Saturday, January 12, 2008

பாவத்தின் சம்பளம் -

11 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குகிற அதிகாரத்தில் இருக்கிற போப்பரசர் போப் 16 பெனடிக்ட்;, தானே இப்படி மன்னிப்பு கேட்கிற நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எதிர்பாhத்திருப்பாரா என்பது தெரியவிலலை. ஏதிர்பாhத்தது போல் அவர் மன்னிப்பு கேட்டவிட்டார்தான். ஆனால் டீப்லீ சாரி என்று அவர் சொன்னவுடன் பிரச்சினையின் ஆழம் தூர்ந்து போய்விட்டதாக அவரோ மற்றவர்களோ நினைத்தால் அது தவறானது.
அரசியல் லாப நோக்கங்களுக்காக திட்மிட்டு உருவாக்கபட்ட வாடிகன் தேசத்தின் அதிபரர் என்ற பெரும் பொருப்பும் வகிக்கிற போப் 16 ம் பெனடிக்ட் கடந்த 12.09.2006 செவ்வாய்கிழமை ஜெர்மனியிலுள்ள ரெகனஸ்பர்க் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை உலகில் வியப்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியிரக்கிறது. முஸ்லிம் உலகத்தில் கொந்தளிப்பை உண்ட பண்ணியது. அதன் விளைவாக 16 ம் தேதி அவர் மன்னிப்பு கேட்டார்.
போப்பின் மன்னிப்பு கோரல் உள்ளார்த்தமானது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சி என.ஏன.21.9.06) வழங்கினாலும் கூட புஷ் தலைமையேற்று நடத்துகிற றயச ழn ளைடயஅ முகாமில் போப்பும் கைகோhத்துக் கொண்டு விட்டாரோ என்ற தோற்றம் தான் உலக மக்களின் உள்ளத்தில் மேலோங்கியது. இதனால் சமீப காலங்களாக போhப்புகள் அணிந்து வந்த சமாதான தூதர்கள்; என்ற முகமூடி கிழிந்துவிட்டது. வலிந்து புனையப்பட்ட புனிதர்கள் என்ற இமேஜும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. போப் இரண்டாம் ஜான்பாலும் அவரக்கு முன்னிருந்த ஓரிவர் உருவக்கி வைத்திருந்த ஒரு மாயக்கோட்டையை 16 ம் பெனடிக்கடடின் பேச்சு தகர்த்துவிட்டது. போப்புகளின் நிஜ முகம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
போப் 16 ம் பெனடிக்ட் அவருடயை சொந்த நாடான ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது அங்குள்ள ரெகனஸ்பெர்க் பல்கலைகழகத்தில் ஒரு உரை நிகழ்த்தினார். நம்பிக்கைகும் பகுத்தறிவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது அவரது உரையின் தலைப்பு. போப் தனது உரையில் கிருத்துவ சமயம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை கொண்ட சமயம் என்று கூறினார்.
ஒரு விஞ்ஞான உண்மையை கண்டறிந்து சொன்னதற்காக கலீலீயோவுக்கு திருச்சபை மரணதண்டனை விதித்த செய்தி அவரது நினைவுக்கு வரவிலலையோ என்னவோ அது பற்றியும் அது போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முட்டாள்தனமான காரணங்களைச் சொல்லி திருச்சபை எதிர்ப்புத் தரிவித்த விசயங்கள் குறித்தும் அவர் வாய் திறக்கவிலலை.
அது போலவே இஸ்லாத்தை பற்றியும் அவா பேசாமல் இருந்திருக்கலாம். விதி அவரை விட வில்லை. முஸ்லிம்களின் இன்றைய பலவீனமான சூழ்நிலையை அவர் கண்முன்னே காட்டி அவரை வம்பில் இழுத்து விட்டது. கிருத்துவத்தை போல இஸ்லாம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று முதல் குற்றாச்சாடடை முன் வைத்தார். தொடர்ந்து சாத்தான் அந்த சன்னியாசியின் நாவை பிடித்துக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் சென்றான். 14 ம் நூற்றாண்டின் நாசகரா சகத்தியாக இருந்த ஒரு பைசாந்திய அரசனின் கூற்றை மேற்கோளாக காட்டினார். இது அவருக்குள்ளிருந்த சாத்தான் செய்த வேலையே வேறில்லை.
வாடிகனிலுள்ள மற்ற பாதிரிகள் கூட இந்த மேற்கோள் காட்டிய இடத்தில் போப் தனது பேச்சின் கருத்தோட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக குறிப்பிடுகிறார்கள். ராய்டட்ர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாடிகனிலுள்ள சர்ச்சின் அதிகார பீடத்திலுந்கும் ஒருவா இது அரிதாக ஏற்பட்டு விட்ட சருகுதல் என்று கூறியிருக்கிறார். தனது வார்ததைகளில் அதிக பட்ச எச்சரிகை;கயை கையாள வேண்டியவர் தனது பேச்சினால் என்ன விளைவு ஏற்படும் என்று எண்ணிப்பார்க்காகததது எவரையுமு; ஆச்சரியப்படுத்தக் கூடியது என்றும் அவர் கூறியுள்ள்ளர்.
நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறும் வாடிகனின் ஒரு அரச தந்திரி ஒருவர் போப் தானே வலியப் போய் ஒரு பள்ளத்தில் விழுந்திரக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஜெர்மனியில் இதற்கு முன்னர் கிருத்துவ தத்துவ இயல் பேராசியராக பணியாற்றி போப் தன்னுடைய கடந்த காலத்தையும் நிகழ் காலத்ததையுமு; கலந்ததில் தவறு செய்து விட்டார் என்றும் கூட சர்ச் வட்டாரம் கருத்து தெரிவித்ததாக ராய்ட்டர் நிறுவனத்தின் செய்திக குறிப்பு தெரிவி;கிறது.
ஜேர்மனியில் படித்த் அவர் இன்னும் ஒரு போப்பாக தன்னை உணரத் தொடங்கவில்லை.அது தான் பிரச்சினை என்று சொன்னார் அமெரிகாகாவின் ஜர்ஜ்டவுன் யுனிவர்சியிடியின் போதகர் தாமஸ் ஜே. ரீஸ் 'ஐ வாiமெ hளை pசழடிடநஅ ளை வாயவ hந'ள ய புநசஅயn யஉயனநஅiஉ றாழ hயளn'வ சநயடணைநன லநவ hந'ள ய pழிநஇ' ளயனை சுநஎ. வுhழஅயள து. சுநநளந ழக வாந றுழழனளவழஉம வுhநழடழபiஉயட ஊநவெநச யவ புநழசபநவழறn ருniஎநசளவைல.
போப் மேற்கோளுக்கு எடுத்துக் கொண்ட 14 ம் நூற்றாண்டை பைசாந்திய மன்னர் இரண்டாம் இமானுவேல் ஒரு போர் வெறியன். தொடர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமான வார்தததைகளில் தூசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவன். 1394 க்கும் 1402 க்கும் இடைப்பட்ட காலத்தில் கான்ஸ்டாண்டி நோபிளோடு அவன் யுத்தம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஓரு பாரசிக பயணியுடன் அவன் செய்த வாதங்களை அவனது புத்தகத்தில் ஏழாவது உரையாடல் என்ற தலைப்பில் அவன் எழுதியிருக்கிறாhன். அவன் ஒரு புத்தகம் எழுதினான் என்ற ஒNரு காரணத்திற்காக போப் 16 ம் பெனடிக் தனது உரையில் அவனை ஒரு அறிஞர் என்று குறிப்பட்டார்.
நிகழ்காலத்தின் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் போப் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு மிக்க பண்டைய பைசாந்திய அரசனோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனம் இனத்தோடு சேர்ந்திரக்கிறது . அவ்வளவே!
வாடிகனுகும் முஸ்லிம் உலகுக்கும் நல்லிணக்கம் நிலவி வரகிற இன்றைய சூழ்நிலையில் முன்னர் எப்போதோ ஒரு யுத்த காலத்தில் ஒரு அரசன் பேசிய பேச்iசை மேற்கோளாக எடுத்துக் கூறயயது தகுமா என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கிறார்கள் அவர்கள் தற்போதையோ போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலத்திதை பற்றி அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலம் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்டதாகவும் முஸ்லிம்களின் மீது ஆத்திரம் கொண்டதகவும் இருந்திருக்கிறது. அவர் ஜொமனியில் இருக்கும் போது ஜெர்மனியிலுள்ள முஸ்லிம் இளைஞர்களை காட்டுமராண்டிகள் என வர்ணித்திருக்கிறார். வாடிகனில் கர்டினலாக இருக்கும் போதும் அவரிடம் முஸ்லிம் எதிர்புணர்வு மேலோங்கியிருந்து. அதன் விளைவாக துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதை அவர் எதிர்த்தாh. 1996 அவர் எழுதிய ஒரு கட்டுரையில் நவீன நாகரீக வாழ்கை முறை யை சுவீகரித்துக் கொள்வதில் இஸ்லாம் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவரக்கு முன்னர் நீண்ட காலம் போப்பாக இருந்த இரண்டாம் ஜான் பால் சமய நல்லுறவுக்கு அரும்பாடு பட்டார்.மற்ற மதங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்தார். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போரை எதிர்த்தார். அப்பாவி மக்களை கொல்லவதற்கு பதிலாக பேச்சு வார்த்தையின் வழிகளை கையாளுமாறு அவர் புஷ்ஷை கேட்டுக் கொண்டார்.அவர் ஒரு முறை சிரியாவுக்கு பயணம் சென்ற போது அங்குள்ள பள்ளிவாசலுக்குள் சென்று பார்வையிட்டார். முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு முதன் முதலாக நுழைந்த நுழைந்த போப் என்ற பெயர் பெற்ற போப் ஜான் பால் முஸ்லிம் உலகத்துடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த சர்வதேச சமயங்களுக்கிடையேயான உரையாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆந்த உரரையாடலுக்கு ஏற்பாடு செய்ததது குறித்து அப்தேயை வாடிகன் கர்டினலாக இருந்த போப் பெனடிக்ட அதிருப்தி கொண்டிருந்தார் என்பதும் இப்பொது கசிய வரகிற செய்திகளாகும்.
புல வகைகiளிம் 14 ம் நூற்றாண்டின் பைசாந்திய மன்னனின் மனோபாவத்தோடு 16 ம் பெனடிக்டின் மனோபாவமும் ஒத்தப்போனது. ஆதன் விளைவாகவே ஆந்தப் பதினான்காம் நூற்றாண்டின் பழைழய வார்த்தைகளைத்தானட் போப் இப்போது தூசு தட்டடி எடுத்து வந்து தேவையற்ற ஒரு அலர்ஜியை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.
இம்மானுவேலின் வார்ததைகளi எடுத்துக் கூறுவதற்கு மன்பாக நான் மேற்கோள் காட்டுகிறேன் நான் மேற்கோள்தான் காட்டுகிறேன் என்று இரண்டு தடவை கூறினாhர். ஆந்த தடுமாற்றமே இந்தச் செய்தி எத்தகைய பாதிப்பை உண்டு பணணக்கூடியது என்று அவர் தெரிந்திரக்கிறார் என்பதை புலப்படத்தி விடுகிறது. வுhட்டிகன் அதிகாரி சொல்வது போல இது ரேர் சிலிப் அரிதான சருகுதல் அல்ல. இது முஸ்லிம்களை அரிக்கும் சருகுதல் என்று அவரக்கு தெரிந்தே இருக்கிறது. போப்பின் தங்க் சிலிப்பாகவில்லை. அவரது தின்கிங்கே சிலிப்பாகியிரக்கிறது. அவரது உள்மனதின் வேட்கையை தீர்துக் கொள்ள இம்மானுவேலின் வார்த்தைகள் அவருக்கு துணை செய்திருக்கின்றன.
இம்மானுவேல் பாரசிகப் பயணியுடன் வாதம் செய்த போது முஹம்மது இந்த உலகிற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. வன்முறையைiயும் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை களiயுமே அவர் உலகிற்கு விட்டுச் சென்றார் அவரது உத்தரவுகள் வாட்களின் வழியாக பரப்பபட்டன என்று கூறியுள்ளான்.
இந்த மேற்கோளை உள்ளடக்கிய போப்பின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு உலகின் அனைத்து பாகததிலும் எழுந்தது. இது பொறுப்பற்ற பேச்சு என்பது அனைத்து மக்களின் முதன்மையான விமர்சனமாக இருந்தது. போப்பை கண்டிக்கத் தயங்கிய கிருத்துவ தலைவர்கள் கூட இது தேவையற்ற மேற்கோள் என்று கூறினர். அமெரிக்காவின் பல இடங்களிலும் கிருத்துவர்கள் முஸ்லிம்களை சந்தித்து போப்பின் பேச்சு தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று தெரிவித்துள்ளனர். இது விசயமாக தனது கருததை தெரிவிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸின் ஆர்ச் பிஷப் ரோஜர் மோனி தென் கலிபோர்னியாவில் உள்ள 70 பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்று பர்பரா பர்குஸன் அரப் நியூஸில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் விரைந்து போப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். ஜெர்மனிய இஸ்லரிய மையத்தின் தலைவர் அய்மன் மாஜிக் மிகக் கடுமையாக போப்பை சாடினார். ரத்தக்கறை படிந்த வரலாறுகளை கொண்ட கிருத்துவ தேவாயத்திற்கு மற்ற சமயங்களை நோக்கி விரல் நீட்டி பேசுகிற தகுதியில்லை என்று அவர் சொன்னார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்த மிகக் கொடுரமான சிலுவைப் போர்களுக்கு தலைமை தாங்கியதும் அதை தூண்விட்டதும் போப்கள் அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
உலகிலள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் உடனடியாக போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சமயத்தில் ஜித்தாவில் கூடியிருந்த சுவூதி இராக் ஜோர்டான் பஹ்ரைன் சிரியா எகிப்து குவைத் ஆகிய ஏழு அரபு நாடுகள் மற்றும் இரான் துரக்கி உள்ளிட்ட நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டமும் போப்பின் அறிக்கையை கண்டித்து அவர் தெளிவான மன்னிப்பை கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. லெபனானில் உள்ள சன்னி இஸ்லாமிய நீதிமன்றத்தின் தலைவர், துரக்கியின் சமய விவாகரங்களுக்குhன பொறுப்பதிகாரி அகியோர் அருவருக்கத்தக் வெறுப்பூட்டுகிற வார்ததைகளi இஸ்லாமின் மீது பிரயோகிதத்தறகாக போப் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினர். கத்தார் பல்கலைகழகத்தின் இஸ்லாமிய தத்தத்தவத் துறை தலைவர் மஹம்மது இயாஸ் போப் கிள்ப்பிய பிரச்சினையில் திறந்த விவாததத்திற்கு தான் தயாராக இருப்பதாக அறைகூவல் விடுத்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கை இது விசயத்தில் விரைவாகவும் தெளிவாகவும் இருந்தது. பாராளுமன்றம் போப்பின பேச்சை கண்டித்தது. அதன் வெளியுறவுத்துறை பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம் மிகச் சிறப்பாக போப்புக்கு பதில் கொடுத்தார். போப்பின் இந்தப் பெச்சு இஸ்லாமை பற்றி அடிப்படை அறிவு இல்லாமையை காட்டுகிறது என்று கூறிய அவர், அறியவில் கலைகள் அனைத்துககும் முஸ்லிம்கள்தான் அடித்தளமிட்டனர். உலகத்தை அறியமைiயும் இருளும் சூழ்ந்திருந்த போது முஸ்லிம்கள் தான் வெளிச்ச விளக்ககுகளை ஏற்றினர் என்று அவர் கூறுpனார். இஸ்லாம் இயற்கையான அறிவார்த்தமான மனிதாபிமானம் மிகுந்த மார்க்கம். அது தன்னுடய தொண்டர்களை இப்பண்புகளின் அடிப்படையில் வாழும்படி தான் பணிக்கிறது எனவே திடீரென முளைக்கிற எவரும் இஸ்லாம் பகுத்தறிவை ஏற்கவில்லை என்று கூறுவது கண்டிக்ககத்தக்கது என்றும் அவர் கூறினார். இத்தாலியிலுள்ள பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தின் முதல்வர் இஜாஸ் அஹ்மது கிரேக்க தத்தவங்களை முதன் முதலில் மொழி பெயாத்தவர்கள் அதை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள தான் என்பதை நினைவு கூர்ந்தார்.
இஸ்லாம் பற்றி போர்ப்பின் கருத்துக்குள் அருவருப்பானவை. கவலை அளிப்பவை என்று கூறிய துருக்கியின் பிரததமர் ரஜப் தைய்யிப், போப் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வருகிற நவம்பரில் துருக்கியில் போப் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். அதற்குள்ளாக போப் தனது கருத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்று விட வேண்டும் என்று எதிர்பார்கிற துருக்கிய அரசாங்கம் போப்பின் பயணத்தை ரத்து செய்யவோ தாமதப்படுத்தவோ கோராது என்றும் தெரிகிறது. ஆனால் முஸ்லிம்கள் முழமையாக சமாதானப் படுத்தாததவரை பழைய மரியாதையோடு போப் துருக்கிக்கு செல்ல முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஊலகம் முழவதிலும் வாழ்கிற முஸ்லிம்கள் இஸ்லாத்தைதையோ இறைத்த}துதரையோ இழிவுபடுத்தப்படுத்துவதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய 24 அமைப்புக்ள அங்கம் சகிக்கிற காஷ்மீர் மாநாட்டு அமைப்பு போப்பனி; பேச்சு இஸ்லாத்தின் மீதான புதிய வகை சிலுபை; போர் தாக்குதல்களாகும் என்று கூறியுள்ளது.
பாலஸ்தீனீன் சில பகுதிகளில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. இராக்கின் பஸரா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமெரிக்கா மற்றும் ஜொமனியின் கொடிகள் தீக்கிரையாககப்பட்டன. புல இடங்களில் போப்பின உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
சடுதியில் நிகழ்ந்தேறிய இந்த எதிப்புகளால் போப் 16 ம் பெனடிக்ட் சனிக்கிழமை அவரது கோடை வாசஸ்தலமான ரோமிற்கு அருகிலள்ள ஒரு மாளிகையில் தனது பக்தர்களிடையே பேசும் போது டீல்லி சாரி என்று கூறினார். என்னுடைய வார்த்தைகளால் நிகழ்ச்து விட்ட சரமங்களுக்கு தான் மிகவும் வருந்தவதாக கூறிய அவர் தான் மேற்கோளாக எடுத்துக் காட்டிய வார்த்ததகள் தனது சொந்தக் கரத்தை பிரதிபலிப்பைவ அல்ல என்றும் கூறினார்.முஸ்லிம்கள் தன்னுடைய வார்த்தகள் தவறாக பரிந்து கொண்டனர் என்றும் கூறினார்.
போப்பின் இந்தப் மன்னிப்பு பெரிதாக பேசப்படுகிறது. போப் விரைவாக சாரி கேட்டுடுவிட்டதில் சிலர் சமாதானம் அடைந்தாலும் அந்த சந்தர்பத்திலும் அவர் உதிர்த்த வாசகங்களில் ஜார்ஜ் புஷ் குறிப்பிடுவத போன்ற உள்ளாத்தமான மன்னிபு;பு இருப்பதாக பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஐNhப்பிய ஊடகங்களே கூட போப் முழமையான வருத்தம் தெரிவித்துவிட்டதாக நினைக்கவில்லை. சந்தேத்திற்கிடமற்ற வகையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று போப் கோரப்பட்டார். ஆனால் இதுவரை அவர் தனது வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கான வருத்தத்தை மட்;டுமே தெரிவித்துள்ளார் ஏன பி.பி.சி.யின் இனையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.
16 ம் தேதி தனது பேச்சினால் ஏற்பட்ட விளைவுகளுக்காக அதிகம் வருந்து வதாக போப் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் வருத்தம் தெரிவிக்கும் சரியான வழிதானா என்ற ஒரு வாக்கெப்பை சி என் என் தெலைக்காட்சியின் இணைய தளம் நடத்தியது. 22 ம் தேதிவரை நடந்த அந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 1,16,533 பேரில் 101793 பேர் அதாவது 87 சதவீதம் பேர் போப்பின் வார்த்தைகள் வருத்தும் தெரிவிக்கும் சரியான வழி அல்ல என்று கூறியிருக்கின்றனர். 13 சதவிதத்தினர் மட்டுமே அவரது மன்னிப்பு சரிதான் என்று கூறியுள்ளனர்.
போப்பின் மன்னிப்பு அறிக்கையை திசை திருப்பும் நடவடிக்கை என்று விமர்ச்சித்த எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ், மன்னிப்பு கோரும் முறை இதுவல்லவே என்று கேட்டார்.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவரான யூசுப் அல் கர்ழாவி போப்பின் மன்னிப்பு அறிக்கை நிராகரித்தார். போப்பின் மன்னிப்பு மன்னிப்பு அல்ல. முஸ்லிம்கள் தவறாக விளங்கிக் கொண்டனர் என்பது முஸ்லிம்களின் மீது இன்னொரு அவதூறு என்று கூறினார்.
மேற்கோளாக எடுத்துக் கூறிய அந்த வாhத்தைகள் தமது எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்று போப் கூறுவது ஏற்கத்ததக்கதல் என்று கூறிய கர்ழாவி, வார்த்தைகள் தெளிவாக இருக்கும் போது நினைப்புகள் பற்றி நாம் விசாரித்துக் கொண்டிருக்க தேவையில்லை என்றும் கூறினார். (ஹீன யகூனல் கலாமு சரீஹன் லா நஸ்அல் அனின்னிய்யாத்)
முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரோமிலும் பார்சிலோனாவிலும் நடந்த பேச்சு வார்ததையில் நாங்கள் கலந்து கொண்டோம். சரியான மன்னிப்பு வராதவறை இனியுண்டான கூட்டங்களில் நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று கூறிய அவர் சர்ச்சுகளi தாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
எழத்துப் பூர்வமான ஒரு விளக்கம் தேவை என அரபு நாடுகளின் தூதர் கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சரியான மறுப்பு வராவிட்டால் வாடிகன் உடனான தங்களது உறவை முஸ்லிம் நாடுகள் மறித்துக கொள்ள வேண்டும் என்ற கோரிக்களை வலுப்பெற்றுவரகின்றன.பகிரங்கமான தெளிவான ஒரு மன்னிப்பு வெளிவராத வரை இஸ்லாமையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் போப் களங்க்கப்டுத்தியது தொடருவதாகவே பொருள் என அரபுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். முஹம்மது சலீம் அல் அவாபி கூறியுள்ளார்.
மன்னிப்பு அறிவிப்பினால் இஸ்லாமிய அரசுகள் சமாதானமடையவில்லை ஆகையால் வாடிகனின் தூதரக அதிகாரிகள் இஸ்லாமிய அரசுத்தலைவர்களைச் சந்தித்து விளக்கமிளிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீராவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உண்மையில் போப்பின் மன்னிப்பு அறிவிப்பு ஒரு பம்மாத்து வேலை. மேற்கத்தியஅரசியலின் ஒரு பக்கா கில்லாடியாக 16 ம் பெனடிக்ட் இந்த மன்னிப்புpன் மூலம் தன்னை அடையாளம் காட்டிவிட்டார். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை குரூரமாக புண்படுத்திவிட்டு அதற்காக ஒரு சரியான வருத்தம் கூட தெரிவிக்கத் தெரியாதவர் கருணையே வடிவான ஏசுவின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது கிருத்துவத்திற்கு இந்த நூற்றாண்டில் நேர்ந்த மிகப் பெரிய சோதனையாகும். கிருத்துவம் வேறு திருச்சபை வேறு என்ற பழைய வரலாறு மீண்டும் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
ஏது எப்படி இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்களது புகழின் மீதும் கை வைக்கிற எவரும் தங்களது மரியதையை இழக்க நேரிடும் என்ற சத்தியம் மீண்டும் ஒர முறை நிஜமாகி இருக்கிறது.

No comments: