதுவும் தரவில்லை. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்தப் பட்டு யாசிர் அரபாத் அதன் தலைவராக இன்னொரு வார்த்தையில் பாலஸ்தீனின் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் அவரது முழு அதிகாரம் பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் மட்டுமே இருந்தது. காஸாவை அதிகாரப் பூர்வமாக பி.எல்.ஓ ஆட்சி செய்தாலும் உண்மையான அதிகாரம் ஹமாஸிடமே இருந்தது. ஒரு அரசியல் தீர்வை தேடும் முயற்சியில் பி.எல்.ஓ மேற்குலகத்தின் நாடகத்திற்கு அரபாத் மயங்கிவிட்டார் என்று கருதிய பாலஸ்தீனர்கள் ஹமாஸ் பி,எல்.ஒ வோடு சேர்ந்து விடக்கூடாது என்றே விரும்பினார்கள் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். &lt;br /&gt;இஸ்ரேல் தனது எந்த ஒரு முயற்சியின் வழியாகவும் தனது வக்கிரமான எண்ணங்களையே நிறைவேற்றிக் கொள்ளவிரும்புகிறது. அதன் பாரம்பரிய விஷ(ம)த்தனம் கடுகளவும் குறைய வில்லை. அதே நேரத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து முனிசிபாலிட்டு தன்னை தலைவராக்கி விட்டதன் மூலம் இஸ்ரேல் ஏரளமான புதிய நட்பை சேர்த்துக் கொண்டு பாலஸ்தீனர்களை மேலும் அபகதிக்குள் உள்ளாக்கிவிட்டதை சற்று தாமதமாகவே அரபாத் புரிந்து கொண்டார்.  ஆயினும் கிடைத்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ஏதாவது சில நல்ல காரியங்களை செய்ய முடியுமா என்று முயற்சித்தார். அதற்குள்ளாக தனது இருப்பை சர்வதேச அளவில் உறுதிப் படுத்திக் கொள்ள ராஜாங்க ரீதியான முயற்சியை இஸ்ரேல் தீவிரப் படுத்தியது. அமெரிக்காவும் பெருமளவில் அதற்கு உதவியது. &lt;br /&gt;இறுதியாக அதே அரபாத்தை பயன்படுத்தி இன்னும் சர்ச்சைக்குள்ளான பகுதியாக இருக்கிற ஜெரூஸலத்திற்கும் இந்த முறையிலான ஒரு தீர்வை அடைந்துவிட அது துடிததது. அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன் மூலம் பாலஸ்தீனிற்கு மடிப்பிச்சை இடுகிற பல திட்டங்களை அது முன் வைத்தது. அதற்கு விலையாக மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை கேட்டது. பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் பாரம்பரியம் மிக்க முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலும் பின்னாட்களில் கட்டப்பட்ட மஸ்ஜிது உமர் பள்ளிவாசலும் இருக்கினறன. மஸ்ஜிது உமர் முஸ்லிம்களுக்கு என்றும் மஸ்ஜிதுல் அகஸா யூதர்களுக்கு என்றும் பிரித்துக் கொள்ள அந்த ஒப்பந்தம் ரகசியாமாக வழி வகுத்தது. அந்த இடத்தில் பிரம்மாண்டமான ஒரு யூதக் கோயிலைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. வரலாறு ஒரு போதும் மன்னிக்காத அபகீர்த்திக்கு தான் ஆளாகிவட்க் கூடாது என உணர்ந்த அரபாத் புதிய திட்டத்தை உறுதியாக மறுத்துத் திரும்பிவிட்டார். அது முதல் இஸ்ரேலின் பெரும் எதிரியாக அரபாத் மாறினார். &lt;br /&gt;பைத்துல் முகத்தஸ் விசயத்த்தில்  இஸ்ரேலின் திட்டத்தை தெரிந்து பாலஸ்தீனர்கள் இரண்டாவது இன்திபாதா போராட்டத்தை தொடக்கினார்கள். இஸ்ரேல் ரானுவம் பாலஸ்தீனிற்குள் நுழைந்டத்து. பாலஸ்தீனம் ரணகளமாகியது. போதுமான அழிவை ஏற்படுத்திய பிறகு சர்வதேச நிர்பந்தங்களுக்குப் பணிந்து இஸ்ரேல் வெளியேறியது. பின்னரும் காஸாவில் கலவரத்தை தூண்டினார் அதற்காக ஆயுதங்களை வாங்க முயற்சி செய்தார் என்று அரபாத்தின் மீது குற்றம் சாட்டி அவரை வீட்டுச் சிறையில் வைத்தது இஸ்ரேல். ஒருக்கால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பாலஸ்தீன தன்னாட்சி என்ற மாய்மால ஒப்பந்தம் நடப்பதற்கு முன்னதாக நடந்திருந்தால் விசயம் வேறுமாதிரி சென்றிருக்கும். இந்த ஒப்பந்தம் சில விசயங்களில் பாலஸ்தீனர்களை மூச்சுவிட வைத்து பல் விசயங்களில் மூச்சடக்க வைத்து விட்டது. இஸ்ரேலும் அமரிக்காவும் இனி அரபாத்துடன் பேசமுடியாது என்று மறுத்தன. சர்வதேச அரங்கில் அவரது மரியாதையை சிதைக்க பெருமளவில் முயற்சி செய்தன. அவர்களின் நிர்பந்தத்தினால அவர்களது விருப்பப் படி மஹ்மூது அப்பாஸ் பிரதமராக நியமிக்கப் பட்டார். அரபாத் இறந்த பிறகு அவரே பாலஸ்தீன அதிபராகவும் ஆனார். &lt;br /&gt;இதற்கிடையே பாலஸ்தீனில் முதன் முதலாக தேர்தல் நடந்தது. பல்வேறு பட்ட தரப்பிலிருந்தும் வந்த வேண்டுகோளை அடுத்து இஸ்ரேலுடனான போராட்ட வழியில் இருந்த ஹமாஸ் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டு தேர்தலில் போட்ட்யிட்டது. மக்கள் குறிப்பாக காஸா நகரத்து மக்கள் பெருவாரியாக ஹமாஸை தேர்ந்தெடுத்தனர். &lt;br /&gt;2006 ஜனவரி 25 நடந்த தேர்தலில் ஹமாஸ் வென்றது. 42.9 சதவீத வாக்குகளுடன் மொத்தமுள்ள 132 இடங்களில் 74 கை கைப்பற்றியது. இஸ்ரேலும் அதன்  நேச நாடுகளும் ஹமாஸின் தேர்வை ஏற்க மறுத்தன. &lt;br /&gt;ஹமாஸ் பாலஸ்தீனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து விட்டது. அத்தோடு தங்கள்  மீதான சர்வதேச நிர்பந்தங்களைய்ம் ஏற்க மறுத்தது. அதற்கான நியாயத்தை உலகிற்கு ஹமாஸின் சார்பில் பேசவல்ல அமெரிக்க பாலஸ்தீனரான கலீல் தெளிவுபடுத்தினார். பாலஸ்தீனில் நிலவும் எதார்த்த சூழ்நிலையை, பாலஸ்தீன  அமைப்புக்கு வழங்கப் பட்ட தன்னாட்சி அதிகாரத்தின் லட்சணத்தை அவர் அம்பலப்படுத்தினார்; கலீல் கூறினார். "Israel still controls every person, every good, literally every drop of water to enter or leave the Gaza Strip. Its troops may not be there … but it still restricts the ability for the Palestinian authority to exercise control.” &lt;br /&gt;இஸ்ரேல் இப்போதும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு பொருளையும் கட்டுப்படுத்துகிறது. காஸாவுக்குள் நுழைகிற அல்லது வெளியேறுகிற ஒவ்வொரு துளி தண்ணீரையும் சோதிக்கிறது. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு தனது பொறுப்பை ஏற்றுக் கொள்ள அது இன்று வரை தடையாக இருக்கிறது.&lt;br /&gt;மற்ற உலக நாடுகளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தனக்கு வேண்டாதவர்கள் என்றால் அதை ஏற்க மறுப்பதும் அவர்களை எப்பாடுபட்டவது துரத்த முயற்சிப்பதும் அதுவும் முடியாவிட்டால் அத்தகைய ஆட்சித் தலைமையை தேர்ந்தெடுத்த மக்களை வதை செயவ்தும் தானே அமெரிக்க ஜனநாயகம். அமெரிக்கா பாலஸ்தீனிற்கு செய்து வந்த நேரடி உதவியை காஸாவிற்கு நிறுத்தியது. அதன் ஆதிக்க கூட்டாளிகளும் தங்களது உதவியை நிறுத்தினர். &lt;br /&gt;ஹமாஸ் பாலஸ்தீன அரசை  தேசிய சுயாட்சி அரசாக அறிவித்தது. அதிபர் மஹ்மூது அப்பாஸ் அதை ஏற்கவில்லை. அவசர நிலையை அறிவித்துவிட்டு ஹமாஸ் இல்லாத ஒரு அரசை அமைப்பதாக கூறிவிட்டு அவர் பாலஸ்தீனின் இன்னொரு பகுதியான மேற்குக் க்ரை பகுதியில் இருந்து விட்டார். அவரது ஆட்கள் மேற்கு கரையில் ஹமாஸின் சில தலைவர்களை கைது செய்தார்கள்&lt;br /&gt;பாலஸ்தீன் முனிசிபாலிட்டி இரண்டாக பிளவுண்டது.  மேற்குக் கரை இப்போது அதிபர் மஹ்மூது அப்பாஸ் வசம் இருக்கிறது. காஸா இப்போது பிரதமர் இஸ்மாயீல் ஹனியாவிடம் இருக்கிறது. அப்பாஸின் அரசை அமெரிக்காவின் பொம்மையான சவூதியும், இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட இரண்டே இரண்டு அரபு தேசங்களான எகிக்தும் ஜோர்டானும் ஆதரிக்கின்றன. ஹமாஸை சிரியாவும் ஈரானும் ஆதரிக்கின்றன. இந்தியா எந்தப் பக்கம் நிற்கும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். &lt;br /&gt;காஸாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களும் எரிபொருட்களும் செல்வதையும் போக்குவரத்தையும் இஸ்ரேல் தடுத்தது. 2007 செப்டம்பரில் காஸாவை யுத்த பகுதியாக அறிவித்தது. &lt;br /&gt;காஸாவில் பொருளாதார பிரச்சினை தலை தூக்கியது. இன்றைய காஸா என்பதே இஸ்ரேலின் வெறியாட்டங்களால் உருவான ஒரு பெரிய அகதி முகாம் தான். அகதிகளுக்காக ஐநாவின் நிவாரணத்திட்டத்தின் கீழ் கிடைத்துவருகிற அத்தியாவசியப் பொருட்கள்தான் அங்குள்ள மக்களுக்கு பிராணவாயு. அதையும் நிறுத்தி விட்டால்? உணவு, மருந்துப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர் என அனைத்துப் அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஹமாஸை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக 15 லட்சம் மக்களை பட்டினிச் சாவை நோக்க்கி இஸ்ரேல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. கேட்பார் யாரும் இருக்கவில்லை. &lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில் தான் ஹமாஸ் இஸ்ரேலின் சில பகுதிகள் மீது கஸம் ஏவுகனைகளை வீசியது.  இஸ்ரேலின் ஆயுத வன்முறையோடு ஒப்பிடுகையில் உள்ளூர் தயாரிப்பான கஸம் ஒரு பொருட்டே அல்ல. 697 ராக்கெட்டுகளும் 822 பாம்களும் வீசப்பட்டதாக இஸ்ரேல் கணக்கு காட்டுகிறது. இதன் மொத்த பாதிப்பும் இஸ்ரேலின் ஒற்றை குண்டுக்கு நிகராகாது. இந்த ராக்கெட்டுகளை காரணம் காட்டித்தான் இஸ்ரேல் காஸாவின் மீது மிருகவெறித் தாக்குதல் நடத்தியது. &lt;br /&gt;உண்மையில் காஸா இஸ்ரேலிய நாட்டுக்குள் இருக்கிற ஒரு நகரம். அதை பாதுகாக்க பீரங்கிப் படைகளோ எல்லைப் பாதுகாப்பு வீரர்களோ ஒருவரும் இல்லை. காஸாவை மீண்டும் ஆக்ரமிப்பது என்று இஸ்ரேல் முடிவு செய்தால் கூட எந்த ஆயுதங்களையும் வீசாமல் அதிகபட்சமாக இரண்டு நாட்களில் பிடித்து விட முடியம். மிக முக்கியமான விசயம். வான்வெளித்தாக்குதல் எனப்து அறவே தேவையற்றது. பிறகு ஏன் இந்த மாபெரும் கொலைவறித் தாக்குதல்? அது தான் இஸ்ரேலின் குணம்.  &lt;br /&gt;இஸ்ரேல் இந்த தாக்குதலின் மூலம் பாலஸ்தீனர்களுக்கு சொல்ல விரும்புவதை மீண்டும் தெளிவாக சொல்லிவிட்டது. எங்களது விருப்பத்திற்கு உடன்படுவதானால் மட்டுமே இந்தப் பிராந்தியத்தில் நீங்கள் உயிர்வாழ முடியும். போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேலின் ரானுவப் பேச்சாளர் அதைத்தான் இப்படிக் கூறினார். "எங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது".&lt;br /&gt;இஸ்ரேலின் விருப்பம் தான் என்ன என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை.இப்போதைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜெரூஸலம் நகரை ஆள வேண்டும். பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கு மாபெரும் சினகாஹ் யூதக் கோயில் ஒன்றை கட்ட வேண்டும்.&lt;br /&gt;இது பாலஸ்தீனில் அரபிகள் இருக்கிற வரை நடக்காது. அதனால் தான் தன் எண்ணத்திற்கு தடையாக இருப்பவர்களுக்கு தன்னுடைய வலிமை என்ன என்பதை இஸ்ரேல் காட்டிக் கொண்டே இருக்கிறது. தன் விருப்பப் படி நடக்கதவர்களை  தேர்ந்தெடுத்த மக்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தது. கொடுத்து விட்டது. பிறகு வெளியேறியும் விட்டது. &lt;br /&gt;இப்போதைக்கு இந்தத் தாக்குதல் ஒரு முடிவில்லாமல் முடிந்துவிட்டது. ஆனால் இதுவே முடிவான முடிவல்ல. எல்லோருக்கும் இது தெரியும். நாளைக்கே இன்னொரு காரணத்தை சொல்லிக் கொண்டு இஸ்ரேல் மேற்குக் கரை மீது இன்னொரு மிருகத் தாக்குதலை தொடங்கலாம். காரணங்களுக்கு அங்கே பஞ்சமே இல்லை. பாலஸ்தீனில் முஸ்லிம்கள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணம் போதாதா? அறுபது வருடங்களாக தொடர்ந்து இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதை நிறுத்துகிற வழியை காணோம்.&lt;br /&gt;இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. பாலஸ்தீனப் பிரச்சினையை அங்குள்ள அரபிகளின் அரசியல் விவகாரமாக மட்டும் பார்க்கப் படக் கூடாது. உலக முஸ்லிம்களின் தன்மானத்தோடும் பக்தியோடும் தொடர்புடைய உயிர் அம்சமாக பார்க்கப் படவேண்டும். அதனடிப்படையில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஒரு பாதிக்குள் இஸ்ரேல் விவகாரத்திற்கு ஒருமித்த ஒரு முடிவு கட்டப் படவேண்டும். பாலஸ்தீனிற்குள் ஒரு முனிசிபாலிட்டியாக இஸ்ரேல் இருக்க மட்டுமே முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். மற்றெந்த மற்றெந்த குறுக்கீடுகளையும் உடன்பாடுகளையும் திரும்பியும் பார்க்கக் கூடாது. ஒரு சமுதாயம் இலட்சியத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிற வரை மட்டுமே அந்த சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். &lt;br /&gt;உலக முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய உறுதியை தெளிவையும் மறு பரிசீலனை செய்து கொள்வதற்கு வசதியாக இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் கூரியன் செய்த ஒரு பிரகடணத்தை மட்டும் நினைவூட்டுகிறேன். &lt;br /&gt;1967 ம் ஆண்டு ஜெரூஸலத்தை கைப் பற்றிய பிறகு பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்கருகே நின்று கொண்டு தன்னுடை வீரர்களிடமும் மக்களிடம் உரையாற்றிய  பென் கூரியன் இறுதியாக இப்படி முடித்தார். "கதிஸ்தவல்லைனா அலல் குதுஸ். வ நஹ்னு பீ தரீகதீனா இலா யத்ரிப்."&lt;br /&gt;"நாம் பைத்துல் முகத்தஸை வென்றுவிட்டோம். இனி நமது பயணம் யத்ரிபை நோக்கி."&lt;br /&gt;உங்களுக்கு நான் நினைவு படுத்த வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். யத்ரிப் என்பது "மதீனா" வின் புராதானப் பெயர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-8837608041527454316?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/8837608041527454316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=8837608041527454316' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/8837608041527454316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/8837608041527454316'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2010/08/blog-post_9221.html' title='கைவிடப்பட்ட காஸா'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-5915707830254394035</id><published>2010-08-04T23:32:00.000+05:30</published><updated>2010-08-04T23:32:26.712+05:30</updated><title type='text'>ஹிஜ்ரத்  புலம் பெயர்தலில் ஒரு புரட்சி</title><content type='html'>இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீரீ ஆண்டு என அடையாளப்படுத்தப்படுகிறது. ஹிஜ்ரீரீ காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாக கொண்டது. சந்திரக் காலண்டரே எல்லா இடத்திற்கும் அனைத்து வகைப்பட்ட மனிதருக்கும் எளிமையானது. ஆய்வுக்கருவிகளின் தேவையில்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக்கூடியது. அதன் காரணமாகவே சீனர்கள் இந்தியாகள் அரேபியாகள் என பெரும்பாலான பழைய கலாச்சாரங்களச்சாந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே தங்களது நாட்களை கணக்கிட்டு வந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;கீ பீ காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டா என்று பெயர் அது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இன்று நாம் சிவகாசிக் காலண்டா களின் புண்ணியத்தில்  சூரிய நாட்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்கி றோம். இல்லை எனில் சூரியன் நிற்கும் திசையை வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து கிழவனோ கிழவியோ வானத்தில் உலாவும் வட்ட நிலாவை அண்ணாந்து பாத்து விட்டு இன்றைக்கு வளர்பிறை பத்து என்று நொடியில் செல்லிவிட முடியும். சூட்டெறிக்கும் சூரியனை கைகுவித்து பத்து தடவைப் பார்ததாலும் கருவிகளின் துணையின்றி அறிவியல் மாணவன் கூட தேதியை சரியாக சொல்வது சிரமம். எனவே பழமையான எளிமையான நாட்காட்டி நடைமுறையான சந்திர மாதக்கணக்கே இஸ்லாமிய மாதக் கணக்காகவும் அங்கீகாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரீரீ ஆண்டின் மாதங்கள் முஹர்ரமில் தொடங்கி துல்ஹஜ்ஜில் முடிவடைகின்ற 12 மாதங்களாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அரபு மக்களிடம் மாதங்களை குறிப்பிட 12 பெயர்கள் இருந்தன. அவர்களது நாட்டின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்பவும் கலாச்சார அடிப்படையிலும் அப்பெயர்களை சூட்டியிருந்தனர். அப்பெயர்களில் பல் வேறு பகுதிகளிலிருந்தும் இறக்குமதியானவை.  ஆனால் வருடத்தை தொடர்ச்சியாக அடையாளப்படுத்துவதற்கு அவர்களிடம் குறிப்பித்தக்க  எந்த அடையாளமும் இருக்கவில்லை.  ஏதேனும் முக்கிய நிகழ்வுகளைச் சார்ந்து ஆண்டுக்கு அடையாளமிட்டுக் கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சற்று முன்னதாக எமன் தேசத்து அரசன் ஆப்ரஹா யானைப் படையோடு கஃபாவை அழிக்க வந்து அழிது போன நிகழ்ச்சி நடை பெற்றதால் அந்த ஆண்டை “யானை ஆண்டு” என்று அடையாளப் படுத்தினர். அன்றைய அரபுகளின் சமூக அமைப்பு ஆவணங்களை பராமரிக்கும் சமுதாயாமாக முறைப் படுத்தப் படாத காரணத்தால் இது பற்றிய தேவை அவர்களுக்கு இருக்க வில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர்ட்களில் இஸ்லாமின் எழுச்சிக்குப் பிறகு அரபுகளின் தேசீய கட்டமைப்பு உருவாக்கப் பட்டு இஸ்லாமின் பேரரசு நிலை நாட்டப் பட்ட போது வரலாற்றுத் தகவல்களை கனக்கிடுவதிலும் ஒப்பந்தங்களின் கால நிணயத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வருடத்தை குறிப்பதற்கு ஒரு அடையாளப் பெயரின் அவசியம் உணரப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 ல்) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அன்னார் ஓரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு  கடிதம் எழுதும் போது  அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.  அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டா ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உணாந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள்.  அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்படன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.&lt;br /&gt; &lt;br /&gt;1) அண்ணலாரின்  பிறப்பு&lt;br /&gt;2) அண்ணலாரின்  இறப்பு&lt;br /&gt;3) அண்ணலார் நபியாக தேர்வு செய்யப்பட்டது&lt;br /&gt;4) அண்ணலார் மக்காவிலிருந்து மதீனர்விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;உமர்(ரலி) அவர்கள் “ஹிஜ்ரத்”தை தேர்வு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மூன்று விசயங்களும் கூட உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது .என்பதே உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு காரணம். ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படுவதற்கு மிகவும் பொருத்தமான ஆதே நேரத்தில் அழுத்தமான பொருளை தரக்கூடிய பெயரையே உமர் (ரலி) அவர்கள்தேர்வு செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. ஆன்று தொடங்கிய ஹிஜ்ரீ ஆண்டின் வரலாறு இன்று 1431 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்கள் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டுப் பெயர்களாக சூட்டியுள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முந்தைய சீன ஆண்டுக்கு “நாய் ஆண்டு” என்று பெயர். நாய் ஆண்டு பிறப்பதற்கு முதல் நாள் இரவு நாய்களுடன் ஜந்து நட்சத்திர ஹோட்ல்களில் விழா கொண்டாடுகிற சீனர்களை தொலைகாட்சிகள் வினோதமாக கட்டின. &lt;br /&gt;&lt;br /&gt;இது போல ஹிஜ்ரீ என்பது வேடிக்கை விநோதம் நிறைந்த விளையாட்டுப் பெயர் அல்ல. ஹிஜ்ரீ அலாதியான அத்த புஷ்டி மிகுந்த சொல்லாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரத்தின் வரலாற்று பின்னணி கனமானது.  ஹிஜ்ரத் என்ற அரபி வார்த்தைக்கு “குடிபெயர்தல்” என்று பொருள். எல்லா குடிபெயர்தலும் ஹிஜ்ரத் தான் என்றாலும் “மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்வதற்கே இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக அகதியாக இன்னொரு ஊரில் குடிபெயர்வது மிகவும் அவலமானது. சுயமரியாதை, கவுரவம், சுகமான வாழ்க்கை அகியவற்றை பறித்துவிடக் கூடியது. சகலவிதமான கலாச்சார தீமைகளுக்கும் இடமளிக்க்கூடியது. &lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாறு நெடுகிலும் அகதிகளின் வாழ்கை முறையைப் பற்றிக் கிடைக்கிற தகவல்கள் இப்படித்தன்  அவர்களது வரலாற்றை படம் பிடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல  வ்ருடங்களுக்கு  முன்னாள் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகத்திற்கு வரதொடங்கிய காலகட்டத்தில் இராமேஸ்வரம் பகுதியில் நடை பெற்ற ஒரு நிகழ்வு பத்ரிகைகளில் வெளியாகி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராமேஸ்வரம் கடற்கரையோரமாக ஒரு நடுத்தவர வயதுடையவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வருவோர் போவோரிடம் நாசூக்காக யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த  ஒரு தமிழ் நாட்டுக் காரருக்கு கோபம் வந்து விட்டது. ஏனய்யா! கை காலெல்லாம் நல்லாத் தானே இருக்கு! ஏதாவது வேலை செய்து உழைச்சு சாப்பிடலாமில்லே.. என்று அவரை அதட்டினார். அந்த மனிதருக்கோ அழுகை வந்து விட்டது. சற்று நிதானித்து விட்டு அவர் சொன்னார். “ஐயா! நான் சில நாட்களுக்கு முன்பு வரை இலங்கையில் இலட்சாதிபதி என் கடையிலும்  வீட்டிலும் வேலை செய்ய பலர் இருந்தார்கள். நான் திடீரென்று எல்லாவற்றையும் இழந்து விட்டு. இங்கே வந்திருக்கிறேன். எங்கே செல்வது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. பசி தாங்க இயலவில்லை அதனால் தான் இப்படி..” என்று சொல்லி அழுதார். அதைப் பார்த்து அதட்டியவருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. தன்னிடமிருந்த சில்லரைகளை கொடுத்த அவர் இந்தச் செய்தியை பத்ரிகைகு எழுதி அனுப்பியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளின் மறுவாழ்வுப் பிரச்சினைதான் இன்றைய  முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள்க்கான அமைப்பு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா வின் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை,பாகிஸ்தான்,சோமாலியா ஆகிய நாடுகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களால் அகதிகள் பிரச்சினை  நிச்சயம் பெரிய அளவில்  தலையெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008 ம் ஆன்டில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பின் படி உலகில் 1 கோடியே  52 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர் .  அவர்களில் 47 வீதம் பேர் பெண்களும் சிறுவர்களுமாவர். 2006ல் இந்த எண்ணிக்கை 84 லட்சமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் அரைப்பங்கைக் கொண்டிருந்தன என்று ஒரு த்கவல் கூறுகிறது. அத்தோடு  உலகில் உள்ள அகதிகள்ல்  8.27. 000 பேர் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாத் பள்ளத்தாக்கில் தாலிபான்களுக்கு எதிரான யுத்தத்தால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 30 இலட்சம் என்று ஒரு தகவல் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;.சோமாலியாவில் 17 வருடங்களுக்கு முன் உடைந்த மத்திய அரசாங்கத்தால் அங்கு இரு தலைமுறைகளாக அகதி முகாமிலேயே வசித்து வரும் மக்கள் தொகை தற்போது 13 இலட்சம். மேலும் 4 இலட்சம் சோமாலியர்கள் கென்யா யேமென் போன்ற அயல் நாடுகளில்  உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 களில் இலங்கையின் வட பகுதிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களில் சுமார் 1 லட்சம் பேர் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். இலங்கiயில் 30 ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2004இல் சுனாமி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் 5 இலட்சத்திற்கும் அதிகம். இதில் ஐ.நா அறிக்கைப் படி 2009 இன் முதல் 3 மாதங்களில் மட்டும் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகம். 2009ஆம் ஆண்டு வட பகுதியில் நடைபெற்ற நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெய்ர்ந்த இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மேற்குகரை, ஜோர்டான், காசா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் அகதி முகாம்களில் 44 லட்சம் பாலஸ்தீன அகதிகள் தங்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அகதிகளின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமானது. பெரும்பாலும் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத வாறு அகதிகளின் வாழ்கை சிதைக்கப்பட்டிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;போதுமான உணவு கிடக்காது. குழந்தைகளிக்கான பால் கூட கிடைக்காது. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு பால் கூட வழங்கப்படவில்லை என்று சமீபத்திய செய்தி ஒன்று கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளின் மானத்திற்கு மரியாதைக்கும் எந்த வித உத்திரவாதமும் இல்லை. இந்த மாதம் 21 ம்தேதி வெளியான தினகரன் பத்ரிகையில் இலங்கை அகதி முகாம்களில் தமிழ் பெண்கள் இராணுவத்தால் மானபங்கப் படுத்தப் படுவதாக அதை நேரில் பார்த்து விட்டு வந்த இலண்டனில் வசிக்கிற இலங்கை பெண் மருத்துவர் இராணி சொன்ன செய்தி வெளியாகி இருக்கிறது. இராணுவ வீரர்களின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் தருகிற உணவுப் பொருட்களுக்காகவும் இதைப் பற்றி பாதிக்கப் பட்ட பெண்கள் வெளியே சொல்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். அது போல செய்தி வருவது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்கிற இலங்கை அரசு குறிப்பிட்டு புகார் தெரிவிக்கப் பட்டால் தவிர தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;இலங்கையின் வடமேற்குப் பக்கமான வங்காலை கிராமத்திலிருந்து வந்திருக்கும் 41 வயதான பிரின்ஸா லம்பேர்ட் என்பவர் கூறுகையில்; &lt;br /&gt;“நான் கடைசியாக எப்போது அமைதியாக தூங்கினேன் என்பதையே என்னால் நினைவுபடுத்த முடியாது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பதிரிகைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி இது. இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் அகதிகளின் படகுக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீட்டர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு  இருப்பதாகவும்  கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்  அவர்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா இந்தொனேசியா உள்ளிட்ட நாடுகள் காலம் கடத்துவதாகவும் செய்திகள் இதயத்தை பிழிகிற வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன அகதிகள் வாழ்கிற முகாம்களில் நிலமை இன்னும் மோசம். உலகம் இரத்தக் க்ண்ணீர் வடிக்காமக் அந்தச் செய்திகளை வாசிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் லெபனானான் முகாமில் வசிக்கும், பாலஸ்தீன இளைஞர்கள் தயாரித்த குறும்படம் ஒன்று, பாலஸ்தீனியர்கள் அவல வாழ்வைப் பற்றி எடுத்துக் காட்டுகின்றது.தமது முகாமில் இருந்து ஆரஞ்சு பழத்தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளரைப் பற்றிய விவரணப்படம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 60 வருடங்களாக லெபனானில் 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்களை லெபனானிய மக்களோடு சேர்க்காமல், இன்றும் அகதிகளாக அந்நாடு ஒதுக்கியே வைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;லெபனான் சட்டப்படி அவர்கள் வெளிநாட்டவர்களாக பார்க்கப்படுவதால், எந்த ஒரு அரசியல்-சமூக உரிமைகளோ, சலுகைகளோ இன்றி, முகாம்களுக்குள் காலம் கடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பல முக்கியமான வேலைகளை செய்வதற்கு, பாலஸ்தீன அகதிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு மருத்துவப்படிப்பை முடித்த ஒரு அகதி அரசு மருத்துவ மனைகளில்  மருத்துவராக பணி புரிய முடியாது. தனியார் மருத்துவனைகளில் ஒருவேளை பணி கிடைத்தாகும்  அது கூட தகுதிக்கேற்ற சம்பளமற்ற, தராதரம் குறைந்த வேலையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சக லெபனானிய தொழிலாளரில் இருந்து பாகுபாடு காட்டப்படுதல். மிகக் குறைந்த சம்பளம் வழங்கி, உழைப்பை சுரண்டும் முதலாளிகள். நெருப்பாக கொளுத்தும் வெயிலிலும், எலும்பை உருக்கும் பனிக்குளிரிலும், வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளை, தொழிலாளர்களே சொல்லக் கேட்டு, யதார்த்தத்தமாக அதை படம் பிடித்துள்ளனர், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலங்குகளை வளர்ப்பதாக இருந்தால் கூட அதற்காக வசிப்பிடம் தகுந்ததாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தச் சொல்கிற ஆஸ்திரேலியா  போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோஷம் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதிலும் அகதிகளை அரவணைக்கும் மனிதாபிமானம் என்பது ஒரு வகையில் மனிதாபிமானத்தை கேலி செய்வ்தாக அமைந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவரின் கட்டளைக்கேற்ப மதீனாவுக்கு குடிபெயர்ந்து சென்றவர்களுக்கும் அற்புதமான வாழ்வாதாரங்களும் மரியாதையும் மதீனாவில் கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்)அவர்களோடு பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மதீனர்விற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மதீனர்வில் செழிப்பான வாழ்கை காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து குடிபெயர்ந்து மதீனர்விற்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவரை சஃது பின் ரபீஃ என்ற மதீனர் தோழரின் குடும்பத்தில் ஒருவராக இணைத்துவிட்டாகள். அந்த தோழர் தனது அகதி சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக் சென்று அவரது கையைப்பிடித்துக் கொண்டு  &lt;br /&gt;“சகோதரரே! எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு தோட்டங்கள் இருக்கின்ற ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மனைவியர் இருக்கிறாகள். அவர்களில் ஒரு வரை தேர்வு செய்யுங்ககள் அவரை நான் விவாக விலக்கு செய்து உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்” &lt;br /&gt;என்று சொன்னர். நெகிழ்ந்து போன அப்துரரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு குடும்பத்திலும் செல்வத்திலும் அருட்செய்யட்டும். எனக்கு கடைவீதிக்கு வழி காட்டுங்கள் இவை எதுவும் எனக்கு தேவை இல்லை என்று சொன்னர்கள்.     &lt;br /&gt;&lt;br /&gt;கடைவீதிக்கு சென்று சிறிய அளவில் வெண்ணை வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கிய அப்துர் ரஹமான் பின் அவ்ப் (ரலி) பின்னாட்களில் அரபுலகின் மிகப் பெரிய செலவ்ந்தராக உயர்ந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு சிறப்பான் சூழ்நிலை ஏற்படக் காரணம் புலம் பெயர்ந்தோருக்கான மறுவாழ்வை அமைத்துத் தருவதில் நபிகள் அவர்கள் ஏற்படுத்திய புரட்சிகரமான வ்ழிமுறையேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மதீனா நகருக்கு நபிகள் அவர்கள் புலம் பெயர்ந்த போது மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்காக அவர்கள் தனி முகாம்களை உருவாக்க வில்லை. அப்படி ஒர் திட்டத்தை அவர்கள் யோசிக்கவே இடம் தரவில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;மக்காவின் அகதிகளை மதீனா மக்களின் சகோதரர்களாக நபிகள் இணைத்து விட்டார்கள். மக்காவின் அகதிகளை தங்களது வீடுகளில் வத்து பராமரிக்குமாறு பெருமானார் அறிவுறுத்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் அவகள் சொன்னார்கள் “மதீனாவின் மக்களே! நீங்கள் விரும்பினால் உங்களது வீடுகளிலிலும் சொத்திலும் அகதிகளுக்கு இடமளியுங்கள். இல்லை எனில் நான் அவர்களுக்கு இனி கிடைக்கப் போகும் வெகுமதிகளை வழங்கிவிடுகிறேன் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதீனாவின் தோழர்கள் தங்களது வீடுகளிலும் சொத்துக்களிலும் மக்காவின் அகதிகளுக்கு இடமளித்த்னர். &lt;br /&gt;&lt;br /&gt;அபூபக்கர் (ரலி) அவர்களை காரிஜா தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார். &lt;br /&gt;உமர் அவர்களை இத்பானும் (ரலி),உஸ்மான் அவர்களை அவ்ஸும் (ரலி) &lt;br /&gt;சுபைர் அவர்களை சலமாவும் (ரலி),அப்துர் ரஹ்மான் பின் அவபை சஃதும் (ரலி)&lt;br /&gt;அபூ உபைதா அவர்களை இன்னொரு ஸஃதும் (ரலி) தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.அன்றைய தினமே 45 அகதிகளுக்கு 45 உள்ளூர் வாசிகள் பொறுப்பேறுறுக் கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளாக வந்தவர்களுக்கு தங்களது குடும்பத்தை பற்றிய கவலை வாட்டாதிருக்கவும் நபிகள் அவர்கள் கட்டமைத்த ஒரு சமூக அமைப்பில் மனிதர்கள் வசிப்பிடத்தின் அடிப்படையில் பிளவு படாதிருக்கவுமான ஒரு அற்புதமான ஏற்பாடாக அது அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளை ஆதரித்தல் என்பதற்கான ஒரு புதிய புரட்சிகரமான திட்டத்தை அது வழங்கியது. அகதிகளுக்கு ஆதரவு தெரிவிபதற்கான மனிதாபிமானப் பாடத்தை அது வரையறுத்தது.  யாரும் தங்களது நாட்டில் குடியேறிய அகதிகளை  இரண்டாந்தரக் குடிமக்களாக கருதக் கூடாது என்பதே ஆதரித்தல் என்பதன் சரியான பொருள் என்பதை அது உறுதிப்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளை ஏற்குதல் என்பதில் மட்டுமல்ல அனாதைகளை ஆதரித்தல் என்பதற்கும் இஸ்லாம் தருகிற பொருள் இதுவேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அநாதைகளை பராமரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் இருவிரல் போல நெருக்கமாக இருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி 5304) &lt;br /&gt;தான் சாப்பிடும் போது பருகும் போது கூட ஒரு அநாதையை சேர்த்துக் கொள்பவர் சொர்க்கம் செல்வார்.என்றும் நபிகள் அவர்கள் சொன்னார்கள். (திர்மிதி 1840) &lt;br /&gt;அநாதைகளுக்கு உபகாரகமாக இருக்கிற வீடே சிறந்த வீடு அநாதைகளுக்கு தொல்லை தருகிற வீடு கெட்ட வீடு என்றும் நபிகள் அவர்கள் சொன்னார்கள்.(இப்னுமாஜா 3669) &lt;br /&gt;தனது இதயம் கடினமாகவே இருப்பதாக முறையிட்ட ஒரு தோழருக்கு “உனது இதயம் மென்மையடைய வேண்டுமெனில் அநாதைகளுக்கு உணவு கொடு!, அவர்களின் தலையை தடவி விடு!” (அஹ்மது 7260)என்று நபிகள் அவர்கள் அறிவுரை சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவுரைகளின் பொருள் அநாதைகளை ஆதரிக்க அநாதை நிலையங்களை தொடங்குங்கள் என்பதல்ல. அநாதைகளை உங்களது சொந்தப் பொருப்பில் பராமரியுங்கள் என்பதாகும். இதுவே அநாதைகளை பராமரித்தல் என்பதற்கு இஸ்லாம் கூறிய முதன்மை பொருளாகவும். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலுள்ள தத்துவம் மிக் எளிதானது. அதே நேரத்தில் மிக முக்கியமானது. அநாதகளை சொந்த வீட்டில் வைத்து பராமரிக்கும் போது அவர்களுக்கு குடும்ப உணர்வும் உறவின் நெருக்கமும் கிடைக்கும். உடலின் பசியை மட்டுமல்ல மனதின் காயத்திற்கும் அது ஆறுதலை தரும். சமூகத்தின் மீது ஒரு நல்லெண்ணத்தையும் அக்கறையையும் அது அவர்களிடம் விதைக்கும். அநாதைகளை நிலையங்களி தனிமைப்பாடுத்வது முழு மனிதாபிமானமாகாது என்பது மட்டுமல்ல அது ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைகவும் செய்யாது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொழிலதிபர் சென்னையில் உள்ள ஒரு அநாதை நிலையத்திற்கு சென்றார். அங்குள்ளவர்களுக்கு தனது பங்களிப்பை தந்தார். அதன் பிறகு அந்த நிலையத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகிற போது  அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து உனது பெயர் என்னப்பா என்று வாஞ்சையோடு விசாரித்திருக்கிறார். அந்தப் பையன் வெடுக் கென்று தனது பெயரைச் சொல்லிவிட்டு அகன்று விட்டான். அந்த தொழிலதிபர் சொன்னார். அந்த பையன் சமூகத்தை தூ என்று உதறித்தள்ளியது போல இருந்தது. அவன் முகத்தில் ஒரு வெறுமையும் கோபமும் தெரிந்தது என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஆதரிக்க வேண்டியவர்களை தனிமைப் படுத்தி வைப்பதின் தீய விளைவு. என்னதான் அவர்களுக்குத் தேவையானதை செய்தாலும் அன்புக்கும் அரவனைப்புக்கும் அது ஈடாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரத் கற்றுத்தருகிற் அற்புதமான செய்திகளில் இதுவும் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரீரத் என்பது ஒரு வரலாறு அல்ல. நூற்றுக்கணக்கான உணாவெழுச்சிமிகுந்த வரலாறுகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரலாறுகளின் வழியே பார்வையை செலுத்தினர்ல்.. &lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது லட்சியத்திற்கான குறியீடு.&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது எதிப்பு வேதனை ஏளனம் அனைத்திற்குமான முடிவு .&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது வெற்றியின் தலைவாசல்&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது திட்டமிடுதலை கற்றுத்தரும் பள்ளிக்கூடம்.&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது நம்பிக்கையின் வௌச்சக் கீற்று..&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது நட்பின் உரைகல்&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது வளமான வாழ்கையின் முன்னறிவிப்பு&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது இறைநம்பிக்கை - தவக்குலின் சிகரம்.&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது சொர்கத்தின் வழித்தடம்.&lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது வீரத்தின் வெளிப்பாடு &lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது லட்சியத் துணைகளின் எடுத்துக்காட்டு. &lt;br /&gt;• ஹிஜ்ரத் என்பது மகோன்னதாமான மனிதாபிமானிகளின் வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்க சிந்திக்க பெருகி வரும் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமானவை. இரத்தமும் சதையுமாய் உலாவிய உதாரணங்களைக் கொண்டவை. &lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரத்திற்குப்பிறகு தான் இஸ்லாம் வளாந்தது; செழித்தது; உலகம் முழவதிலும் வியாபித்தது. இன்று இஸ்லாம் உலகமயமாகி இருக்கிறதென்றால், அதறகு வாசலை திறந்து விட்ட பெறுமை ஹிஜ்ரத்தையே சாரும்!.    &lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஹிஜ்ரீ ஆண்டு ஹிஜ்ரத்தின் புனித உணர்வுகள் அத்தனையையும் மொத்தமாய் புமிக்குத் தந்து மானுடத்தின் வாசலில் மகிழ்ச்சித் தோரணம் கட்டட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-5915707830254394035?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/5915707830254394035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=5915707830254394035' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/5915707830254394035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/5915707830254394035'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2010/08/blog-post_8297.html' title='ஹிஜ்ரத்  புலம் பெயர்தலில் ஒரு புரட்சி'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-97836890794907841</id><published>2010-08-04T23:31:00.000+05:30</published><updated>2010-08-04T23:31:05.365+05:30</updated><title type='text'>ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம்</title><content type='html'>ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம் &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு நான் எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ்ஜுக்கு சென்றிருந்தேன். அப்போது  நணபர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்த்னர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார். அது ஒரு மகத்தான செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ஜு முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. ஹஜ்ஜில் கண்ட இட்மெல்லாம் அந்தக் கருத்து ஒரு ஸ்க்ரோலிங் செய்தி போல திரும்பத் திரும்ப ஓடுவது போல நான் உணர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள். அடால் ஹிட்லர். மேற்கத்திய ஊடகங்கள் மிககெட்டவராக அடையாளம் காட்டட்படுகிற இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமான சாட்சாத அதே ஹிட்லர் தான். &lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அடால்ப் ஹிட்லர் கூறயுள்ளதாக  நண்பர் சொன்ன முழு வாசகம் என் நினைவில் இல்லை. என்னும் அதில் பிரதான மாக இருந்த கருத்து. &lt;br /&gt;&lt;br /&gt;“முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மகத்தான ஒருங்கிணைப்பாளர். அவரது ஒருங்கிணைப்பின் சாதனைக்கு மிகப் பெரிய உதாரணம் அவருக்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைப்பாளரின் தேவையில்லாமலே ஒரு அமைப்பு வெற்றி நடை போடுகிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சொல்லிக்கொண்டு போன வேகத்தில் இந்தக் கருத்தை எத்தனை பேர் கவனத்தில் கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால அவர் சொல்லச் சொல்லவே என்னுள் இது பசை போட்டு உட்காந்ந்து கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களில் சாதனையாளர்கள் பலர் இருக்கலாம். அவர்களது சாதனைகளும் பெரிதாக இருக்கலாம். ஆனால் அவர்களில் “ஆர்கணைசிங் கெப்பாசிட்டி” என்பப்டும் ஒருங்கிணைப்புத் திறன் கொண்ட மனிதர்களை காண்பது மிக அரிது. நாலு பேரை ஒருங்கிணைத்து ஒரு காரியத்தை செய்து அந்த நாலு பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிற திறன் எல்லா சாத்னையாளர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. &lt;br /&gt;சிலர் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.ஆனால், அவர்களால் நாலு பேர்களோடு சேர்ந்திருப்பதே சிரம்மாமக இருக்கும். இன்றைய உலகின் மிக மரியாதையான் விருதாக கருதப்ப்டுகிற நோபல் பரிசை வழங்குவதற்காக  தனது சொத்துக்களை தானமளித்த ‘ஆல்பிரட் நோபல்’ டைன்மைட், ஜெலட்டின், செய்றகை பட்டு, செய்றகை ரப்பர், போன்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். ஆனால் கடைசிவ்ரை அவர் யாரோடும் அனுகி இருக்காமல் தனிமையில் வாழ்ந்தார். திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் நான்கு பேரை கவர்கிற ஆற்றல் கொண்டிருப்பார்கள் ஆனால் அந்த நாலு பேரை நிர்வகிக்கிற சக்தியோ அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அரிய காரிய்த்தை செய்து முடிக்கிற ஆற்றலோ குறைந்த பட்சம் தனது ஆதரவாளர்களை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்திச் செல்கிற திறனோ அவர்களுக்கு இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையோரது சாதனைகள் மதிப்பிற்குரியவையாக இருந்தாலும் அவை பிரம்மாண்டமானவையாகவோ வரலாற்றை வாழ வைப்பதாகவே அல்லது ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதாக்வோ இருக்காது. காலத்தால் அது முறிய்டிக்கப் படும். அல்லது விஞ்சப்ப்டும். &lt;br /&gt;&lt;br /&gt;என்வே தான் சாதனையாளர்கள் மத்தியில் “ஆர்கணைசிங் கெபாசிட்டி” ஒருங்கிணைப்புத் திறன் என்பது மிக மதிப்பாகவும் கவர்ச்சியாகவும் கவனிக்க்ப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனியர்களை ஒன்றிணைத்து மிக வலிமையாக வழி நடத்திச் சென்ற அடால்ப் ஹிட்லரரின் பார்வையில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அந்தப் பெரும் சாதனை  பிரதானமாக தென்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாறு பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்ற ஒரு ஒருங்கிணைபுச் சாதனையாளரைப் பார்த்ததில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-97836890794907841?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/97836890794907841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=97836890794907841' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/97836890794907841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/97836890794907841'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2010/08/blog-post_04.html' title='ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம்'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-6080609429358272817</id><published>2008-07-26T15:53:00.000+05:30</published><updated>2008-07-26T15:56:23.509+05:30</updated><title type='text'>நூலாய்வு: இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்</title><content type='html'>நூலாய்வு :                      அபத்தமான அறிமுகம்&lt;br /&gt;&lt;br /&gt;நூல்                             :           இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்&lt;br /&gt;மூலம்                           :           மலிஸ்  ரூத்வென்&lt;br /&gt;மொழிபெயர்ப்பு                        :           சிங்கராயர்&lt;br /&gt;பக்                                :           202&lt;br /&gt;விலை                          :           ரூ 90&lt;br /&gt;வெளியீடு                    :           அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை. புத்தாநத்தம்,621310&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிகாவிலுள்ள ஆக்ஸ்போர்ட்  பல்கலை கழக அச்சகம், 1997 ல் ஆங்கிலத்தில் வெளியிட்டு  ஒலிவடிவமாக  (audio book)  வும் வெளிவந்துள்ள  Islam A Short introduction  என்ற நூலின் தமிழாக்கம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்களுக்கு முன்னாள் சமநிலைச் சமுதாயம் அலுவலகத்திலிருந்து மதிப்புரைக்கு அனுப்பப் பட்ட இந்நூலின் ஆரம்ப சில பக்கங்களை வாசித்த போது மொழி பெயர்ர்பின் மீது ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, “நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற பெயரில் ரொம்பத்தான் அக்கிரமம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்” என்று முனகிக் கொண்டே புத்தகத்தை மூடி வைத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இஸ்லாம் ஒரு அறிமுகம்”  என்ற தலைப்பின் ஈர்ப்பின் காரணமாக பல மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்நூலை எடுத்து வாசித்த போது அதிர்ச்சியடைந்தேன். ஆக்ஸ்போர்ட் அச்சகம் பிரசுரித்தது   என்ற ஜிகினா போர்த்தப் பட்டு வெளிவந்துள்ள,   கிருத்துவ இன்மாச்சரியம் கொண்ட,  பொய்யான பல தகவல்களை கொண்ட ஒரு குப்பையான ஆய்வு இது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமை விளங்கிக் கொள்வதற்கு அல்ல. இஸ்லாம் குறித்த  மேற்குலகின் எண்ண்வோட்டத்தை விளங்கிக் கொள்வதற்கே இந்நூல்  உதவுகிறது. இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பிய  எழுத்தாளர் மிகத் தந்திர்மாக அதற்கு இஸ்லாம் ஒரு சிறு அறிமுகம் என்றுபெயர் வைத்து இஸ்லாமை சிதைத்து சித்தரிக்கிறார். இஸ்லாமின் பெயரை பயன்படுத்தி கிருத்துவத்தை நிறுவ முயலும் கயமையான புத்திசாலித்தினம் நூல் நெடுக பரவி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வாசகர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்காக அடையாளம் பதிப்பகம் இந்த நூலை தமிழாக்கம் செய்து பிரசுரித்திருப்பது அதுவும் அரசு நிதியுதவியுடன் பிரசுரித்திருப்பது அதிர்ச்சியூட்டும் ஒரு ஆச்சரியம். இந்த நூலை தமிழாக்கம் செய்து விட்டு அடையாளம் அடிக்ககிற தம்பட்டம் அருவருப்பானது மட்டுமல்ல பின் நவீனத்துவ போர்வை போர்த்திய அறியாமையும் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;நூலில் பக்கத்துக்கு பக்கம் அபத்தங்க்ளின் தொகுப்பு.  விரிவஞ்சியும் மொழியாக்கத்தில் காணப் படும் இருண்மை காரணமாகவும் சிலதை மட்டும் இங்கு தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா வெற்றியின் போது சிலைகளை அப்புற்ப்படுத்திய முஹம்மது (ஸல் அவர்கள் “இயேசு மேரி ஆகிய இரண்டு உருவங்களை மட்டும் விட்டு வைக்கிறார்”. (பக் – 53)&lt;br /&gt;&lt;br /&gt;(ஹிரா குகையில் பெருமானார் தங்கியிருந்தத விசயத்தில்).சிரியாவுக்கு அவர் சென்ற பயணங்களில் சந்தித்த கிருஸ்துவ துறவிகளின் தூய நடைமுறைகளை கடைபிடித்திருப்பாரா என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத் தலைமுறையின் மதிப்பீடுகளும் அபிலாஷைகளும் ஏற்றப் பட்டதுமான அவரது (பெருமானார் )மாதிரி உருவம், வாய்மொழி வழியாகவும் ஹதீஸ் இலக்கியம் வழியாகவும் பரப்பப் பட்டது. அது கிறிஸ்து அல்லது புத்தர் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த பண்பாட்டு சமய பிம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;“முஸ்லிம்காகவும் இருந்து கொண்டு நாத்திகராவும் இருப்பதில் எந்தத் முரண்பாடும் இல்ல” ஆனால் “கிருத்துவ நாத்திகம்” பெரும்பாலான மக்களுக்கு முரணான பதமாகவே ஒலிக்கிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;“பதினெட்டு வயது ஆயிஷாவின் மடியில் எதிர்பாராத விதமாக (முஹம்மது) உயிர் துறக்கிறார்”.&lt;br /&gt;&lt;br /&gt;“இஸ்லாம் முஸ்லிம் என்ற சொற்கள் எல்லா இடத்திலும் சர்ச்சக்குரிய களங்களாகவே இருக்கின்றன”&lt;br /&gt;“முஹம்மதின் நம்பிக்கைகுரிய மனைவியான கதீஜா” 152&lt;br /&gt;&lt;br /&gt;“ஆயிஷாவுக்கும் இறைத்தூதரின் ஒரு தோழரான அபூஹூரைரவுக்குமிடையே தனிப்பட்ட முறையில் நிலவிய கொந்தளிப்பு” பக் : 153&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்கள் ஒரு புறம் இருண்மையும் கருமையும் கொண்டதாக இருக்கிற தென்றால் தமிழ் மொழியாக்கம் பற்றி சொல்லவே வேண்டாம், சாமாண்ய வாசகனை மிரட்டுகிற மொழியாக்கம்.. இந்தப் புத்தகத்தை நீங்கள்முழுமையாக புரிந்து கொண்டால் உங்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழியாக்கத்தில் காணப்படும் இருண்மையும் தவறுகளும் ஒரு கட்டத்தில் புத்தகத்தை தூக்கி வீசிவிடத் தூண்டுகின்ற. உதாரணத்திற்கு “ஹதீஸ் மர்பூஃ” என்பது இறைத்தூதர் மேல் ஏற்றிக் கூறப் பட்ட  ஹதீஸ் என்று மொழியாக்கப் பட்டுள்ளது. (பக்:100 )&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிக்கப் பட வேண்டிய ஒரு தொகுப்பு தமிழ் பேசும் முஸ்லிம்கள் கவனிக்காமல் இருப்பதனால் கடைகளில் இன்னும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்றிடுவீர் எட்டுத் திக்கும்  கலைச்  செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்த்திடுவீர் என்று பாரதி பாடியது இது போன்ற குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் மெல்லத் தமிழ்  இனிச் சாகும் என்பதற்கான “அடையாள”மா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-6080609429358272817?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/6080609429358272817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=6080609429358272817' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/6080609429358272817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/6080609429358272817'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2008/07/blog-post_26.html' title='நூலாய்வு: இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-2070260271035105482</id><published>2008-07-26T15:47:00.000+05:30</published><updated>2008-07-26T15:52:56.076+05:30</updated><title type='text'>வல்லம் மாநாடு:  பிரிவினைவாதிகளின் தெருக்கூத்து</title><content type='html'>ஜகாத் விசயத்தில் இஸ்லாத்திற்கு எதிராக  கருத்துச் சொன்னதன் மூலம் முர்ததாகிவிட்டவகள்  (இஸ்லாமிய மறுப்பாளர்கள்) தவ்ஹீத்  மாநாடு  நடத்தப் போவதாக அறிவிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது பி.ஜே.பியினர் அம்பேதகர் விழா கொண்டாடுவது போன்றது. அம்பேத்கர் பிறந்த நாள் அன்று இந்துத்துவா சக்திகள் தாய் மதம் திரும்பும் நிக்ழ்சியை  நடத்துவது எப்படி அம்பேதக்ரின் முகத்தில் கரியை பூசும் முய்றியோ அது போல தவ்ஹீத் என்ற சொல்லின் மீது தார் பூசும் முயற்சியே இந்த மாநாடு. உண்மையில் தமிழகத்தின் அரசியல் அரங்கில் தமது குழுவை நிலை நிறுத்திக் கொள்ளவும் வசூலுக்கான பரந்துபட்ட ஒரு வழியாகவுமே இம்மாநாடு நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொள்கையுடையவர்களை திருமண்ம் செய்து கொள்ளக் கூடாது.   முஸ்லிம்களின் கப்ரிஸ்தானில் அடக்கம் செய்யப் படுவதற்கு அவர்கள் அருகதை யுடையவர்களும் அல்ல என்ற அறிவிப்பு வெகு சீக்கிரம் உலக அளவில் உரத்து ஒலிக்ப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் எராளமான பொருட் செலவில் விளம்பர மாநாட்டுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களின் வேகமும் மோகமும் மட்டுமே இது சாத்தானிய கும்பல் என்பதற்கு சான்றளிக்க போதுமானது. முஸ்லிம்களின் சம்யக் கூட்ட்ங்கள் எதற்கும் இப்படி ஒரு செலவு செய்யப்பட்டதில்லை. தூய சமயவாதத்திற்கு இந்த விளம்பரங்களும் ஆர்ப்பாட்டமும் எந்த வகையில் பொருத்தமானது என்பதை எண்ணி மக்கள் வியக்கின்றனர். இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கின்றனர்.  ஹவாலா மோசடிகள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அனுமதிக்கப் பட்டது என்று ரகசிய அனுமதி வழங்கியற்காக கிடைத்த பரிசுப்பணம் விளையாடுகிறது என்று அவர்களுடைய முன்னாள் ஆதரவாளர்கள் கிசிகிசுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டம் நடக்குமா? அல்லது இமாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் அவர்களுடைய தலைவர்  பேசுவதாக விளம்பரப் படுத்தப் பட்ட கூட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சினை காணமாக ரத்து செய்யப் பட்டது போல இதுவும் ரத்து செய்யப் படுமா என்ற கேள்விக்கு நடுவில் இந்தக் கூட்டத்தின் தன்மை குறித்து சில விபரங்களை தமிழகம் அறிந்து கொள்வது நல்லது &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் உணமையில் கலககக் காரர்கள். எங்களது பகுதியில் ஒருவர் இறந்து போனார். அவரது பிள்ளைகள் போலி தவ்ஹீதி குரூப்பின் குட்டித்தலைவர்கள். நான் நினைத்தேன். இவனுக! இந்த குரூப்பில் புடிவாதமானவனுக! இந்த ஜனாஸைவை சுப்ஹான மௌலூதும் முஹ்யித்தீன் மௌலூதும் ஒதுகிற பள்ளிவாசலுக்கு கொண்டு வரமாட்டங்க! பக்கத்துல அவங்க இடம் பலது இருக்கு அங்க கொண்டு போயிடுவாங்க! சிர்க்(?) தளங்களுக்கு கொண்டு வருவதற்கு அவர்கள்து தூய வாதம் இடம் கொடுக்காது. நாம் எப்படி அவங்க இடத்துக்கு போக, ஏன் திரும்பிக் கூட பார்க்க விரும்பற்தில்லையோ அது போலத் தானே இவங்களுக்கும் மானம் ரோஷமெல்லாம் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஜனாஸா எங்களது பகுதியிலுள்ள சுன்னத் ஜாமத் பள்ளிக்கு வந்தது. அங்கு வந்து வீம்பு செய்யத்தவற வில்லை. “நாங்க தான் தொழ வைப்போம்” என்றனர். ஒரு தொழுகையாளி உரத்துச் சொன்னார். அட கருமம் புடிச்சவனுங்களா! அமைதியா இருக்கிற ஜமாத்துல கலகம் பன்ன வந்துட்டீங்களா? என்றார்.  மக்கள்தான் எவ்வள்வு துல்லியமாக கருத்துக் கொண்டிருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கலகக் கூட்டம் வண்ணமயமான விளம்பரங்களால் தனது செல்வாக்கில் ஏற்பட்ட கறைகளை கழுவிட மேற்கொள்ளும் முயற்சியே இந்தத் தெருக்கூத்து.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் ம்ர்யாதைப் பட்ட ஒரு விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளத்தகுந்த எந்த நபர்களும் அம்மாநாட்டோடு சம்பந்தப் படவில்லை. அருவருப் பூட்டும் குற்றப் பின்னணியுடையவர்கள் மட்டுமே ஒன்று கூடி நடத்து கிற கூட்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாநாடு குறித்த எதிர் விவாதங்கள் இணைய உலகில் ஏரளமாக நடக்கிறது. அவர்களது முன்னாள் ஆதரவாளர்கள் பலரும் திரு பிஜே அன் கோவினரை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்க்கின்றனர். அங்கு பயன்படுத்தப் படும் சொற்பிரயோகங்களும் வெளிப்படுத்தப் படும் உண்மைகளும் அச்சில் ஏற்றத்தகுந்தவை அல்ல. அதை எல்லாம் படித்துப் பார்க்கிற போது அதில் உள்ள கால் வாசி விசயங்கள் உண்மையாக இருந்தால் கூட இத்தைகைய அருவருப்பூட்டும் சக்திகள் எப்படி வெட்க மில்லாமல் மாநாடு நடத்த திட்டமிட முடிகிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி பிரிட்டிஷ் காரர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் மிர்ஸா குலாம் காதியானியை ஆதரித்தார்களோ அது போல, சமய சமூக தேசிய ஒழுங்குகளுக்கு கட்டுப்பட மறுக்கிற ஒரு கூட்டம் இவர்களைச் சார்ந்து நிற்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஒரு குண்டாயிச மனப்பான்மை போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு யூதர்களைப் போல வளைத்து வளைத்துப் பேசும் நாவுகள் போதுமானதாக இருக்கிறது, அந்தக் கூட்டத்திற்கு குயுக்தியும் பரிகாசமும் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு குரானும் சுன்னாவும் கலகக்  கொடிகளாக இருப்பது போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு பொய்மையும் வாய்வீச்சும் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஸாமிரிய்யின் வழித்தோன்றல்களளின் வழிகாட்டுதல் போதுமானதாக இருக்கிறது. கன்றுக் குட்டி சிலையை வண்ங்கும்படி யூதர்களை திசைதிருப்பிவிட்டு எனக்கு சரி என்று பட்டது அதனால் செய்தேன் என்ற ஒற்றைச் சொல்லில் ஸாமிரி கழன்று கொன்றது போல எங்களது அன்றைய ஆய்வு அப்படி இருந்தது? இன்றை ஆய்வு இப்படி என்று சொல்லி  சமூகத்தையும் தேசத்தையும் பிளப்பதை சரி காண்பது இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வார்த்தக்ளுக்கு இடையே ஊட்டப்பட்ட வெறியால் நிகழ்ந்து விட்ட வரலாற்று சோகங்கள சாமாண்யமானதா? கல்யான வீடுகளிலிருந்து கல்லறைவரை சமுதாயத்தில்வெறி பிடித்துத் தொடர்ந்த சண்டைகள் சச்சர்வுகள் எத்தனை? துண்டாடப் பட்ட முஸ்லிம் ஜமாத்துக்கள் எத்தனை? வழக்குகள் எத்தனை? வம்புகள் எத்தனை? விப்ரீதங்கள் எத்தனை? கொடுமைகள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை? அத்தனையையும் மொத்தமாக மறைத்து விட்டு அறிவியல் அரங்கு ஆட்டுக்கல் அரங்கு என்று கதைவிட்டுக் கொண்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா இருக்கிற இடத்தில் சச்சரைவை சல்னத்தை உருவாக்கி விட்டு அதை சமூக சீர்த்திருத்தம் என்று பேசி அதற்காக பலப்பிர்யோக வழிமுறைகளை தூண்டிவிட்டு இளைஞ்ர்களை முரட்டு குணம் கொண்டவ்ர்களாக்கி, அதன் விளைவாக சமூகத்தில் வொரும்பத்தகாத பல செயல்கள் ஏற்பட்டு பன்னூற்றுக் கணக்கான இளைஞர்களை சிறைக் கூடத்திற்கு அனுப்பி அவர்களது வாழ்வை இருளச் செய்த பிறகு இப்போது மீண்டும் ஒரு தலைமுறைய அதற்காக தயார் செய்வதற்காக மாநாடு ந்டத்துகிறார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூடாரத்தில் இப்போது கூட்டு சேர்ந்த்திருக்கிற பலரும் தமது சொந்த ஊருக்க்குள் தலை காட்ட் முட்யாதபடி ஓடி ஒளிந்து கொண்டிருந்தவர்கள். பல்வேறுபட்ட வழக்குகளில் அப்பாவி இளைஞர்களை சிக்கவைத்து விட்டு தண்டனைகளிலிருந்து வஞ்சமாக தப்பித்துக் கொண்டவ்ர்கள். இவர்களுக்கு  இப்போது அரசியல் செல்வாக்குக்காக மாநாடு தேவையானதாக இருக்கலாம், அப்பாவித்தனாமாக இத்தனைக்குப் பிறகும் இவர்களைப் ஆட்டுமந்தை கூட்டத்தைவிட மோசமாக பின்பற்றுபவர்கள் ஒரு சிறைக் கூட எதிர்காலம் அல்லது சீரழிந்த கொள்கைகஈன் கூடாரம் தங்களுக்கு தேவையா என யோசித்துக் கொள்ள வேண்டும்,   இவர்களோடு இப்போது தொடர்பு கொண்டிருப்பவர்கள் இவர்களுடன் முன்னாள் தொடர்பு கொண்டவ்ர்களுக்கு நேர்ந்த கதியை ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துப் பார்த்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கூட்டத்திற்கு அழைப்பு திரு பீ ஜே, கோவையில் விடுத்து பேசுவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது எதனால்.? அதன் பின்னன்ணியில் உள்ள ஊருக்குத் தெரிந்த ரகசியம் என்ன? தம் வாழ்வைச் சீரழித்த சண்டாளன் என்று நகரிலுள்ள இளைஞர்கள் பலர் அவர் மீது கொதிப்படைந்திருப்பது எதனால்? என்பதை ஆழ அகழ்ந்து யோசித்துப் பார்க்கிற பொறுப்பு தமிழகத்தினுடையது. தமிழக முஸ்லிம்களுடையது, தமிழக முஸ்லிம் இளைஞர்கள்ளுடையது. தமிழக காவல் துறையினுடயது, தமிழக முதல்வருடையது, தமிழக முதல்வர் கலைஞர் பல சம்யத்திலும் முஸ்லிம் சமூகத்த்தில் உருவான தவறான மனிதர்களுக்கே உற்சாமளித்திருக்கிறார்.  அந்தச் சருகுதல் இந்தக் குற்றவாளிக் கூட்டளிகள் விசயத்திலும் நடந்துவிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;‘திருவாளர் பிரச்சினையின்’ இன்னொரு வாயாக எங்களுரில் ஒரு இளைஞர் இருந்தார். தனது கல்லூரிக்கால வாழ்வையும் அதற்குப் பிந்தைய பல் ஆண்டுக்ளையும், திரு பி.ஜே வுக்காக தொலைத்தவர். சில ஆண்டுகளாக கண்ணில் படாத அவர் திடீரென ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார். முகவரி மாறி வந்துவிட்டாரா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது. என் சந்தேகத்தை போக்கி விட்டு ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார். வலி மிகுந்த அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்த ஏஜென்ஸிகளிடம் ஏமாறுவதற்கு தயாராகிற எந்த இளைஞனும் யோசித்துக் கொள்ளட்டும். அந்த இளைனின் வாக்கு மூலத்தை நான் என் வார்த்தைகளில் தருகிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;“ரேடியோ நிகழ்சிகளை தொகுத்து தருபர்களை ஆர் ஜே ரேடியோ ஜாக்கி என்பார்கள். தொலைக்காட்சி தொகுப்பாளர்களை வீடியோ ஜாக்கி என்பார்கள். என்னைப் பொறுத்தவரை  பீ ஜே என்றால் பிரச்சினை ஜாக்கி என்று நான் உணர்ந்து வெளியே வந்துவிட்டேன். இதில் ஈடுபட்டதால் என மனது அமைதியை இழந்த்தது, ஒரு கட்டத்தில் நான் வேசமணிந்த நடிகனாகவே இருந்தேன், வாழ்கையின் மகிழ்சி நிம்மதியை தொலைந்தேன். பிரச்சினை சச்சரவுகலை தேடி ஒடுவதே என் பிழைப்பாக இருந்தது. நாங்கள் விளையாட்டாக பேசி வைத்துக் கொண்டு சச்சரவுகளை உருவாக்கினோம். இளமையின் தொடக்க காலத்தில் ஒரு தவ்றான மனிதனை பின் தொடர்ததால் நான் என் தரத்திற்கு கீழான பல் வேலைகளை செய்ய நேர்ந்த்து தவ்ஹீத் என்ற பலமான போவயின் இஸ்லாமின் நாகரீகங்கள் முரணான – துணிந்து பொய் பேசுவது, பொய்யான தகவல்களை உண்மையாக பிரச்சாரம் செய்வது அத்தனையையும் செய்தொம் சுன்னத் ஜமாத் உலாமாக்களை தரம் தாழ்த்துவது மட்டுமே எங்கள் குறியாக இருந்தத்து. அவர்களை மூக்குடையச் செய்வதற்காக எந்தக் காரியத்தையும் செய்யத்த்யாரக இருந்தோம். ஒரு பள்ளிவாசலுக்கு கூரை வேய்ந்து கொண்டிருந்த ஒரு முஸ்லியாரை உம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஓதிப்பார்க்க வரவேண்டும் என்று கூறி ஆட்டோவில் அழைத்துக் கொண்டுவந்து, எங்களது மர்க்கஸ் பள்ளிவாசலில் வைத்து நைய்ப் புடைத்தோம். அப்போதெல்லாம் நையப் புடைத்தோம் என்று சொல்வது எங்களுக்கு பெருமைக்குரிய விசயமாக இருந்தது. சப்பையை (தோள்பட்டையை) இறக்கினோம் என்று சொல்வது எங்களது சாதனையாக இருந்தது.  முஸ்லியாருக்காக நியாயம் கேட்டு வந்தவ்ர்களை பட்டப் பகலில் நகரின் நெரிசல் மிகுந்த மையப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டித் துரத்தினோம். இதை எல்லாம் இப்போது நினைத்தால் நான் கல்லுரி ப்டைப்பை முடித்திருந்தும் எப்படி தவ்ஹீதின் பெய்ரில் ஒரு அடியாளாக இருந்திருக்கிறேன் என்ப்தை எண்ணி கூனிக் குறுகிப் போய்விடுகிறேன். இப்போது நினைத்தாலும் இதயம் கனத்துப் போகிறது. தவ்ஹீதி என்ற பெயரில் நாங்கள் அடித்த கூத்துக்கள் நிறைய. விளையாட்டாய் நிகழ்த்திய அந்தக் கூத்துக்களுக்கு அப்பாவிகளும் அதீத புத்திசாலிகளாக தங்களை நினைத்துக் கொண்ட முட்டாள்களும் பெருமளவில் திரண்டார்கள். அது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. நாம் தான் உண்மையாளர்ளோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த ஆச்சரியம் வளர்ந்தது. ஆனால் நாம் அலட்சியமாகவல்லவா விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக் கொண்டிருந்தது. சன்னம் சன்னமாக எனக்குள் இருந்த மனசாட்சி அவர்களை விட்டு விலகிக் கொண்டிருந்தது. வெளிப்படையாக நான் தீவிர தவ்ஹீதியாக தெரிந்தாலும் நான் உள்ளுக்குள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். பி.ஜே த.மு.மு.க வில் ஈடுபட்ட போது, ஒரு வழியாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை குழப்பங்களுக்கும் சமுதாய சச்சரவுகளுக்கும் முடிவு வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன், அவரும் தனது புதிய தலைமைக்குரிய வேஷத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் சென்று பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகளை மாற்றிக் கூறினார். ஆனால் பாழாய்ப் போன த.மு.மு.க.வினர் அவரது அதிகார ஆசைக்கு இடம் கொடுக்காமல் அவரை வெளியே அனுப்பி விட்டனர். அது பெரும் ஆபத்து, அவரால் சும்ம இருக்க முடியாது அவரை அண்டிப்பிழைத்துக் கொண்டிருப்பவர்களைப் பய்ன்படுத்தி மீண்டும் அவர் சமுதாய சச்சரவுகளுக்குத் தான் வ்ழியமைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் இந்த இடைக்கால வாழ்க்கை அனைத்த்தும் தவறானது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக  நான் உணர்ந்து கொண்டேன். அதை  ஊருக்கு சொல்வதற்காகவே எனது பாட்டனார் இற்ந்த போது அவருக்கு துஆ செய்வதற்காக நடத்தப் பட்ட 40 ம் நாள் பாதிஹாவை நான் முன்னிறு நடத்தினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். வேஷ்த்தை கலைத்த நிம்மதி எனக்கு ஏற்படிகிறது. பொய் வேடாதாரிகலளின் கூட்டத்திலிருந்து விலகி வந்து விட்டதில் வாழ்கை தெளிவாகவும் நேர்கொண்டதாகவும் இருக்கிறது. எனது  இந்த மாற்றத்தை உங்களுக்குத் தெர்விக்கவும். உங்கள் வழியாக உலகறியச் செய்யவுமே உங்களிடம் வ்ந்தேன் ஆலிம்களிடம் உள்ள தயக்கமும் அவரைப் போல துணிந்து பேச தயங்குவதுமே அவரது வளர்ச்சிக்கு காரணங்கள் உங்களைப் போன்றவர்கள் இந்நிலையை மாற்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என்று அந்த இளைஞர் சொல்லி முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர் இந்த நண்பரைப் போலவே  இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.அப்படி வில்கிச் சென்றவர்களை நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடியும்.அவர்களிடமிருந்து இது போல கதை கதையாக கேட்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் தொப்பி போட்ட படியே இருக்கும் ஒருவர், தொப்பி விசயத்தை வைத்து சமுதாயத்தை பிளந்தார் என்பது வேடிக்கையான ஒரு வேதனை. தொப்பி அவசியமற்றது தானே அதை ஏன் நீங்கள் பெரும்பாலும் அணிகிரீர்கள் என்று அவர்டைய ஆட்கள் அவரிடம் கேள்வி கேட்கவில்லை. ஆனால் தொப்பி போடுவதை தங்களது ம்ரபாக கொண்ட சுன்னத் ஜமாத்தினரின் பள்ளிவாசலுக்கு தொப்பி போடாமல் தொழவந்தனர். மக்களை ஆத்திரப் படுத்துவதற்காகவே இந்த நடவ்டிக்கை மேற்கொள்ளப் பட்டது.  இந்த தொப்பியால் நடந்த பிரச்சினை கொஞ்சமா? நஞ்சமா? இத்தகைய ஒரு கும்பலால எங்கள் பகுதியில் நடைபெற்ற சண்டைகளும் தகறாறுகளும்  ஏராளம். அத்தைகைய சந்தர்ப்பத்திலெல்லாம் முஷ்டியை மட்டுமல்ல சில சம்யத்தில் கத்தியையும் கூட உயர்த்திக் கொண்டு நின்றார் அவர்களின் குட்டித்தலைவர் ஒருவர். இப்போது அவர் பேச்சாளராக காசு பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது தலையிலும் தொப்பி ஒட்டிப் பிறந்த உறுப்பாக இனைந்திருக்கிறது, ஒரு காலத்தில் தொப்பிப் பிரச்சினக்காக ஊரையே ரகளைப் படுத்தினோமே என்பது நினைவில் கூட இல்லாதவ்ர் போல அவர் தொப்பியோடு உலா வருவதைப் பார்க்கையில் விளயாட்டுக்காக எத்தனி விப்ரீதங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதை எண்ணி நெஞ்சம் பெருமுகிறது. அற்பமான செய்திகளை வைத்து எப்படி சமுதாயத்தை வஞ்சகமாக பிளந்தவர்கள் இவர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு இது  ஒரு சின்ன உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் பெருநாளை பிளந்தபோது, அதற்காக எத்தனை வாதங்களை எப்படி எல்லாம் அடுக்கடுக்காக வைத்தார்கள். அந்த ஆதர்ங்கள் மூலம் ஒரு குடும்பத்தில் தந்தையையும் மகனையும் தனித்தனியே பெருநாள் கொண்டாட வைத்த கொடுமை சமுதாயத்தில் எத்தனை வலிமிகுந்த கீறலை ஏற்படுத்தியது? மாபாவிகள்...சண்டாளர்கள்.. சதிகாரர்கள்.. எவ்வளவு எதார்த்தமாக அந்தப் பிளவிலிருந்து பின் வாங்கினார்கள்?. நாசமாய்ப் போன அந்த முந்தய ஆய்வுக்கும் பிந்தய ஆய்வுக்கும் இடையே எழுந்த் இடைவெளியை இனி எந்த தலைமுறையால் அடைக்க முடியும்? ஒரே குடும்பத்தில் ஒன்றாக மகிழ்ந்தும் ரசித்தும் கொண்டாடிய பெருநாட்களின் சந்தோஷ்த்தை தொலைத்து விட்டு சவக்கலையோடல்லவா இன்றைக்கு பல் குடும்பங்கள பெருநாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டத்தில் அறிவு ஜீவிகளாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்ட சிலர் கூட ஜமாத்தினரை குறை பேசினரே தவிர ஏன் சமுதாயத்தின் ஒற்றுமை ஒரு அற்பக் காரியத்திற்காக குலைக்கிறீர்கள் என்று மறு தரப்பை பார்த்து கேள்வி கேட்க திராணியுற்றிருக்கவில்லை, இப்போதும் கூட சமுதாய ஒற்றுமை பேசுகிறோம் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சிலர் முஸ்லிம்களையும் இந்த அமைப்பினரையும் இணைத்து காரியங்கள ஆற்ற முய்ற்சிக்கின்றனர். அது மல்லிகைப் பூக்களோடு அரளிப்பூவையும் சேர்த்து மாலைத் தொடுப்பதற்கு சம்மானது. அல்லது நல்ல பாலில் விஷத்தை கலப்பது பொன்றது. அப்படிப்பட்ட சந்தர்ப் பத்தை பயன்படுத்தி லாபம் பார்த்துக் கொள்வார்களே தவிர ஒரு போதும் அவர்கள் ஒற்றுமைக்கு உதவ மாட்டார்கள். முஸ்லிம் ஜமாத்துக்கள் எச்சரிகை அடைந்து கொள்ள வேண்டிய விசயம் இது. ஊர்ப்பிரச்சினை என்பதற்காக இவர்களை இணைத்துக் கொண்டால் அதனால் இவர்களுக்கு லாபம் கிடைக்கும் ஜமாத்துகளுக்கு நட்டமே ஏற்படும். இது எங்களூரில் எனக்கு கிடைத்த அனுபவம். இஸ்லாமிய வரலாற்றிலும் நான் கண்டுனர்ந்த தத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலை, திருமண்த்தை, பெருநாளை, ஏன் இறுதி ஊர்வல்த்தை கூடப் பிரித்தவர்கள் அந்தப் பிரிவினையை நிலை நிறுத்துவதற்காக இளைஞ்ர்களைடையே வன்முறை குணத்தை விதைத்தவ்ர்கள். இப்போது மீண்டும், கூத்தடிக்க வருகிறார்கள். அந்தக் கூத்தாடிகளால் சமுதாயம் இன்னும் சில சிக்கல்களை சந்திக்காமல் இறைவன் பாதுகாக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-2070260271035105482?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/2070260271035105482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=2070260271035105482' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/2070260271035105482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/2070260271035105482'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2008/07/blog-post.html' title='வல்லம் மாநாடு:  பிரிவினைவாதிகளின் தெருக்கூத்து'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-2604813812043259192</id><published>2008-03-09T23:15:00.000+05:30</published><updated>2008-03-09T23:17:31.503+05:30</updated><title type='text'>மெல்லத் திறந்தது கதவு.</title><content type='html'>இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி கோவை மாநகரின் மையப் பகுதியில் 167 ஏக்கர் பரப்பளவில் படர்ந்து கிடக்கிற மத்திய சிறைக் கூடத்தின் கதவுகள் மிக மெல்லத் திறந்தன. ஒன்பதரையாண்டுகளாக இன்று திறக்கும் அல்லது நாளை திறந்துவிடும் என்று பரிதவித்துக் கொண்டிருந்தவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களுக்கும் ஏந்திய கரங்களுக்கும் ஒரு விடிவு பிறந்தது.&lt;br /&gt;1998 பிப்ரவரி 14 ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனா. 250பேர் காயமடைந்தனர். பலகோடி மதிப்பள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்தக்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 168 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுமார் 60 வயதுடைய முஹம்மது தஸ்தகீர் முறையான சிகிட்சை தரப்படாதததால் இறந்துவிட்டார். மற்றொருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.&lt;br /&gt;அரசின் கொள்கை முடிவிற்கேற்ப தீலிரவாத சிறைக்கைதிகளை அடைப்பதற்காக தொடக்கத்தில் கோவை சேலம் மற்றும் திருச்சியில் உயர் பாதுகாப்பு கட்டித் தொகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் பெருகி வரும் தீவிரவாத சிறைக்கைதி களை கையாளவும் அவர்களைப்பிரித்து தனிமைப்படுத்தி வைப்பதற்கும் ஏதுவாக இத்தைகயை உயர் பாதுகாப்பு கட்டிட தொகுதி முறையை ஏனைய ஒன்பது மத்திய சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது என்று தமிழக சிறைத்துறை குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. அதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் உள்ள சில பகுதிகள் உயர் பாதகாப்புச் சிறைகளாக மாற்றப்பட்டன. 10 ம் நம்பர் பிளாக்கும் வால்மேடும் மருத்துவமனையின் ஒரு பகுதியும் உயர் பாதுகாப்பு சிறைகளாக மாற்றப்பட்டன. மின்வேலி பல அடுக்குப் பாதுகாப்பு தனி செக்யூரிட்டிகள் என பல அம்சங்கள் பாதுகாப்பு கட்டிடத் தெகுதிகளில் அமைக்கககப்ட்டுள்ளன. 10 ம்பிளாக்கிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் தீவு மாதிரி தனி காம்பவுண்டுக்குள் தனி செக்யூரிட்டியடன் 120 செல்களைக் கொண்டிருந்த வால்மேட்டில் தான் பெரும்பான்மையான குண்டுவெடிப்புக் கைதிகள் அடைக்கப்படடிருந்தனர். 10 ம் நம்பர் பிளாக்கில் சுமார் 20 பேரும் மருத்துவமனையில் சுமார் 30 பெரும் அடைக்ப்பட்டிருந்தனர்;.&lt;br /&gt;குண்டு வெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 166 பேர் விசயத்தில் நீதி தேவதை முதன்முறையாய் திருவாய் மலர்ந்தருளினாள். இந்திய நீதி அமைப்பின் மிகிமிக மோசமான பாசிச போக்கின் கொடுமையான ஒரு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வகை;கும் பணி அன்று தொடங்கியது.&lt;br /&gt;166 நபர்களில் 158 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம் அவர்களில் 69 பேர் மீது கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய 84 பேருக்கும் கூட்டுச் சதியில் தொடர்பில்லை ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது. ஒரு கால் ஊனமுற்ற நிலையில் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு;க் கொண்டு 3390 நாட்கள் ஒரு பரேல் கூட வழங்கப்படாமல் சிறை வாசம் அனுபவித்த கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துன்னாஸர் மஃதனீ அன்று விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 8 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி உருத்திராபதி கூறினார். முன்னரே ஜாமீன் பெற்றிருந்த மூன்று போரைத் தவிர்த்து மற்ற ஐவரும் அன்று மாலை விடுதலையாகி வெளியே வந்தார்கள்.&lt;br /&gt;கலவரங்களின் போது ஒரு கல்லை எடுத்து வீசியதை கூட பெரும் குற்றமாக கருதி, வாலிபத்தின் வாசலில் நின்ற இளைஞர்களை 9 ஆண்டுகள் சிறையில் வைத்த இறுக்கமான ஒரு நீதிமன்றம், அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் சிறு அளவிலேனும் கூட இல்லதிருந்தால் ஒழிpய 8 நபர்களை விடுதலை செய்திருக்காது. இத்தகையவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் தலையாய நீதிஅமைப்பான உச்ச நீதிமன்றம் கூட ஒரு நியாயத்தை வழங்க முடியாத நிலையில் இருந்தது என்றால் ஒட்டு மொத்த நீதி அமைப்பின் மீது ஒரு வகை ஆயாசம் படர்வதை தவிர்க்க முடியவில்லை. இவர்களது ஜாமீன் மனுக்கள் உயர்நீதி மன்றத்தாலும் உச்சநீதிமன்றத்தாலும் எத்தனை முறை நிராகரிக்கப்பட்டன? அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் அரங்கேற்றிய நாடகங்கள் எத்தனை? ஓரு நாகரீக சமுதயம் வெட்கித் தலைககுணிய வேண்டிய விசயங்கள் அல்லாவா அவை?&lt;br /&gt;வக்கிரமான வாழ்கையையே தத்தவமாக கொண்ட இந்துத்தவா சக்திகள், அப்துல் நாஸர் மதானி நிரபராதி என்று அறிவிக்கப்ட்டதை அரசியல் காரணங்களுக்காக கொச்சைப்படுத்தினாலும் அவருடன் சேர்ந்து விடுவிக்கபட்ட கோவை லாலிரோட்டை சேர்ந்த நவுசாத், கரும்புக்கடையை சேர்ந்த சர்தார், குணியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது, சந்தராபுரத்தைச் சோந்த அக்கோஜி என்ற சிவக்குமார் கோழிக்கோட்டை சேர்ந்த அஸ்ரப், சுபேர், கொல்லத்தைச் சோந்த ஆர்மீ ராஜுஆகிய ஏழபேர் மீது அரசியலின் எந்த இழிபிறப்பு வார்ததையை பிரயோகிக்க முடியும்.? குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற ஒற்றை வார்த்தை அவாகளின் எதிர்கால வாழ்கையில் ஆயிரமாயிரம் மத்தாப்பூக்களை ஒளிரச் செய்தாலும், கடந்து போன ஒன்பதாண்டுகளின் கண்ணீர் வரலாற்றுக்கும் கவலைக்கும்; எந்த மருந்தை பூச முடியும்.&lt;br /&gt;எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத சர்தாரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் படித்துக் கூடப் பார்க்காமல் தள்ளுபடி செய்தது. வழககை தினசரி நடத்தி விரைந்து முடிக்குமாறு அறிவுரை சொல்லி திருப்பி அனுப்பிவிட்டது.&lt;br /&gt;கோவையில் நடைபெற்ற முறையற்ற குண்டு வெடிப்புக்களுகாக இங்கு வாழந்த முஸ்லிம் சமூகம் தலைகுணிய நேர்ந்தது என்றால் இந்த நிராபாதிகளை அவர்களின் அனைத்து விதமான அபயக்குரல்;களையும் நெறித்து 9 ஆண்டகள் சிறைவைத்ததற்காக இந்த தேசத்தின் நீதியமைப்பும் அதை ஆட்டிப்படைக்கிற உளவுத்துறை சக்திகளும் அதை நிருவகிக்கிற அரசம் தலைகுணியத்தான் வேண்டும்.&lt;br /&gt;இங்கிலாந்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த கார்விபத்தை சத்திதிட்டம் என்று இங்கிலாந்து அரசு கூறிய போது அதில் தொடாபுடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸதிரேலிய அரசு டகர்டர் ஹனீப் என்ற 27 வயது பெங்களூர்காரை கைது செய்தது. அவரை 27 நாள் தனிமைச் சிறையில் வைத்துவிட்டு பிறகு விடுதலை செய்தது. அப்பொது ஹனீபின் விடுதலையை வரவேற்ற அத்தனைபேரும் ஆஸ்திரேலிய நீதி அமைப்பை பாராட்டினார்கள். சட்த்தை பாதுகாக்கிற காவல் துறையால் நிகழந்துவிட்ட ஒரு தவறை உடனடியாக சரி செய்த அந்நாட்டின் நீதி அமைப்பு ஒரு தனி மனிதனின் மரியாதையை மட்டும் மீட்டுத்தரவில்லை ஒரு தேசத்தையே தலைநிமிரச் செய்தது.&lt;br /&gt;செழிப்பாக சென்று கொண்டிருந்த தன் வாழ்கையை ஒரு சில மணிநேரத்தில் ஆஸ்திரேலிய அரசு குப்புறக்கவிழ்த்தி விட்டதை, டாக்டர் ஹனீப் கொடுமையான அனுபவமாக உணர்ந்தாலும் கூட அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே திரும்பிச் செல்ல விரும்புகிறார். ஆந்நாடடின் நீதி அமப்பின் மீது அபரிமிதமான மரியாதை இருந்தால் தவிர இது சாத்தியமாகாது. ஐரோப்பிய சமுதாயம் தன்னை நாகரீக சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு வகையில் நியாயமிருப்பதாகவே அன்று பார்வையாளர்கள் பலரும் கருதினார்கள்.&lt;br /&gt;ஆனால் மதானி விசயத்திலும் அவருடன் விடுதலை செய்யப்பட்ட மற்ற ஏழு பேர் விசயத்திலும் அவர்களது விடுதலை ஆரவாரமாக வரவேற்கப்பட்ட அதே சமயத்தில் இந்த நாட்டின் உளவுத்றையின் கோர முகத்தை கண்டு மக்கள் முகம சுளித்தார்கள். அதற்கு துணைபோகிற நீதிமன்றங்களின் போக்கு விமர்ச்சிக்கப்பட்டது. அதை ஆதரித்தும் அனுசரிததும் சென்ற அரசுகளின் மரியாதை கிழித்துக் குதறப்பட்டது.&lt;br /&gt;இந்த எட்டு பேரைத் தவிர சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு அதிகபட்டசமாக வழங்கப்படத்தகுந்த தண்டணைகாலத்தை ஏற்கெனவே அனுபவித்துவிட்ட சுமார் 84 பேரும் தொடாந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்.&lt;br /&gt;ஒன்பதாண்டு சிறைவசாம் அவர்களை பெரும்பாலும் மௌனிகளாக மாற்றியிருக்கிறது. சிறை சென்ற தொடக்க நாடகளில் நடந்த கொடுமைகள் சமூகத்தால் புறக்கணிக்கபட்ட சூழல் குடும்பத்தினருக்கு நேர்ந்த திடீர்ச் சிரமங்கள் அவர்களை கண்களை மூடி மீண்டும் ஒரு முறை அந்த வலியை நினைத்து துடிக்க வைக்கிறது. ஒரு நான்கு முறையேனும் அழாமல் தொடாந்து 10 நிமிடங்களுக்கு அவாகளிடம் பேச முடியாது. இவர்களில் பெரும்பாலானோர் சிறையை முதன்முறையாகப் பார்த்தவர்கள். தனித்தனியாக அடைக்கப்படுகிற செல்களைக் கொண்ட வால்மேடும், 10 ம்நம்பர் பிளாக்கும் சிறை மருத்துவமனையும் அவர்களை கதிகலங்கச் செய்தள்ளது. குடும்பத்திற்கேற்பட்ட சிரமங்கள் மனைவி குழந்தைகளை பிரிந்த வாழ்தல் சம்பாதித்து தருபவர்கள் யாரும் இன்றி குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் இவைஎல்லாம் இடைவெளி இல்லாமல் அவர்களை அழ வவைத்திருக்கிறது.&lt;br /&gt;ஆரம்பத்தில் அழுது அழுது என் கண்ணீரே வற்றிவிட்டது. கடைசி சில ஆண்டுகளில் நான் அழவேண்டும் என்று நினைத்தால் கூட கண்ணீர் வராது. விடுதலையாகி வெளியே வந்து திறந்த வெளியில் கம்பிகளின் இடையூறு இல்லாமல் என் குடும்பத்தை பார்த்தபோது பலவருடங்களுக்குப்பிறகு ஆனந்தத்தால் என்களில் கண்ணீர் வந்தது என்று ஒருவர் சொன்னார்.&lt;br /&gt;17 வயது பாஷா, அபுதாஹரிர் முதல் 60 வயது தஸ்தகீர் வரையிலும், திருமணமாகாத இளைஞர்கள், திருமணமாகி குழந்தைகள் உள்ளோh,;புதிதாக திருமணம் செய்தோர் என பலதரப்பட்டவர்களும் அவரவர் சூழ்நிலைக்கும் சிரமத்திற்கும் ஏற்ப அனுபவித்தி வேதனை கதைகள் அத்தனையும் அவ்வளவு எளிதில் சொல்லி முடியக் கூடியவை அல்ல.&lt;br /&gt;சுமநிலைச்சமுதயாத்தின் வாசகர் ஒருவர் நான் சிறைக்குள் சென்ற போது என் முதல் குழந்தைக்கு ஒண்ணரைவயது இரண்டாவது குழந்தைக்கு ஆற வயது என்றார்.&lt;br /&gt;சூரிய ஒளியை பார்க்காமல் ரெம்ப நாட்களாக இருந்தோம், ஆரம்பத்தில் ஏட்டு மாதங்கள் நான் வானத்தையே பார்க்க முடிந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு நண்பர் பேசத் தொடங்கினார். அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் நானும் என்னோடிருந்த சிலரும் பேசச் சக்தியற்றவர்களானோம். அடைக்கப்ட்ட சிறைக்குள்ளேயே சிலருக்கு ஒரு வருடம் கழிந்திருக்கிறது. எப்போதாவது சவரம் செய்வதற்கு திறந்துவிடுவதை தவிர மற்ற நேரங்கள் முழவதும் அடைத்தே வைப்பார்களாம். மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று யாராவது சற்று கோபமுற்று கேட்டுவிட்டால் அடிதான். ஆரம்பத்தில் திடீர் திடீர் என்று செல்களைத் திறந்த அடிப்பார்கள். என்ன ஏது என்று காரணம் புரியாது என்று ஒருவர் சொன்னார். ஆறுமாதம் வரைக்கும் திடீர் திடீர் என செல்களை திறந்து அடிப்பது தொடர்ந்திருக்கிறது.&lt;br /&gt;சிறைக் கைதிகளுக்கு சாதாரணமாக தரப்பட வேண்டிய உரிமைகளும் சலுகைகளும் குண்டு வெடிப்புக் கiதிகளுக்கு மறுக்கப் பட்டுள்ளது. 1998 மார்ச் 3 ம்தேதி அனைத்து கைதிகளையும் வார்டர்கள் கூட்டமாக தாக்கியுள்ளனர். ஏதோ அராசங்கமே திட்மிட்டு நாள் குறித்து கொடுத்தது போல தமிழகத்தில் குண்டு வெடிப்பக் கiதிகள் சிறை வைக்கப்பட்டள்ள அனைத்து இடங்களிலும் இது நடந்துள்ளது. உச்ச கட்டமாக வேலூர் ஜெயலில் ஒருவருக்கு அவரது முதுகந்தண்டில் பலமான அடி விழுந்தத்தில் இன்று வரை பெல் அணிந்து நடமாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிரக்கிறார்.&lt;br /&gt;இந்தத் தொல்லைக்ள குறித்து தெரிவிக்கவோ, நிவாரணம் பெறவோ போதிய வசத்திவாய்ப்புக்கள் எதுவும் அப்போது எங்களிடம் இருக்கவில்லை இந்த எங்களின் நிலைக்காக குரல் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று ஒருவர் கூறனார்.&lt;br /&gt;பல மாதங்கள் எங்களில் பலர் குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முதன்முதலாக சென்னiயில் ஒரு பெண் என் மகனை காட்ட மறுக்கிறார்கள் என்று ரிட் மனுத் தாக்கல் செய்த பிறகு அவரை மட்டும் குடும்பத்தினர் சந்திக்க அனுமதித்தார்கள். பிற்காலங்களில் எங்களை குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கும் போது உள்ளே செமையாக அடித்து விட்டு குடும்பத்தாரிடம் எதையும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். நாங்களும் இதை சொன்னால் குடும்பத்தினர் வேதனைப்படுவார்களே என்ற கவலையில் அவர்களிடம் இதை மறைத்து விடுவோம். குடும்பத்தினரைச் சந்திக்கும் போது உருதுவில் பேச் கூடாது என்று ஒவ்வொரு முறையும் எச்சரித்து அனுப்பப்படுவார்களாம்.&lt;br /&gt;குண்டு வைத்தவர்கள் என்ற தாக்கமும் கோபமும் தொடக்கத்தில் மூன்று வருடங்களுக்கு சிறைக்காவலர்கள்,மருத்துவர்கள்,மற்ற கைதிகள் என அனைத்தது தரப்பினரிடமும் இருந்தள்ளது. கைது செய்யப்பட்ட எல்லோரையும் தீவிரவாதி என்ற கண்ணோட்த்திலேயே நடத்தியுள்ளனர். குண்டு வெடிச்சவனா நீ என்று என்று கேட்டுக் கேட்டுத் தொல்லை செய்துள்ளனர். மருத்துவத்திற்கு சென்றால் கையை தொட்டுக் கூடப் பார்க்காமல் திருப்பித்திருப்பி உள்ளே அனுப்பியயுள்ளனர். சில சந்தர்ப்பத்தில் மருத்துவர்களும் சேர்ந்து அடித்துள்ளார்கள். சிலரை நர்ஸுகள் கூட அடித்துள்ளனர்;. எனக்கு பைல்ஸ் இருந்தது என்று சொன்ன ஒருவர் நான் வேதனையோடு சென்றால் பேருக்கு சாதாரணமாக சில மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். சரியான சிகிட்சை தரப்படவில்லை என்;றார். 60 வயதான தஸ்தகீருக்கு சரியான சிகிட்சை தரப்படவில்லை. அவரது வியாதி அதிகரித்தக் கொண்டே சென்றது. எல்லோருமாக சென்று பிரச்சினை செய்த பிறகே வெளியே கிசிட்கை;கு அனுப்பியுள்ளார்கள். அவரது வயிற்றிலிருந்து 18 லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. சிகிட்கை பலனின்றி அவர் இறந்தார். அவரது நோயின் தீவிரத்தன்மையை கவனிக்காமல் வெறும் கேஸ் டிரபிள் என்று சொல்லி அவரை பல முறை திருப்பியனுப்பியுள்ளார்கள். ஒரு கiதிக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அவருக்கான மருத்துவ உதவியும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;ஒருவருக்கு அக்குளில் ஒரு கட்டி வந்தததற்காக சிறைக்கைதிகள் போராடி வெளி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியுள்ளது. ஒருவருக்கு இப்படி எற்பட்டதுதெரிந்தவுடன் அனைத்து குண்டு வெடிப்புக் கiதிகளும் எய்ட்ஸ் பரிசாதனை செய்துள்ளனர். அல்லாஹ்வின் கிருபையால் மற்ற யாருக்கும் அந்தக் கொடுமை நிகழவில்லை.&lt;br /&gt;திருமணமான புதிதில் மனைவியை பிரிந்த இளைஞனின் விரக தாபம் நாச10க்காக சொல்லப்பட்டாலும் அதில் வெளிப்படும் வேதனையின் ஆழம் எந்த அளவகளுக்குள்ளும் அடங்காதது. என் மனைவி என்னை பார்க்க வருவாள் கண்ணால் பார்க்க முடிந்த அவளை விரலால் தொடக் கூட முடியாது. இரண்டு பெருக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்தது.&lt;br /&gt;குடும்பஸ்த்தர் ஒரவரின் பரிதவிப்பு வித்தியாசமானது. வாரத்திற்கு ஒரு மறை வீட்டிலிருந்து வருவார்கள். பழம் பிஸ்கட் கொண்டு வருவார்கள். சம்பாதித்து தரவேண்டிய நான் உளளே இருக்க என் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் இவைகளை நான் சாப்பிடுவதா என்ற எண்ணத்தில் இது போல் ஒன்னும் வாங்கி வர வேண்டாம் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிட்டுப் போ என்று சொல்வேன். மனைவி பராவயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வலக்கட்டாமாக கொடுத்து விடு;ச் செலவாள். மாதத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பையனும் பொன்னும் வருவார்கள் அவர்களை தூக்க முடியாது என்னும் அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் தவிப்பு தளும்பகிறது. மனைவி விடை பெற்றுச் செல்லும் போது முடிந்தால் அடுத்தவாரம் வா. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி அனுப்புவேன் என்று அவர் வெளிப்படையாக கூறுவதை கேட்கையில் ஒரு பெருமூச்சு பிறக்கிறது.&lt;br /&gt;குடும்பத்தினர் வந்து பாhக்கவில்லையே என்று சிலர் மிகவும் வருத்த மடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தயங்கிக் கொண்டு பாhக்க வராமல் இருந்தவர்கள் பிறகு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அலைச்சல், காவல் துறையின் கடுமையான செக்கப் அகியவற்றை தாண்டி காத்திருத்து அவர்களை சந்திக்க வேண்டியிருந்தது.அதில் ஒரு நாள் கழிந்துவிடும். யாராவது வந்து பாருங்கள் என்று கெஞ்ச வேண்டிய சூழலும் சிலருக்கு நேர்ந்திருக்கிறது.&lt;br /&gt;சிறைவாசிகளில் 4 பேருக்கு சிiறியலிரக்கும் போதே திருமணம் நடந்தள்ளது. சில மணிநேர பரேலில் வந்த அவர்கள் திரமணத்தை முடிந்து கொண்டு திரம்பியுள்ளார்கள். சிறையில் கிடைக்கிற உயர் கல்வி கற்கும் வசதியை பயன் படுத்தி 5 பேர் முதகலை பட்டம் பெற்றிரக்கிறார்கள். 15 க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியுள்ளார்கள்.&lt;br /&gt;ஊங்களுக்கு எற்பட்ட சிரமங்கள் என்ன என்று கேட்டால். சொல்ல முடியாத சிரமங்கள் ஏராளம். அல்லாஹ்விடம் தான் அவற்றை சொல்ல முடியும் என்று சொன்ன அவர் அடுத்துச் சொன்ன வார்த்தைகள் தேவைனயின் உச்சம். இஸ்லாத்தில் அனுமதியிருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து விட்டு பேசாமல் இருந்துவிட்டோன். 48 கிலோ குற்றப்பத்hகை கொடுத்தார்கள் அதை நான் தொடக் கூட இல்லை. குற்றம் செய்திருந்தால் தானே தொடனும்?&lt;br /&gt;கைதிகள் சிறை வகை;கப்பட்ட இடத்திலிருந்து சிலரது குடும்பம் இரண்டே கிலோ மீட்டர் தொலைவில் வசித்தாலும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்க முடியாமல் போன சோகம் பலரை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். அவரை இறுதியகப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள்தான் எனக்கு செய்தியே கிடைத்தது. சிறையில் என்னை அடிக்கடி சந்தித்து இன்னும் ஒரு மாத்தததில், இன்னும் மூன்று மாதத்தில் நீ விடுதலையாகிவிடுவாய் என்று எனக்கு ஆறதல் கூறி வந்த என் தாயையும் நான் சமீபத்தில் இழந்தேன். அப்பொது பரேலில் வர அனுமதி கிடைத்தது என்கிற அவர் சிறையிலிருந்து திரும்பியதும் நேரே தன் தாயாருடைய ஜியாரத்திற்கு சென்றுவிட்டே வீட்டிற்று சென்றிரக்கிறார். சுமார் 40 பேர் இந்நீண்ட சிறை வாசத்திற்கு இடையே தங்களத பெற்றோரை இழந்திரக்கிறார்கள். மற்ற சிலர் சகோதரன் தங்கையின் கணவர் போன்ற நெருங்கிய உறவுகளை இழந்திரக்கிறார்கள்.&lt;br /&gt;குடும்ப வறுமை குழந்தைகள் படிப்புக்கு பீஸ் கட்ட இயலாமை சாப்பாடு இல்லாமை வீட்டுக்கு வாடகை தர முடியாமை மருத்துவ செலவுக்கு வழின்மை ஆகிய காரணங்களால் சிலர் விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர்.&lt;br /&gt;சிறைக் கைதி ஒருவருடைய மாமியார் வீட்டு வேலை செய்து தன்னுடைய மகளையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பக்கவாததில் விழுந்து கிட்க்கிற தன்னுடைய கனவனையும் கவனித்திரக்கிறார்.&lt;br /&gt;வறுமையின் உச்சகட்டத்தில் இரண்டு கைதிகiளுடைய மனைவியர் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டனர். ஓருவர் தன் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டார். மற்றொருவருடைய மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆந்த வழக்கு இழுத்துக் கொண்டு போகவே கணவர் வெளியே வந்தவுடன் இப்பொது தம்பதிகள் ஒன்று செர்ந்து விட்டனர். அல்லாஹ் அத்தம்பதிகளுக்கு அருட் செய்யட்டும்.&lt;br /&gt;சுpறையில் கொடுத்த உணவை நான் பசிக்கு சாப்பிட்டேனே தவிர ருசித்து சாப்பிடவில்லை. அவர்கள் கொடுத்த கறி மீன் முட்டை எதையும் நான் தொடவில்லை என்கிறார் ஒருவர்.&lt;br /&gt;குண்டு வெடிப்போடு எந்தத் தொடர்பும் இல்லாத 40 லிருந்து 50 பேர் மிகச்சிறிய குற்றங்களுக்காக கடும் தண்டனை அடைந்துள்ளனர். கலவரம் செய்தவர்கள்மீது கல்லெடுத்து விசயதற்காக சிலர் 9 ஆண்டு சிறை வாசம் அனுபவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;எந்த தகவலும் சொல்லப்படாமல் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள் சிலர் மிகுந்த வேதனையளிக்கிற வகையில் இந்நிண்ட சிறை வாசத்தை அனுபவித்திரக்கிறார்கள். இந்த ஆளுகளெல்லாம் இந்த இயக்கத்தினர் என்று உங்களுக்குத் தெரியாதா? என் அவர்களோடு போனீர்;கள் என்று என்னைப்பார்த்து என் மனைவி கதறினாள். ஏன்னுடைய அப்பாவித்தனம் எனக்கு அப்போது தான் புரிந்தது என்று ஒருவர், எனக்கு தெரிந்தது முஸ்லிம்லீக், தி.மு.க, ஆ.தி.மு.க, ஜனதா ஆகிய கட்சிகள் தான். இந்த இயக்கங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று சொன்னார். அவரை ஊடுறுவிப்பாhத்தால் அந்த வெகுளித்தனத்தனம் உண்மையானதாகவே படுகிறது. காவல் துறை என்னை சாட்சியாக வைத்திருக்கலாம். நான் முஸ்லிம் என்பதற்காக என்னையும் iகிதியாக்கிவிட்டார்கள். என்னை விசாரித்த என்னுடைய விவகாரங்களை நன்கு தெரிந்து கொண்ட விசாரனை அதிகாரிகள் என்னை விடுவித்து விடவதாகச் சொன்னார்கள். ஆனாலும் ஏனோ அப்படிச் செய்யவில்லை என்று சொன்ன அந்த சகோதரரின் இரண்டு மகன்களுடைய படிப்பு எட்டாம் வகுப்போடும் ஆறாம் வகுப்போடும் நின்றுபோனது. புடிப்பில் அதிக ஆர்வமுடைய அவர்கள் தாயைiயும் குடம்பத்தையும் காப்பாற்றுவதற்காக வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது என்று அவர் சொன்னார். அத்தா நீ ஏன் ஜெயிலக்குப் போனாய் ? அதனால் தானே நாங்கள் படிக்க முடியாமல் போயிற்று என்று பையன்கள் கேட்கிறார்கள் என்று சொல்லுகிற போது அவரது கண்கள் மட்டும் குளமாகவில்லை. அங்கிருந்த அனைவருக்கும் தான்.&lt;br /&gt;அத்த வெளியே வந்தால் போடுவதற்கு புதிய சட்டை வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்க வேண்டிய என் மகன் கொடுத்த புதிய சட்டை இது என்று காலைரை இழுத்துக் காட்டிய போது அவர் சிரித்தார். அங்கிருந்தோரால் சிரிக்க முடியவில்லை.&lt;br /&gt;யாராவது உதவி செய்தார்களா என்று கேட்டேன். நான் ஜெயிலில் இருந்த போது இரண்டு முறை 500 ரூபாய் வீட்டிற்கு செலவுக்கு வழங்கினார்கள். என் மகளின் படிப்புச் செலவை கோயை சிறுபான்மை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. வெளியே வந்த பிறகு கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் 5000 ரூபாய் கொடுத்து என்றார். குடும்ப கௌரவம் கருதி அதை கூட வாங்க வேண்டாம் என்று தான் நான் நினைத்தேன்.மனைவயிடம் கேட்டேன் சரி வாங்குங்கள் என்றார். தயக்கத்துடன் வந்து வாங்கிக் கொண்டேன் என்று அவர் தொடர்ந்து கூறினார். த.மு.மு.க இயக்கத்தை சார்ந்தவர்கள் கன ஜோராக வந்து பேசினார்கள். எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்றார்.&lt;br /&gt;இவரைப்போலவே விடுதலையாகி வெளியே வந்த பலரும் த.மு.மு.க தங்களை வைத்து அரசியல் நடத்திவிட்டு தங்களைது பெற்றோரை அழுகிறவர்களாக படம்பிடித்து அதை காட்டி வசூல் செய்து விட்டு சும்மாவிட்டு விட்டது என்று குறிப்பிடுவதாக செய்திகள் தொடர்நது வருகின்றன. எங்களை வைத்து லாபமடைந்து கொண்டனர். ஆனால் எங்களை கவனிககவில்லை என்று பலரும் வெளிப்படைகவே பேசினார்கள்.&lt;br /&gt;இதற்கிடையே கைதிகள் விடுதலை ஆவதற்கு ஓரிரு தினற்களுக்கு முன்னதாக கோவையின் பிரதான பளளிவாசல்களில் அனைத்து குண்டு வெடிப்பு சிறைவாசிகள் சார்பாகவும் ஒரு பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. தங்களை வைத்து ஆதாயம் தேடி கட்சியை வளர்த்துக் கொண்ட த.மு.மு.க தங்களது விடுதலையை பயன்படுத்தி லாபம் அடைய முயறச்சதித்திருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிரந்தது. அதனால்தானோ எனனவோ ஆயிரம் ரூபாய் நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கு 10 ஆயிரம் நோhட்டீஸ்கள் வால்போஸ்டர்கள் அச்சடித்து விளம்பரம் செய்து விடு;ம் த.மு.மு.க.விடுதலையான கைதிகள் விசயத்தில் வாய்முடி மௌனம் காக்கிறது. அதன் தலைவர் பேசுவதாக திட்மிட்டிருந்த பத்ரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.&lt;br /&gt;ஆனாலும் சிலர் எந்த இயக்கம் குறித்தும், தனிப்பட்டவர்கள் குறித்தும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அனைத்து தரப்பினரின் துஆ வும் அனுசரனையும் இப்பொது தங்களுக்கும் இன்னும் உள்ளே இருக்கிற மற்ற சகோதரர்களுக்கும் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதை உணாந்தேன்.&lt;br /&gt;கைதானவர்களில் ஓரிருவருக்குத்தான் உறவுகக்hரர்கள் உடனிருந்திரக்கிறார்கள். மற்றவர்கள் மொழி மாநிலம் கடந்து கவலைகளைப் பரிமாறிக் கொள்வதில் சகோதரர்களாகியிருக்கிறார்கள். அதனால் தான் தாங்கள் விடுதiலாயிகிவிட்டாலும் கூட இன்னும் சிறையிலிருக்கிற நண்பர்களை நினைத்து உருகுகிறார்கள்.&lt;br /&gt;வெளியே வந்த விட்டதில் மகிழ்தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்ற பதில் சிலரிடமிருந்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. உள்ளே இருக்கிற நண்பர்களை நினைத்துக் கொள்கிறார்கள் போலும். தொண்டை கரகத்து குரல் கம்மிக் கொள்கிறது. சிரமப்பட்டு தங்களது துக்கத்தை அடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் முடியவில்லை. திடகாத்திரமாக அந்த இளைஞனின் அந்த நேரத்து அவஸ்த்தையை கண்ணால் பார்ப்பதற்கு சங்கடப்பட்டு அனைவரும் பார்வைய தாழத்திக் கொண்டீடாம். கைதிகளில் 42 பெர் மீது பிரிவு எண் 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒரவர் மீது 23 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கத் தருவோம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களுடன் சிறையில் வாடிய அவர்களுக்காக அந்த சகோதரன் அழவது இதயத்தை பிழிகிற நெகிழச்சியாக இருந்தது.&lt;br /&gt;கைதிகளுக்குள்Nயும் அவ்வப்போது கைகலைப்பு, முனாபிக், முர்ரதத் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் நடந்தது உண்டு. சிறை வாசம் என்பத அப்படித்தான் கணவன் மனைவியாக இரந்தால் கூட மூன்று நாட்களில் அவர்களுக்குள் சண்டை வந்து விடும் என்று கூறிய ஒரு நண்பர் எப்படி இரப்பினும் மிக கடுமையாக குற்றம் சுமத்தப்படடிருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னும் வழக்கை இழுத்திருக்க முடியும் என்றாலும் சாதாரண குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதற்கு வசதியாக தம்தரப்பு வாதத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள் என்ற ஒரு செய்தியை சொன்னார். அரசாங்கமோ இயக்கங்களோ விரும்பியதாலோ அல்ல கைதிகளின் ஒத்துழைப்பினாலேயே சிறை வாசம் இந்த அளவில் முடிந்தது என்று அவர் கூறினாலும் மற்ற ஒரவர் சிலர் ஏற்படுத்திய தாமதத்தினால்தான் இவ்வளவு காலம் தாங்கள் சிறையிருக்க வேணடியிரந்தது இல்லை என்றால் சற்று முன்னதாக வந்திரக்கலாம் என்றும் இந்தக் கட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தது தங்களின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார்.&lt;br /&gt;முந்தைய ஏழவருடங்களில் சமுதாயத்தின் உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும அவர்கள் ஆரம்ப கட்த்தில் வழக்குச் செலவுக்காக சிறையில் கிடைத்த உணவுகளை விற்று பணம் சேர்த்ததாக சொல்கிறார்கள்.&lt;br /&gt;ஜெயலலதா ஆட்சியின் போது அடி நின்று விட்டது ஆனாலும் தொடாந்து நெரக்கடி இரந்து வந்தது என்கிறார்கள். சோதனைகைள் அடிக்கடி நடக்கும் குர்ஆனைத்தவிர உள்ள இஸ்லாமிய புத்தகங்கள் துணிமணிகளை எடுத்துச் சென்று விடுவார்கள்.&lt;br /&gt;ஊள்ளே என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கௌ;விக்கு பலருடைய பதில் நேரத்திற்கு தொழுதோம் இஸ்லாமைத் தெரிந்து கொண்டோம் என்பது தான். கைதிகளில் பெரும்பாலோர் குர்ஆன் ஓதக் கற்றிருக்கிறார்கள். சிலர் குர்;ஆன் மனனம் செய்திருக்கிறார்கள்;. ஓருசிலர் 5 ஜுஸ்வு வரை மனனம் செய்துள்ளார்கள். வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக கோவை சிiறியிலிருக்கும் ஒரு கைதி முழவதமாக குர்ஆனை மனனம் செய்தள்ளார். படிப்பதற்கு தினமனி தினமலர் தினத்தந்தி ஆகிய நாளிதழ்கள் வழங்கப்படடுள்ளன. ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. பொதிகை சானல் அதில் தெரியுமாம். சிலர் தான் அதைப் பார்க்க செல்வார்களாம் பலர் செல்ல மாட்டார்களாம். கிரிக்கெட் வாலிபால் கேரம் போர்டு ஆகிய விளையாட்டுக்களிலும் சில சமயம் ஈடுபடுவார்களாம்.&lt;br /&gt;சமநிலைச்சமுதயத்தை விரும்பிப் படிப்பார்களாம். அதன் நடுநிலைப்போக்கு அவர்களுக்கு பிடித்திருந்திரக்கிறது. ஒரிருவருக்கு மட்டும் தான் அந்தப் பத்ரிகை வந்து கொண்டிருந்தது அது தொடாந்த படிக்கப்படும் ஆகையால் எங்களுக்கு அது கிடைக்காது என்று ஒருவர் சொன்னார். மதனியயுடைய பேட்டி வெளிவந்த இதழை சிறை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. நீதிபதியிடத்தில் முறையிட்டு வக்கீல்கள் மூலம் அந்தப்பக்கங்களை மட்டும் கிழித்துப் பெற்றோம் என்று சொல்கிற அவர்கள் இலங்கையிலிரந்து வெளிவரகிற அல்ஹஸனாத் மீள் பார்வை ஆகிய பதரிகைகளை வெகுவாக பாராட்டுகிறார்கள்.&lt;br /&gt;தொழுகைக்கான ஜமாத்துகள் ஆங்காங்கே நடந்திருக்கிறது. ஜும்ஆ தொழுகை ஜமாத்தாக வால்மேட்டிலும் 10 ம்நம்பர் பிளாக்கிலுமாக இரு இடங்களில் நடந்திருக்கிறது. வால்மேட்டிற்கும் மருத்துவமனைக்கும் அதிக தூரம் இருந்ததால் மதனீ யுடன் சிலர் மருத்துவ மனையிலேயே தொழுது கொள்வார்களாம். லுஹர்(மதியம்), அஸர் (முன்மாலை) ஆகிய இரண்டு நேரத் தொழுகைகளை வெளியில் தொழும் அவர்கள் பஜர் (அதிகாலை) மஃரிப் (பின்மாலை) இஷா (இரவு) தொழுகைகைள செல்லுக்கள் இருந்தபடியே ஜமாத்தாக தொழுவார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. தனித்தினயாக அடைக்கப்டடிருந்த செல்லுக்குள்ளே எப்படி ஜமாத்தாக தொழுவீர்கள் என்று கேட்டால். முதல் செல்லில் இருப்பவர் இமாமத் செய்வார். ஆவருடைய சப்தத்தை கேட்க முடிந்தவர்கள் அவரைப் பின்பற்றித் தொழுவார்கள் என்று பதில் கிடைத்தது. பயணத் தொழுகை அச்ச நேரத் தொழுகைகளை தெரிந்த எங்களுக்கு இந்த சிறைச்சாலைத் தொழுகை அச்சரியத்தை அளித்தது. ரமலான் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறிய பலரும் சிறை நிர்வாகம் அதற்கு தகுந்த எற்பாடுகளைச் செய்து தரும் என்று கூறினர். பெருநாள் தொழுiயை ஒன்றாக மகிழ்ச்சியாக தொழுவொம் எனறு கூறிய அவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த பெருநாளுக்குள் நாம் விடுதiலாயகி குடும்பத்தோடு மகிழ்சியாக இருப்போம் என்ற எதிர்பார்ப்பு தான் எங்களை அந்தப் பெருநாட்களில் மகிழ்சிசயாக வைத்திருந்தது என்று கூறும் போது சிறைச்சாலைப் பெருநாள் என்ற ஒரு புதிய வபை; பெருநாளின் துக்கம் கலந்த மகிழ்சியை அவர்களுடைய முகங்களில் பார்க்க முடிந்தது. அப்பொது இடை மறித்த ஒரு நண்பர் சொன்னார். இவர்களுடைய ஒவ்வொரு நாளும் மே இப்படித்தான் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும் பொது இன்று விடுதiலாகிவிடுவொம் என்ற ஆசையிலும் இஷா தொழுகிற பொது நாளை விடுதலையாகி விடுவொம் என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்திரக்கிறது என்று சொன்னார். அது தான் உண்மை. ஓன்பது கடுமையான ஆண்டுகளை இந்த தருணத்தை எதிர்பாhத்துத்தான் அவர்கள் கடத்தியிருக்கிறார்கள்.&lt;br /&gt;முதானி மூன்று முறை பயான் செய்திரக்கிறார். பிறகு செய்ய வில்லை. அவர் பலருக்கும் உதவி இருக்கிறார். அவருடன் பேசுவது ஆறதல் அளிக்கும் என்பதால் பலரும் அவருடன் பேசச் செல்வார்களாம். ஒரு முறை அஅவரை சந்திக்க சென்ற ஒருவர் அவரிடம் உங்க வயசு என்ன எனறு கேட்டிருக்கிறார். எவ்வளவு இருக்கும் நிங்களே சொல்லுங்களேன் என்று அவர் திருப்பிச் கேட்டராம். 50 என்று பதிலளித்த நண்பரிடம் அது உங்க வயசு என் வயதைச் சொல்லங்கள் என்று கேட்டாரம். நாங்கள் எல்லோரும் அந்த 40 வயதுக்காரரைச் சுற்றி வாய்விட்டுச் சிரித்தோம் என்று ஒரு இனிய நினைவை அசை போhட்டார் ஒரு நண்பர்.&lt;br /&gt;கடைசி ஒரு வருடமாக சிறையில் கைதிகள் அனைவரிடமும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளப்பட்டதாக கூறும் அவர்கள் தற்போதைய ஜெயிலர் சிறைத்துறை டி ஐ ஜி ஆகியோரை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகின்றனர்.&lt;br /&gt;இது வரை ஜாமீனில் விடுதiலாகிp வெளியே வந்தள்ள 91 நபர்கள் அனைவருக்கும் அவாகள் மீத சுமத்தப்பட்டள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அதற்கான அதிகபட்ச தண்டனை காலத்தைவிட அதிகமாக அவர்கள் சிiறியல் இருந்து விட்டார்கள். ஆகவே இனி அவர்கள் முறறிலமாக அவர்கள் மீதான வழக்கு முடிக்கப்படுவதற்குத்தான் காததிரக்கிறார்கள். தங்களது வழக்கை கூட சட்ட உதவி மூலமே நடத்தியுள்ள காரணத்தால் தங்களது ஏழ்மை நிலை கருதி அபாராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என்று அவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டள்ளார்கள். அவர்களில் 98 சதவீதம் பேர் சதவீதம் பேர் இனி ஒரு நல்ல வாழ்கையை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள். அதற்கு அரசு உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள்.&lt;br /&gt;மிக முக்கியமாக நாம் எதிர்பார்த்தது போலவே குண்டுவெடிப்பு குறித்து அவர்களில் பெரும்பாலேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தங்களிடையே அது குறித்து ஒரு விவாதம் நடந்தததாக கூறுகிற அவர்கள் அப்பாவிகள் பலியானது குறித்து கடும் வேதனை தங்களுக்கும் எற்பட்டது என்று கூறுகிறார்கள். இதன்வழியாக சமதாயத்தின் சுய மரியாதை காப்பாற்றப்பட்டது என்ற தப்பான எண்ணம் மக்களில் சிலருக்கு இருந்தது போல அவர்களில் சிலருக்கும் இருந்ததாக கூறினர். சிறைபட்டு விடுதலையானவர்களின் குடும்பத்தினரின் மனோ நிலை கதம்பமாக இருக்கிறது. தங்களைச் சார்ந்தவர் நீண்ட சிறைவசத்திலிருந்து விடுதலை பெற்று விட்டதில் மகிழ்ச்சி ஒரு புரம் இருந்தாலும் எதிர்காலத்தை பற்றிய அச்சம், தேவைகளின் பயமுறுத்தல், 23 வயதாகிவிட்ட மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்;: எப்படிச் செய்வது என்ற மலைப்பு சிலரது பெற்றோர்களுக்கு எற்பட்டுள்ள பெரிய மருத்துவச் செலவு ஆகியவை அந்த மகிழ்ச்சியில் தடைக்கற்களை எற்படத்தியுள்ளது. நான்; இத்தனை நாள் துபாயில சம்பாதித்து விட்டு வந்தவனா என்ன? முழு மகிழ்ச்சி என்று சொல்வதற்கு என்ற ஒருவர் கேட்கிறார். அவர்களில் சிலருடைய மனதோரத்தில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட வலி இருந்து கொண்டிருக்கிறது. என் மனைவி குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொள்வதை கூட நிறுத்திக் கொண்டு விட்டாள் என்று ஒருவர் சொன்னார். தந்தையின் அரவனைப்புக் கிடைக்காமல் வளர்ந்த குழந்தைகளின் சோகம் எத்தகையது என்பதை சிறையிலிருந்து விடுதலையான மறநாள் திருவனந்தபுரத்தில் அப்துல் நாஸர் மதானி உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டு அவரது இளைய மகன் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்த நெஞசை உலுக்கும் காட்சியை கண்ணால் கண்டவர்களுக்கு புதிதாக விளக்கத் தேவையிருக்காது. 91 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட குற்றம் சாட்டப்பட்ட 166 நபர்களில் 158 குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்ப்ட்டிருப்பது சிறைக்கiதிகiளிடையே கேபத்தை எற்படுத்தியிருக்கிறது. 250 பேரை பலி கொண்ட பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் 128 பேர் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டாலும் நீதிபதி கோடே 28 நபர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறார். கோவை தனி நிதிமன்றம் இந்தப் பெரிய வழக்கில் 8 பேரை மட்டுமே விடுவித்து விட்டு 158 நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிரப்பதாக கூறுவதும் சாமான்ய குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருப்பதும் சிறைவாசிகளிடையேயும் பொதப்பார்வையாளர்கள் பலரிடையேயும் ஒரு வகை அதிருப்தியையும் கோபத்தையும் எற்படுத்தியிரக்கிறது. வழக்கு அவ்வாறு பின்னப்பட்டுள்ளதே காரணம் என்று சட்டம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;இந்த வழக்கில் சிறைக் கைதிகள் அவர்களது குடும்பம் எனபதற்கு அடுத்தபடியாக கோவை நகர மக்கள் என்ன நினை;க்கிறர்ள் என்பதும் ஒரு பிரதான அம்சமே. காரணம் சிறைக் கொடுமைக்கு நிகராக இல்லாவிட்டாலும் தவறே செய்யாமல் தண்டனை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அனுபவித்த வெதனைகள், இடையீறுகள் இழப்க்கள் அவமானங்கள் அதிகம்.பல்லாண்டகளாக வாழந்த மஹல்லாவை காலிசெய்து விட்டுச் சென்றவர்கள்.வீடு வியாபாத்தை விட்டு சொந்த ஊரக்கு திரும்பிச் சென்றவர்கள். ஏழைகாளகிவிட்ட பணக்காரர்கள் தொழில் இழந்தவர்கள், வியாபாரத்தில் நொடிந்தவர்கள் என தொடரும் அந்தக் கஸ்டங்களும் பெரிதுதான். அதனாலேயே கூட என்னவோ சிறைவாசிகள் விசயத்தில் உலகம் முழவதிலும் வெளிப்பட்ட ஆதங்கத்தையும் ஆர்வத்தையும் கோவை மக்களிடையே பார்க்க முடியவில்லை. தங்களது குடும்பத்தில் அல்லது தங்களுக்கு வேண்டப்படட்டவர்களில் அல்லது தங்களது மஹல்லாவில் சிறை சென்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைத்து அவர்கள் அனுபவிக்கும் வேதனை கண்டு உள்ளுக்குள் கலங்கிய போதும் அதற்கான ஆறுதலையே அதரவையோ அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் கோவை நகர முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டவ்களுக்கான தார்மீக கொள்கைப்பூர்வ அதரவை தெரிவிக்க வில்லை எனலாம்;. ஆயினும் விடுதலையாகி வந்தவர்களை தாயுள்ளத்தோடு ஆதரிக்கத் தயாரானார்கள். கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் விரைவாக செயல்பட்டு அவர்களுக்கு உடனடிகத் தேவைப்படகிற உதவிகளச் செய்திருக்கிறது. விடுதலையானவர்களி டமிருந்து சமுதாயம் என்ன எதிர்க்கிறது என்ற கேள்விக்கு ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ஜப்பார் கூறிய வாhத்தைகள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கவை. கடந்த காலத்தில் நடந்தது போன்ற தவறுகள் இனி ஒருபோரும் நடக்க சிறை மீண்டவர்கள் அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;அவருடைய அந்தக்கருத்து சரியானது தான் என்பதை சிறை மீண்டோர் பலரும் வலியுறுத்திச் சொன்ன போது அதில் nளிப்பட்ட நல்ல மனமாற்றம் இந்த நகரத்திற்கு நல்ல காலம் பிறந்து விட்டது என இனி ஒரு குடுகுடுப்பை அடிக்கத் தேவை இல்லை என்பதை சொல்லாமல்சொல்லிற்று.&lt;br /&gt;கடைசியாக சமநிலைச்சமதாயத்தின் தீவிர வாசகராக இருந்து விடுதலை பெற்ற சகோதரர் சொன்ன ஒரு வாhத்தை இந்தக கட்டுரைய நிறைவு செய்யப் பொருத்தமானது. கலிமா சொன்ன எவரும் இனி சிறைக்கூடம் செல்லக் கூடாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-2604813812043259192?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/2604813812043259192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=2604813812043259192' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/2604813812043259192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/2604813812043259192'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2008/03/blog-post.html' title='மெல்லத் திறந்தது கதவு.'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-5936801724988316576</id><published>2008-01-12T19:48:00.000+05:30</published><updated>2008-01-12T19:49:26.394+05:30</updated><title type='text'>பாகிஸ்தானின் லால் மஸ்ஜித் விவகாரம்;  தீக்குள் விரலை வைத்தால்?</title><content type='html'>&lt;div align="justify"&gt;பெயர்ப் பொருத்தம் என்பது சில நேரங்களில்; எதிர்பாராத வகையில் அமைந்து விடும். பாகிஸ்தானியப் பள்ளிவாசல் லால் மஸ்ஜிது விசயத்திலும் அப்படித்தான் நடந்தவிட்டது. லால் மஸ்ஜித் என்றால் சிவப்புப் பள்ளிவாசல் என்று பொருள். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலள்ள லால் மஸ்ஜித் வளாகம், அதன் வெளிப்புற செந்நிறச் சுவர்களாலும் செந்நிரமான உள் அலங்காரத்தினாலும் சிவப்புப் பள்ளி என்று இது வரை அழைக்கப்பட்டு வந்தது. இப்போது அங்கு பயின்ற மாணவ மாணவிகளின்  ரத்தத்தால் சிவப்பாகி தன் பெயருக்கு பொருத்தமான இன்னொரு காரணத்தையும் பெற்றுவிட்டது. கடந்த ஒரு மாத காலமாக என்ன நடக்கிறது பாகிஸ்தானில் ? என்று உலகம் விசனப்பட்டு பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு சினிமா கிளைமாக்ஸ் போல காட்சிகள் அரங்கேறி முடிந்திருக்கின்றன. முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட மதரஸாவிலிருந்து அக்கல்லூரின் முதன்மை பொறுப்பாளரான அப்துல் அஜீஸ் காஜியை தப்பிக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோற்றுப் போய் புர்க்கா அணிந்த நிலையில அவர் ஒரு காவலரிடம்; பிடிபட்டார். அதே போல தன்னுடைய இரத்தம் பாகிஸ்தானில் இஸ்லாமிய புரட்சிக்கான முதல் டிடியாக அமையும் அமையும் என்று பேட்டியளித்த ஒர மணிநேரத்தில் அந்நிறுவனத்தின் இரண்டாவது பொறுப்பாளரான அப்துல் ரஷீத் காஸி மதரஸாவின் ஒரு தாள்வறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.  ஒரு புறம் மூங்கில் கம்புகள், இன்னொரு புறம் கலானிஷ்கோவ் ரக இயந்திரத் துப்பாக்கிகள் என ஆயுதந்தரிப்பதில் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்திருந்த அக்கல்லூரியின் மாணவர்கள்,மாணவிகள் சுமார் 80 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் பலரை வெளிநாட்டக்காரர்கள் என்று பாகிஸ்தானிய அரசு செல்கிறது.  பாதுகாப்பு விரர்கள் பலரும் கூட பலியாகியிரக்கின்றனர். எல்லாவற்றையும் விட அதிகம் பலியானது பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரபின் இமேஜும் மதரஸா என்ற ஒரு கண்ணியமான கல்வி அமைப்பின் இமேஜும் தான்.பாகிஸ்தான் என்ற ஒரு நாடு அமைந்த பிறகு உலக இஸ்லாமிய சமதாயத்திற்கு ஒரு சின்ன நன்மையவாவது ஏற்பட்டதோ இல்லை. நிறைய தீமைகள் அவப் பெயர்கள் ஏற்பட்டதுண்டு. அந்த கணக்கில் சமீpபத்தில் சேர்ந்துள்ள முயற்சிதான் லால் மஸ்ஜித் விவகாரம்.பார்வையாளர்கள் பலருக்கும் ஏகப்பட்ட கௌ;விகள் தோன்றின. ஒரு இஸ்லாமிய நாட்டில் பள்ளிவாசலின் மீது தாக்குதலா? மதரஸா மாணவர்கள் மீது தப்பாக்கி சூடா? ஆயிரக்கணக்கான பெண்களும் படிக்கிற ஒரு கல்லூரியின் மீது ராணுவ முற்றுகையா? என்ற கேள்விகள் ஒரு புறம் என்றால் கல்லூரியல் படிக்கிற மாணவர்களின் கைகளில் துப்பாக்கியா? புர்கா அணிந்த பெண்களின் மெல்லிய கைகiளில் உருண்டு திரண்ட நீளமான முங்கில் தடிகள் எதற்கு? ஒர நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள ஒரு பெரிய பிரபலமான கல்லூரிக்குள் ஒரு தனி ராணுவமா? அது என்ன ரானுவப்ப பயிற்சிக் கல்லூரியா? என்ற கேள்விகள் மறுபுறம் எழந்தன. இந்தக்கேள்விக்கான பதிலை பெறுவதற்குமன் பாகிஸ்தனில் நிலவும் குழப்பமான சூழு;நிலையை புரிந்த கொள்வது அவசியம். ஆந்தச் சூழ்நிலையை புரிந்த கொண்டால் இதைவிட ஆச்சரியப்படத்தகுந்த பல அதிர்ச்சிகரமான விசயங்கள் அங்கு நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பாகிஸ்தான் அரசியல் ரீதயாக அரு ஒன்றுபட்ட தேசமாக இருந்தாலும் அங்குள்ள நான்கு மாநிலங்களில் சில இடங்களில் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவெண்டும்.குறிப்பாக எல்லைப்புறத்தில் இருக்கிற பழங்குடியினத்தவர் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தின் அதிகாரம் என்பது கிழித்துவீசப்பட்ட காகித குப்பைகளுக்கு சமமானது. பாகிஸ்தானை அட்சி செய்த அரசியல் தலைவர்கள் எவரும் அந்த தேசத்தை முழுமையாக ஒர சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட தேசமாக ஆக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ராணுவ மேலாதிக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. அடுத்து, நாட்டை சுரண்டு வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இதுவெல்லாம் கைவைக்க முடியாத, கை வைத்தால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டியது வரும் என்று அவர்கள் கருதினார்கள்.  மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசுகளை விட அதிக காலம் அங்கு ஆட்சியில் இருந்த ராணுவத் தளபதிகளும் இது விசயத்தில் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை.  அவர்களோ தங்களுக்கு இஸ்லாமியத் தலைவர் என்ற ஒரு இமேஜை உருவாக்கி கொள்வதற்காக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் என்ற கோஷத்தை முன்வைத்துக் கொண்டனர். அதன் மூலம் தங்களுக்கு எதரான கிளர்ச்சிகள் உருவாககாதவாறு பார்த்துக் கொண்டார்ள். காஷ்மீர் பிரச்சினையும் அவர்களுக்கு கை கொடுத்தது. இஸ்லாமிய அரசு காஷ்மீர் மீட்பு என்ற இரண்டு பிரச்சினைகளை மட்டுமே பிரதான பிரச்சினைகளாக முன்வைத்து பாகிஸ்தானின் அனைத்து அடு;சியாளர்களும் செயல்பட்டதால் ஒரு சட்டத்தின் அடிப்படையிலான தேசத்தை வலுவாக கட்டமைக்க அவர்கள் தவறிவிட்டனர். இதனால் இஸ்லாமியச் சாயம் பூசிக்கொண்ட யார் வேண்டுமானாலும் சட்டததை கையில் எடுத்துக் கொள்கிற நிகழ்வு சாதாரணமாக அங்கு நிலவுகிறது. பாகிஸ்தானில் நிலவும் ஆயுதக்கலாச்சாரமும் அங்குள்ள முக்கியப் பிரச்சினையாகும். என்னிடம் பேசிய பலரும், ஆரபுக்கல்லுரி மாணவர்கள் எப்படி ஆயுதம் வைத்திரக்கலாம்? என்ற கேள்வியை கேட்டனர். பாகிஸ்தானின் சூழ்நிலைகளை தெரிந்த எவருக்கும் அது ஆச்சரியத்தை தராது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை துபாயின் கராமா பகுதியிலிருந்து சூக் தகப் பகுதிக்கு பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்தேன். அப்போது என் அருகே ஒரு பாகிஸ்தானி வந்த உட்கார்ந்தார். முன்பின் அறிமகமில்லாத எனக்கு அவர் சப்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி வந்த உட்கார்ந்ததில் ஒரு தோழமை உணர்வு எற்பட்டது. ஆதற்குப்பிறகு பாகிஸ்தானிய நிலவரங்களைப் பற்றி நான் அவரிடம் கேட்டேன். சப்தமாகவும் பெருமையாககுவும் அவர் பேசிக் கொண்டிருந்த விசயங்களைக் கேட்டு நான் பலமுறை அதிhhச்சியடைய நேர்ந்தது. என் வீட்டிலும் துப்பாக்கி இருக்கிறது எனறு அவர் சொன்னது அதில் ஒன்று. என்னுடைய எட்டு வயது மகனுக்கு துப்பாக்கி சுடத்தெரியும், என் மனைவிக்கும் நான் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன் என்று சொன்ன அவர், ஏதவது பிரச்சினை என்றால் டுமீல் டுமில் தான் என கைகளைக் காட்டி சிரித்தபோது எனக்கு சிரிப்ப்தா அழவதா என்று தெரியவில்லை. பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பல ஆயுதச் சந்தைகள் உண்டு என்பது ஏற்கெனவே உலகுக்கு தெரிந்த ரகசியம்தான். எனவே பாகிஸ்தானைப் பொறுத்தவரை துப்பாக்கி என்பது சாதாரணமானது. மாணவர்கள் துப்பாக்கி வதை;திருக்கிறார்களே ராணுவத்தைப் பார்த்தச் சுடுகிறார்களே என்றெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு அதில் ஒன்று மில்லை. பாகிஸ்தானை இப்படியொரு ஆயதச் சந்தைகளின் குப்பையாக கூடையாக  மாற்றிய பெருமை அமெரிக்காவையே சாரும்.   பனிப்போர் காலத்தில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக ஆயதக்கலாச்சாரத்தை பாகிஸ்தானுக்குள் உருவாக்கிய கர்த்தா அமெரிக்காதான். அது தான் இப்போதுள்ள பாகிஸ்தானின் முக்கியப் பிரச்சினையே.முந்தைய பாகிஸ்தானிய அரசுகள் அமெரிக்காவின் கட்டளைப்படி அப்பகானிஸ்தானில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக பாகிஸ்தானிய சிவிலியன்களைப் பயன்படத்தினார்கள். அவர்களுக்கு அனைத்துவிதமான ஆயதங்களையும் வழங்கினார்கள். முஜாதீன் புனிதப் போராளிகள் என்று சொல்லி அழகு பார்த்தார்கள்.  அரசாங்கத்தில் மிகுந்த செவ்வாக்குச் செலுத்த அனுமதித் தார்கள். மதரஸாக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆயதப்பயிறசியும் ராணுவப் பயற்சியும் வழங்கினார். அப்பாவிப் பொதுமக்கள் இஸ்லாத்திற்காக ஆயுதந்தரித்hர்கள். அமெரிக்கா அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தது. பனிப்போர் முடிந்த பிறகு  ஏற்பட்ட சூழ்நிலையில் அமெரிகாக உள்ளிட்ட மேற்குலகின் பார்வை இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்தேசங்களின் வளத்தை கொள்ளைணத்து அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் திரும்யியபோது பாகிஸ்தானிய அரசில் வாதிகளும் அரசாங்கமும் அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டார்கள். மக்களால் அந்த மாற்றத்திற்கு திரும்ப முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தின் பேரால் திரட்டப்பட்டவர்கள். அதனால் அவர்கள் இஸ்லாத்தை காப்பதாக் கூறிக் கொண்டு  அமெரிக்கவிற்கு எதிராக திரும்பினார்கள். ரஷ்யாவை நோக்கியிருந்த துப்பாக்கி களை அமெரிக்காவை நோக்கியும் உள்ளூரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக இருந்த அரசாங்கத்தை நோக்கியும் திருப்பினார்கள். அமெரிக்க முதலாளிகளின் விருப்பம் மாறிய போது பாகிஸ்தானிய அரசாங்கம் தனது செல்லப்பிளளைகளையே பயங்கரவாதிகாள பார்க்க வேண்டிய நிர்பநதத்திற்கு உள்ளானது. செல்லப்பிள்ளைகளும் அதீத துணிச்சலுற்று ஒரு அரசாங்கத்தையே சுயமாக நடத்திக் கொள்கிற வழக்கத்திற்கு மாறினார்கள். இஸ்லாமின் அடிப்படை அம்சமான கட்டுப்பாடு என்பது கேலிக் கூத்தாக மாறியது. அது தான் லால் மஸ்ஜிதின் வரலாறு. லால் மஸ்ஜித் 1965 ல் கட்டப்பட்டது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆப் பாரா பகுதியில் அதிபார் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. அந்தப்பகுதியல்தான் முக்கிய அரசு அலவலகங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக நம்நாட்டு காவல் துறையும் மீடியாக்களும் அதிகம் பயன்படுத்துகிற அல்லது பயப்படுத்துகிற ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகக்கட்டிடத்திற்கு அருகில் லால் மஸ்ஜித் அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஊழுpயர்கள் பலரும் கூட அங்குதான் தொழுகைக்கு செல்வார்கள் என செய்யத் சுஹைபு ஹஸன் பி.பி.சி க்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.லால் மஸ்ஜிதை ஒட்டி மதலில்  ஜாமிஆ ஹப்ஸா என்கிற பெண்கள் கல்லூரியும் , ஓரிரு தொலைவில் ஜாமீஆ பரீதிய்யா என்ற ஆண்களுக்கான கல்லூரியும் இருக்கிறது. லால் மஸ்ஜித் கட்டப்பட்ட நாள் தொடாங்கி இதுவரை அரசாங்கத்தின் அதிகாரபீடத்திலிருப்பவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தது. பிரதமர்கள் ராணுவத்தளபதிகள் அதிபர்கள் ஆகியோர் இம்மஸ்ஜிதுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர்.  தேவ்பந்த கொள்கையின் அடிப்படையில் பல்லாண்டுகளாக மாhக்க அடிப்படை கல்லியை போதிக்கும் இம்மையத்தில்  பல்லாயிரக் கணக்காண ஆண்களும் பெண்களும்  தங்கி கல்வி படித்து வநதனர்.  இக்கல்விநிறுவனத்தை உருவாக்கியவர் மௌலானா முஹம்மது அப்துல்லாஹ் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவாளராக திகழ்ந்துள்ளார். அவருக்கும்  பாகிஸ்தானின் நீணட நாள் ஆட்சியாளர் ஜியாவுல் ஹக் அவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஆப்கானில் நடைபெற்ற சோவியத்துக்கு எதிரான யுதத்த்தின் போது லால் மஸ்ஜித் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1998 ம்ஆண்டு ஒரு துப்பாக்கிச் சூட்டில் அப்துல்லாஹ் கொல்லப்பட்ட போது  அவரது மகன் அப்துல் அஜீஸ் காஜி அப்துல் ரஷீத் காஜி ஆகியோர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிகளிடையே குறிப்பாக இஸ்லாமிய ஆட்சி முறை வேண்டும் என்று கோருகிற முஸ்லிம்களிடையே அந்நிறுவனத்திற்கு அபரிமதமான செல்வாக்கு இருந்துள்ளது. பாகிஸ்தானிலள்ள செல்வாக்குமிக்க பழங்குடி இனத்தவர்களின் ஆதரவு அமோகமாக இருந்துள்ளது. நிறைய மாணவர்கள் பழங்குடிகளஜ இனத்தவர்களின் பரதேசத்தை சார்ந்தவர்கள். அரசாங்கத்தையும் அரசாங்கத்திலுள்ளளோரையும் எசச்ரிக்கும் அதன் செல்வாக்கு எந்த நீண்டு செல்லக் கூடிய என்பதற்கு, சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பாகிஸ்தானின் சுற்றுலாத்துறை பெண் அமைச்சர் நிலோபர் பக்தியார் ராஜினா செய்தது ஒரு உதாரணம். பிரான்ஸ் நாட்டில் பாராசூட்டில் குதித்து அந்தரத்தில் மிதக்கிற விளையாட்டை கற்றுக் கொண்ட அவர், பயற்சியின் நிறைவில் அவருடைய ஆண் பயிற்சியாளரை கட்டடிப்பிடித்து நன்றி தெரிவித்த காட்சி புகை;கப் படமாக உலகெங்கும் பிரசுரமானது. ஆந்த அவமானச் செயலுக்கு நாடுமுழுவதிலிலும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அந்த சமயததில் லால் மஸ்ஜித் வெளியிட்ட கருத்து தான் நிலோபர் பகதியார் அமைச்சர் பதவியை ராஜினா செய்வதற்கு காரணமாக இருந்தது.  இதை வைத்து தநைகரிலுள்ள இவ்வளாகத்தின் செல்வாக்கை அளவிட்டுக் கொள்ளலாம் என பல பத்ரிகையாளர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். 2001 செப்டம்பர் 11 தாககுதலுக்கு பிறகு பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான யுதத்த்தில் பங்கேற்ற போது லால் மஸ்ஜித் அதை வன்மையாக கண்டித்தது. தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அதிபர் முஷர்ரப் பங்கேற்பதை லால் மஸஜித் நிhவாகம் கடுமையாக எதிர்த்தது. அதன்பிறகு லால் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையேயான தகராறுகள் தொடர்கதையாயின.2005 ஜுலையில் லண்டனில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய ஷெஹ்ஸாத் தன்வீரக்கு லால் மஸ்ஜிதுடன் தொடர்பு பற்றி ஆராய இருப்பதாகா கூறி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் லால் மஸ்ஜிpல் சோதனை நடத்த முயற்சித்தனர். சேதனைக்கு உடன்பட மதரஸா மறுத்துவிட்டது. மீறி உள்ளே நுழைய முயன்ற காவலர்களை உள்ளே நுழையவிடாமல் ஜமிஆ ஹப்ஸாவின் மாணவிகள் தடுத்து விட்டனர்.இந்த ஆண்டு மார்ச் 27 ம் தேதி மஸ்ஜித் அருகிலுள்ள ஒரு வீட்டில் தவறு நடப்பதாக குற்றம் சாட்டிய மாணவர்னள் அவ்வீட்டை சோதனையிட்டு அதிலிருந்தவர்களை வெளியேற்றியுள்ளனர். மார்ச் 28 ம் தேதி இதபற்றி விசாரிக்க வந்த மூன்று காவலர்களை பிடித்து வைத்துள்ளனர். லால் மஸ்ஜித் பகுதியில் சி.டி. வீடியோ கடை நடத்துவோர் அந்த தொழிலை விட்டு வேறு தொழில்களை கவனிக்குமாறு மார்ச் 9 ம் தேதி லால் மஸ்ஜிதின் சார்பாக அறிவுறத்தப்பட்டுள்ளது. ஏப்ல் 6 தேதி லால் மஸ்ஜிதின் சார்பாக ஷரீஆ கோர்ட் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஷரீஆ கோhட்டு தான் அமைச்சர் நிலோபர் பக்தியார் விசயயத்தில் தீர்ப்பு வெளியட்டது. தொடர்நது மே மாதத்தில்  சில போலீஸர் கடதத்ப்பட்டு வந்தததாக பாதுகாப்புத்துறை தகவல்கள் லால் மஸ்ஜிதின் மீத குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் ஜெனரல் பர்வேஷ் முஷர்ரபை கொலை செய்வதற்கு பல முறை முயற்சி செய்தத்தாக குற்றம் சாட்டப்படகிற ஜெய்ஷே மஹம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸாருடன் லால் மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட தொடர்பு பாகிஸ்தானிய அரசுக்கு பொதும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 2006 ஆண்டின் முதல் பகுதியிலும் 2007 லிலும் மாணவர்கள்; அரசு அதிகாரிகளுக்கு பலவகையிலம் சவாலாக இருந்துள்ளனர்.ஜுன் 23 ம் தேதி ஒரு அக்குபஞ்சர் கிளினிக்கில் நுழைந்த மாணவர்கள் அங்கிருந்த 6 சீனப் பெண்கள் ஒரு சீன ஆண் உட்பட  9 நபர்களை கடத்தியுள்ளனர். இது சீனாவுடன் தொடர்நது நல்லறவை பேணிவரும்  பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பெரும் மன உளைச்சலை தந்துது. இவ்வாறு சட்ட ஒழுங்கு பிரச்சினையில் லால் மஸ்ஜித் ஈடுப்டுவது அரசு நிர்வாகத்திற்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும் அந்நிறுவனத்தின் மீது மக்களுக்குள்ள மரியாதை மற்றும் பல மட்டத்திலும் ஊடுறுவி இருக்கிற அதனுடைய முந்iதைய செல்வாக்கு  பற்றிய அச்சத்தின் காரணமாக நிர்வாகம் பெரிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எற்படக்கூடிய அதிகமான உயிரிழப்புக்களை கருதியும் அரசு அமைதி காத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாமாபாத் டெவலப்மெனட் கார்ப்பரேஷன் தலைநகரிலுள்ள 80 பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் சட்டத்திற்கு புறம்பாக பொது இடத்தில்  கட்டப்பட்டிருப்பதாக கூறி அவற்றை இடிக்கப் போவதாக அறிவித்தது. ஜாமிஆ ஹப்ஸாவும் அந்தப் படடியலில் இருந்தது.  ஆதிலிரந்த விவகாரம் பற்றிக் கொண்டது. பள்ளிவாசல்களை இடிக்கும்  தனது திட்டப்படி அரசு ஜாமிஆ ஹப்ஸாவை ஒட்டியிருக்கும் ஒரு பொது நுஸலகத்தை இடிக்கத் தொடங்கியது. லால் மஸ்ஜித் நிர்வாகம் அதை தடுக்க மேற்கொண்ட முயற்சி அலாதியானது. ஆங்கு ஜமிஆ ஹப்ஸ் மகளிர் கல்ல} ரியின் மாணவிகளை லால் மஸ்ஜித் அனுப்பிவைத்தது. ரஷ்யத் தயாரிப்பான கலானிஷ்கொவ் ரக இயந்திரத் துப்பாக்கிகளுடன் அங்கு சென்ற அம்மாணவிகள் அதை தடுத்து நிறு;த்தினர்.இடிக்க வந்தவர்களை விரட்டினர். தொடர்ந்து அரசுப் படைகள் வரமுடியாதவாறு தடுப்புக்களை ஏற்படுத்தினர்.  தொடர்ந்து அந்நூலகத்தை கைப்பற்றி அதில் தங்கி கொண்டு இரவு பகலாக முறை வைத்துக் கொண்டு காவல் காத்ததனர். ஆல்லாஹ்வின் மாhக்த்திற்காக உயிரை அர்ப்பணிக்கத் தயராக இருப்பதாக சபதமேற்றனர். இடிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களையும் கட்டித்தருவதோடு ஷரீஅத் சட்டததை அமுல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.  இந்த நிலையில் கடும் நடவடிக்கை எடுத்தால் அது பெரிய மக்கள் பிரச்சினையாகி விடும் என்று கரதிய அரசு அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தது. ஆந்தப் பள்ளிவாசலின் இடிக்கபட்ட சுற்றுச் சுவரை கட்டித்தருவதாக வாக்களித்தது. பள்ளிவாசலின் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது இதுபோல அன்றைய தினம் இடிக்கபட்ட  மற்ற ஆறு பள்ளிவாசல்களும் இவ்வாறு கட்டப்பட வேண்டும் என லால் மஸ்ஜஜத் நிர்வாகம்  அரசாங்கத்தை கேட்டது. அரசாங்கத்தின் பதில் தாமதமானபோது மாணவர்கள் மீண்டும் நூலகவளாகத்தை கைப்பற்றினார்கள். அந்தப் பகுதியில் மற்ற சமூக நடவடிக்கையில் இறங்கினார்கள். வசசகர்கள் கவனத்தில் வைக்க வேண்டு;ம். இவை அனைத்தும் எங்கோ ஒரு தொலை தூர எல்லைப் பகுதியில் நடக்கவில்லை. தலைநகர் இஸ்லாமாபாத்தின் மையப்பகுதியல் நடந்து. அதிபர் முஷர்ரப் எச்சரிக்கை விடுத்தார். முசியவில்லை. இறுதியில பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டு துன்பம் தந்த கொண்nருக்கிற இந்த விசயத்திற்கு அரசாங்கம் அதன் பாணியில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. லால் மஸ்ஜித் வளாகத்திற்குள் வெளிநாட்டுச் சக்திகள் இருந்து கொண்டு பாகிஸதானுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், மஸ்ஜித் வளாகத்திற்குள் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும்   செய்திகளை வெளியிட்டு கல்லூhவளாகத்தை முழமையாக சோதனையிடுவதற்கு வசதாக அனைவரம் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.அதை முற்றிலுமாக நிராகரித்த லால் மஸ்ஜித் நிர்வாகம் , கல்லூரிக்குள் சுரங்கம் எதுவும் இல்லை என்றும் தங்களில் எவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் எவரும் வளாகத்திற்குள் இல்லை என்றும் அமெரிக்காவின் அடாவடித்தனத்தையும் அதை ஆதரிக்கும் அரசாங்கத்தின் போக்கையுமே தாங்கள் எதிர்ப்பதாக கூறியது. ஜுலை மூன்றாம் தேதி அரசின் சாதாரண முற்றுகை நடவடிக்கை தொடங்கியது. மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் துணை ராணுவப்படையை நோக்கி வீசினர். லூல் மஸ்ஜிதுக்கு அரகிலிருந்த ஒர அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அரசின் முற்றுகை இறுகத் தொடங்கியது. சரணடைபவர்களுக்கு மன்னிப்பும் தகுந்த பாதுகாப்பும் தரப்படும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவப்புச் செய்யப்பட்டது. சமாh 1200 பேர் சரணடைந்தனர். அந்தச் சந்தர்பத்தில் தான் புர்கா அணிந்து வெளியேற முயன்ற அப்தல் அஜீஸ் காஜி கைது  செய்யப்பட்டார்.  உள்ளெ இன்னும் பலர் இருந்தனர். அரசு மறுபுரம் அப்துல் ரஷீத்  காஜியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஜுலை ஏழாம் தேதி பிரதமர் சஜ்ஜாத் ஹுசைன் தலைமையில், மௌலானா முப்தீ ரபீ உஸ்மானி, மௌலானா சலீமுல்லா கான், மெலானா ஹனீப் ஜலக்தரீ உள்ளிட்ட  13 பேர் கொண்ட ஒரு குழ அமைக்கப்பட்டது. மொபைல் போன் மற்றும் லவுட்ஸ்பீக்கர் வழியாக இப்பேச்சுவாhத்தை நடந்தது. ஏனெனில் காஸி அப்துர் ரஷீத்வெளியே வர சம்மதிக்கவில்லை. உலமாக்கள் உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லை. காஸி அப்துர் ரஷீத் கேட்டுக் கொண்டதற்கிணஙக ஒரு மொபைல் போனை அரசு அலுவலர் ஒருவர் கேட்டிற்கு வெளியயே நின்று பொண்டு கொடுக்க உள்ளேயிருந்து உடல்முழவதையும் போர்த்தியிருந்த ஒருவர் அதை பெற்றுச் சென்றார். ஆந்த மொபைல் போன் வழியாக இக்குழு அப்துல் ரஷீத் காஜி ஆயதங்களை களைந்து விட்டு சரணடந்தால் அவரை வீட்டுக்காவலில் வைப்பதாகவும், அவர் சட்டத்தின் தீர்பபை எதிர் கொள்ளட்டும் என்று கூறியது. இதற்கு பஞ்சாபில் உள்ள தன்னுடைய சொந்த ஊரில் வீட்டுக்காவலில் இருக்க ரஷீத் காஜி சம்மத்தித்தார். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டம் அந்தக் கடைசி நிமிடத்தில் ஒரு மாற்றம் நிகழந்தது. தன்னை வீட்டக் காவலில் வைக்க ஒத்துக் கொண்ட அப்துல் ரஷீத் காஜி தனடனுடன் உள்ள வெளிநாட்டுக்காரர்களை பத்திரமான அனுப்பிவைக்க வெண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆதை அரசு எற்றுக் கொள்ளவில்லை. தொடர்நது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஜுலை 9 ம் தேதி மாலை ஏழமணிக்குத் தொடங்கி 11 மணிநேரங்களுக் தொடாந்த பேச்சு வாhத்தi தோல்வியில் முடிந்தது. கடைசி கட்ட பேச்சு வாhத்தைகள் செல்பொனில் நடந்து கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அப்துல் ரஷீத் காஜி தனது செல்போனை ஆப் செய்து விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கினறன. இறுதியாக 15 நிமடங்கள் வாய்பளிக்பட்டது. அதன் பிறகு ஜுலை 10 ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் லால் மஸ்ஜிதை நோக்கி நகருமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆபரேஷன் சைலனஸ் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை தொடங்கியது. இன்று போல் நான் என்றும் கவலையுற்றதில்லை என்று கூறியபடி தன்னுடய காருக்குள் எறிய பிரதமர் சஜ்ஜாத் ஹுசைன்  தொடந்து சொன்னார். நாங்கள் இதை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுகிறோம். ஆவர் அப்படிச் சொன்ன சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களது இரத்தம் இந்த பூமியில் இஸ்லாமியப் புரட்சியை தொடங்கி வைக்கப் போகிறது என்று சொன்ன நாற்பத்தி ஆறே வயதான அப்துல் ரஷீத் காஜி மதரஸா வளாகத்தில் நடந்த  தப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். பலியானோர்களின் மொத்த எண்ணிக்கை என்பது தொன்னூறு என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் அந்த எண்ணிக்கை உறுதியற்றது என்று சொல்கிற அனைத்து செய்தியதளாகளும் பல நூறு பேர் பலியாகி இருக்கக் கூடும் என்கின்றனர். லால் மஸ்ஜித் வளாகம் முற்றிலுமாக சேதப்படுத்தப் பட்டவிட்டது. அதன் இடிபாட்களுக்கிடையே கல்வி கற்க வந்து காணாமல் தங்களது மகன்களின் அல்லது மகள்களின் அடையாளம் ஏதாவது கிடைக்கிறதா என்று பெற்றோர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொது அவர்கள் அழ வேண்டுமல்லவா ! அழவில்லை. பலர் அப்தல் ரஷீத் காஜிக்காக பிராhத்தனை செய்கிறார். சிலர் தங்களது பிள்ளை இறந்த பொயிரந்தாலும் மகிழ்தான் கிடைத்தாலும் மகிழ்சிதான் என்கிறார்கள். இது தான் இந்நிகழச்சியின் ஆண்டி கிளைமாக்ஸாகிவிட்டது. ஹபிப் ரஹ்மான் பி.பி.சிக.கு அளித்த பேட்டியில் நான் பரீதிய்யா திறந்தவுடன் அதில் மீண்டும் சேருவேன். அதுவரை அப்தல் ரஷீத் காஜிக்காக குர்ஆன் ஓதிக்கொண்டெ யிருப்பேன் என்று கூறுகிறார். மகளை காணாமல் தேடும்  ஆஸியா பீவியின் மகள் ஆறு வயதிலிருந்து ஜாமிஆ ஹப்ஸாவில் படித்தவர் லால் மஸ்ஜிதின் மீது ராணுவத்தாக்குதல் நடந்த அதே ஜுலை 10 ம் தேதி அவருக்கு பட்டம் வழங்கப்படவதாக இருந்தது. இப்போது அந்த மகளைத்தான் அவர் தேடுகிறார். ஆந்தக் காட்சியை பார்ப்பதற்கும் அவரது மகளின் கதையை கேட்பதற்கும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் அந்தத்தாயின் வார்த்தகைளில் கவலையில்லை. உறுதி தொனிக்கிறது. அவர் சொல்கிறார் அகர் மேரீ பேட்டீ ஜிந்தா நஹீ பஜீ தோ பீ மேரீ குஸ் நசீபீ ஹோகீ, கே ஓ அல்லாஹ்கீ ராஹ்மே ஷஹீத் ஹோகயீ ஹே!.அவர் அகர் ஓ பஜகயீதோபீ குஸ் நஸீபீ ஹோகீ கே ஓ காஸி பன்கர் லவ்டீஹே! (பி.பி.சி. இணைய தளம் உருது)இந்த வார்த்தைகளை மொழி பெயாப்பதற்கு கூட நடுக்கம் ஏற்படுகிறது. ஏனது மகள் இறந்த விட்டாளும் மகிழ்ச்pதான் ஏனெனில் அவள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறாள். அவள் திரும்பி வந்தாலும் மகிழச்சிதான் ஏனெனில் அவள் காஸி போராளியாக திரும்பி வருகிறாள்.  ஜெனரல் பர்வேஸ் முஷர்ரப் மிகுந்த தயக்கத்திற்குப்பிறகு மேற் கொண்ட இந்த நடவடிக்கை அவரது சுய விருப்பத்தின் பால் பட்டதா? அல்லது அவரது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக செய்ய்பட்டதா?  அல்லது நாட்டு மக்களை ஒரு நாகரீக வழிக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்ற சீர்திருத்த உந்ததுலினால் இது ஏற்பட்டதா என்பதை இப்பொதைக்கு தீர்மாணிக்க இயலாது. நம்முடைய நிலை இதில் எப்பக்கம்? என்பதை யோசிக்கவே மிக சிக்கலாக இருக்கிறது. ஆனால் மிக ஆழமாக யோசிக்க வேண்டிய விசயம் இது. சமுதாயத்தின் இன்றைய மதிப்பீடுகளை மறு ஆயவ்வுக்கு உட்படுத்தி இஸ்லாத்தின் எதார்த்தங்களை மிக அழுத்தமாக போதிக்கத் தகுந்த ஒரு வசீகரமான முஜத்தித் (மறுமலர்ச்சி தலைவர்) வந்தாக வேண்டிய அவசியத்தேவையை இது உணர்த்தகிறது. ஆப்போதூதான் இஸ்லாம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படி ஒரு தேசம் இருப்பது முஸ்லிம் உலகத்துக்கு நன்மையாக அமையுமா?  என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.தற்போதைக்கு நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கிற போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. முஷர்ரப் கடைசியில் துணிந்து நெருப்பொடு விளையாடியிக்கிறார். எரியப் போவது முஷர்ரபா? அல்லது பாகிஸ்தானா என்று  பொறுத்திருந்து தான் பாhக்க வேண்டும்.    அது வரை முட்டாள்தனமான அழிவிலிருந்தும் மூhக்த்தனமான அழிவிலிருந்து அல்லாஹ் பாகிஸ்தானை காப்பாற்றட்டும் என நாம் பிரார்த்ததக் கொண்டிருப்போம்.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-5936801724988316576?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/5936801724988316576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=5936801724988316576' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/5936801724988316576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/5936801724988316576'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2008/01/blog-post_12.html' title='பாகிஸ்தானின் லால் மஸ்ஜித் விவகாரம்;  தீக்குள் விரலை வைத்தால்?'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-2060643424385536924</id><published>2008-01-12T19:46:00.000+05:30</published><updated>2008-01-12T19:48:13.762+05:30</updated><title type='text'>பாவத்தின் சம்பளம் -</title><content type='html'>11 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குகிற அதிகாரத்தில் இருக்கிற போப்பரசர் போப் 16 பெனடிக்ட்;, தானே இப்படி மன்னிப்பு கேட்கிற நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எதிர்பாhத்திருப்பாரா என்பது தெரியவிலலை. ஏதிர்பாhத்தது போல் அவர் மன்னிப்பு கேட்டவிட்டார்தான். ஆனால்  டீப்லீ சாரி  என்று அவர் சொன்னவுடன்  பிரச்சினையின் ஆழம் தூர்ந்து போய்விட்டதாக அவரோ மற்றவர்களோ நினைத்தால் அது தவறானது.&lt;br /&gt;அரசியல் லாப நோக்கங்களுக்காக திட்மிட்டு உருவாக்கபட்ட வாடிகன் தேசத்தின் அதிபரர் என்ற பெரும் பொருப்பும் வகிக்கிற போப் 16 ம் பெனடிக்ட் கடந்த 12.09.2006  செவ்வாய்கிழமை ஜெர்மனியிலுள்ள  ரெகனஸ்பர்க் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை உலகில் வியப்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியிரக்கிறது. முஸ்லிம் உலகத்தில் கொந்தளிப்பை உண்ட பண்ணியது. அதன் விளைவாக 16 ம் தேதி அவர் மன்னிப்பு கேட்டார்.   &lt;br /&gt;போப்பின் மன்னிப்பு கோரல் உள்ளார்த்தமானது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சி என.ஏன.21.9.06) வழங்கினாலும் கூட  புஷ் தலைமையேற்று நடத்துகிற றயச ழn ளைடயஅ  முகாமில் போப்பும் கைகோhத்துக் கொண்டு விட்டாரோ என்ற தோற்றம் தான் உலக மக்களின் உள்ளத்தில் மேலோங்கியது. இதனால் சமீப காலங்களாக போhப்புகள் அணிந்து வந்த சமாதான தூதர்கள்; என்ற முகமூடி கிழிந்துவிட்டது. வலிந்து புனையப்பட்ட புனிதர்கள் என்ற இமேஜும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. போப் இரண்டாம் ஜான்பாலும் அவரக்கு முன்னிருந்த ஓரிவர் உருவக்கி வைத்திருந்த ஒரு மாயக்கோட்டையை 16 ம் பெனடிக்கடடின் பேச்சு தகர்த்துவிட்டது.  போப்புகளின் நிஜ முகம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;போப் 16 ம் பெனடிக்ட் அவருடயை சொந்த நாடான ஜெர்மனிக்கு பயணம்  செய்தபோது  அங்குள்ள ரெகனஸ்பெர்க் பல்கலைகழகத்தில்  ஒரு உரை நிகழ்த்தினார். நம்பிக்கைகும் பகுத்தறிவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது அவரது உரையின் தலைப்பு. போப் தனது உரையில் கிருத்துவ சமயம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை கொண்ட சமயம் என்று கூறினார்.&lt;br /&gt;ஒரு விஞ்ஞான உண்மையை கண்டறிந்து சொன்னதற்காக கலீலீயோவுக்கு திருச்சபை மரணதண்டனை விதித்த செய்தி அவரது நினைவுக்கு வரவிலலையோ என்னவோ அது பற்றியும் அது போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முட்டாள்தனமான காரணங்களைச் சொல்லி  திருச்சபை எதிர்ப்புத் தரிவித்த விசயங்கள் குறித்தும் அவர் வாய் திறக்கவிலலை.&lt;br /&gt;அது  போலவே இஸ்லாத்தை பற்றியும் அவா பேசாமல் இருந்திருக்கலாம்.  விதி அவரை விட வில்லை. முஸ்லிம்களின் இன்றைய பலவீனமான சூழ்நிலையை அவர் கண்முன்னே காட்டி அவரை வம்பில் இழுத்து விட்டது. கிருத்துவத்தை போல இஸ்லாம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று முதல் குற்றாச்சாடடை முன் வைத்தார். தொடர்ந்து சாத்தான் அந்த சன்னியாசியின் நாவை பிடித்துக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் சென்றான். 14 ம் நூற்றாண்டின் நாசகரா சகத்தியாக இருந்த ஒரு பைசாந்திய அரசனின் கூற்றை மேற்கோளாக காட்டினார். இது அவருக்குள்ளிருந்த சாத்தான் செய்த வேலையே வேறில்லை.&lt;br /&gt;வாடிகனிலுள்ள மற்ற பாதிரிகள் கூட இந்த மேற்கோள் காட்டிய இடத்தில் போப் தனது பேச்சின் கருத்தோட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக குறிப்பிடுகிறார்கள். ராய்டட்ர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாடிகனிலுள்ள சர்ச்சின் அதிகார பீடத்திலுந்கும் ஒருவா இது அரிதாக ஏற்பட்டு விட்ட சருகுதல் என்று கூறியிருக்கிறார். தனது வார்ததைகளில் அதிக பட்ச எச்சரிகை;கயை கையாள வேண்டியவர் தனது பேச்சினால் என்ன விளைவு ஏற்படும் என்று எண்ணிப்பார்க்காகததது எவரையுமு; ஆச்சரியப்படுத்தக் கூடியது என்றும் அவர் கூறியுள்ள்ளர்.&lt;br /&gt;நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்  என்று கூறும் வாடிகனின் ஒரு அரச தந்திரி ஒருவர் போப் தானே வலியப் போய் ஒரு பள்ளத்தில் விழுந்திரக்கிறார் என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;ஜெர்மனியில் இதற்கு முன்னர் கிருத்துவ தத்துவ இயல் பேராசியராக பணியாற்றி போப் தன்னுடைய கடந்த காலத்தையும்  நிகழ் காலத்ததையுமு; கலந்ததில் தவறு செய்து விட்டார் என்றும் கூட சர்ச் வட்டாரம் கருத்து தெரிவித்ததாக ராய்ட்டர் நிறுவனத்தின் செய்திக குறிப்பு தெரிவி;கிறது.&lt;br /&gt;ஜேர்மனியில் படித்த் அவர் இன்னும் ஒரு போப்பாக தன்னை உணரத் தொடங்கவில்லை.அது தான் பிரச்சினை  என்று சொன்னார் அமெரிகாகாவின் ஜர்ஜ்டவுன் யுனிவர்சியிடியின் போதகர் தாமஸ் ஜே. ரீஸ் 'ஐ வாiமெ hளை pசழடிடநஅ ளை வாயவ hந'ள ய புநசஅயn யஉயனநஅiஉ றாழ hயளn'வ சநயடணைநன லநவ hந'ள ய pழிநஇ' ளயனை சுநஎ. வுhழஅயள து. சுநநளந ழக வாந றுழழனளவழஉம வுhநழடழபiஉயட ஊநவெநச யவ புநழசபநவழறn ருniஎநசளவைல.&lt;br /&gt;போப் மேற்கோளுக்கு எடுத்துக் கொண்ட 14 ம் நூற்றாண்டை பைசாந்திய மன்னர் இரண்டாம் இமானுவேல் ஒரு போர் வெறியன். தொடர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமான வார்தததைகளில் தூசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவன். 1394 க்கும் 1402 க்கும் இடைப்பட்ட காலத்தில் கான்ஸ்டாண்டி நோபிளோடு அவன் யுத்தம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  ஓரு பாரசிக பயணியுடன் அவன் செய்த வாதங்களை அவனது புத்தகத்தில் ஏழாவது உரையாடல் என்ற தலைப்பில் அவன் எழுதியிருக்கிறாhன். அவன் ஒரு புத்தகம் எழுதினான் என்ற ஒNரு காரணத்திற்காக போப் 16 ம் பெனடிக் தனது உரையில் அவனை ஒரு அறிஞர் என்று குறிப்பட்டார்.&lt;br /&gt;நிகழ்காலத்தின் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் போப் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு மிக்க பண்டைய பைசாந்திய அரசனோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனம் இனத்தோடு சேர்ந்திரக்கிறது . அவ்வளவே!&lt;br /&gt;வாடிகனுகும் முஸ்லிம் உலகுக்கும் நல்லிணக்கம் நிலவி வரகிற இன்றைய சூழ்நிலையில் முன்னர் எப்போதோ ஒரு யுத்த காலத்தில் ஒரு அரசன் பேசிய பேச்iசை மேற்கோளாக எடுத்துக் கூறயயது தகுமா என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கிறார்கள் அவர்கள் தற்போதையோ போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலத்திதை பற்றி அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். &lt;br /&gt;போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலம் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்டதாகவும் முஸ்லிம்களின் மீது ஆத்திரம் கொண்டதகவும் இருந்திருக்கிறது. அவர் ஜொமனியில் இருக்கும் போது ஜெர்மனியிலுள்ள முஸ்லிம் இளைஞர்களை காட்டுமராண்டிகள் என வர்ணித்திருக்கிறார். வாடிகனில் கர்டினலாக இருக்கும் போதும் அவரிடம் முஸ்லிம் எதிர்புணர்வு மேலோங்கியிருந்து. அதன் விளைவாக துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதை அவர் எதிர்த்தாh. 1996 அவர் எழுதிய ஒரு கட்டுரையில் நவீன நாகரீக வாழ்கை முறை யை சுவீகரித்துக் கொள்வதில் இஸ்லாம் சிரமப்படுவதாக  குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;இவரக்கு முன்னர் நீண்ட காலம் போப்பாக இருந்த இரண்டாம் ஜான் பால் சமய நல்லுறவுக்கு அரும்பாடு பட்டார்.மற்ற மதங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்தார். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போரை  எதிர்த்தார். அப்பாவி மக்களை கொல்லவதற்கு பதிலாக பேச்சு வார்த்தையின் வழிகளை கையாளுமாறு அவர் புஷ்ஷை கேட்டுக் கொண்டார்.அவர் ஒரு முறை சிரியாவுக்கு பயணம் சென்ற போது அங்குள்ள பள்ளிவாசலுக்குள் சென்று பார்வையிட்டார். முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு முதன் முதலாக நுழைந்த நுழைந்த போப் என்ற பெயர் பெற்ற போப் ஜான் பால் முஸ்லிம் உலகத்துடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த  சர்வதேச சமயங்களுக்கிடையேயான உரையாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆந்த உரரையாடலுக்கு ஏற்பாடு செய்ததது குறித்து அப்தேயை வாடிகன் கர்டினலாக இருந்த  போப் பெனடிக்ட அதிருப்தி கொண்டிருந்தார் என்பதும் இப்பொது கசிய வரகிற செய்திகளாகும்.&lt;br /&gt;புல வகைகiளிம் 14 ம் நூற்றாண்டின் பைசாந்திய மன்னனின் மனோபாவத்தோடு 16 ம் பெனடிக்டின் மனோபாவமும் ஒத்தப்போனது. ஆதன் விளைவாகவே ஆந்தப் பதினான்காம் நூற்றாண்டின் பழைழய வார்த்தைகளைத்தானட் போப் இப்போது தூசு தட்டடி எடுத்து வந்து தேவையற்ற ஒரு அலர்ஜியை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;இம்மானுவேலின் வார்ததைகளi எடுத்துக் கூறுவதற்கு மன்பாக நான் மேற்கோள் காட்டுகிறேன் நான் மேற்கோள்தான் காட்டுகிறேன் என்று இரண்டு தடவை கூறினாhர். ஆந்த தடுமாற்றமே இந்தச் செய்தி எத்தகைய பாதிப்பை உண்டு பணணக்கூடியது என்று அவர் தெரிந்திரக்கிறார் என்பதை புலப்படத்தி விடுகிறது. வுhட்டிகன் அதிகாரி சொல்வது போல இது ரேர் சிலிப் அரிதான சருகுதல் அல்ல. இது முஸ்லிம்களை அரிக்கும் சருகுதல் என்று அவரக்கு தெரிந்தே இருக்கிறது. போப்பின் தங்க் சிலிப்பாகவில்லை. அவரது தின்கிங்கே சிலிப்பாகியிரக்கிறது. அவரது உள்மனதின் வேட்கையை தீர்துக் கொள்ள இம்மானுவேலின் வார்த்தைகள் அவருக்கு துணை செய்திருக்கின்றன.&lt;br /&gt;இம்மானுவேல் பாரசிகப் பயணியுடன் வாதம் செய்த போது முஹம்மது இந்த உலகிற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. வன்முறையைiயும் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை களiயுமே அவர் உலகிற்கு விட்டுச் சென்றார் அவரது உத்தரவுகள் வாட்களின் வழியாக பரப்பபட்டன என்று கூறியுள்ளான்.&lt;br /&gt;இந்த மேற்கோளை உள்ளடக்கிய போப்பின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு உலகின் அனைத்து பாகததிலும் எழுந்தது. இது பொறுப்பற்ற பேச்சு என்பது அனைத்து மக்களின் முதன்மையான விமர்சனமாக இருந்தது. போப்பை கண்டிக்கத் தயங்கிய கிருத்துவ தலைவர்கள் கூட இது தேவையற்ற மேற்கோள் என்று கூறினர். அமெரிக்காவின் பல இடங்களிலும் கிருத்துவர்கள் முஸ்லிம்களை சந்தித்து போப்பின் பேச்சு தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று தெரிவித்துள்ளனர். இது விசயமாக தனது கருததை தெரிவிப்பதற்காக  லாஸ் ஏஞ்சல்ஸின் ஆர்ச் பிஷப் ரோஜர் மோனி  தென் கலிபோர்னியாவில் உள்ள 70 பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்று பர்பரா பர்குஸன் அரப் நியூஸில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;முஸ்லிம்கள் விரைந்து போப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். ஜெர்மனிய இஸ்லரிய மையத்தின் தலைவர் அய்மன் மாஜிக் மிகக் கடுமையாக போப்பை சாடினார். ரத்தக்கறை படிந்த வரலாறுகளை கொண்ட கிருத்துவ தேவாயத்திற்கு மற்ற சமயங்களை நோக்கி விரல் நீட்டி பேசுகிற தகுதியில்லை என்று அவர் சொன்னார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு  நீடித்த மிகக் கொடுரமான சிலுவைப் போர்களுக்கு தலைமை தாங்கியதும் அதை தூண்விட்டதும் போப்கள் அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;உலகிலள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் உடனடியாக போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சமயத்தில் ஜித்தாவில் கூடியிருந்த சுவூதி இராக் ஜோர்டான் பஹ்ரைன் சிரியா எகிப்து குவைத் ஆகிய ஏழு அரபு நாடுகள் மற்றும் இரான் துரக்கி உள்ளிட்ட நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டமும் போப்பின் அறிக்கையை கண்டித்து அவர் தெளிவான மன்னிப்பை கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. லெபனானில் உள்ள சன்னி இஸ்லாமிய நீதிமன்றத்தின் தலைவர், துரக்கியின் சமய விவாகரங்களுக்குhன பொறுப்பதிகாரி அகியோர் அருவருக்கத்தக் வெறுப்பூட்டுகிற வார்ததைகளi இஸ்லாமின் மீது பிரயோகிதத்தறகாக போப் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினர். கத்தார் பல்கலைகழகத்தின் இஸ்லாமிய தத்தத்தவத் துறை தலைவர் மஹம்மது இயாஸ் போப் கிள்ப்பிய பிரச்சினையில் திறந்த விவாததத்திற்கு தான் தயாராக இருப்பதாக அறைகூவல் விடுத்தார்.&lt;br /&gt;பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கை இது விசயத்தில் விரைவாகவும் தெளிவாகவும் இருந்தது. பாராளுமன்றம் போப்பின பேச்சை கண்டித்தது. அதன் வெளியுறவுத்துறை பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம் மிகச் சிறப்பாக போப்புக்கு பதில் கொடுத்தார். போப்பின் இந்தப் பெச்சு இஸ்லாமை பற்றி அடிப்படை அறிவு இல்லாமையை காட்டுகிறது என்று கூறிய அவர், அறியவில் கலைகள் அனைத்துககும் முஸ்லிம்கள்தான் அடித்தளமிட்டனர். உலகத்தை அறியமைiயும் இருளும் சூழ்ந்திருந்த போது முஸ்லிம்கள் தான் வெளிச்ச விளக்ககுகளை ஏற்றினர் என்று அவர் கூறுpனார். இஸ்லாம் இயற்கையான அறிவார்த்தமான மனிதாபிமானம் மிகுந்த மார்க்கம். அது தன்னுடய தொண்டர்களை இப்பண்புகளின் அடிப்படையில் வாழும்படி தான் பணிக்கிறது எனவே திடீரென முளைக்கிற எவரும் இஸ்லாம் பகுத்தறிவை ஏற்கவில்லை என்று கூறுவது கண்டிக்ககத்தக்கது என்றும் அவர் கூறினார். இத்தாலியிலுள்ள பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தின் முதல்வர் இஜாஸ் அஹ்மது கிரேக்க தத்தவங்களை முதன் முதலில் மொழி பெயாத்தவர்கள் அதை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள தான் என்பதை நினைவு கூர்ந்தார்.&lt;br /&gt;இஸ்லாம் பற்றி போர்ப்பின் கருத்துக்குள் அருவருப்பானவை. கவலை அளிப்பவை என்று கூறிய துருக்கியின் பிரததமர் ரஜப் தைய்யிப், போப் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வருகிற நவம்பரில் துருக்கியில் போப் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். அதற்குள்ளாக போப் தனது கருத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்று விட வேண்டும் என்று எதிர்பார்கிற துருக்கிய அரசாங்கம் போப்பின் பயணத்தை ரத்து செய்யவோ தாமதப்படுத்தவோ கோராது என்றும் தெரிகிறது. ஆனால் முஸ்லிம்கள் முழமையாக சமாதானப் படுத்தாததவரை பழைய மரியாதையோடு போப் துருக்கிக்கு செல்ல முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.&lt;br /&gt;ஊலகம் முழவதிலும் வாழ்கிற முஸ்லிம்கள் இஸ்லாத்தைதையோ இறைத்த}துதரையோ இழிவுபடுத்தப்படுத்துவதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய 24 அமைப்புக்ள அங்கம் சகிக்கிற காஷ்மீர் மாநாட்டு அமைப்பு போப்பனி; பேச்சு இஸ்லாத்தின் மீதான புதிய வகை சிலுபை; போர் தாக்குதல்களாகும் என்று கூறியுள்ளது.&lt;br /&gt;பாலஸ்தீனீன் சில பகுதிகளில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. இராக்கின் பஸரா ஆப்கானிஸ்தான்  உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமெரிக்கா மற்றும் ஜொமனியின் கொடிகள் தீக்கிரையாககப்பட்டன. புல இடங்களில் போப்பின உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.  &lt;br /&gt;சடுதியில் நிகழ்ந்தேறிய இந்த எதிப்புகளால் போப் 16 ம் பெனடிக்ட் சனிக்கிழமை அவரது கோடை வாசஸ்தலமான ரோமிற்கு அருகிலள்ள ஒரு மாளிகையில் தனது பக்தர்களிடையே பேசும் போது டீல்லி சாரி என்று கூறினார். என்னுடைய வார்த்தைகளால் நிகழ்ச்து விட்ட சரமங்களுக்கு தான் மிகவும் வருந்தவதாக கூறிய அவர் தான் மேற்கோளாக எடுத்துக் காட்டிய வார்த்ததகள் தனது சொந்தக் கரத்தை பிரதிபலிப்பைவ அல்ல என்றும் கூறினார்.முஸ்லிம்கள் தன்னுடைய வார்த்தகள் தவறாக பரிந்து கொண்டனர் என்றும் கூறினார்.&lt;br /&gt;போப்பின் இந்தப் மன்னிப்பு பெரிதாக பேசப்படுகிறது. போப் விரைவாக சாரி கேட்டுடுவிட்டதில் சிலர் சமாதானம் அடைந்தாலும் அந்த சந்தர்பத்திலும் அவர் உதிர்த்த வாசகங்களில் ஜார்ஜ் புஷ் குறிப்பிடுவத போன்ற உள்ளாத்தமான மன்னிபு;பு இருப்பதாக பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஐNhப்பிய ஊடகங்களே கூட போப் முழமையான வருத்தம் தெரிவித்துவிட்டதாக நினைக்கவில்லை. சந்தேத்திற்கிடமற்ற வகையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று போப் கோரப்பட்டார். ஆனால் இதுவரை அவர் தனது வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கான வருத்தத்தை மட்;டுமே தெரிவித்துள்ளார் ஏன பி.பி.சி.யின் இனையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;16 ம் தேதி  தனது பேச்சினால் ஏற்பட்ட விளைவுகளுக்காக அதிகம் வருந்து வதாக போப் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் வருத்தம் தெரிவிக்கும் சரியான வழிதானா என்ற ஒரு வாக்கெப்பை சி என் என் தெலைக்காட்சியின் இணைய தளம் நடத்தியது. 22 ம் தேதிவரை நடந்த அந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 1,16,533 பேரில் 101793 பேர் அதாவது 87 சதவீதம் பேர் போப்பின் வார்த்தைகள் வருத்தும் தெரிவிக்கும் சரியான வழி அல்ல என்று கூறியிருக்கின்றனர். 13 சதவிதத்தினர் மட்டுமே அவரது மன்னிப்பு சரிதான் என்று கூறியுள்ளனர். &lt;br /&gt;போப்பின் மன்னிப்பு அறிக்கையை திசை திருப்பும் நடவடிக்கை என்று விமர்ச்சித்த எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ், மன்னிப்பு கோரும் முறை இதுவல்லவே என்று கேட்டார்.&lt;br /&gt;முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவரான யூசுப் அல் கர்ழாவி போப்பின் மன்னிப்பு அறிக்கை நிராகரித்தார். போப்பின் மன்னிப்பு மன்னிப்பு அல்ல. முஸ்லிம்கள் தவறாக விளங்கிக் கொண்டனர் என்பது முஸ்லிம்களின் மீது இன்னொரு அவதூறு என்று கூறினார்.&lt;br /&gt;மேற்கோளாக எடுத்துக் கூறிய அந்த வாhத்தைகள் தமது எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்று போப் கூறுவது ஏற்கத்ததக்கதல் என்று கூறிய கர்ழாவி, வார்த்தைகள் தெளிவாக இருக்கும் போது நினைப்புகள் பற்றி நாம் விசாரித்துக் கொண்டிருக்க தேவையில்லை என்றும் கூறினார். (ஹீன யகூனல் கலாமு சரீஹன் லா நஸ்அல் அனின்னிய்யாத்)&lt;br /&gt;முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரோமிலும் பார்சிலோனாவிலும் நடந்த பேச்சு வார்ததையில் நாங்கள் கலந்து கொண்டோம். சரியான மன்னிப்பு வராதவறை இனியுண்டான கூட்டங்களில்  நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று கூறிய அவர் சர்ச்சுகளi தாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். &lt;br /&gt;எழத்துப் பூர்வமான ஒரு விளக்கம் தேவை என அரபு நாடுகளின் தூதர் கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சரியான மறுப்பு வராவிட்டால் வாடிகன் உடனான தங்களது உறவை முஸ்லிம் நாடுகள் மறித்துக கொள்ள வேண்டும் என்ற கோரிக்களை வலுப்பெற்றுவரகின்றன.பகிரங்கமான தெளிவான ஒரு மன்னிப்பு வெளிவராத வரை இஸ்லாமையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் போப் களங்க்கப்டுத்தியது தொடருவதாகவே பொருள் என அரபுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். முஹம்மது சலீம் அல் அவாபி  கூறியுள்ளார்.&lt;br /&gt;மன்னிப்பு அறிவிப்பினால் இஸ்லாமிய அரசுகள் சமாதானமடையவில்லை ஆகையால் வாடிகனின்  தூதரக அதிகாரிகள் இஸ்லாமிய அரசுத்தலைவர்களைச் சந்தித்து விளக்கமிளிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீராவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.&lt;br /&gt;உண்மையில் போப்பின் மன்னிப்பு அறிவிப்பு ஒரு பம்மாத்து வேலை. மேற்கத்தியஅரசியலின் ஒரு பக்கா கில்லாடியாக 16 ம் பெனடிக்ட் இந்த மன்னிப்புpன் மூலம் தன்னை அடையாளம் காட்டிவிட்டார். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை குரூரமாக புண்படுத்திவிட்டு அதற்காக ஒரு சரியான வருத்தம் கூட தெரிவிக்கத் தெரியாதவர் கருணையே வடிவான ஏசுவின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது கிருத்துவத்திற்கு இந்த நூற்றாண்டில் நேர்ந்த மிகப் பெரிய சோதனையாகும். கிருத்துவம் வேறு திருச்சபை வேறு என்ற பழைய வரலாறு மீண்டும் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;ஏது எப்படி இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்களது புகழின் மீதும் கை வைக்கிற எவரும் தங்களது மரியதையை இழக்க நேரிடும் என்ற சத்தியம் மீண்டும் ஒர முறை நிஜமாகி இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1552916249265759501-2060643424385536924?l=covaiazeez.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://covaiazeez.blogspot.com/feeds/2060643424385536924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1552916249265759501&amp;postID=2060643424385536924' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/2060643424385536924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1552916249265759501/posts/default/2060643424385536924'/><link rel='alternate' type='text/html' href='http://covaiazeez.blogspot.com/2008/01/blog-post.html' title='பாவத்தின் சம்பளம் -'/><author><name>கோவை அப்துல் அஜீஸ் பாகவி</name><uri>http://www.blogger.com/profile/03337701254141891201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1552916249265759501.post-5948196448065677662</id><published>2007-12-01T23:34:00.000+05:30</published><updated>2007-12-01T23:35:59.216+05:30</updated><title type='text'>இலக்கிய தர்பார்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு சென்னையில் கடந்த மே மாதம் 25,26,27 அகிய தேதிகளில் கலைவாணர் அரங்கம் புதுக்கல்ல}ரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான எஸ்.எம் இதாயதல்லாஹ், கேப்டன் அமீர் அலி அகியோர் மாநாட்டை நடத்தினர். கலைஞர் கரணாநிதி , பேராசிரியர் அன்பழகன், பாராளுமன்ற துணை சபாநாயகர் ரகுமான் கான், இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மலேஷிய அமைச்சர் ------------------------------ பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பலர் சிற்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 500 பேராளர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பங்கேற்ற இம்மாநாட்டில் கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து இலக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டது சிறப்பு. வளைகுடா நாடுகிளிலிருந்து கலந்து கொண்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் இலங்கையிலிருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டிருந்தனர். சுமர் 30 லட்சலம் ரூபாய் செலவு பிடித்திருக்கக்கூடிய இம்மாநாட்டிற்கு புரவலர்கள் தாராளமான நிதி உதவி செய்துள்ளனர். எஞ்சியுள்ள தொகையில் இனிவரும் காலங்களில் தேவையான இலக்கிய பணிகள் ஆற்றப்படும் என்று கவிக்கோ அறிவித்திருக்கிறார்.ஒரு மாநாட்டை நடத்திப் பார்ப்பதில் உள்ள மிகுந்த பிரயாசைகளும் பொருட்செலவும் உழைப்பும் விமர்சகர்களின் கண்களுக்கு தெரியாது பாயாசத்தில் முந்திரி தட்டுப்படாததது மாத்திரம் தான் விமர்சகனின் பார்வைக்கு தட்டுப்படும். விமர்சகன் என்பவன் கனிகனை விடுத்து முட்களை மட்டுமே மேய்கிற ஒட்டகத்தை போன்றவன் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சன உலகின் மீது கறையாக படிந்துள்ளது என்ற போதும் இந்தக் கட்டுரை அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடக்கூடாது எச்சரிக்கையோடு எழுதப்படுகிறது. அதே நேரத்தில் இலக்கியம் என்ற ஒரு அருமையான தளத்தின் மீது எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு விரக்தியோ வொறுப்போ ஏற்பட்டுவிடமால் பாதுகாத்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே போல 27 ம் தேதியோடு மாநாடு நிறைவு பெற்று விட்டது என்றாலும் மழை விட்ட பிறகும் தூவானம் விடாத கதையாக தொடரும் மாநாட்டுச் சர்ச்சைகளளும் இந்த விமர்சனத்தின் வட்டத்திற்குள் கொண்டுவரப்படு கின்றன. ஓரு இளைஞனிடம் உள் வாழ்வின் லட்சியம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு ரொம்ப நேரம் யோசித்து விட்டு வாழும் வரை சுவாசித்துக் கொண்டிருப்பது என்றானாம். வாழ்ந்து முடித்துவிடுவதையே வெற்றிகரமான வாழ்விற்கான இலக்கணமாக எடுத்துக் கொள்பவராக இருந்தால் இந்த மாநாடு வெற்றி பெற்று விட்டது என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.இலக்கிய மாநாடுகள் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று என்னைப் போன்றவர்கள் கருதிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பெயரில் ஒரு மாநாடு நடந்து முடிந்து விட்டது என்பதில் மகழ்ச்சிதான். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் காணப்பட்ட லட்சணங்களை வைத்து இம்மாநாட்டில் குளறுபடிகள் மலிந்து கிடக்க வாய்ப்புண்டு என்ற ஒரு தயாரிப்பு மனோ நிலையில் சென்ற எனக்கு மார்க்க அறிஞர் அரங்கை ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததை தவிர்த்து மற்ற அரங்குகள் எப்டியோ நடதேறிவிட்டதில் குறிப்பாக கலைஞர் கலந்து கொண்ட நிகழ்வில் அரங்கு நிறைந்து காணப்பட்டதில் அப்பாடா ஒரு வழியாக இலக்கிய மாநாடு முடிந்துவிட்டது என்ற திருப்தி எனக்கும் ஏற்பட்டது தான்.ஆனால், மாநாடு நடைபெற்ற விதம் ஆற்றப்பட்ட பணிகள் மன நிறைவு என்ற அடிப்படைகளில் அல்லது ஒரு இலக்கிய மாநாட்டின் வரையரைகளுக்குள் சிக்காத நன்மைகள் என்று வேறு எந்த ஒரு அலகையாவது வைத்துக் கொண்டு அலசினால் என்றால் அனைத்துல இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு ஒரு தோல்விதான்.அத்திப் பூத்தார்ப் போல நடைபெறுகிற அனைத்துலக இலக்கிய மாநடுகள் இலக்கியச் செழுமையையும் இனிய நினைவுகளையும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்பது அறிஞர்;கள் மற்றும் சுவைஞர்களுடைய எதிர்பார்ப்பு.அந்த எதிர்பார்ப்பை மாத்திரமல்ல ஒரு அனைத்துலக மாநாட்டிற்கான இலக்கணத்தையும் சிதறடித்துவிட்ட மாநாடாக இம்மாநாடு அமைந்து விட்டது. மூன்று நாள் நிகழ்சிசியில் கலந்த கொண்ட ஒருவர் கூட தங்களது அதிப்தியை வெளியிடாமல் செல்லவில்லை என்பது ஏழாம் மாநாட்டின் பொதுப் பண்பு. எங்காவது ஒரு ஊரில் ஷரீஅத் மாநாடோ தப்லீக் இஜ்திமாவோ நடந்தால் இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதை ஒரு முறை போய் பார்த்த விட்டு வரவேண்டும் என்று சிலர் பேசிய போது அதை மறுக்க முடியவில்லை. இந்த அனைத்துலக மாநாடு வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா? என்று அலச வேணடிய நேரத்தில் இதயங்கள் இணைப்பிற்கு இலக்கியம் என்ற முத்திரை வாசகம் இந்த மாநாட்டிற்கு பொருந்துமா என்றொரு பெரிய பட்டிமன்றம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிஷ்டவசமானது.அந்த வகையில் இம்மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகி பலருக்கும் வேதனை அளித்தது. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுவதற்காக நடத்தப்படுவதாக ஜாம்பவான்களால் தம்பட்டம் அடிக்கப்பட்ட மாநாடு ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான முன்னுதராணமாகிவிட்டது. அந்த முன்னுதாரணம் சென்னையில் நடைபெற்ற ஒரு அனைத்துலக மாநாட்டில் நடந்துவிட்டது என்பது தமிழக முஸ்லிம்களுக்கும் தமிழக இலக்கிய வாதிகளுக்கும் புரவலர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குணிவு.இதை புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டியது, இதன் தோல்விக்கான காரணிகளை ஆராய வேண்டியது இஸ்லாமிய தமிழ் இலக்கியம் வாழ வேண்டும் வளர வேண்டும் என்று நினைக்கிற இலக்கியவாதிகள் புரவலர்களுடைய கடமை. இனிவரும் மாநாடுகளில் அத்தகைய தவறுகள் நடைபெறாமல் கவனித்துக் கொள்ள அது உதவும். மாநாட்டின் தோல்விக்கு முதன்மையான காரணம், இலக்கிய ஆர்வத்ததைவிட மேலோங்கியிருந்த தனியாவார்தன மனப்போக்கும் சுயவிளம்பரச் சிந்தனையுமேயாகும். அலட்சிய மனப் போக்கும் பாரபட்ச உணர்வும் இதன் துணையாக சேர்ந்து கொள்ள மாநாடு ''களை ' கட்டிக்கொண்டு விட்டது. இஸ்லாம் என்ற சமய அடையாளம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கிராத் ஓதியதற்கு அடுத்த படியாக பர்வீன் சுல்தானாவின் பர்தாவில் வெளிப்பட்டது. வெல்;டன்.மாநாட்டுத் தீர்மாணங்கள் வாசிக்கப்பட்ட விதமும் அதன் உள்ளடர்த்தியும் மாநாட்டின் தோல்விக்கு எடுத்தக் காட்டத் தகுந்த போதுமான ஒரே உதாரணமாகும்.ஒரு அனைத்துலக மாநாட்டின் தீர்மாணங்கள் வாசிக்கப்பட்ட போதும் புரியவில்லை அது பிரசுரமாகவும் தரப்பட வில்லை அடுத்த நாள் பத்ரிகைகளிலும் வரவில்லை. மாநாடு என்பது குறித்து பக்கம் பக்கமாக விளக்ககம் எழதிய எற்பாட்டாளர்கள் ஒர மாநாடு அதன் தீர்மாணங்களால் மதிப்படைகிறது ஆத்தீர்மாணங்கள் வெற்றி பெறுவதில் தான் அது உயரிர்வாழ்கிறது என்ற தத்துவத்தை எப்படி அறியாமல் போனார்கள்? வெத்து அறிக்கைகள் வெளியிடுவதற்கு அல்லது தன்னிலை விளக்கப் பேட்டிகளை அச்சேற்றுவதற்கும் முயற்சி எடுத்துவர்கள் மாநாடு முடிந்து ஒரு மாதமாகிவிட்ட சூழ்நிலையில் இன்று வரை அத்தீர்மாணங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சேர்க்க வில்லை. அவர்களது அறிக்கைகளையும் தீர்மாணங்களையும் வெளியிட்ட பத்hகைகள் கூட அத்தீர்மாணங்களை வெளியிட வில்லை. ஒரு வேளை இந்த மாநாடு பேராளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தது போல தீர்மாணமும் கலைஞருக்கு மட்டும்தான் என்று தீர்மாணித்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆய்வரங்குகள் தான் இம்மாநாட்டின் சிறப்பு அம்சம் என்று பெரிதாக பேசப்பட்டது. நிறைய அரங்குகள் இருந்தது சரிதான் நிறைவாக இருந்தததா என்பது தான் கேள்வி. ஓரு பிடிவாதத்திற்hக இத்தகைய அரங்குகளை ஏற்படுத்திய அதே நேரத்தில் மாநாட்டு மைய அரங்கில் அருமiயான தலைப்பில் ஒரு கருத்தரங்கமோ விவாத மன்றமோ நடத்தியிருந்தால் பொதுமக்கள் பலர் பயன் பெற்றிருப்பார்கள். மார்க்க இலக்கிய அரங்கு மகளிர் அரங்கு உள்ளிட்ட சிற அரங்குகளில் கூட்டம் இருந்தது. அரங்குகளில் வாசிக்கபட்ட கட்டுரைகள் பல பிரசுரிக்கப்பட வில்லை என்று குறை கூறப்பட்டது. முஸ்லிம் அல்லாதோர் பலர் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தது இவ்வரங்குகளின் முக்கியமான ஒரு சிறப்பம்சமே!. திருவணந்தபுரத்திலிருந்து வந்திருந்த திருமலர் மீரான் அவர்கள் சொன்னது போல இலக்கியகர்த்தாக்கள் பலருக்கு அது மட்டுமே மாநாட்டின் திருப்திக்குரிய விசயமாக இருந்தது. ஆனால் பொதுப் பார்வையாளர்களைப் பொறுத்தவரை எங்கே செல்வது என்ற குழப்பத்தில் அங்கும் இங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள். பொதுவான பார்வையாளர்கள் பலருக்கும் சனிக்கிழமை சனி பிடித்த கிழமையாக இருந்தது அவர்களது அறிவுக்கோ ரசனைக்கோ இலக்கிய ஆர்வத்திற்கோ எந்த தீனியும் அன்று கிடைக்கவில்லை. ஒரு நுட்பமான அல்லது பல்கலைகழகங்கள் அளவில் மட்டுமேயான மாநாடு இப்படி ஆய்வரங்குகள் நிரம்பியதாக நடத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கலாம், மக்கள் மத்தியில் இலக்கிய தாகத்தை வளாத்தாக வேண்டிய காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாடு இத்தகைய ஆய்வரங்குகளால் கணம் பெறத் தவறிவிட்டது என்பது உண்மை. பொதுமக்கள் பயன்பெற்ற விடக் கூடாது என்பதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிக எச்சரிககையாக நடந்து கொண்டிருப்பதை காட்டுகிறது என்று அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்த ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. சனிக்கிழமை மாலை என்ற பிரதான நேரத்திற்கு ஒதக்கீடு செய்யப்பட்டு தனியாக சுவரொட்டி விளபம்பரமும் செய்யப்பட்டிருந்த மார்க்க அறிஞர் அரங்கம் ரத்து செய்யப்பட்டது மாநாட்டின் முகத்தில் பூசப்பட்ட கரி. கரியை பூசியது ஏற்பாட்டாளர்களா ? அல்லது முந்தயை நிகழ்சியை நடத்தியவர்களா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. நிகழ்ச்சியல் பெயரிடப்பட்டிருந்த ஆலிம்களை குற்றம் சுமத்த முடியாது. அழைக்கபட்டிருந்த ஆலிம் பெருமக்கள் நால்வரில் ஒருவர் கூட நிகழ்சிக்கு வரவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர்கள் வராமல் போனதற்கு காரணம் தகுந்த ஏற்பாடுகள் எதுவும் செ;யயப்படாததே!. குறைந்த பட்சம் அவர்களுக்கான டிக்கட் கூட ஏற்பாடு செய்யப்பட வில்லை.மார்ச் மாதத்தின் மத்தியில் அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு நிகழ்சி நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர்களையே ஏதாவது எற்பாடு செய்து கொண்டு
