Saturday, July 26, 2008

வல்லம் மாநாடு: பிரிவினைவாதிகளின் தெருக்கூத்து

ஜகாத் விசயத்தில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்துச் சொன்னதன் மூலம் முர்ததாகிவிட்டவகள் (இஸ்லாமிய மறுப்பாளர்கள்) தவ்ஹீத் மாநாடு நடத்தப் போவதாக அறிவிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது பி.ஜே.பியினர் அம்பேதகர் விழா கொண்டாடுவது போன்றது. அம்பேத்கர் பிறந்த நாள் அன்று இந்துத்துவா சக்திகள் தாய் மதம் திரும்பும் நிக்ழ்சியை நடத்துவது எப்படி அம்பேதக்ரின் முகத்தில் கரியை பூசும் முய்றியோ அது போல தவ்ஹீத் என்ற சொல்லின் மீது தார் பூசும் முயற்சியே இந்த மாநாடு. உண்மையில் தமிழகத்தின் அரசியல் அரங்கில் தமது குழுவை நிலை நிறுத்திக் கொள்ளவும் வசூலுக்கான பரந்துபட்ட ஒரு வழியாகவுமே இம்மாநாடு நடைபெறுகிறது.

இந்தக் கொள்கையுடையவர்களை திருமண்ம் செய்து கொள்ளக் கூடாது. முஸ்லிம்களின் கப்ரிஸ்தானில் அடக்கம் செய்யப் படுவதற்கு அவர்கள் அருகதை யுடையவர்களும் அல்ல என்ற அறிவிப்பு வெகு சீக்கிரம் உலக அளவில் உரத்து ஒலிக்ப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் எராளமான பொருட் செலவில் விளம்பர மாநாட்டுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களின் வேகமும் மோகமும் மட்டுமே இது சாத்தானிய கும்பல் என்பதற்கு சான்றளிக்க போதுமானது. முஸ்லிம்களின் சம்யக் கூட்ட்ங்கள் எதற்கும் இப்படி ஒரு செலவு செய்யப்பட்டதில்லை. தூய சமயவாதத்திற்கு இந்த விளம்பரங்களும் ஆர்ப்பாட்டமும் எந்த வகையில் பொருத்தமானது என்பதை எண்ணி மக்கள் வியக்கின்றனர். இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கின்றனர். ஹவாலா மோசடிகள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அனுமதிக்கப் பட்டது என்று ரகசிய அனுமதி வழங்கியற்காக கிடைத்த பரிசுப்பணம் விளையாடுகிறது என்று அவர்களுடைய முன்னாள் ஆதரவாளர்கள் கிசிகிசுக்கிறார்கள்.

இந்தக் கூட்டம் நடக்குமா? அல்லது இமாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் அவர்களுடைய தலைவர் பேசுவதாக விளம்பரப் படுத்தப் பட்ட கூட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சினை காணமாக ரத்து செய்யப் பட்டது போல இதுவும் ரத்து செய்யப் படுமா என்ற கேள்விக்கு நடுவில் இந்தக் கூட்டத்தின் தன்மை குறித்து சில விபரங்களை தமிழகம் அறிந்து கொள்வது நல்லது

இவர்கள் உணமையில் கலககக் காரர்கள். எங்களது பகுதியில் ஒருவர் இறந்து போனார். அவரது பிள்ளைகள் போலி தவ்ஹீதி குரூப்பின் குட்டித்தலைவர்கள். நான் நினைத்தேன். இவனுக! இந்த குரூப்பில் புடிவாதமானவனுக! இந்த ஜனாஸைவை சுப்ஹான மௌலூதும் முஹ்யித்தீன் மௌலூதும் ஒதுகிற பள்ளிவாசலுக்கு கொண்டு வரமாட்டங்க! பக்கத்துல அவங்க இடம் பலது இருக்கு அங்க கொண்டு போயிடுவாங்க! சிர்க்(?) தளங்களுக்கு கொண்டு வருவதற்கு அவர்கள்து தூய வாதம் இடம் கொடுக்காது. நாம் எப்படி அவங்க இடத்துக்கு போக, ஏன் திரும்பிக் கூட பார்க்க விரும்பற்தில்லையோ அது போலத் தானே இவங்களுக்கும் மானம் ரோஷமெல்லாம் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஜனாஸா எங்களது பகுதியிலுள்ள சுன்னத் ஜாமத் பள்ளிக்கு வந்தது. அங்கு வந்து வீம்பு செய்யத்தவற வில்லை. “நாங்க தான் தொழ வைப்போம்” என்றனர். ஒரு தொழுகையாளி உரத்துச் சொன்னார். அட கருமம் புடிச்சவனுங்களா! அமைதியா இருக்கிற ஜமாத்துல கலகம் பன்ன வந்துட்டீங்களா? என்றார். மக்கள்தான் எவ்வள்வு துல்லியமாக கருத்துக் கொண்டிருக்கிறார்கள்?

ஒரு கலகக் கூட்டம் வண்ணமயமான விளம்பரங்களால் தனது செல்வாக்கில் ஏற்பட்ட கறைகளை கழுவிட மேற்கொள்ளும் முயற்சியே இந்தத் தெருக்கூத்து.

உண்மையில் ம்ர்யாதைப் பட்ட ஒரு விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளத்தகுந்த எந்த நபர்களும் அம்மாநாட்டோடு சம்பந்தப் படவில்லை. அருவருப் பூட்டும் குற்றப் பின்னணியுடையவர்கள் மட்டுமே ஒன்று கூடி நடத்து கிற கூட்டம் அது.

இம்மாநாடு குறித்த எதிர் விவாதங்கள் இணைய உலகில் ஏரளமாக நடக்கிறது. அவர்களது முன்னாள் ஆதரவாளர்கள் பலரும் திரு பிஜே அன் கோவினரை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்க்கின்றனர். அங்கு பயன்படுத்தப் படும் சொற்பிரயோகங்களும் வெளிப்படுத்தப் படும் உண்மைகளும் அச்சில் ஏற்றத்தகுந்தவை அல்ல. அதை எல்லாம் படித்துப் பார்க்கிற போது அதில் உள்ள கால் வாசி விசயங்கள் உண்மையாக இருந்தால் கூட இத்தைகைய அருவருப்பூட்டும் சக்திகள் எப்படி வெட்க மில்லாமல் மாநாடு நடத்த திட்டமிட முடிகிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி பிரிட்டிஷ் காரர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் மிர்ஸா குலாம் காதியானியை ஆதரித்தார்களோ அது போல, சமய சமூக தேசிய ஒழுங்குகளுக்கு கட்டுப்பட மறுக்கிற ஒரு கூட்டம் இவர்களைச் சார்ந்து நிற்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஒரு குண்டாயிச மனப்பான்மை போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு யூதர்களைப் போல வளைத்து வளைத்துப் பேசும் நாவுகள் போதுமானதாக இருக்கிறது, அந்தக் கூட்டத்திற்கு குயுக்தியும் பரிகாசமும் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு குரானும் சுன்னாவும் கலகக் கொடிகளாக இருப்பது போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு பொய்மையும் வாய்வீச்சும் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஸாமிரிய்யின் வழித்தோன்றல்களளின் வழிகாட்டுதல் போதுமானதாக இருக்கிறது. கன்றுக் குட்டி சிலையை வண்ங்கும்படி யூதர்களை திசைதிருப்பிவிட்டு எனக்கு சரி என்று பட்டது அதனால் செய்தேன் என்ற ஒற்றைச் சொல்லில் ஸாமிரி கழன்று கொன்றது போல எங்களது அன்றைய ஆய்வு அப்படி இருந்தது? இன்றை ஆய்வு இப்படி என்று சொல்லி சமூகத்தையும் தேசத்தையும் பிளப்பதை சரி காண்பது இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

இந்த இரண்டு வார்த்தக்ளுக்கு இடையே ஊட்டப்பட்ட வெறியால் நிகழ்ந்து விட்ட வரலாற்று சோகங்கள சாமாண்யமானதா? கல்யான வீடுகளிலிருந்து கல்லறைவரை சமுதாயத்தில்வெறி பிடித்துத் தொடர்ந்த சண்டைகள் சச்சர்வுகள் எத்தனை? துண்டாடப் பட்ட முஸ்லிம் ஜமாத்துக்கள் எத்தனை? வழக்குகள் எத்தனை? வம்புகள் எத்தனை? விப்ரீதங்கள் எத்தனை? கொடுமைகள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை? அத்தனையையும் மொத்தமாக மறைத்து விட்டு அறிவியல் அரங்கு ஆட்டுக்கல் அரங்கு என்று கதைவிட்டுக் கொண்டு வருகிறார்கள்.

சும்மா இருக்கிற இடத்தில் சச்சரைவை சல்னத்தை உருவாக்கி விட்டு அதை சமூக சீர்த்திருத்தம் என்று பேசி அதற்காக பலப்பிர்யோக வழிமுறைகளை தூண்டிவிட்டு இளைஞ்ர்களை முரட்டு குணம் கொண்டவ்ர்களாக்கி, அதன் விளைவாக சமூகத்தில் வொரும்பத்தகாத பல செயல்கள் ஏற்பட்டு பன்னூற்றுக் கணக்கான இளைஞர்களை சிறைக் கூடத்திற்கு அனுப்பி அவர்களது வாழ்வை இருளச் செய்த பிறகு இப்போது மீண்டும் ஒரு தலைமுறைய அதற்காக தயார் செய்வதற்காக மாநாடு ந்டத்துகிறார்கள்,

இந்தக் கூடாரத்தில் இப்போது கூட்டு சேர்ந்த்திருக்கிற பலரும் தமது சொந்த ஊருக்க்குள் தலை காட்ட் முட்யாதபடி ஓடி ஒளிந்து கொண்டிருந்தவர்கள். பல்வேறுபட்ட வழக்குகளில் அப்பாவி இளைஞர்களை சிக்கவைத்து விட்டு தண்டனைகளிலிருந்து வஞ்சமாக தப்பித்துக் கொண்டவ்ர்கள். இவர்களுக்கு இப்போது அரசியல் செல்வாக்குக்காக மாநாடு தேவையானதாக இருக்கலாம், அப்பாவித்தனாமாக இத்தனைக்குப் பிறகும் இவர்களைப் ஆட்டுமந்தை கூட்டத்தைவிட மோசமாக பின்பற்றுபவர்கள் ஒரு சிறைக் கூட எதிர்காலம் அல்லது சீரழிந்த கொள்கைகஈன் கூடாரம் தங்களுக்கு தேவையா என யோசித்துக் கொள்ள வேண்டும், இவர்களோடு இப்போது தொடர்பு கொண்டிருப்பவர்கள் இவர்களுடன் முன்னாள் தொடர்பு கொண்டவ்ர்களுக்கு நேர்ந்த கதியை ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துப் பார்த்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.

இக்கூட்டத்திற்கு அழைப்பு திரு பீ ஜே, கோவையில் விடுத்து பேசுவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது எதனால்.? அதன் பின்னன்ணியில் உள்ள ஊருக்குத் தெரிந்த ரகசியம் என்ன? தம் வாழ்வைச் சீரழித்த சண்டாளன் என்று நகரிலுள்ள இளைஞர்கள் பலர் அவர் மீது கொதிப்படைந்திருப்பது எதனால்? என்பதை ஆழ அகழ்ந்து யோசித்துப் பார்க்கிற பொறுப்பு தமிழகத்தினுடையது. தமிழக முஸ்லிம்களுடையது, தமிழக முஸ்லிம் இளைஞர்கள்ளுடையது. தமிழக காவல் துறையினுடயது, தமிழக முதல்வருடையது, தமிழக முதல்வர் கலைஞர் பல சம்யத்திலும் முஸ்லிம் சமூகத்த்தில் உருவான தவறான மனிதர்களுக்கே உற்சாமளித்திருக்கிறார். அந்தச் சருகுதல் இந்தக் குற்றவாளிக் கூட்டளிகள் விசயத்திலும் நடந்துவிடக் கூடாது.

‘திருவாளர் பிரச்சினையின்’ இன்னொரு வாயாக எங்களுரில் ஒரு இளைஞர் இருந்தார். தனது கல்லூரிக்கால வாழ்வையும் அதற்குப் பிந்தைய பல் ஆண்டுக்ளையும், திரு பி.ஜே வுக்காக தொலைத்தவர். சில ஆண்டுகளாக கண்ணில் படாத அவர் திடீரென ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார். முகவரி மாறி வந்துவிட்டாரா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது. என் சந்தேகத்தை போக்கி விட்டு ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார். வலி மிகுந்த அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்த ஏஜென்ஸிகளிடம் ஏமாறுவதற்கு தயாராகிற எந்த இளைஞனும் யோசித்துக் கொள்ளட்டும். அந்த இளைனின் வாக்கு மூலத்தை நான் என் வார்த்தைகளில் தருகிறேன்,

“ரேடியோ நிகழ்சிகளை தொகுத்து தருபர்களை ஆர் ஜே ரேடியோ ஜாக்கி என்பார்கள். தொலைக்காட்சி தொகுப்பாளர்களை வீடியோ ஜாக்கி என்பார்கள். என்னைப் பொறுத்தவரை பீ ஜே என்றால் பிரச்சினை ஜாக்கி என்று நான் உணர்ந்து வெளியே வந்துவிட்டேன். இதில் ஈடுபட்டதால் என மனது அமைதியை இழந்த்தது, ஒரு கட்டத்தில் நான் வேசமணிந்த நடிகனாகவே இருந்தேன், வாழ்கையின் மகிழ்சி நிம்மதியை தொலைந்தேன். பிரச்சினை சச்சரவுகலை தேடி ஒடுவதே என் பிழைப்பாக இருந்தது. நாங்கள் விளையாட்டாக பேசி வைத்துக் கொண்டு சச்சரவுகளை உருவாக்கினோம். இளமையின் தொடக்க காலத்தில் ஒரு தவ்றான மனிதனை பின் தொடர்ததால் நான் என் தரத்திற்கு கீழான பல் வேலைகளை செய்ய நேர்ந்த்து தவ்ஹீத் என்ற பலமான போவயின் இஸ்லாமின் நாகரீகங்கள் முரணான – துணிந்து பொய் பேசுவது, பொய்யான தகவல்களை உண்மையாக பிரச்சாரம் செய்வது அத்தனையையும் செய்தொம் சுன்னத் ஜமாத் உலாமாக்களை தரம் தாழ்த்துவது மட்டுமே எங்கள் குறியாக இருந்தத்து. அவர்களை மூக்குடையச் செய்வதற்காக எந்தக் காரியத்தையும் செய்யத்த்யாரக இருந்தோம். ஒரு பள்ளிவாசலுக்கு கூரை வேய்ந்து கொண்டிருந்த ஒரு முஸ்லியாரை உம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஓதிப்பார்க்க வரவேண்டும் என்று கூறி ஆட்டோவில் அழைத்துக் கொண்டுவந்து, எங்களது மர்க்கஸ் பள்ளிவாசலில் வைத்து நைய்ப் புடைத்தோம். அப்போதெல்லாம் நையப் புடைத்தோம் என்று சொல்வது எங்களுக்கு பெருமைக்குரிய விசயமாக இருந்தது. சப்பையை (தோள்பட்டையை) இறக்கினோம் என்று சொல்வது எங்களது சாதனையாக இருந்தது. முஸ்லியாருக்காக நியாயம் கேட்டு வந்தவ்ர்களை பட்டப் பகலில் நகரின் நெரிசல் மிகுந்த மையப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டித் துரத்தினோம். இதை எல்லாம் இப்போது நினைத்தால் நான் கல்லுரி ப்டைப்பை முடித்திருந்தும் எப்படி தவ்ஹீதின் பெய்ரில் ஒரு அடியாளாக இருந்திருக்கிறேன் என்ப்தை எண்ணி கூனிக் குறுகிப் போய்விடுகிறேன். இப்போது நினைத்தாலும் இதயம் கனத்துப் போகிறது. தவ்ஹீதி என்ற பெயரில் நாங்கள் அடித்த கூத்துக்கள் நிறைய. விளையாட்டாய் நிகழ்த்திய அந்தக் கூத்துக்களுக்கு அப்பாவிகளும் அதீத புத்திசாலிகளாக தங்களை நினைத்துக் கொண்ட முட்டாள்களும் பெருமளவில் திரண்டார்கள். அது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. நாம் தான் உண்மையாளர்ளோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த ஆச்சரியம் வளர்ந்தது. ஆனால் நாம் அலட்சியமாகவல்லவா விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக் கொண்டிருந்தது. சன்னம் சன்னமாக எனக்குள் இருந்த மனசாட்சி அவர்களை விட்டு விலகிக் கொண்டிருந்தது. வெளிப்படையாக நான் தீவிர தவ்ஹீதியாக தெரிந்தாலும் நான் உள்ளுக்குள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். பி.ஜே த.மு.மு.க வில் ஈடுபட்ட போது, ஒரு வழியாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை குழப்பங்களுக்கும் சமுதாய சச்சரவுகளுக்கும் முடிவு வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன், அவரும் தனது புதிய தலைமைக்குரிய வேஷத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் சென்று பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகளை மாற்றிக் கூறினார். ஆனால் பாழாய்ப் போன த.மு.மு.க.வினர் அவரது அதிகார ஆசைக்கு இடம் கொடுக்காமல் அவரை வெளியே அனுப்பி விட்டனர். அது பெரும் ஆபத்து, அவரால் சும்ம இருக்க முடியாது அவரை அண்டிப்பிழைத்துக் கொண்டிருப்பவர்களைப் பய்ன்படுத்தி மீண்டும் அவர் சமுதாய சச்சரவுகளுக்குத் தான் வ்ழியமைப்பார்.

நான் என் இந்த இடைக்கால வாழ்க்கை அனைத்த்தும் தவறானது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நான் உணர்ந்து கொண்டேன். அதை ஊருக்கு சொல்வதற்காகவே எனது பாட்டனார் இற்ந்த போது அவருக்கு துஆ செய்வதற்காக நடத்தப் பட்ட 40 ம் நாள் பாதிஹாவை நான் முன்னிறு நடத்தினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். வேஷ்த்தை கலைத்த நிம்மதி எனக்கு ஏற்படிகிறது. பொய் வேடாதாரிகலளின் கூட்டத்திலிருந்து விலகி வந்து விட்டதில் வாழ்கை தெளிவாகவும் நேர்கொண்டதாகவும் இருக்கிறது. எனது இந்த மாற்றத்தை உங்களுக்குத் தெர்விக்கவும். உங்கள் வழியாக உலகறியச் செய்யவுமே உங்களிடம் வ்ந்தேன் ஆலிம்களிடம் உள்ள தயக்கமும் அவரைப் போல துணிந்து பேச தயங்குவதுமே அவரது வளர்ச்சிக்கு காரணங்கள் உங்களைப் போன்றவர்கள் இந்நிலையை மாற்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என்று அந்த இளைஞர் சொல்லி முடித்தார்.

2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர் இந்த நண்பரைப் போலவே இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.அப்படி வில்கிச் சென்றவர்களை நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடியும்.அவர்களிடமிருந்து இது போல கதை கதையாக கேட்க முடியும்.

பெரும்பாலும் தொப்பி போட்ட படியே இருக்கும் ஒருவர், தொப்பி விசயத்தை வைத்து சமுதாயத்தை பிளந்தார் என்பது வேடிக்கையான ஒரு வேதனை. தொப்பி அவசியமற்றது தானே அதை ஏன் நீங்கள் பெரும்பாலும் அணிகிரீர்கள் என்று அவர்டைய ஆட்கள் அவரிடம் கேள்வி கேட்கவில்லை. ஆனால் தொப்பி போடுவதை தங்களது ம்ரபாக கொண்ட சுன்னத் ஜமாத்தினரின் பள்ளிவாசலுக்கு தொப்பி போடாமல் தொழவந்தனர். மக்களை ஆத்திரப் படுத்துவதற்காகவே இந்த நடவ்டிக்கை மேற்கொள்ளப் பட்டது. இந்த தொப்பியால் நடந்த பிரச்சினை கொஞ்சமா? நஞ்சமா? இத்தகைய ஒரு கும்பலால எங்கள் பகுதியில் நடைபெற்ற சண்டைகளும் தகறாறுகளும் ஏராளம். அத்தைகைய சந்தர்ப்பத்திலெல்லாம் முஷ்டியை மட்டுமல்ல சில சம்யத்தில் கத்தியையும் கூட உயர்த்திக் கொண்டு நின்றார் அவர்களின் குட்டித்தலைவர் ஒருவர். இப்போது அவர் பேச்சாளராக காசு பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது தலையிலும் தொப்பி ஒட்டிப் பிறந்த உறுப்பாக இனைந்திருக்கிறது, ஒரு காலத்தில் தொப்பிப் பிரச்சினக்காக ஊரையே ரகளைப் படுத்தினோமே என்பது நினைவில் கூட இல்லாதவ்ர் போல அவர் தொப்பியோடு உலா வருவதைப் பார்க்கையில் விளயாட்டுக்காக எத்தனி விப்ரீதங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதை எண்ணி நெஞ்சம் பெருமுகிறது. அற்பமான செய்திகளை வைத்து எப்படி சமுதாயத்தை வஞ்சகமாக பிளந்தவர்கள் இவர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

முஸ்லிம்களின் பெருநாளை பிளந்தபோது, அதற்காக எத்தனை வாதங்களை எப்படி எல்லாம் அடுக்கடுக்காக வைத்தார்கள். அந்த ஆதர்ங்கள் மூலம் ஒரு குடும்பத்தில் தந்தையையும் மகனையும் தனித்தனியே பெருநாள் கொண்டாட வைத்த கொடுமை சமுதாயத்தில் எத்தனை வலிமிகுந்த கீறலை ஏற்படுத்தியது? மாபாவிகள்...சண்டாளர்கள்.. சதிகாரர்கள்.. எவ்வளவு எதார்த்தமாக அந்தப் பிளவிலிருந்து பின் வாங்கினார்கள்?. நாசமாய்ப் போன அந்த முந்தய ஆய்வுக்கும் பிந்தய ஆய்வுக்கும் இடையே எழுந்த் இடைவெளியை இனி எந்த தலைமுறையால் அடைக்க முடியும்? ஒரே குடும்பத்தில் ஒன்றாக மகிழ்ந்தும் ரசித்தும் கொண்டாடிய பெருநாட்களின் சந்தோஷ்த்தை தொலைத்து விட்டு சவக்கலையோடல்லவா இன்றைக்கு பல் குடும்பங்கள பெருநாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

இந்தக் கட்டத்தில் அறிவு ஜீவிகளாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்ட சிலர் கூட ஜமாத்தினரை குறை பேசினரே தவிர ஏன் சமுதாயத்தின் ஒற்றுமை ஒரு அற்பக் காரியத்திற்காக குலைக்கிறீர்கள் என்று மறு தரப்பை பார்த்து கேள்வி கேட்க திராணியுற்றிருக்கவில்லை, இப்போதும் கூட சமுதாய ஒற்றுமை பேசுகிறோம் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சிலர் முஸ்லிம்களையும் இந்த அமைப்பினரையும் இணைத்து காரியங்கள ஆற்ற முய்ற்சிக்கின்றனர். அது மல்லிகைப் பூக்களோடு அரளிப்பூவையும் சேர்த்து மாலைத் தொடுப்பதற்கு சம்மானது. அல்லது நல்ல பாலில் விஷத்தை கலப்பது பொன்றது. அப்படிப்பட்ட சந்தர்ப் பத்தை பயன்படுத்தி லாபம் பார்த்துக் கொள்வார்களே தவிர ஒரு போதும் அவர்கள் ஒற்றுமைக்கு உதவ மாட்டார்கள். முஸ்லிம் ஜமாத்துக்கள் எச்சரிகை அடைந்து கொள்ள வேண்டிய விசயம் இது. ஊர்ப்பிரச்சினை என்பதற்காக இவர்களை இணைத்துக் கொண்டால் அதனால் இவர்களுக்கு லாபம் கிடைக்கும் ஜமாத்துகளுக்கு நட்டமே ஏற்படும். இது எங்களூரில் எனக்கு கிடைத்த அனுபவம். இஸ்லாமிய வரலாற்றிலும் நான் கண்டுனர்ந்த தத்துவம்.

பள்ளிவாசலை, திருமண்த்தை, பெருநாளை, ஏன் இறுதி ஊர்வல்த்தை கூடப் பிரித்தவர்கள் அந்தப் பிரிவினையை நிலை நிறுத்துவதற்காக இளைஞ்ர்களைடையே வன்முறை குணத்தை விதைத்தவ்ர்கள். இப்போது மீண்டும், கூத்தடிக்க வருகிறார்கள். அந்தக் கூத்தாடிகளால் சமுதாயம் இன்னும் சில சிக்கல்களை சந்திக்காமல் இறைவன் பாதுகாக்கட்டும்.

No comments: