Monday, September 27, 2010

பெருநாள் சிந்தனை

இனி இஸ்லாம் வெல்லும்

“அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதின் 8 வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுகிறார்கள்”இணைய தளங்கள் பலவற்றிலும் தற்போது பரபரப்பாக இருக்கிற செய்தி இது.

இந்த ஆண்டு ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் செப்டம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் படக்கூடும். ஒரு வேளை செப்டம்பர் 11 ம் சனிக்கிழைக்கு அது தள்ளிப் போகவும் இடமுண்டு.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் பிறையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படுகிறது. ரம்லான் 29 முடிந்த பிறகு அன்றைய இரவு அந்தி வானத்தில் சந்திரன் இளம் பிறையாகக் கண்ணுக்கு தென்பட்டால் அது ஷவ்வால் மாத்த்தின் முதல் தேதியாக அமையும் என்ற இஸ்லாமிய சட்ட விதியின் படி பிறை தெரிகிறதா உலகெங்கிலும் இருக்கிற முஸ்லிம்கள் ஆர்வத்தோடும் ஆசையோடும் அந்தி வானத்தை அன்னாந்து பார்க்கிறார்கள். பிறை தென்பட்ட தென்றால் எங்கும் மகிழ்சி பீரிட்டுக் கிளம்புகிறது. தக்பீர் முழக்கம் வானை நிறைக்கிறது. முஸ்லிம்கள் பெருநாளை வரவேற்கத் தயாராகிறார்கள்.

அனறு இரவு பிறை தென்படாவிட்டால், இன்னொரு நோன்பு நோர்க்கவும், இன்னும் ஒரு தராவீஹ் எனும் ரமலானின் விஷேச இரவுத் தொழுகைக்கு வாய்புக் கிடைத்த்தென முஸ்லிம்கள் ஆனந்தமடைகிறார்கள். அதற்கடுத்த நாளில், ஈத்பெருநாள் கம்பீரமாக களை கட்டுகிறது.

உலக முஸ்லிம்களின் இந்த உன்னதமான கலாச்சாரம் இப்படியே ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்து அற்புதமான ஒரு நிகழ்வாக நடை பெற்று வருகிறது.

இந்த நடை முறையால் இயந்திரத்தனமான திட்டமிடுதல் தவிர்க்கப் பட்டு ஒரு பிள்ளைப் பேற்றின் இயல்பான மகிழ்ச்சியும் குதூகலமும் பெருக்கெடுப்பதை முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வருகிறது.

சில அவசரக் குடுக்கைகளும் அதிருப்தி ஜீவிகளும் இஸ்லாமின் இந்தக் கலாச்சாரத்திற்கு எதிராக செய்ல்படக் கிளம்பினார்கள். அவர்களின் சரியாக வேகாத அவியல் அறிவியல் த்த்துபித்துக்களை சமூகம் புறந்தள்ளி தனது இஸ்லாமிய மரபு வழியான கலாச்சார வேர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்ட்து. அதனால் ஈதுல் பித்ர் செப்டம்பர் 10 தேதி கொண்டாடப்படலாம். அல்லது செப்டம்பர் 11 ம் தேதி கொண்டாடப்படலாம் என்ற அறிவிப்பை சரியாகப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் சமூகத்திற்கு பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது.

ஈதுல் பித்ர் பெருநாள், ரமலானின் ஒரு மாத பட்டினி வணக்கம் நிறைவடைவதை ஒட்டி வருவதால் அதை உண்டு மகிழ்ந்து கொண்டாடும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு சொல்கிறது.

பக்ரீத் எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகு சாப்பிடாமல் கிளம்புவதும் ஈதுதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பிறகு கிளம்புவதும் இஸ்லாமிய கலாச்சாரமாகும். “நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடாமல் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு புறப்படமாட்டார்கள்” என பெருமானாரின் பணியாளர் அன்ஸ் (ரலி) கூறுகிறார். அதிலும் குறிப்பாக பேரீத்தம் பழத்தை ஒற்றை எண்ணிக்கையில் சாப்பிடுவது பெருமானரின் பழக்கம் என அவர் மேலும் தெரிவிக்கிறார். (ஸஹீஹுல் புகாரி 952)

எங்களது ஊரின் சில பள்ளிவாசல்களில் ரமலானுக்கு கஞ்சி காய்ச்சுவது போலவே பெருநாள் அன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு வரும் மக்களுக்கு பேரீத்தம் பழங்களை தட்டில் வைத்து நீட்டுகிற பழக்கம் இருக்கிறது. நபிகள் பெருமானாரின் ஒரு வழி முறையை கடைபிடிப்பதோடு அற்புதமான பெருநாள் வாழ்த்தாகவும் அது அமைந்து விடுகிறது.

தாம் உண்டு மகிழ்ந்த்தின் அடுத்த தொடர் நடவடிக்கையாக பிறருக்கு கொடுத்து மகிழும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பெருநாள் அன்று அன்றைய செலவுக்கு போக அதிகமாக காசு வைத்திருப்பவர்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தலைகட்டு தர்ம்மாக “பித்ரா” எனும் தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுத்துவிட வேண்டும்.

ஒவ்வொரு தலைக்கும் 1.700 கிராம் கோதுமை அல்லது 2.400 கிராம் நடுத்தர அரிசி வீதம் பித்ரா தர்ம்ம் வழங்கப்ப்ட வேண்டும். உண்வுப் பொருளாக வழக முடியாதவர்கள் பணமாக வழங்குவ்தெனில் குறைந்த பட்சம் தலைக்கு ரூபாய 35 என்று கண்க்கிட்டு வழங்க வேண்டும்.

இது குறைந்த பட்ச அளவு தான். விரிந்த உள்ளம் கொண்ட தயாபரர்கள் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி என்ற அளவில் கூட “பித்ரா” தர்ம்ம் வழங்கலாம். லட்சாதிபதிகளும் கோடீஸ்வர்ர்களும் அளந்து பார்த்து வழங்க வேண்டியதில்லை. அரிசி வழங்குபவர்கள் கூட வசதி இருந்தால் பிரியாணி அரிசி வழங்குவது ஏழை எளியவர்களின் பெருநாள் செலவின் சுமையை குறைக்கும். அதுமட்டுமல்ல செல்வந்தர்களின் கௌரவத்திற்கு அது அழகு சேர்க்கும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுரையாகும்.

பெருநாள் தொழுக்கைக்கு முன்னதாகவே பித்ரா தர்மத்தை வழங்கி விட வேண்டும் என்பது இஸ்லாமின் உறுதியான அறிவுரையாகும். தொழுக்கைக்குப் பின்னால் வழங்கப்படும் தர்ம்ம் சாதாரண தர்ம்மாகவே கணிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (இப்னுமாஜா 1817) என்வே பெருநாள் தொழுகைக்குப் பின்னால் தொழ்கைத்திடல்களின் வாசலில் காத்திருக்கிற யாசகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சில்லரை காசுகளாக பித்ரா தர்மத்தை மாற்றி விடக்கூடாது என்பதை சமுதாரப் பிரமுகர்கள் கவனிக்க வேண்டும்.

ஈதுல் பித்ர் பெருநாள் அன்று, அந்த மகிழ்ச்சியை வழங்கிய இறைவனை வணங்குவதற்கு முன்னதாக ஏழைகளை மகிழ்ச்சிப் படுத்திவிட வேண்டும் என்ற இஸ்லாமின் இந்தக் கோட்பாடு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மனப்பக்குவத்தை சமுதாயத்திற்கு வழங்குகிறது.

இந்த தர்மத்தை முதலில் தம் உறவினர்களிடமிருந்து தொடங்குவதே உண்மையான இஸ்லாமிய அக்கறையாகும். உறவினர்களுக்கு அடுத்தபடியாக தமது பகுதியில் இருக்கிற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவைப் பெருத்தவரை அது கடினமான வேலையல்ல. வீட்டு வாசலை விட்டு கீழே இறங்கினால் தகுதியுள்ள பலர் தாராளமாக கிடைப்பார்கள். அவர்களை தேடிச் சென்று சென்று தர்ம்ம் வழங்குகையில் ஒரு ஆனந்தம் கிட்டும். அந்த ஆனந்தம் தர்ம்ம் செய்த நிறைவை விட பேரானந்தமாக அமையும்.

சென்ற வருடம் இரத்தப்புற்று நோயாளல் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனைத்தேடி தன்னுடைய தர்மத்தை வழங்குவதற்காக ஒருவர் என்னோடு காரில் வந்தார். சுமார் 40 கீலோ மீட்டர் சுற்றி அலைந்த பிறகு அந்த இளைஞன் வீட்டை கண்டுபிடித்தோம். அவர்க் கொடுத்த பணம் 5000 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அதற்காக தகுதியுள்ளவரை தேடிச் சென்ற மகிழ்ச்சியும் மன திருப்தியும் அந்த சகோதர்ருக்கு 5000 ரூபாயை விட அதிகமாக இருந்த்து. ஒன்றுக்கு எழுநூறு மடங்கு அதிகம் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அது எப்படி இருக்கும் என்பதன் அட்வான்ஸாக இந்த மகிழ்ச்சி அவருக்கு அமைந்த்து.

ரகசியமாக தர்ம்ம் செய்வதிலும், அதுபோல தகுதியுள்ளவர்களை - யாரிடமும் கேட்கத் தயங்க்கிக் கொண்டிருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தர்ம்ம் செய்வதிலும் கிடைக்கிற பேராணந்த்தமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் சிலருக்கு கிடைக்காமலே போய்விடுகிறது.

எதிலும் காசுபார்த்து பழகிவிட்ட அமைப்புக்களிடமும் இயக்கங்களிடமும் “பித்ரா” தர்மத்தை வழங்குவது முஸ்லிம் சமூகத்துக்குள் புதிய பிரச்சினைகள் உருவாவதற்கே வழி செய்கிருக்கிறது ஈந்துவத்தலின் இன்பத்தை அனுபவிக்க்விடாத இயக்கப் பற்றாக அது மாறிவிட்ட்து என்பதும் இங்கே கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும்.


ஈதுல் பித்ர் பெருநாளின் இன்னொரு சிறப்பு. அது கடந்த கால நினைவை போற்றுவதாகவோ, ஏதாவது ஒரு தலைவர் அல்லது வரலாற்றுப் பாத்திரத்தின் ஞாபகார்த்தமகவோ அமைந்த்து அல்ல. அது முஸ்லிம்களது நிகழ்கால வாழ்வின் பக்தியையும் சந்தோஷத்தையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இனி வரும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாகவும் திகழ்கிறது.

இந்த ஆண்டு ஈதுல் பித்ர் பெருநாள் வருவதற்கு முன்னதாக ஒரு சர்ச்ச்சை முஸ்லிம்களின் வட்டாரத்தில் ஒரு பேச்சாக கிளம்பியிருக்கிறது.

கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள தகர்க்கப் பட்ட நிகழ்ச்சியின் எட்டாவது நினைவு செப்டம்பர் 11 அன்று அனுஷ்டிக்கப் பட இருக்கிறது. அது ஈதுல் பித்ர் பெருநாளில் அல்லது பெருநாளை ஒட்டிவருகிறது.

சில இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட பத்ரிகைகளும் இணைய தளங்களும் அமெரிக்க முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டங்களைப் பற்றி கேள்வி எழ்ப்பிவருகின்றன. சில இணைய தளங்கள் பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வண்ணம் கலக்கத்தையும் பீதியையும் எழுப்பி வருகின்றன. பிரஞ்சுப் பத்ரிகையான “லுமோன்ட்”இதில் வெறுப்பை உமிழும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது,

அமரிக்க முஸ்லிம்களின் தகவல் தொடர்பு மையத்தின் சார்பாக பேசுகிற இபுறாகிம் ஹூபர் என்பவர் மின்னணு ஊடங்கள் செய்து வருகிற பிரச்சரம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது பெருநாளை கொண்டாடுவதில் கலக்கமுற்றிருப்பதாகவும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களது பெருநாள் நிகழ்ச்சிகளை இரத்து செய்திருப்பதாகவு கூறியுள்ளார்.

வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பெருநாள் கொண்டாட்டங்களை செபடம்பர் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த் தகவல்கள் விஷமத்தனமாக கிளப்பட்டிருக்கலாம்.. ஏனெனில் பெருநாள் கொண்டாட்டம் என்பது முஸ்லிம்களை பொருத்தவரை அது இறைவனால் வழங்கப் பட்ட்து. இறைவனால் தீர்மாணிக்கப் பட்ட்து. பெருநாட்களை எதன் பொருட்டும் துக்கமாக அனுஷ்டிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது பெருநாள் கொண்டாட்டங்கள் என்பது இறைவனை வணங்கி இல்லாதோர்க்கு வழங்கி மகிழ்வ்தேயாகும். குடித்து கூத்தாடி கும்மாளம் அடிக்கும் கொண்டாட்டங்கள் அல்ல. கொண்டாட்டம் என்ற வார்த்தையே கூட இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேச பொருத்தமற்றதாகும். வழக்குச் சொல் என்பதற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை என்பதற்காகவுமே அச்சொல் இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேசப்படுகிறது. என்வே இஸ்லாமிய பெருநாட்கள் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை தருவதாக இருப்பதில்லை,

அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மேற்குல நாடுகளும் இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதயாத்திற்கும் செய்துள்ள் தீமைகளும் கொடுமைகளும் ஏராளம். இப்போது செய்துவருகிற சதிச் செயல்களும் ஏராளம். அவற்றோடு ஒப்ப்டுகையில் இரட்டை கோபுரத் தகர்ப்பின் கொடூரம் என்பது சாதாரணமானதே! ஆயினும் முஸ்லிம் சமுத்யாம் அந்த அநியாயத்தை அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய நீதி என்பது ஒளிவு மறைவற்றது. சுதி பேதம் இல்லாதது. அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்வது மொத்த மனித சமூகத்தையும் கொலை செய்வது போன்றது எனப் பகிரங்கமாக பிரகடணப் படுத்திய சமயம் இஸ்லாம். மனிதாபிமானத்தில் வேஷம் போட முஸ்லிம்களுக்கு இஸ்லாம் கற்றுத்தரவில்லை.

என்வே இரட்டை கோபுரத் தகர்ப்பில் அப்பாவிகள் கொல்லப் பட்ட்தற்கு முழு முஸ்லிம் உலகும் தங்களது கண்டனத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட்து. இப்போதும் முஸ்லிம்கள் அந்த விபத்தில் தங்களது உறவுகளை இழந்தவர்களுக்காக தங்களது ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இறைவா! அந்த கொடுமையான விபத்தில் தங்களது பாசத்திற்குரிய உறவுகளை இழந்து வாடுவோருக்கு நீ தகுந்த ஆறுதலை கொடு! வாழ்வின் நம்பிக்கை இழந்து நிற்போருக்கு நீ தகுந்த பரிகாரம் செய்! என்று பிரார்த்தனை செய்யத்தான் செய்கிறார்கள்.

ஆனால் அமெரிக்க மக்களுடைய உயிர் ம்ட்டுமே உன்னதமானது. மற்ற்வர்களின் உயிர்களும் உடமைகளும் மசுறுக்கும் மதிப்பற்றவை என்ற அமெரிக்க மனோபாவத்தை எந்த நாகரீகமுள்ள மனிதனும் ஒத்துக் கொள்ள மாட்டான. முஸ்லிம்களாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாது.

சில அமெரிக்க்க அரசியல் வாதிகளும், வகுப்புத் துவேஷம் கொண்ட சில செய்தி ஊடகங்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பு நிகழ்வை இத்தகைய அமெரிக்க மனோபாவத்தோடு தொடர்ந்து அணுகுகிறார்கள். இஸ்லாமிய கருவறுக்க உதவும் சாதனமாக அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், இந்தப் போக்கின் காரணமாக் இரட்டை கோபுர விபத்தை நிய்யப் படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் செல்லக் கூடும்.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சத்திதிட்டமான இரட்டை கோபுரத் தகர்ப்பும் முஸ்லிம்களின் சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று வலுவாகப் பிணைந்திருக்கின்றன. அந்த நிகழ்வுக்குப் பின் அமெரிக்காவிலுள்ள முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம் சமூகமும் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் அளவுக்கு மீறிய ஆணவப் போக்கினாலும், அரபு தீபகற்ப பகுதிக்குள் அவர்கள் நட்த்திய வன்முறை வெறியாட்டங்களாலும் பாதிக்கப் பட்ட மக்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து இவனுக்கு இப்படி கொடுத்தால் தன் வலிக்கும் என்று நட்த்திய தாக்குதலே இரட்டை கோபுரத் தகர்ப்பு. ஆனால் இத்தாக்குதலுக்கு மூலமான பிரச்சினையை என்ன என்பதை மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்பியதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெய்ரை பரப்புவதிலும் முஸ்லிம்களின் மரியாதையை பங்கப் படுத்துவதிளும் அமெரிக்கா தற்போது வெற்றிய்டைந்திருக்கிறது. அதனால் சர்வதேச அளவில் முஸ்லிம்களின் நிலை இப்போது சிக்கலுக்குள்ளாக்ப் பட்டு வருகிறது. 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் மிக்ச் சவலான் சூழ்நிலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..

தந்திரம் மிக்க எதிரிகள், கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களிடமிருக்கிற எல்லாவகையான நவீன ஆயுதங்களையும் ஊடகங்களையும் பய்ன்படுத்தி இந்த பூமிப்பந்தின் மேற்பரப்பின் பெரும் பகுதியை பன்னூறு ஆண்டுகள் கோலாச்சிய சமூகத்தை, உலகத்திற்கு சுதந்திரத்தையும் நாகரீகத்தையும் முன்னேற்றத்தையும் அறிமுகப் படுத்திய சமூகத்தை ஒரு குற்றவாளிச் சமூகமாக, பிற்போக்கான சமூகமாக சித்தரித்து, ஆதிவாசிப் பழங்குடிகளை அழித்த்து போல் அழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிய மண்ணிலும் வேட்டையாடப் படுகிற மக்களைப் பற்றிய காட்சிகள் இந்த வேட்டைக்கார்ர்களின் இரத்த வெறிக்கு சாட்சியாக நிற்கின்றன. இந்தப் படு கோரமான சூழ்நிலையை வென்றெடுக்கிற சக்தி முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்பதில் சந்தேகத்திற்கு இடமிருக்கலாம். ஆனல் இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல இதைவிடக் கடுமையான பகையாளிகளையும் வாகை சூடுகிற சக்தி இஸ்லாத்திற்கு இருக்கிறது.

இஸ்லாமின் வெற்றிப் பாதை பெரும் பாலும் மலர் படுக்கையாகத்தான் இருந்த்து. காரணம் இஸ்லாம் மனிதர்களை ஆக்ரமிப்பதில்லை ஆட்கொள்கிறது. இஸ்லாமின் நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் அவ்வப் போது இது போன்ற டுரமான மிருக வெறித் தாக்குதல்கள் ஏற்பட்ட்துண்டு. அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் இப்போதைய நிலையை விட மோசமாக கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இனி எதிர் காலமே இல்லை என்று எதிரிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாம் சாமப்லில் இருந்து உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையை போல - அல்ல - நம்ரூதின் நெருப்புக் குண்ட்த்திலிருந்து மீண்ட தீர்க்கதரிசி இபுறாகீமைப் போல பல முறை புத்துணர்வோடு எழுந்திருக்கிறது.

13 ம் நூற்றாண்டில் மங்கோலியப் பழங்குடியினரான தாதாரியர்கள் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கரும்புக்காட்டுக்குள் புகுந்த யானை போல திடுமெனப் புகுந்து விவரிக்க முடியாத நாசத்தை விளைவித்தனர். சமர்கண்டு முதல் பக்தாது வரை வாழ்ந்த முஸ்லிம் உலகம் அந்த வெறி பிடித்த கூட்ட்த்தின் சண்டித்தனத்திலும் அமலியிலும் சிக்கி சின்னா பின்னமாகியிருந்த்து. த்தாரியர்களைப் பற்றி முஸ்லிம் சமூகத்தில் ஊடுறுவியிருந்த அச்சம் எத்தகையது என்பதை ஒரு அரபுப் பழமொழி படம் பிடிக்கிறது. அரபுகள் சொல்வார்களாம் : இதா கீல லக்க இன்னத் த்தர இன்ஹஸமூ பலா துசத்திக்
“தாதாரியர் தோற்று விட்டார்கள் எனறால் நம்பக் கூடாது”

ஒரு தாதாரியப் பெண் தங்கள் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞனைப் பார்த்து விட்டால் “அங்கேயே நில்: என்று எச்சரிப்பாள். அவன் அங்கேயே நின்று விடுவான். அவள் வீட்டுக்குள் சென்று வாளை எடுத்து வந்து அவன் தலையை சீவுவாள் என்று தாதாரியரின் ஆதிக்கத்தையும் அதை கண்டு எதையும் செய்ய்ய முடியாதிருந்த முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையையும் வரலாற்றாசிரியர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் மிகச் சீக்கிரத்தில் முஸ்லிம்கள் இந்தச் சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. அந்த மீட்சிக்கு இஸ்லாம் காரணமாக இருந்த்து,

எத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. அவர்கள் தோற்றுத் துவண்டு போன களங்களில் இஸ்லாம் வெற்றியடைந்திருக்கிறது, நவீன் ஆயுதங்கள் தொழில் நுட்பம் மிகுந்த ஊடகங்கள் என்ற எத்தைய எதிர்ப்புச் சூழ்நிலையும் மீறி தனது மக்களை காப்பற்றுகிற வலிவும் சாதுர்யமும் சாமார்த்தியமும் இஸ்லாத்திற்கு இருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இப்போது தென்பட்த்துவங்கி விட்டன. இஸ்லாமையும் முஸ்லிம்களை எதிர்த்து முழங்குவதயே வாடிக்கையக கொண்டிருந்தவர்கள் ஒருவனை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்ப உதைப்பது அவன் பக்கம் இருக்கிற நியாயம் என்ன என்று கேட்க வேண்டிய இயற்கையின் ஒரு கட்டாய்த் திருப்பத்திற்கு ஆளாகி இந்தப் பக்கமிருக்கிற நியாயத்தையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இனி இஸ்லாம் பேசும். அது தனது எதிரிகளை வெல்லும்.

ஆக்கிரமிப்புச் சக்திகளை தனது சத்திய வெளிச்சத்தால் இஸ்லாம் எதிர் கொள்கிறது என்பதே இஸ்லாமிய வெற்றியின் பின்னணியில் இருக்கிற ரக்சியம்.

தோல்வியின் வாசலிலும் விரக்தியின் விளிம்பிலும் நிற்கிற முஸ்லிம்கள் இஸ்லாமின் வழிகாட்டும் இந்த சத்திய விரலைப் பிடித்துக் கொண்டால் வரலாற்றின் சதிப்பள்ளங்களை அவர்கள் தாண்டிக் குதித்து விட முடியும். இரண்டாம் உலக யுத்த கால கட்ட்த்தில் துருக்கிய மக்கள் செய்த தவறை முஸ்லிம்கள் செய்து விடக்கூடாது.

இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு துருக்கியில் ஐரோப்பிய மோகம் கொண்ட ஒரு தலை முறை உருவானது. அவர்கள் இஸ்லாம் என்ற கீரீட்த்தை தங்கள் தலை மீது ஏற்றப் பட்டிருக்கிற சுமையாக கருதினார்கள். தங்கது அனைத்து வகையான பின்னடைவுகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று நினைத்தார்கள். உலகப் புகழ் பெற்ற துருக்கிக் தொப்பியை உதறினார்கள். தாடியை மழித்துக் கொண்டார்கள். பெண்கள் புர்கா அணியக் கூடாது என்றார்கள். ஐரோப்பியர்களைப் போல ஹட் தொப்பி வைத்துக் கொண்டார்கள். சுருட்டு பிடித்தார்கள். கோட் அணிந்து கொண்டார்கள். இப்படிச் செய்து விட்டால் ஐரோப்பியர்களாகி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்த்து. துருக்கிய மக்கள் தங்களது பழைய பெறுமையையும் இழந்தார்கள். புதிய முன்னேற்றத்தையும் இழந்தார்கள். இன்றும் ஐரோப்பாவின் நோயாளிகளாகவே இருக்கிறார்கள். இப்போது அங்கு ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. இஸ்லாமை தங்களது வாழ்க்க்கைகுள் மீட்டு வந்தாக வேண்டும் என்ற முனைப் போடு அங்குள்ள இளம் த்லைமுறை இஸ்லாம் வேண்டும் என்று கேட்டு போராடிவருகிறது.

சிறிது காலம் ஐரோப்பிய உலகு செய்த மூளைச் சலைவைக்கு இடம் கொடுத்த்தால் துரூக்கியின் வளர்ச்சி இன்னும் ஒரு 50 ஆண்டு காலத்திற்கு பின்னுக்குச் சென்று விட்ட்து.

இத்தைகைய விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் நெருக்கடிகளில் இருந்து மீளவும் முஸ்லிம்களுக் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. தங்களது சமயத்தை உறுதியாக பற்றிக் கொள்வதே அது!

இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமின் அடிப்படையான நீதி உணர்வுக்கு எதிராக தங்களது சுய உணர்ச்சிகளுக்கு சம்யச் சாயம் பூசிக் கொள்ளும் போலி புரட்சியாளர்களையும் தூய்மை வாதிகளையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள தவறி விடக்கூடாது. அவர்களை தங்களது சமூகத்தின் எல்லா மட்ட்த்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும். கட்டுச் சோற்றுக்குள் எலிகளையும் சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டு நீண்ட பயணம் போக முடியாது.

எல்லாருக்குமான நீதி எல்லோருக்குமான சட்டம் எல்லோருக்குமான கருணை என்ற தெய்வீக கோட்பாடே இஸ்லாமின் லட்சியம் என்ற சுத்தமான உணர்வு முஸ்லிம்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சாரார் புரிகிற அட்டூழியம் நீதி தவறும் துணிச்சலை அவர்களுக்கு தந்து விடக்கூடாது.

கொள்கையற்றவர்களும், மதமற்றவர்களும், வழிகாட்டிகளை தொலைத்தவர்களும் நட்த்திக் காட்டுகிற கூத்தாட்ட்த்தில் மயங்கிவிடாமல், முஸ்லிம்கள் தங்களது கிடைத்திருக்கிற உறுதியான சம்யக்கயிற்றை பலமாக பற்றிக் கொண்டால் போதுமானது. மார்க்கம் அவர்க்களை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டுவந்து விடும்; மக்காவின் ஒட்டகம் மேய்க்கத் தெரியாத உமர்களை உலகச் ச்கரவர்த்திகளாக உயர்த்தியது போல.

அனைவருக்கும் இனிய ஈத் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, August 4, 2010

பத்ரின் வரலாறு

கி.பி. 571 ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது நாற்பது வயதில் இறைச் செய்திகளை பெறத் தொடங்கிய பிறகு உருவமற்ற ஒரு இறைவனையே வணங்கவேண்டும் பிரச்சாரம் செய்தார்கள். ஆண்டாண்டு காலமாய் சிலை வணக்கத்தில் முழ்கிப் போய் பூம்யில் கட்டப்பட்ட முதல் இறையில்லமான கஃபாவிலேயே சிலைகளை வைத்து வழிப் பட்டுக் கொண்டு அதன் மூலம் தங்களை உயர்ந்த இனமாக அடையாளப் படுத்திக் கொண்டிருந்த குறைஷிக் குடும்பத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்காவில் அவரும் அவரது தோழர்களும் நியாயமற்ற சொல்லனா துயரங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளானானார்கள். கடுமையான சமூக ஒதுக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். அதன் காரணமாக அவர்களது துணைவியார் அன்னை கதீஜாவின் திரளான சொத்துக்கள் காலியாயின. பல தோழர்கள் கடும் சித்தர்வதைக்கு ஆளானார்கள். சிலர் அந்தச் சித்திரவதைகளில் தம் இன்னுயிரை இழந்தார்கள். பக்கத்திலிருந்த வேறு ஏதாவது ஊரில் அடைக்கலாம கோரலாம் என்றால் மக்காவி குறைஷியர் அதற்கும் இடையூறு செய்தார்கள் விதித்தார்கள். எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் இஸ்லாமை தழுவிய ஒரு காரணத்திற்காக இந்தக் கொடுகைக்கு அவர்கள் ஆளாக்கப் பட்டார்கள். எந்த வகையிலிம் பதிலடி தருவதற்கு முஹம்மது (ஸல்) முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கவுமில்லை. பொறுமை பொறுமை என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது, எதுவரை பொறுமையாக காப்பது? என்று உணர்ச்சிவசப்பட்ட தோழர்களைப் பார்த்து முஹம்மது (ஸல்); “ நீங்கள் அவசர ப் படுகிறீர்கள். உங்களது தலை இருபுச் சீப்பால் வாரப்படலாம். அப்போதும் பொறுமையாக இருங்கள். ஒரு நல்ல காலம் பிறக்கும் அப்போது அரபு தீபகற்பம் முழுதும் அக்கிரமம் ஒழிந்து அமைதி தவழும் அது வரை பொறுமையாக இருங்கள் என்றார்கள். தோழர்கள் அடக்கு முறைகளை சகித்துக் கொண்டார்கள். எல்லவகையான இழப்புகளுக்கும் சம்மதித்தார்கள். மக்காவிலுர்ந்து வெளியேறுவதற்காக பல தோழர்களும் தங்களது வீடு, வாசல், தொழில் நிறுவனங்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் அத்தனையையும் மக்கா குறைஷிகளிடம் கொடுத்து பிறகே வெளியேற முடிந்தது.
முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தளம் அமைந்தது. மதீனா இஸ்லாமிய நகராக உருவாகியிருந்தது.மக்காவின் குறைஷிகள் முஹம்மது ஸல்) அவர்களை நிராகரித்த போது மதீனா நகரத்து பிரபலங்கள் பலர் மக்காவிற்கே வந்து அவரை ஏற்றனர். தங்களது ஊரில் அவரை வரவேற்கத் தயாராயினர்.
தலைவர்கள் முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது இன்றைய அரசியலின் இயல்பு. ஆனால் மதீனாவில் தனக்கு ஒரு வசதியன தளம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகும் கூட முஹம்மது (ஸல்) அவர்கள் உடனடியாக மக்காவை விட்டு வெளியேறி விடவில்லை, தோழர்களை முதலில் அனுப்பி வைத்தார். இறுதியில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது மக்கா நகரிலிருந்து வெளியேறி மதீனாவில் குடியேறினார்.
அங்கு வசதியான இடம் கிடைத்தது என்ற போதும் ஒரு கொள்கையை ஏறுக்கொண்டதற்காக மக்காவின் மக்கள் மதீனாவில் அகதிகளாக வசதி வாய்ப்புக்களை இழந்து குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வது நபிகள் நாயகத்திற்கு கவலையளிப்பதாகவே இருந்தது. அல்லாஹ் அந்தக் கவலைக்கு ஒரு தீர்வு சொன்னான.
அதுவரை திருப்பித்தாக்குவதற்கு தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம்கள் இனி தங்களது தாக்குதலை தொடங்கலாம் என்று அனுமதி யளித்தான், திருக்குரானின் அந்த உத்திரவு இப்படி அமைந்தது. அதி அற்புதமாக சொல்லப் பட்ட உத்திரவு அது
யுத்தம் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானோருக்கு எதிர்த்து போராட அனுமதிக்கப் படுகிறது. அவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. தங்களது வீடுகளை விட்டு அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றலுடையவன்
இந்த வசனத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவரளின் அரசியல் நடவ்டிக்கைகள் தீவிரம்டைந்தன. நமது பொருட்களை அபகரித்தவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என பெருமானார் நினைத்தார்கள்.
அப்போதுதான் தான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. மக்காவிலிருந்து 43 வியாபாரிகளைக் கொண்ட பெரும் வியாபாரக் கூட்டமொன்றூ அபூசுப்யானுடைய தலைமையில் சிர்யாவுக்கு புறப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது.அந்த வியாபாரத்தில் மக்காவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கிருந்தது.
மக்காவிலிருந்து சிரியாவுக்கு செல்வதானால் மதீனாவை கடந்து தான் செல்ல வேண்டும். செங்கடலை ஒட்டு ஒரு பாதை இருந்தது அது தொலைவு அதிகம், எனவே மதீனா வழியாக கடந்து செல்லும் மக்காவின் வியாபரக் கூட்டத்தை கைப்பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க முஹ்மமது (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள்.
சில குழுக்களை அனுப்பி வியாபாரம் கூட்டம் குறித்து விசாரிக்க அனுப்பினார்கள். நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் தலைமயில் சென்ற ஒரு குழு மக்காவின் வெறு ஒரு சிறு வியாபாரக் கூட்டத்தை சந்தித்தது. அவர்களிடையே நடைபெற்ற மோதலில் அம்ரு பின் ஹழ்ரமீ என்ற மக்கா காரர் கொல்லப் பட்டார். ஆனால் அபூசுபயானுடைய வியாபாரக் கூட்டம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் தானே தேடிச் செல்வது என்று முடிவு செய்தார்கள். தோழர்களை திரட்டினார்கள். அது ஒரு திட்டமிட்ட திரட்டுதலும் இல்லை. வருவோர் வரலாம் என்று அழைத்தார்கள். புறப்படுகிற போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கூட கணக்கிடப் படவில்லை. இடைவழியில் ஆட்களை எண்ணும்படி பெருமானார் உத்தரவிட்டார்கள். ஒருவர் எண்ணிப் பார்த்து விட்டு 313 பேர் இருக்கிறார்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அந்த எண்ணிக்கையை கேட்டு மகிழ்ச்சிய்டைந்தார்கள். முற்காலத்தில் ஒரு முறை தங்களது தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடந்து கொண்ட யூதர்க்குழுவினர் 313 பேர் இருந்ததனர் என்பதால் அந்த எண்ணிக்கை பெருமானாருக்கு மகிழ்சியளித்தது.
இதற்குள் சிரியா சென்று சேர்ந்து விட்ட அபூசுப்யானுக்கு நபிகள் நாயகத்தின் திட்டம் தெரிய வந்தது, அவர் ழம்ழம் என்ற ஒரு நபரை கூலிக்கு அமர்த்தி மக்கா குறைஷியரின் வியாபாரக் கூட்டத்திற்கு முஹம்மதால் ஆபத்து என்ற செய்தியை சொல்லுமாறு அனுப்பி வைத்தார்.
ஏற்கென்வே ஒரு கொலையால் கோபம் கொண்டிருந்த மக்காவிற்குள் இந்தச் செய்தி பெரும் புயலை உண்டு பண்ணியது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொட்டிருத பிரதான எதிரி அபூஜஹ்ல் வெறித்தனமாக மக்காவின் ஆட்களை திரட்டினான். 100 குதிரைகள் ஆயிரம் காலாட்ப்டையினரோடு அவன் படை எடுத்து புறப்பட்டன். ஆட்டம் பாட்டத்தோடு அவனது படை மதீனாவை நோக்கி நகர்ந்தது.
அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து மக்காவின் பாதையில் பயணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுமார் 80 மைல்கள் பயணம் செய்து பத்ரு கிணறு இருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அபூஜஹ்லின் படை அதன் இன்னொரு முனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு இடையன் கொடுத்த தகவலால் மக்காவின் குறைஷிகள் படை எடுத்து வந்திருபதை அறிந்து கொண்ட பெருமானார் தோழர்களோடு ஆலோசனை செய்தார்கள். வியாபாரக் கூட்டத்தை சாதாரணமாக பிடித்து விடலாம் என்ற மனக் கோட்டையில் இருந்த தோழர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் தான் புறப்பட்ட போது அல்லாஹ் ஒன்றூ வியாபாரக் கூட்டம் அல்லது வெற்றியை தருவதாக அல்லாஹ் வாக்களித்த திருக்குரானிய வசனத்தை எடுத்துக் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்த பிறகு அவர்களை எதிர் கொள்வதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டார்கள். எந்த வகையான முன்னேற்பாட்டுக்கும் தயாராக இல்லாத நிலையிலும் கூட நபிகள் நாயகத்தின் தோழர்கள் அந்த முடிவுக்கு தங்களது பரிபூரண சம்மதத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதன் பிறகு யுத்ததிற்கான ஆயத்ததில் இறங்கிய தோழர்களை வரிசைப் படுத்தினார்கள். அது ஒரு வியாழக் கிழமையின் மாலை நேரம். இரு தரப்பாரும் ஒருவர் மற்றவர் வருகைப் பற்றி அறிந்து சண்டைக்கு தயாராக இருந்த சூழலில் வெள்ளிக்கிழமை பொழுது புலர்ந்தது.
மக்காவில் சந்தித்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவரகள் தன்னுடன் மக்காவிலிருந்து வந்த சுமார் நூறு பேருடனும் மதீனாவின் தோழர்கள் சுமார் இருநூறு பேர்களுடனும் அபூஜஹ்லின் தலைமையிலான எதிரணியினரைச் நேருக்கு நேர் சந்தித்தார்கள், முஸ்லிம்களின் அணியில் ஒரு ஒருங்கிணைப்பு ஒழுங்கும் இருந்தது, எதிரணியில் அது இல்லை,
யுத்தம் தொடங்கியது.முதலில் தனி நபர்கள் மோதினாரர்கள்.அது கொடுத்த ஆக்ரோஷத்தில் பிறகு அணியாக மோதினார்கள். காலையில் தொடங்கிய யுத்தம் லுஹர் நேரத்திற்குள்ளாக முடிந்து போனது.
முஸ்லிம்கள் வெற்றிய்டைந்தனர். எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் 14 பேரும் எதிரிகளின் தரப்பில் எழுபது பேரும் கொல்லப்பட்டிருந்தனர். எதிரிகளில் 74 பேர் சிறை பிடிக்கப்பட்டவரகள் போக மற்றவர்கள் யுத்த களத்திலிருந்து விரண்டோடினர். எதிரிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் கொல்ல்பபட்டிருதனர்.
313 நபர்களை மட்டுமே கொண்ட அனுபவமும் ஆயுதங்களும் அற்ற சிறு படையினர் இறை விசுவசம் தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற ஒரு அம்சத்தை ,மட்டுமே கொண்டு அவர்களை விட வலிமையான போர்த்திறன் அதிக எண்ணிக்கையினரை வெற்றி கொண்டது ஒரு வரலாற்று அதிசயம்.

பத்ரின் அரசியல்

பத்ரின் அரசியல்

நாற்காலிக்காக இருகாலிகள் நாற்காலி ஆகிறார்கள் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வார். பதவிக்காக் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிற இன்றைய அரசியல் அவலத்தை அந்த வரிகள் படம்பிடிக்கின்றன.

பத்ரு யுத்தம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசியல் நடவ்டிக்கைகளில் காணப்பட்ட பிரமிப்பூட்டும் நுட்பத்தையும் நாகரீகத்தையும் அடையாளப் படுத்துகிறது. பத்ரு யுத்ததின் அரசிய்ல் கூறுகளில் உலக அரசியலுக்கு எழுதப்படாத பாடங்கள் ஏராளமாக இன்றளவும் கிடைக்கின்றன.

ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624 மார்ச் 14 ம் தேதி) ரம்லான் மாதத்தின் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி சூரியன் சுடத் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்து போன அந்த யுத்தத்த்தின் நிகழ்வுகளையும் அதன் நாயகர்களையும் அதில் களப்பலியானவர்களயும் ஒவ்வொரு ஆண்டும் உலக முஸ்லிம்கள் ரமலான் 17 ம் நாள் அன்று நினைவு கூறுகிறார்கள். இன்றும் கூட அந்தப் பொட்டல் வெளியில் அதே தினத்தன்று திரளாக கூடுகிற முஸ்லிம்கள் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த நிகழ்வை உணர்வுப் பூர்வ்மாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபிகள் நாயகத்தோடு கலந்து கொண்ட நபிதோழர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். மலேஷியாவில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.

ஒரு பாலை வனப் பிரதேசத்தில் இரண்டு பழங்குடி இனத்தவரின் மோதல் அல்லது ஒரு சகோதர யுத்தம் என்பதை தாண்டி வரலாற்றை கவர்ந்திழுக்கிற சிறப்பம்சங்கள் எதுவுற்ற அந்த சண்டை, வரலாற்றை தலை கீழாகப் புரட்டிப் போட்டது. மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியலை மட்டுமல்ல உலக அரசியலின் போக்கிலும் அது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்ற்குப் பின்னால் ஏற்பட்ட எழ்ச்சியில் அன்றை இரு பெரும் வல்லரசுகளான பாரசீகத்தின் சாசானியப் பேரர்சும் ரோமின் பைஜாந்தியப் பேரரசும் சபதமில்லாமல் சாய்ந்தன.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கண்டுபிடிக்கப் ப்டுவதற்கு முன்னாள் அன்றை உலகம் என்பது ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா என்ற மூன்று கண்டங்களை மட்டுமே கொண்டிருந்தது. அன்றைய அந்தபூமியின் நிலப்பரப்பில் சுமார் 70 சதவீத பரப்பிற்கு இஸ்லாம் பரவியது என்றால் அதற்கு மூல வித்தாக அமைந்தது பத்ரு யுத்தம்

அதனால் தான் ஆசியக் கண்டத்தின் வரலாற்றை திசை திருப்பிய இருபது யுத்தங்களை வரிசைப் படுத்துகிற வர்லாற்றாய்வாளர்கள் பத்ரு யுத்ததிற்கு இரண்டாவது இடத்தை தருகிறார்கள். .

இந்த வரிசையில் முதல் யுத்தமாக ம்கா அலக்ஸாண்டர் பாரசீகத்தின் மீது நடத்திய யுத்தம் குறிப்பிடுகிற்து. அதற்கு காரணம் அது காலத்தால முந்தியது என்பது மாத்திரமே! அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யுத்தம் என்று எடுத்துக் கொண்டால் பத்ரு யுத்தம் தான் ஆசிய வரலாற்றின் பெரும் திருப்பு முனையான யுத்தமாகும்.

ஒரு உள்ளூர் சண்டயாக நடைபெற்ற அந்த யுத்தம் உலக யுத்தங்களை விட வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அதிக தாக்கத்தை செலுத்தியது.

பானிபட் யுத்தம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு வழி கோலியது. பிளாசிப் போர் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவை கைகொள்ள காரணமாகியது முத்துது துறை முகத்தின் மீது ஜப்பான் தொடுத்த தாக்குக்தல் ஜப்பானின் சித்தைவுக்கு வழிவகுத்தது. இந்த யுத்தங்களும் இது போன்ற இன்னும் சில யுத்தங்கள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றாலும் அவற்றின் தாக்கம் அதிகபட்சமாக இருநூறு வருடங்களை தாண்டவில்லை. ஜப்பான் 50 ஆண்டுகளில் மீண்டெழுந்தது விட்டதை இன்றைய தலை முறை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பத்ரு யுத்தத்தின் புறத் தாக்கம் 15 ஆண்டுகள் தங்களிடையே இருந்தது என்று நபிதோழர்கள் கூறுகிறார்கள். அதன் அகத்தாக்கமோ கால வரையறைக்கு அப்பாற்பட்டு விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

யுத்தம் தொடங்குவத்ற்கு சற்று முன்னதாக யுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்து விட்டு தனது கூடாரத்திற்கு திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனையின் வாசகத்தை கவனித்துப் பார்த்தால் .அன்றைய சூழ்நிலையின் கையறு நிலையையும் அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிய்ன் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.
“இறைவா! இந்தச் சிறு கூட்டத்தை இப்போது நீ அழித்து விட்டால இனி இந்த பூமியில் உன்னை வணங்க யாரும் மிஞசமாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்த்னை செய்தார்கள்.

தனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்திருக்கிற மூன்னூறு நண்பர்களை பாதுகாக்கிற ஒரு தலைவரின் பொறுப்புணர்வும் கவலையும் அக்கறையும் அந்த இறைஞ்சுதலில் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல அந்த யுத்தத்தில் கிடைக்கிற வெற்றி இந்தப் பூமியில் ஏற்படுத்தப் போகும் மாற்றத்தையும் அது பிரதிபலித்தது.

இப்போது மெல்போர்ன் நக்ரத்தின் தெருக்கலில், சிகாகோவின் வீதிகளில் மாஸ்கோவின் மைதானங்களில் அல்லாஹு அக்பர் என்ற சப்தம் ஒலிக்கிறது என்றால் அதற்கு பத்ரின் வெற்றி தான் காரணம். இந்த வெற்றியில் நபிகள் நாயகத்தின் அரசியல் முதிர்ச்சியும் நேர்மையும் மறைந்திருக்கிறது.

ஒரு மாபெரும் தலைவரின் அரசியல் வாழ்வில் போராட்டங்களும் யுத்தங்களும் சகஜம். அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதிலும் அவற்றுக்கு பின் கிடைத்த வெற்றி தோல்விகளை அவர் எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதும் அவரை வரலாற்றின் சிறபான உய்ரங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

பத்ரு யுத்தத்திற்கான ஆயத்தங்களின் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கையாண்ட நெறி முறைகளில் நாகரீகம் மிளிர்ந்தது.

பின்னாட்களில் நபிகள் நாயகத்தின் உளவாளி என்று பெயர் பெற்ர ஹுதைபா பின் யமான் (ரலி) கூறுகிறார் :

நானும் அபூ ஹுசைலும் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து பத்ரில் பங்கேற்ப்பதற்காக ரக்சியமாக மதீனாவுக்குப் புறப்பட்டோம். மக்காவின் எதிர்கள் எங்களை இடை மறித்து தடுத்து முஹம்மதுடன் சேர்ந்து கொள்ளத்தானே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்காக அல்ல வேறு ஒரு வேளையாக நாங்கள் மதீனாவுக்கு செல்கிறோம் என்று சொன்னோம். அப்படியானால் முஹம்மதுவுடன் சேர்ந்து யுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று வாக்குறுதி தருமாறு கேட்டார்கள். வேறு வழியின்றி வாக்குறுதி கொடுத்து விட்டு புறப்பட்டோம். நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து நடந்த வற்றைச் சொன்னோம் . பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்: (இன்சரிஃபா! நபீ லஹும் பி அஹ்திஹிம் வ நஸ்தஈனுல்லாஹ அலைஹிம்) “நீங்கள் இருவரும் திரும்பிச் செல்லுங்கள். எதிரிகளுக்கு கொடுத்த வாக்கை நாம் நிறைவேற்றுவோம். யுத்தத்தில் வெற்றி பெற அல்லாஹ்விடம் உதவி கேட்போம். என்றார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 3342)

பத்ரின் அரசியல் என்பது முதலில் அதன் நேர்மையான அனுகுமுறைகளாலேயே அதிக பொலிவு பெற்றுத் திகழ்கிறது. புற வெளியில் வெற்றி வாய்ப்பு சாத்தியமற்றயதாக தோன்றிய அந்த சூழலில் நபிகள் நாயகத்தின் அந்த அகஎழில் அவரை மட்டுமல்ல அவரது நண்பர்களையும் காப்பாற்றியது. மாத்திரமல்ல; அவர்களது இருப்பை உறுதியாக நிலைப்படுத்தியது.

அரசியலில் இத்தகைய நேர்மை எல்லோருக்கும் சாத்தியமா? எனக் கேட்கத் தோன்றலாம். வரலாற்றில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அது சாத்தியமே!

இற்கு நேர்மாறான ஆர்ப்பாட்ட அரசியல் வாதியான அபூஜஹ்ல் தானும் அழிந்து தனது சமூகத்தையும் அநாதையாக்கியதையும் பத்ரு சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.

அபூஜஹ்லுக்கு நபிகள் நாயகம் உன்மையானவர் என்பது தெரிந்தே இருந்தது. அவனே ஒப்புதல் வாக்கு மூலமும் வழங்கி இருக்கிறான் ( இன்னா லா நுகத்தீபூக வலாகின் நுகத்திபு பிமா ஜிஃத பிஹி ) முஹம்மதே ! உம்மை பொய்ய்ரென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் உனது கொள்கையை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று சொன்ன அவன் அதற்கான காரணத்தையும் கூறினான் குறைஷிகளின் உட் பிரிவான உங்களது ஹாசிம் குடும்பத்திற்கும் எங்களது அப்து ஷம்சு குடும்பத்திற்கு தலைமை யாருக்கு உரியது என்பதில் கடும் போட்டி இருக்கிறது. இந்தச் சூழலில் உம்மை இறைத் தூதர் என்று ஒப்புக் கொண்டால் எங்களால் அது விசயத்தில் போட்டி போட இயலாதல்லவா ? எனவே உம்மை நான் ஒத்துக் கொள்ள முடியாது என்று அவன் கூறினான்.
முஹம்மது (ஸல்) அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியிம் அவனுக்குள் பழைய போட்டி பொறாமை உணர்வையே கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. அதனாலேயே மக்காவிலிருந்து வெளியேறிய முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தலைமக்கான தளம் அமைந்ததை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவரை அழித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருதவனுக்கு அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்திற்கு ஆபத்து என்ற செய்தி பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதை வைத்து மக்காவின் மக்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டு பன்னி அவர்களை திரட்டிக் கொண்டு வந்திருந்தான். அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாப்பதை விட தனது போட்டியாளரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சுய வஞ்சமே மேலோங்கியிருந்த்து.

இத்தகைய தலைவர்கள் அமைவதை விட ஒரு சமூகத்திற்கு பெரிய துரதிஷ்டம் வேறு இருக்க முடியாது.

பத்ரு யுத்தம் தொடங்கு வதற்கு முதல் நாள் ஒரு பெரும் அழிவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு யுத்தத்திலிர்ந்து தன் சமூக மக்களை காப்பாற்றூவதற்கு அபூஜஹ்லுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.

வியாபாரிகளின் தலைவர் அபூசுப்யானின் கடிதம் அன்று அவனுக்கு வந்து சேர்ந்தது. தனது வியாபாரக் கூட்டம் செங்கடலின் கரையோர மார்க்கமாக பத்திரமாக திரும்பி விட்டது. என்வே மக்காவுக்கு திரும்பி வருமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டிருந்தார்.

எவரையும் அழித்தொழிப்பதற்கு முன்னாள் இறைவன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கத் தவறுவதில்லை. அபூஜஹ்ல் அந்த வாய்ப்பை வீணடித்தான்.

கடித்தத்தின் செய்தியை அறிந்து கொண்ட மக்காவிம் இன்னொரு தலைவரான் அஹ்னஸ் பின் ஷுரைக் அபூஜஹ்லிடம் எவ்வள்வோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்!

அபுல் ஹிகம்! உங்களது சகோதரரின் மகன் உண்மையானவர் என்று உங்களுக்கு தெரியும் என்று நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வியாபார்ககூட்டத்தை பாதுகாக்கத்தானே வந்தோம் அது பத்திரமாக வ்ந்து சேர்ந்து விட்டது வாருங்கள் திரும்பி விடுவோம் என்று அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் மசியவில்லை. தனது கருத்தை மறுப்பவர்கள் அத்தனை பேர்ரையும் கோழைகள் என்று ஏசினான். அவனது இந்தப் போக்கை ஏற்ற்குக் கொள்ளாத அஹ்னஸ் தனது ப்னூ சுஹ்ரா குடும்பத்தை சார்தோரை சுமார் 100 நப்ர்களை பத்ருக் களத்திலிருந்து திரும்ப அழைத்துச் சென்று விட்டார். அதனால் பனூ சுஹ்ரா குடும்பத்தினர் எவரும் பத்ரில் பலியாகாமல் தப்பினர்.

அபூஜஹ்லின் சுய வஞ்சம் அவனையும் அவனோடிருந்த பலரையும் மோசமாக பலி கொண்டது. அவனது சமூகத்தின் முதுகெலும்பை முறித்து போட்டது.

சாதாரணாமாக அரபு தீபகற்பத்தில் மக்காவின் குறைஷியருக்கு எதிர்ப்பே கிடயாது. மத ரீதியாக மிக பாதுகாப்பான பகுதியில் அவர்கள் வசித்தார்கள். அவர்கள் இருக்கிற இடம் தேடி யானைகளோடு வந்த படைகளே கூட சின்னபின்னமாகி சிதறிப்போனது என்பது தான் அதுவரைக்குமுண்டான வரலாறு.

அப்துல் முத்தலிபின் பண்பினால் பாதுகாக்கப் பட்ட மக்காவின் மக்கள் அபூஜஹ்ல் என்ற மோச்மான அரசியல் தலைமையினால் வரலாறு காணாத சோகத்தை முதல் முறையாக அனுபவித்தார்கள். மக்காவில் ஒரு மாத காலம் ஓலம் ஓயவில்லை

தன் சொந்த வெறுப்பை பிரதானப்படுத்திய ஒரு தவறான அரசியல் தலைமையின் அழிவும், அவனது சமூகத்திற்கேற்பட்ட கோரமான முடிவும் பத்ரின் அரசிய்ல பாடங்களில் மறந்துவிடக் கூடாது ஒரு பாடமாகும்.

யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்க்ள் தன் தோழர்களோடு ஆலோசனை கலந்தார்கள். ஒரு இறைத்தூதராக அவர் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இல்லைதான் என்றாலும் ஒரு சிற்ந்த அரசியல் தலைவருக்கு முன்னுதாரமான தனது நடைமுறையை நபிகள் நாயகம் அமைத்துக் கொண்டார்கள். தனது கருத்தை தொண்டர்கள் மீது வலிந்து திணிக்கும் மலிவான ஆதிக்க மனப்பான்ம்மை அவரிடம் இருக்கவில்லை. ஒரு களத்தில் எதிரிகளை சந்திக்க நேர்ந்த பிறகு அவர்களை எதிர்கொள்ளாமல் புறமுதுகிட்டுச் செல்வது சரியல்ல என்ற நபிகள் நாயகத்தின் கருத்துக்கு தொண்டர்கள் அமோகமாக இசைவு தெரிவித்தார்கள்.
தன்னுடைய யோசனைக்கு மற்றவர்கள் இணங்கியது போலவே மற்றவர்களது யோசனைக்கு பெருமானாரும் இணங்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் பிரதேசத்திற்குள் நுழைந்த போது அதன் ஓரு ஒரத்தில் உள்ள நீர்நிலைக்கு அருகில் தங்குவதற்கு முடிவு செய்தார்கள். அப்போது குறிக்கிட்ட ஹப்பாப் பின் முன்திர் (ரலி) என்ற தோழர் “இல்லை. இன்னும் உள்ளே சென்று எதிர்களுக்கு நெருக்கமான இடத்திலிருக்கிற நீர் நிலைக்கு அருகே சென்று தங்குவோம் அப்போது நம்மிடம் தண்ணீர் இருக்கும் எதிரிகளிடம் தண்ணீர் இருக்காது என்று ஆலோசனை சொன்ன போது அந்த யோசனையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதோடு நல்ல யோசனை என்று பாராட்டவும் செய்தார்கள்

இத்தகைய நடவடிக்கைகளால் தொண்டர்களின் முழு ஈடுபாடும் பெருமானாருக்கு கிடைத்தது.

யுத்தம் தொடங்கிய போது போர் முனையின் வாசலில் நின்று கொண்டு குறைஷியரான உதபா ஷைபா, வலீத் பிப் உத்பா ஆகியோர் தங்களோடு சண்டையிட வருமாறு கொக்கரித்தனர். அப்போது மதீனாவைச் சார்ந்த அன்சாரித் தோழர்களான அவ்பு முஆத் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் அவர்களை எதிர்கொள்ளச் சென்றார்கள்.

யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை அது காட்டியது. இஸ்லாத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது என்ற உணர்வு பிரதானப்பட்டு விட்டதை அது வெளிப்படுத்தியது.

ஆனால் மதீனாவீன் வீரர்களை கண்ட எதிரிகள் தம்முடம் மோதுவதற்கு தமது சொந்தக் குலத்தவர்களை அனுப்புமாறு கோரினர். அவர்கள் குலப் பெருமையின் அடிப்பாடையில் யுத்தத்தை எதிர்கொண்டார்கள் என்பதை அது காட்டியது.

பத்ரி யுத்ததில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றத்ற்கு அதுவே பிரதான காரணம். கொள்கை வழியில் போராடியவர்கள் ஜாதிய உணர்வில் போராடியவர்களை வென்றார்கள் என்பது பத்ரின் அரசியல் தரும் பிரதானச் செய்தியாகும்.

குறுகிய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது இன்றைய அரசியலின் சூத்திரமாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் உன்னதமான பண்புகள் தருகிற வெற்றியே அதன் களப்பகுதிகளை கடந்து வரலாற்றில் வாழும் என்பதே பத்ரின் அரசியலாகும்.

கைவிடப்பட்ட காஸா

சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட அநாதை போல, சுற்றி இருந்த அரபுநாடுகளாலும், உதவிக்கு வந்து ஊரை அடித்துத் தின்கிற ஐரோப்பிய நாடுகளாலும் ஏன் தன் சொந்த தேசத்தின் அதிபரால் கூட கைவிடப் பட்ட பரிதாபத்திற்குரிய காஸா நகரம் வரலாற்றில் மற்றுமொரு கருப்பு அத்தியாயாயத்தை சந்தித்தது. 2008 டிஸம்பர் 26 ம் தேதி முதல் 2009 ஜனவரி 17 வரை Operation Cast Lead என்று பெயரிட்டு இஸ்ரேல் நடத்திய பேயாட்டத்தால் நிலை குலைந்து போனது. கதறி அழ மட்டுமே காப்புரிமை பெற்ற சமுதாயம் மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்தது.
எந்த சோகத்திலும் தம் சுதந்திர வேட்கையை விட்டுக் கொடுக்காத காஸா நகரத்து மக்கள் உலகத்தின் ஒப்பாரியை ஒரு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறு கரத்தில் ராக்கெட் லாஞ்சர்களை ஏந்தி நின்றனர். யுத்தம் கொடுரமாகத் தொடர்ந்தது. நிலம், நீர், ஆகாயமென தன் சக்திக்கு உட்பட்ட அத்தனை திசைகளிலிர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்ததது. உலகமெங்கிருந்தும் கண்டனக் கனைகள் பறந்தன. கண்டன ஊர்வலங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் நாடுகள் குலுங்கின. புதிய அதிபரை பார்த்த மயக்கத்தில் அமேரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மறந்திருந்த ஒரு பொன்னான சந்தர்ப்பத்தில் ஐநா சபை ஒரு தீர்மாணம் நிறைவேற்றிக் கூட போரைத் தடுக்கப் பார்த்தது. வழக்கப் படி "மசுறு" என்று அதை ஊதித் தள்ளி நிராகரித்த இஸ்ரேலிய அரசு மேலும் வேகமாக தாக்கத் தொடங்கியது. சமாதான முயற்சிகள் எகிப்து துருக்கி உள்ளிட்ட பல மட்டத்திலும் நடந்து கொண்டிருந்தன. எதுவும் உடனடி தீர்வுக்கு வழி செய்யவில்லை. . பலியானோர் எண்ணிக்கை நூறுகைளை தாண்டி ஆயிரத்தை தொட்டது.
திடீரென்று இஸ்ரேல் போரை நிறுத்தி விட்டது! அதுவும் ஒரு தரப்பாக!. இஸ்ரேலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஹமாஸ் கூட சற்றே அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். எதனால் இந்த திடீர் மாற்றம்?
ஹமாஸ் அமைப்பின் ஏவுகனை ஏவு தளங்களை அத்தனையும் அழிந்துவிட்டதா ? அல்லது நமது பெருமைக்குரிய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற மஹானுபவர்கள் இஸ்ரேல் என்று பெயர் குறிப்பிட அஞ்சி பொத்தம் பொதுவாக அமைதிக்காக குரல் கொடுத்தார்களே அதனாலா? அல்லது அப்பாவிகளை கொல்வது அநியாயம் என்று இஸ்ரேலுக்கு யாரவது புதிதாக ஞானதீட்சை வழங்கினார்களா? அதில் இஸ்ரேல் திருந்திவிட்டதா? இதில் எதுவும் இல்லை.
பிறகு எதனால் இந்த அக்கிரமப் போர் அவசரமாக முடிவுக்கு வந்தது ?
அமெரிக்க அதிபராக புதிதாக பொறுப்பேற்க இருக்கிற ஒபாமா ஜனநாயகக் கட்சிக்காரர். அவர் இஸ்ரேலை சற்று நிதானப் படுத்தக் கூடும். அதற்கு முன்னதாக அரபகத்தில் உள்ள தனது எதிர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவே இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு ஞாககத்தில் வைத்திருக்கத் தக்க அழிவுகளை ஏற்படுத்தி விட்டதால் இது போதும். புதிய அதிபர் பொறுப் பேற்கிற போது அவருக்கு அதிக சிரமம் தரக்கூடாது என்பதற்காகவே அமெரிக்காவின் புதிய அதிபர் பொறுப்பேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இந்த யுத்ததை நிறுத்தி விட்டது.
இது ஒரு யூகம்.
கடந்த ஆண்டு லெபனானுடன் சண்டையிட்டதில் மத்தியக் கிழக்கின் சூப்பர் பவர் என்ற இஸ்ரேலின் பெருமை அடிவாங்கியது. அதை மீட்கவே இந்த கொடூரத்தாக்குதல் நடத்தப் பட்டது. இதன் மூலம் இஸ்ரேலின் ஆளும் கட்சி ராணுவத்தின் ஆளுமையை காப்பாற்ற முயன்றது. ஆனால் இப்போது இவ்வளவு கடும் தாக்குதலுக்குப் பின்னரும் மக்களை தொல்லைப் படுத்த முடிந்ததே தவிர ஹமாஸின் ராணுவ வலிமை ஒழிக்க முடியவில்லை. ஹமாஸின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கடந்த ஜனவரி 18 ம் தேதி ஞாயிரன்று பேசிய ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா "காஸா முனை மீதான இஸ்ரேலின் மூன்று வாரத் தாக்குதல் தோல்வியடந்து விட்டது. எதிரிகள் தங்களது நோக்கத்தில் தோற்றுவிட்டனர் என்று கூறியுள்ளார். எனவே மக்களை அழித்ததில் ஓரளவு திருப்தி கொண்டு இஸ்ரேல் பின்வாங்கி விட்டது.
இப்படியும் ஒரு யூகம்.
இப்படியாகத் தொடர்கிற யூகங்களில் சில உண்மை இருந்தாலும் இருக்கலாம். ஆனால் இது இதைக் தாண்டி இஸ்ரேலின் தீடீர் தாக்குதலிலும் திடீர் சண்டை நிறுத்தத்திலும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கிறது. சர்வதேச சமுதாயம் கவனிக்க வேண்டிய விசயம் அது. அதுவே இஸ்ரேலின் இன வெறி.
அப்பாவிக் முஸ்லிம் குழந்தைகளையும் நிராயுதபாணி முஸ்லிம் பொதுமக்களையும் கொல்வதை இஸ்ரேல் பாவம் என்று கருதுவதில்லை. தவறு என்றே கூட நினைப்பதில்லை. அதனால்தான் காஸாவில் ஏற்பட்ட மிகமோசமான மனிதக் படுகொலைகள் பற்றிய எந்தக் கோரக் காட்சியும் அதன் இதயத்தை தொட வில்லை. தொடாது. திருக்குரான் கூறுகிறது. (யூதர்களே! பிறகு உங்களது இதயங்கள் இருகிவிட்டன. அது பாறை போன்றதாக ஆகிவிட்டது. இல்லை. பாறயைவிட அது இன்னும் கடினப் பட்டுவிட்டது. பாறைகளில் கூட சில நேரங்களில் நீர் கசியும் (உங்கள் இதயங்களில் அதுவும் இல்லை)
15 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருக்குரானின் இந்த விமர்சனம் இன்றளவும் யூதர்களுக்குப் பொருந்தும்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு சற்று முன்னதாக ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஒரு யூதனை பிடித்த ராணுவ வீரன் அவனை கொல்ல முயன்றான். அப்போது அந்த யூதன் அலறினான், "என்னை எதற்காகா கொல்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான்.
நீ யூதன். அதனால் தான் உன்னை கொல்கிறேன் என்று அந்த ஜெர்மனிய வீரன் சொன்னானாம்.
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நடைபெற்ற இந்த உரையாடல் அநீதியானதாக மனிதாபிமானமற்றதாக தோன்றினாலும் இருபத்த்தி ஒன்றாம் நூற்றாண்டு இதில் சில தர்ம நியங்கள் புதைந்து கிடப்பதை உணர்ந்து கொள்ளும் போல தெரிகிறது.
காஸா முனை மீதான் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இஸ்ரேலியர்களின் மிருகத்தனம் அல்லது இஸ்ரேலிய மிருகங்களின் குணம் மீண்டும் ஒரு முறை அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை உலகிற்கு புரிய வைத்துள்ளது.
மூன்று வாரங்களாக காஸாமீது பொழியப் பட்ட குண்டு மழை எந்த காரண்த்தை கொண்டும் நியாயப் படுத்த இயலாது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட அமெரிக்க பத்ரிகைகளே கூட ஒத்துக் கொண்டன. இஸ்ரேலின் உரிமையை நிலைநிறுத்துவது அல்லது இஸ்ரேலின் நலனை பாதுகாப்பது அல்லது ஹமாஸை ஒழிப்பது என்ற தேவையை விட இந்த தாக்குதல்கள் மிக அதிகம் என அவை நாசூக்காக கூறின. சில பத்ரிகைகள் துணிந்து இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்து வருவதாக கூறின.
ஜெரூஸலம் போஸ்ட் பத்ரிகை தரும் தகவலின் படி டிஸம்பர் 26 ம் தேதி இஸ்ரேல், 100 பைட்டர் ஜெட் விமானங்களையும் குண்டு வீசும் ஹெலிகாப்டர் களையும் அனுப்பி காஸாமுனையின் மீது 200 குண்டுகளுக்கும் மேலாக வீசியது. 170 இலக்குகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப் பட்டது என்று இஸ்ரேல் கூறீய அந்த இலக்குகளில் பள்ளிவாசல்கள் பள்ளிக் கூடங்கள் மருத்துவ மனைகள் காவல் நிலையங்கள் அரசு கட்டிடங்கள் பொதுமக்கள் வாழ்விடங்கள் அனைத்தும் அடங்கும். முதல் நாள் தாக்குதலில் மட்டும் சுமார் 240 பேர் கொல்லப் பட்டார்கள். முதல் வாரத்தில் மட்டும் 12 பள்ளிவாசல் தரை மட்டமாக்கப் பட்டிருந்த தாக ராபிதததுல் ஆலமில் இஸ்லாமியா எனும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு கூறியது.
ஒருபெரும் பூகம்பத் தாக்குதலுக்குள்ளான நகர் போல் காஸா காட்சியளிக்கிறது என பி.பி.சி கூறுகிறது. போர்நிறுத்ததிற்குப் பிறகு காஸாவை நேரில் பார்த்த ஒருவர், காஸாவில் ஏங்கு நோக்கினும் உடைந்த மரச்சாமான்களும் உருக்குலைந்த இரும்புச் சட்டங்களும் சிதறிக்கிடக்கின்றன, அவை மட்டுமே அங்கே இருக்கின்றன என்று பி.பி.சிக்கு எழுதுகிறார்..

ஒன்றின் மேல் ஒன்றாக சிதைந்து விழுந்துள்ள கட்டிட இடுபாடுகள் காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறிய பி.பி.சி இடிபாடுகளுக்கு இடையே இருந்து இன்னும் சடலங்கள் எடுக்கப் படுவதாக கூறியுள்ளது.

இதுவரை 50800 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறுகிற ஐநாவின் அறிக்கை ஒன்று 40,000 பேர் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதியுறுகின்றனர் என்கிறது

இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களைகண்க்கிடும் பணி இஸ்ரேலின் முற்றுகை அகன்ற பிறகுதான் ஆரம்பித்துள்ளது என்பதனால் இத்தாக்குதலில் காஸாவுக்கு ஏற்பட்ட சேத விவரம் இன்னும் முழுமையாக தெரிய வில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி இஸ்ரேலின் வெறியாட்டத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளுக்கான சீரழிவிலிருந்து காஸாவை காப்பாற்ற இனி ஒரு தலைமுறை பிடிக்கும்.

இத்தனைக்கும் பிறகு தொடர்ந்து இஸ்ரேல் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தேவையான நிவாரண உதவிகள் காஸாவுக்குள் அனுப்பப் பட்டுள்ளதாக இஸ்ரேலின் ராணுவப் பேச்சாளர் மார்க் ராக்யோ கூறுவதாக சொல்கிற பி.பி.சி ஆனால் இப்பொருட்கள் பாதிக்கப் பட்டமக்களை சென்றடைந்ததா என்பதை தம்மால் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவிலை என்று கூறுகிறது.

தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 13 இஸ்ரேலியர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் பாலஸ்தீனின் மருத்துவ வட்டாரங்களின் தகவலின் படி இதுவரை காஸாவில் 1300 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டிருக்கிறாகள். 5500 காயமடைந்திருக்கிறார்கள். கொல்லப் பட்டவர்களில் 300 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அழகிய பிஞ்சுக் குழந்தைகள் அழுகிய காய்கறிகள் போல கொத்துக் கொத்தாக கொட்டப் பட்டுக்கிடந்த காட்சியை கண்ட உலகம் குலுங்கியது. இஸ்ரேலியர்கள் மனிதர்கள் தானா என்று மக்கள் குமுறினர். ஆனால் இஸ்ரேல் எதெற்கும் அலட்டிக் கொல்லவில்லை. குறைந்த பட்சம் குழந்தைகள் கொல்லப் பட்டதற்கு, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் ஒரு பாலர் பள்ளிக் கூடத்தின் மீது குண்டு விழுந்து அதிலிருந்த அத்தனை குழந்தைகள் மாண்டுபோனதற்கும் - ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தெரிவிக்காது. ஏனேனில் இவை எதுவும் எதோச்சையாக நடந்தது அல்ல.
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவின் பென்குரியனிடம் David Ben-Gurion இஸ்ரேல் படைகளின் தளபதி ஈகல் அலன் Yigal Allon அரபுகளை நாம் என்ன செய்வது "What shall we do with the Arabs?" என்று கேட்டபோது அவர் என்ன பதில் சொன்னார் என்பதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் ஒருவர் விவரிக்கிறார். கைககளை அலட்சிய்மாக உதறியபடி பென் கூரியன் சொன்னார் 'Expel them'". அவர்களை வெளியே தள்ளிவிடுங்கள்
இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் அந்த வார்த்தைகளே இலட்சிய எல்லைகளாக இருக்கின்றன. கூடுமானவரை வாய்ப்புக்களைஉரூவாக்கி பாலஸ்தீனர்களை கொல்லுவது. முடிந்தவரை அவர்களது நிலங்களை திருடுவது என்பது மாத்திரமே இஸ்ரேலின் தாரக மந்திரம்.
Peacemaker அமைதியை உருவாக்கியவர் என்று மீடியாக்களால் விளம்பரப் படுத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்ட இட்சாக் ரபீன் Yitzhak Rabin யாசிர் அரபாத்துடனான அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது கூட இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான்.
பாலஸ்தீன பிரச்சினைக்கு தனது வாழ்நாளுக்குள் தீர்வுகண்டு விட வேண்டும் என்று துடித்த யாசிர் அரபாத் ஓஸ்லோ உடன்படிக்கை என்ற அந்த மாசு நிறைந்த ஒப்பந்தத்தில் கயெழுத்திட்டார். யுத்த அபாயங்களை பற்றி கவலை எதுவுமின்றி பல தலைமுறைகளாக கவுரமாக வாழ்ந்த ஒரு சமுதாயம், வாழ்கையின் சகல விதமான சிரம்க்களை யும் கடந்த இரண்டு தலைமுறையாக அனுபவித்து வருவதை மேலும் சகிக்கப் பொருக்காமல், இந்த ஒப்பந்தத்தில் யாசிர் அரபாத் கையெழுத்திட்டிருக்கலாம். ஆனால் அது 'Expel them' என்ற பென்கூரியனின் வார்த்தைக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை பெற்றுத்தரும் ஒரு நடவ்டிக்கை என்பதை அவர் ஆரம்பத்தில் உணர்ந்தாரில்லை. பின்னால் உணர்கிற ஒர் சந்தர்ப்பம் வந்த போது அவர் வீட்டுக்காவலில் இருந்தார்.
இந்த அபாக்கிய நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறா? பாலஸ்தீனின் அதிபரான யாசிர் அரபாத் அவரது சொந்த தேசமான பாலஸ்தீனிற்குள்ளேயே வீட்டுக்காவலில் இருந்தார். பக்கத்து நாட்டின் ரானுவம் அவரது உதவியாளர்களை கொன்றொழித்து அவரது வீட்டுச் சுவர்களை கூட புல்டோஸரால் உடைத்துக் கொண்டிருந்தது என்றால் அது என்ன தேசம்? இப்படி ஒரு நாடா என்ற கேள்வி உங்கள் மனதில் உலாவருகிறதல்லவா?
இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இப்படிப் ப்ட்ட ஒரு பரிதாபகரமான நிலைமைக்குத் தான் பாலஸ்தீனர்கள் ஆளானார்கள். ஆனால் இஸ்ரேலோ இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு வழிகளில் மிக ஏராளமான அனுகூலங்களை அடைந்தது. அதில் முக்கியமானது. இஸ்ரேலை தீண்டத்தகாத நாடாக ஒதுக்கிவைத்திருந்த சவதேச நாடுககள் பலவும் இஸ்ரேலுடன் கைகுலுக்கத்தொடங்கின. அது பாலஸ்தீனர்களின் பரிதாப நிலையை மேலும் சிக்கலாக்கியது. அனுதாபத்திற்கு கூட அருகதை அற்றவர்களாக அவர்கள் ஆகிப் போனார்கள்.
இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். முன்னர் பாலஸ்தீனர்கள் துன்பப் படுகிற சந்தர்பத்திலெல்லாம் இந்தியா அவர்கள்து இதயங்களுக்கு அருகே இருந்து ஆறுதல் சொன்னது. உதவிகளை வாரி வழங்கியது. சர்வதேச அரங்குகளில் அவர்களுக்காக பரிந்து பேசியது. திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டிற்கு யாசிர் அரபாத் அழைக்கப் பட்டார். அப்போது அவருக்கு சொந்தமாக ஓரடி நிலம் கூட இருக்கவில்லை. ஆனால் ஒரு தேசத் தலைவருக்குரிய மரியாதை அவருக்கு வழங்கப் பட்டது. இந்திர அம்மையாரோடு சேர்ந்து இந்திய தேசமே அவரை வரவேற்று ஆர்ப்பரித்தது. அத்தோடு இந்தியா இஸ்ரேலிடமிருந்து வெகு தூரம் விலகி இருந்தது. இந்தியாவின் கடவுச் சீட்டுக்களில் இஸ்ரேலுக்கு பயணம் செய்யமுடியாது என்ற முத்திரை இருந்தது. விளையாட்டு வீரர்கள் இஸ்ரேலுக்குச் சென்றால் இந்தியாவுக்கு வர முடியாது என்ற நிலை இருந்தது. 1988 ல் இஸ்ரேல் பாலஸ்தீன் உடன்பாடு, இல்லை இட்சாக் ரபீன் யாசிர் அரபாத் உடன் பாடு ஏற்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. 1992 ல் இந்தியா இஸ்ரேலுடன் தூதரக உறைவை வைத்துக் கொண்டது. அந்த உறவை இஸ்ரேல் வேகமாக வளர்த்துக் கொண்டது. இப்போது இந்தியாவும் இஸ்ரேலும் சுமார் 6200 கோடிக்கு ஆயுத வியாபாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னர் ரஷ்யாவுக்கு கொடுத்திருந்த இடத்தில் இப்போது இந்தியா இஸ்ரேலை இருத்தி இருக்கிறது. (அமெரிக்காவுக்கு தன்னையே தாரை வார்த்துவிட்டது என்பது வேறு விசயம்.) காஸாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப் படுகிறார்கள் ஊரே தரைமட்டமாக்கப் படுகிறது. இந்தியாவும் அதை கண்டிக்கிறது. ஆனால் அதன் குரலில் ஜீவன் இல்லை. சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் காஸாவின் மீதான தாக்குதலை கண்டித்த பாரதப் பிரதமர் திருமிகு மன்மோகன் சிங் அவர்களின் உரையை நான் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன் அவரது திருவாய் ஒரு தடவை கூட "இஸ்ரேல்" என்று சொல்லவே இல்லை.
இந்த மந்திர மாற்றத்திற்கான முக்கியக் காரணம் இஸ்ரேலும் பாலஸ்தீனும் செய்து கொண்ட உடன்படிக்கைதான். பாலஸ்தீனே இஸ்ரேலோடு கைகோர்த்து விட்ட பிறகு நாம் ஏன் விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணமே இந்திய ராஜ தந்திரிகளை இஸ்ரேலோடு கைகோர்க்க வைத்தது. அது முஸ்லிம்கள் விசயத்தில் ஈவுஇரக்கத்திற்கி இடம் விடாதவாறு இறுகியும் விட்டது.
உலக மகா அயோக்கிய சிகாமணிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும், உலகத்தை ஏமாற்ற போட்ட திட்டம் தான் பாலஸ்தீனின் சுயயாட்சி என்பது. அது பாலஸ்தீன மக்களை அடக்கியாளும் அதிகாரத்தை இஸ்ரேல் சட்ட பூர்வமாக பெறுவதற்கு வழி வகுத்ததே தவிர பாலஸ்தீன மக்களின் கண்ணீரைத்துடைக்க கைக்குட்டையை கூட நீட்டவில்லை.
இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய பொய் எது தெரியுமா? பாலஸ்தீன் என்று ஒரு நாடு இருப்பதாக கருதுவதுதான். இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய வேடிக்கை எது தெரியுமா? உலகின் 117 நாடுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு தூதரக உறவு இருப்பது தான்.
இப்படி ஒரு விசயத்தை உலகம் நம்பியதால் அதற்கு பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இதையே உலக முஸ்லிகளும் நம்பிவிட்டதில் தார்மீகமாவும் செயல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின் தங்கிவிட்டார்கள்.ஏமாந்து போய்விட்டனர். இன்னொரு வார்த்தையில் சொவதானால் ஈஸா சிலுவையில் அறையப் பட்டார் என்று நம்புகிற கிருத்துவர்களை போலவே இதுவிசயத்தில் முஸ்லிம்கள் சரியான பாதையிலிருந்து சருகிவிட்டார்கள்.
பாலஸ்தீன் எனபது இன்றைய நிலையில் இஸ்ரேல் நாட்டிலிருக்கிற ஒரு முன்சிபாலிட்டிக்கு பெயர். அதுவும் கிழக்கில் ஒரு துண்டு மேற்கில் ஒரு துண்டு என பிரிந்து கிடக்கிற நிலத்தை இணைத்து உருவாக்கப் பட்ட ஒரு முனிசிபாலிட்டி. விலக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் என்பது போல அதன் மேயர் அதிபர் என்று அழைக்கப் படுகிறார். ஆணையாளர் பிரதமர் என்றும் கவுன்சிலர்கள் அமைச்சர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். இதற்கு மேல் எதுவும் இல்லை.
அந்த முனிசிபாலிட்டிக்கு உள்ளும் பிரச்சினை. நம் ஊரில் பஞ்சாயத்து தலைவரும் கவுன்சிலர்களும் மோதிக் கொள்வார்கள் இல்லையா? அது போல அங்கும் ஒரு மோதல் அந்த மோதலை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் எண்ணப் படி ஊதிப் பெரிதாக்கின அதன் விளைவாக பாலஸ்தீன நகராட்சியின் ஒரு பகுதியின் மீதான தாக்குதல் அதன் மேயரின் ஒப்புதலுடன் நடக்கிறது. புரிகிற வார்த்தையில் சொல்வதானால் பாலஸ்தீன் ஒரு பகுதியிலிருக்கிற முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மற்றொரு பகுதியிருக்கிற முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆதரிக்கிறார்கள்.
மளையாள தொலக்காட்சியான கைரளியில் ஓளிபரப்பான கிராஸ்பையர் நிகழ்சியில் ஒரு இளைஞன் கேட்ட கேள்வி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த என்னை மட்டுமல்ல நிகழ்சியை நடத்திக் கொண்டிருந்த பிரணாய் அதிர்ச்சிக் குள்ளாக்கிவிட்டது. இந்தியாவில் இஸ்ரேலுக்கு இவ்வளவு ஆதர்வு இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் ஆச்சரியத்தோடு கூறினார். அந்த இளைஞனின் கேள்வி இது தான். பாலஸ்தீனி ஒரு பகுதியான மேற்கு கரையில் இருக்கிற முஸ்லிம்களே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் நீங்கள் எதற்கு இங்கிருந்து கொண்டு இஸ்ரேலை எதிர்த்துக் குதிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியை காது கொடுத்து கேட்டதற்கே மிகவும் வலித்தது. என்றால் அந்த வலியை நேரிட்டு அனுபவிக்கிற மக்களின் வேதனை எத்தகையதாக இருக்கும்.?
தங்களது தேசம் திருடப் பட்டதை எதிர்த்தும் தங்கலது மக்களின் சுத்தந்திரத்திற்காகவும் சில தலைமுறைகளாக தீரமாக போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு அற்பமான ஒரு மகிழ்சியை கொடுத்து பிறகு அவர்களை வைத்தே அவர்களது கண்களை குத்த்வைக்கிற ஏற்பாட்டை எவ்வளவு கச்சிதமாக இஸ்ராலும் அதன் கள்ளக் கூட்டாளிகளும் செய்துவிட்டார்கள்? அந்த திருட்டு ஏற்பாட்டை நிலை நிறுத்தி விடுவதற்காக எத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள்?
காஸாவின் வரலாற்றை சற்றே அகழ்ந்து பார்த்துவிட்டு வந்தால்தான் இதிலுள்ள எதார்த்தமும் வேதனையும் புரியும். பாலஸ்தீன் விசய்த்தில் எத்தகைய நிலைப் பாட்டை மேற்கொள்வது என்ற தெளிவும் கிடைக்கும்.
காஸா உலகின் புராதான நகரங்களில் ஒன்று. அரபியில் ஃகஸ்ஸா என்று அழைக்கப்டும் நகரே ஆங்கில வழக்கிலும் அதன் வழியாக தமிழ் உருமாற்றத்திலும் காஸா என்றழைக்கப் படுகிறது. மஸ்ஜிதுல் அக்ஸா எனும் இஸ்லாமின் மூன்றாவது புனித பள்ளிவாசலையும் இதையும் சேர்த்து சிலர் குழப்பிக் கொள்வதுண்டு. அது வேறு.இது வேறு. ஃகஸ்ஸா என்ற வார்த்தைக்கு மரியாதை என்று பொருள். கஸ்ஸாவில் தன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் ஹாஷிமின் கல்லறை உள்ளது. இதன் காராணமாகவே அது "கஸ்ஸத்து ஹாஷிம்" ஹாஷிமின் கல்லறை உள்ள மரியாதைக்குரிய இடம் என்று அழைக்கப் பட்டதாக விக்கிபீடியா கலைக்களஞ்சியம் கூறுகிறது. இஸ்லாத்தின் நான்கு சட்டப் பிரிவுகளில் ஒன்றான ஷாபி பிரிவின் முன்னோடியான இமாம் ஷாபி இங்கு பிறந்தவர்தான்.
இவற்றை எல்லாம் விட மத்தியத்தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்நகரம் அதன் கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாக அது பல்வேறு வடிவங்களைப் பெற்று பிரபலமடைந்து வந்தது. பழங்காலத்தில் அது சுறுசுறுப்பான வியாபார மையாகவும் எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையே பயணம் செய்யும் வியாபாரக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாகவும் இருந்தது.
காஸாநகரத்தை உள்ளடக்கிய மத்தியத்தரைக்கடலை ஒட்டிய கடற்கரை பிரதேசம் காஸாமுனை என்று சொல்லப் படுகிறது. அது இப்போது எகிப்தின் தென்மேற்கு எல்லையாகவும், இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது 41 கிலோமீட்டர் நீளமும் 6 முதல் 12 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டது.
காஸா, உமர் ரலி அவர்கள் ஆட்சிக் காலத்தில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களால் கி.பி.637 ல் கைப் பற்றப் பட்டது. அன்றிலிருந்து இடையில் ஏற்பட்ட சில சிலுவைப் போர் விபத்துக் களை தவிர்த்து சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்கள் அது முஸ்லிம்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின் துருக்கிய கிலாபத் வீழ்ந்த போது 1917 ல் பிரிட்டிஷ்காரர்கள் துருக்கியிடமிருந்து காஸாவை கைப்பற்றினார்கள். தொடர்ந்து பிரிட்டிஷாரால் நிர்வகிக்கப் பட்ட பாலஸ்தீனின் ஒரு அங்கமாக காஸா இருந்தது. பிறகு சர்வதேச நாடுகள் சபையின் பொறுப்பில் அது விடப்பட்டது.
இரண்டாம் உலக யுத்தம் ந்டை பெற்ற காலகட்டத்தில் யூதர்கள் பிரிட்டிஷிற்கும் அமெரிக்காவிற்கும் பெருமளவில் உதவினார்கள். அற்கு பதிலாக ஜெருசலத்தை தலிமையிடமாக கொண்டு தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று தொடர்ந்து பிரிட்டனையும் அமெரிக்காவையும் அவர்கள் கோரி வந்தனர். அதன் விளைவாக பாலஸ்தீன அரபுகளிடமிருந்து நிலத்தை திருடி பாலஸ்தீனிற்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வல்லரசுகள் திட்டமிட்டன. தங்களது நாட்டில் குடியேறியிருக்கிற ஆபத்தான சக்திகளான யூதர்களை தங்களது நாடுகளிலிருந்து வெளியே இனுப்ப இது தான் நல்ல தருணமென்று நினைத்த ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அதை ஆதரித்தன. இஸ்ரேலியர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கும் பல்போர் தீர்மாணம் உருப்பெற்றது.
ஜோர்டான் நதியிலிருந்து மத்தியத்தைர்க்கடல் வரை பரவியிருந்த பாலஸ்தீனிற்குள்1948 ம் ஆண்டு திருட்டத்தனமாக இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது மட்டுமல்லாது அதை பாலஸ்தீனின் நடு மார்பில் அமைத்தனர்.பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அமைந்துள்ள ஜெருஸலத்தை யூதர்கள்சொந்தம் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு நடைபெற்றது. இதனால் ஜோர்டான் நதிக்கரைய ஒட்டிய பாலஸ்தீனின் பகுதிகளும் அதன் இன்னொரு எல்லையான மத்தியத் தரைக்கடலை ஒட்டிய காஸாபகுதியும் தனித்தனி துண்டுகளாக பிரிந்தன. இரண்டு தனித்தனி துண்டுகளை சேர்த்துத்தான் இப்போது பாலஸ்தீன் என்று அழைக்கப் படுகிறது. இரண்டுக்கும் இடையே இரும்புத்திரையாக இஸ்ரேலின் ராஜாங்கம் நடக்கிறது. அரபுகள் ஒன்று திரண்டு விட முடியாத படி செய்யப்பட்ட சதி அது.
இஸ்ரேல் அமைக்க்ப பட்ட போதே பாலஸ்தீனமும் அமைக் கப்பட்டது. ஆனால் அரபுகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலின் வலிமை அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்ளாத அரபு நாடுகள் இஸ்ரேல் பிறந்த அன்றே அதன் மீது அவசரமாக யுத்தம் தொடுத்தன. யுத்தத்தில் அரபு நாடுகள் மோசமாக தொற்ற போது பாலஸ்தீனம் சிதைந்து போனது. 1948 ல் 369 பாலஸ்தீன ஊர்களை இஸ்ரேல் அழித்தது. யுத்தத்தில் ஈடுபட்ட அரபு நாடுகள் தம் பங்கிற்கு பாலஸ்தீனை மேலும் சிதைத்தன. பாலஸ்தீனின் பகுதிகளாக அறிவிக்கப் பட்டிருந்த காஸாவை எகிப்து கைப்பற்றி கொண்டது. மேற்கு கரையை ஜோர்டான் கைப் பற்றிக் கொண்டது. காஸாவை 1948 லிருந்து காஸா எகிப்திடமிருந்தது. 1967 ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மற்றொரு போர் நடந்தது அதில் அரபு நாடுகள் மிக மோசமாக தோற்றன. எகிப்திடமிருந்து காஸா ஜோர்டானிடமிருந்து மேற்கு கரை ஆகிய வற்றை மட்டுமல்லாது அதுவரை அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இருந்த பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அடங்கியிருக்கிற ஜெரூசலம் நகரத்தையும் சேர்த்தே கைப்பற்றியது. தங்களது கள்ள்க் குழந்தை அரபு நாடுகளை கப்ளீகரம் செய்வதை அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்த்தன.
1948 லிலிருந்து பாலஸ்தீன்னின் விடுதலைக்காக பாலஸ்தீன மக்கள் பல்வேறு குழுக்களாக போராடினர். அதில் பிரதானமானது யாசிர் அரபாத்தின் அல்பதாஹ் இயக்கம். வேறு பல குழுக்களும் இருந்தன.1963 ம் ஆண்டு விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அந்த குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பி.எல்.ஒ என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்து தரப் பட்டது. தான் உருவாக்கிய ஒரு ரவுடி தேசத்தினால் பாரம்பரையமான ஒரு நாடு காணாமல் போனதற்காக ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்திய அதிகபட்ச நல்லெண்ணம் இது. இதைதான் வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பார்கள். இந்த நடவடிக்கையின் அல்லது இந்தப் புதிய அந்தஸ்தின் காரணமாக அல்லது மயக்கத்தினால் பி.எல்.ஓ அமைப்பு போராட்ட வழி தவிர்த்து வேறு வழியான அரசியல் தீர்வுகளையும் தேடியது. எப்படியாவது ஒரு சமாதானம் ஏற்பட்டாக வேண்டும் என்று அவர்கள் யோசிக்க வேண்டிய நிர்பந்ததத்தை இஸ்ரேல் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தது. பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு மிக மோசமான கொடுமைகளை இஸ்ரேலிய அரசு இழைத்தது.
இப்போதைய தாக்குதலுக்கு ஹமாஸின் ராக்கெட் தாக்குதலை காரணமாகச் சொல்வது போல ஏதாவது ஒரு சப்பையான காரணத்தை சொல்லிக் கொண்டு அரபுகளை சூரையாடியது. அவர்களது வீடுகளை கணக்கின்றி இடித்துதள்ளியது. அரபுகளின் வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர்களை உருவாக்கியது.
Caterpillar Tractor என்ற கம்பெனி பாலஸ்தீனர்களின் வீட்களை இடிப்பதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர்களை இஸ்ரேலுக்காக தயார் செய்து கொடுத்தது. மனித உரிமை ஆர்வலரான Rachel Corrie என்பவர் அந்த புல்டோஸர்களில் ஒன்றின் முன் அதை அறவழியில் தடுத்து நிறுத்த போராடினார். இஸ்ரேலியர்கள் அவரை கைது செய்திருக்கலாம். அல்லது அப்புறப்படுத்தி இருக்கலாம். ஆனால் சர்வசாதரணமாக அவர் மீது புல்டோஸை ஏற்றி சிதைத்தார்கள். இதுதான் இஸ்ரேலின் அணுகுமுறை.
இத்தகைய அணுகுமுறையில் இஸ்ரேலின் கொடூரம் உச்ச கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த சூழலில் பாலஸ்தீன போராளிகளும் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள். வரலாற்று ச்சிறப்பு வாய்ந்த முதலாவது இன்திபாதா போராட்டம் நடந்தது. பல லட்சக்கணக்கான மக்கள இஸ்ரேலின் சர்வ வல்லமை படைத்த ராணுவத்தை எதிர்த்து வெறும் கற்களை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர்.
இந்தச் சூழலில் தான் இஸ்ரேலிய அரசு அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மூலமாக பாலஸ்தீனர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது. அதுதான் பாலஸ்தீனிற்கு தன்னாட்சி வழங்கும் திட்டம். நார்வேயின் தலைகர் ஒஸ்லே வில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் யாசிர் அரபாத்தின் பிரதிநிதியும் அரபாத்தின் பிரதிநிதியும் கையெழுத்திட்டனர். பிறகு அதே ஒப்பந்தததை அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் யாசிர் அரபாத்தும் இட்சாக் ரபீனும் ஒப்பமிட்டனர்.
நடுவே இஸ்ரேல் கொலுவிருக்க ஒரு பக்கம் காஸாவும் மறுபக்கம் மேற்குகரையும் கொண்ட ஒரு பகுதியை பாலஸ்தீனின் தன்னாட்சிப் பகுதியாக வரையறுத்தார்கள். நிலம் பாலஸ்தீனர்களிடம் இருக்கும் ஆனால் அதன் வானம் இஸ்ரேலுக்குச் சொந்தம். காஸாவும் அதன் கடற்கரையும் பாலஸ்தீனிடமிருக்கும் ஆனால் கடல்வழி இஸ்ரேலுக்குச் சொந்தம். ஒரு ஊசிமுனையளவு பொருளாக இருந்தாலும் அது இஸ்ரேலின் கஸ்டம்ஸை கடந்து தான் உள்ளே வரவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி அதிகாரம் பாதுகாப்பு ராணுவம் அனைத்தும் இஸ்ரேலிடம் இருக்கும். இஸ்ரேலிடம் அனுமதி பெற்ற யாரும் பாலஸ்தீனிலிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியும். பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு வரியும் செலுத்த வேண்டும். பாலஸ்தீனில் விழுகிற குப்பைகளை அள்ளவும் மருத்துவ மனைகளை பராமரிக்கவும் பாலஸ்தீன நகரங்களை பராமரிக்கவும் மட்டுமே பாலஸ்தீன தன்னாட்சி அமைப்புக்கு அதிகாரம் இருக்கும். அது வரை ஒரு தீரமிக்க போராளியாக இருந்த அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரபாத் ஏற்றுக் கொண்டார். தனது மக்களின் மிக மோசமான வாழ்வில் அது கொஞ்சமாவது நிம்மதியை உண்டு பண்ணும் என்று அவர் நம்பினார். தற்காலிக தீர்வுகள் மூலமாக நிரந்தர தீர்வை நோக்கி நகர முடியும் என்று அவர் நம்பிதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் யூதர்களின் ஒப்பபந்தங்கள், வாக்குறுதிகள், நம்பிக்கை குறித்து எந்த அளவு எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம் என்று திருக்குரான் கூறுகிற வழிகாட்டுதல்களை அவர் கவனத்தில் கொண்டாரில்லை.
இந்த ஒப்பந்தத்தினால பாலஸ்தீனர்களுக்கு கிடைத்த ஒரே பலன் மேற்குக் கரையிலும் காஸா முனைப் பகுதியிலும் இஸ்ரேல் அமைத்திருந்த யூத குடியேற்றங்களை காலி செய்தது தான். இஸ்ரேல் இதைச் செய்ததேகூட பாலஸ்தீனர்களின் நன்மைக்காக அல்ல. பாலஸ்தீன பகுதியில் குடியிருக்கிற யூதர்களை பராமறிப்பதற்கு ஆகிற ராணுவச் செலவு எல்லை கடந்து செல்கிறது என்பதற்காகத் தான் என மேற்கத்திய உடகங்கள் கண்சிமிட்டி பேசிக் கொள்கின்றன.
அரபாத் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அப்போதே பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக காஸா முனைப் பகுதியில் வலுவாக செயல்பட்டு வந்த ஒரு மாபெரும் அர்பனீப்பு இயக்கமாக கருதப் பட்ட ஹமாஸ் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை.
ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலினால் பாதிக்கப் படும் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவும் அவர்களது ஒவ்வொரு பிரச்சினையிலும் உதவுவதற்காக மார்க்க அறிஞர்கள் பட்டதாரிகளால உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. ஹர்கத் அல்முகாவமுதுல் இஸ்லாமியா என்ற முழு பெரை சுருக்கமாக ஹமாஸ் ( தற்காப்பு அல்லது தடுப்புப் படை) என்று அழைத்துக் கொண்டனர். இஸ்ரேலினால் ஆக்ரமிக்கப் பட்டு நிராதவராக எந்த வித கவனிப்பும் அற்றிருந்த பகுதிக்குள் ஒரு அரசு நிர்வாகம் போல் செயலாற்றியது. அரசியல் ரீதியாக பிரபலமடைவதை மார்ர்க ரீதியாக பிரச்சினையை கையாள்வதில் ஹமாஸ் அக்கறை செலுத்தியது. உலமாக்கள் எனப்படும் மார்க்க அறிஞ்ர்களே அதன் தலைமை பொறுப்பிற்கு வர முடியும். இப்போதைய தலைவரான இஸ்மாயில் ஹனியாவும் ஒரு மார்க்க அறிஞ்ர்தான். யூதர்கள் விசயத்தில் மார்க்கம் கற்றுத்தரும் எச்சரிக்கைகளை அவர்கள் மறக்கவில்லை. அதனால் ஒரு போதும் இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் உறுதிபடக் கூறினார்கள். அதனல். அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்குள் (பி.எல்.ஓ) அவர்கள் இணைய வில்லை. தொடர்ந்து தனி அணியாகவே செயல்பட்டு இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். அயினும் யாசிர் அரபாத்தின் முயற்சிக்கு அவர்கள் தொல்லை எதுவும் தரவில்லை. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்தப் பட்டு யாசிர் அரபாத் அதன் தலைவராக இன்னொரு வார்த்தையில் பாலஸ்தீனின் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் அவரது முழு அதிகாரம் பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் மட்டுமே இருந்தது. காஸாவை அதிகாரப் பூர்வமாக பி.எல்.ஓ ஆட்சி செய்தாலும் உண்மையான அதிகாரம் ஹமாஸிடமே இருந்தது. ஒரு அரசியல் தீர்வை தேடும் முயற்சியில் பி.எல்.ஓ மேற்குலகத்தின் நாடகத்திற்கு அரபாத் மயங்கிவிட்டார் என்று கருதிய பாலஸ்தீனர்கள் ஹமாஸ் பி,எல்.ஒ வோடு சேர்ந்து விடக்கூடாது என்றே விரும்பினார்கள் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இஸ்ரேல் தனது எந்த ஒரு முயற்சியின் வழியாகவும் தனது வக்கிரமான எண்ணங்களையே நிறைவேற்றிக் கொள்ளவிரும்புகிறது. அதன் பாரம்பரிய விஷ(ம)த்தனம் கடுகளவும் குறைய வில்லை. அதே நேரத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து முனிசிபாலிட்டு தன்னை தலைவராக்கி விட்டதன் மூலம் இஸ்ரேல் ஏரளமான புதிய நட்பை சேர்த்துக் கொண்டு பாலஸ்தீனர்களை மேலும் அபகதிக்குள் உள்ளாக்கிவிட்டதை சற்று தாமதமாகவே அரபாத் புரிந்து கொண்டார். ஆயினும் கிடைத்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ஏதாவது சில நல்ல காரியங்களை செய்ய முடியுமா என்று முயற்சித்தார். அதற்குள்ளாக தனது இருப்பை சர்வதேச அளவில் உறுதிப் படுத்திக் கொள்ள ராஜாங்க ரீதியான முயற்சியை இஸ்ரேல் தீவிரப் படுத்தியது. அமெரிக்காவும் பெருமளவில் அதற்கு உதவியது.
இறுதியாக அதே அரபாத்தை பயன்படுத்தி இன்னும் சர்ச்சைக்குள்ளான பகுதியாக இருக்கிற ஜெரூஸலத்திற்கும் இந்த முறையிலான ஒரு தீர்வை அடைந்துவிட அது துடிததது. அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன் மூலம் பாலஸ்தீனிற்கு மடிப்பிச்சை இடுகிற பல திட்டங்களை அது முன் வைத்தது. அதற்கு விலையாக மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை கேட்டது. பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் பாரம்பரியம் மிக்க முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலும் பின்னாட்களில் கட்டப்பட்ட மஸ்ஜிது உமர் பள்ளிவாசலும் இருக்கினறன. மஸ்ஜிது உமர் முஸ்லிம்களுக்கு என்றும் மஸ்ஜிதுல் அகஸா யூதர்களுக்கு என்றும் பிரித்துக் கொள்ள அந்த ஒப்பந்தம் ரகசியாமாக வழி வகுத்தது. அந்த இடத்தில் பிரம்மாண்டமான ஒரு யூதக் கோயிலைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. வரலாறு ஒரு போதும் மன்னிக்காத அபகீர்த்திக்கு தான் ஆளாகிவட்க் கூடாது என உணர்ந்த அரபாத் புதிய திட்டத்தை உறுதியாக மறுத்துத் திரும்பிவிட்டார். அது முதல் இஸ்ரேலின் பெரும் எதிரியாக அரபாத் மாறினார்.
பைத்துல் முகத்தஸ் விசயத்த்தில் இஸ்ரேலின் திட்டத்தை தெரிந்து பாலஸ்தீனர்கள் இரண்டாவது இன்திபாதா போராட்டத்தை தொடக்கினார்கள். இஸ்ரேல் ரானுவம் பாலஸ்தீனிற்குள் நுழைந்டத்து. பாலஸ்தீனம் ரணகளமாகியது. போதுமான அழிவை ஏற்படுத்திய பிறகு சர்வதேச நிர்பந்தங்களுக்குப் பணிந்து இஸ்ரேல் வெளியேறியது. பின்னரும் காஸாவில் கலவரத்தை தூண்டினார் அதற்காக ஆயுதங்களை வாங்க முயற்சி செய்தார் என்று அரபாத்தின் மீது குற்றம் சாட்டி அவரை வீட்டுச் சிறையில் வைத்தது இஸ்ரேல். ஒருக்கால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பாலஸ்தீன தன்னாட்சி என்ற மாய்மால ஒப்பந்தம் நடப்பதற்கு முன்னதாக நடந்திருந்தால் விசயம் வேறுமாதிரி சென்றிருக்கும். இந்த ஒப்பந்தம் சில விசயங்களில் பாலஸ்தீனர்களை மூச்சுவிட வைத்து பல் விசயங்களில் மூச்சடக்க வைத்து விட்டது. இஸ்ரேலும் அமரிக்காவும் இனி அரபாத்துடன் பேசமுடியாது என்று மறுத்தன. சர்வதேச அரங்கில் அவரது மரியாதையை சிதைக்க பெருமளவில் முயற்சி செய்தன. அவர்களின் நிர்பந்தத்தினால அவர்களது விருப்பப் படி மஹ்மூது அப்பாஸ் பிரதமராக நியமிக்கப் பட்டார். அரபாத் இறந்த பிறகு அவரே பாலஸ்தீன அதிபராகவும் ஆனார்.
இதற்கிடையே பாலஸ்தீனில் முதன் முதலாக தேர்தல் நடந்தது. பல்வேறு பட்ட தரப்பிலிருந்தும் வந்த வேண்டுகோளை அடுத்து இஸ்ரேலுடனான போராட்ட வழியில் இருந்த ஹமாஸ் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டு தேர்தலில் போட்ட்யிட்டது. மக்கள் குறிப்பாக காஸா நகரத்து மக்கள் பெருவாரியாக ஹமாஸை தேர்ந்தெடுத்தனர்.
2006 ஜனவரி 25 நடந்த தேர்தலில் ஹமாஸ் வென்றது. 42.9 சதவீத வாக்குகளுடன் மொத்தமுள்ள 132 இடங்களில் 74 கை கைப்பற்றியது. இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் ஹமாஸின் தேர்வை ஏற்க மறுத்தன.
ஹமாஸ் பாலஸ்தீனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து விட்டது. அத்தோடு தங்கள் மீதான சர்வதேச நிர்பந்தங்களைய்ம் ஏற்க மறுத்தது. அதற்கான நியாயத்தை உலகிற்கு ஹமாஸின் சார்பில் பேசவல்ல அமெரிக்க பாலஸ்தீனரான கலீல் தெளிவுபடுத்தினார். பாலஸ்தீனில் நிலவும் எதார்த்த சூழ்நிலையை, பாலஸ்தீன அமைப்புக்கு வழங்கப் பட்ட தன்னாட்சி அதிகாரத்தின் லட்சணத்தை அவர் அம்பலப்படுத்தினார்; கலீல் கூறினார். "Israel still controls every person, every good, literally every drop of water to enter or leave the Gaza Strip. Its troops may not be there … but it still restricts the ability for the Palestinian authority to exercise control.”
இஸ்ரேல் இப்போதும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு பொருளையும் கட்டுப்படுத்துகிறது. காஸாவுக்குள் நுழைகிற அல்லது வெளியேறுகிற ஒவ்வொரு துளி தண்ணீரையும் சோதிக்கிறது. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு தனது பொறுப்பை ஏற்றுக் கொள்ள அது இன்று வரை தடையாக இருக்கிறது.
மற்ற உலக நாடுகளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தனக்கு வேண்டாதவர்கள் என்றால் அதை ஏற்க மறுப்பதும் அவர்களை எப்பாடுபட்டவது துரத்த முயற்சிப்பதும் அதுவும் முடியாவிட்டால் அத்தகைய ஆட்சித் தலைமையை தேர்ந்தெடுத்த மக்களை வதை செயவ்தும் தானே அமெரிக்க ஜனநாயகம். அமெரிக்கா பாலஸ்தீனிற்கு செய்து வந்த நேரடி உதவியை காஸாவிற்கு நிறுத்தியது. அதன் ஆதிக்க கூட்டாளிகளும் தங்களது உதவியை நிறுத்தினர்.
ஹமாஸ் பாலஸ்தீன அரசை தேசிய சுயாட்சி அரசாக அறிவித்தது. அதிபர் மஹ்மூது அப்பாஸ் அதை ஏற்கவில்லை. அவசர நிலையை அறிவித்துவிட்டு ஹமாஸ் இல்லாத ஒரு அரசை அமைப்பதாக கூறிவிட்டு அவர் பாலஸ்தீனின் இன்னொரு பகுதியான மேற்குக் க்ரை பகுதியில் இருந்து விட்டார். அவரது ஆட்கள் மேற்கு கரையில் ஹமாஸின் சில தலைவர்களை கைது செய்தார்கள்
பாலஸ்தீன் முனிசிபாலிட்டி இரண்டாக பிளவுண்டது. மேற்குக் கரை இப்போது அதிபர் மஹ்மூது அப்பாஸ் வசம் இருக்கிறது. காஸா இப்போது பிரதமர் இஸ்மாயீல் ஹனியாவிடம் இருக்கிறது. அப்பாஸின் அரசை அமெரிக்காவின் பொம்மையான சவூதியும், இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட இரண்டே இரண்டு அரபு தேசங்களான எகிக்தும் ஜோர்டானும் ஆதரிக்கின்றன. ஹமாஸை சிரியாவும் ஈரானும் ஆதரிக்கின்றன. இந்தியா எந்தப் பக்கம் நிற்கும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
காஸாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களும் எரிபொருட்களும் செல்வதையும் போக்குவரத்தையும் இஸ்ரேல் தடுத்தது. 2007 செப்டம்பரில் காஸாவை யுத்த பகுதியாக அறிவித்தது.
காஸாவில் பொருளாதார பிரச்சினை தலை தூக்கியது. இன்றைய காஸா என்பதே இஸ்ரேலின் வெறியாட்டங்களால் உருவான ஒரு பெரிய அகதி முகாம் தான். அகதிகளுக்காக ஐநாவின் நிவாரணத்திட்டத்தின் கீழ் கிடைத்துவருகிற அத்தியாவசியப் பொருட்கள்தான் அங்குள்ள மக்களுக்கு பிராணவாயு. அதையும் நிறுத்தி விட்டால்? உணவு, மருந்துப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர் என அனைத்துப் அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஹமாஸை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக 15 லட்சம் மக்களை பட்டினிச் சாவை நோக்க்கி இஸ்ரேல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. கேட்பார் யாரும் இருக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் தான் ஹமாஸ் இஸ்ரேலின் சில பகுதிகள் மீது கஸம் ஏவுகனைகளை வீசியது. இஸ்ரேலின் ஆயுத வன்முறையோடு ஒப்பிடுகையில் உள்ளூர் தயாரிப்பான கஸம் ஒரு பொருட்டே அல்ல. 697 ராக்கெட்டுகளும் 822 பாம்களும் வீசப்பட்டதாக இஸ்ரேல் கணக்கு காட்டுகிறது. இதன் மொத்த பாதிப்பும் இஸ்ரேலின் ஒற்றை குண்டுக்கு நிகராகாது. இந்த ராக்கெட்டுகளை காரணம் காட்டித்தான் இஸ்ரேல் காஸாவின் மீது மிருகவெறித் தாக்குதல் நடத்தியது.
உண்மையில் காஸா இஸ்ரேலிய நாட்டுக்குள் இருக்கிற ஒரு நகரம். அதை பாதுகாக்க பீரங்கிப் படைகளோ எல்லைப் பாதுகாப்பு வீரர்களோ ஒருவரும் இல்லை. காஸாவை மீண்டும் ஆக்ரமிப்பது என்று இஸ்ரேல் முடிவு செய்தால் கூட எந்த ஆயுதங்களையும் வீசாமல் அதிகபட்சமாக இரண்டு நாட்களில் பிடித்து விட முடியம். மிக முக்கியமான விசயம். வான்வெளித்தாக்குதல் எனப்து அறவே தேவையற்றது. பிறகு ஏன் இந்த மாபெரும் கொலைவறித் தாக்குதல்? அது தான் இஸ்ரேலின் குணம்.
இஸ்ரேல் இந்த தாக்குதலின் மூலம் பாலஸ்தீனர்களுக்கு சொல்ல விரும்புவதை மீண்டும் தெளிவாக சொல்லிவிட்டது. எங்களது விருப்பத்திற்கு உடன்படுவதானால் மட்டுமே இந்தப் பிராந்தியத்தில் நீங்கள் உயிர்வாழ முடியும். போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேலின் ரானுவப் பேச்சாளர் அதைத்தான் இப்படிக் கூறினார். "எங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது".
இஸ்ரேலின் விருப்பம் தான் என்ன என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை.இப்போதைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜெரூஸலம் நகரை ஆள வேண்டும். பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கு மாபெரும் சினகாஹ் யூதக் கோயில் ஒன்றை கட்ட வேண்டும்.
இது பாலஸ்தீனில் அரபிகள் இருக்கிற வரை நடக்காது. அதனால் தான் தன் எண்ணத்திற்கு தடையாக இருப்பவர்களுக்கு தன்னுடைய வலிமை என்ன என்பதை இஸ்ரேல் காட்டிக் கொண்டே இருக்கிறது. தன் விருப்பப் படி நடக்கதவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தது. கொடுத்து விட்டது. பிறகு வெளியேறியும் விட்டது.
இப்போதைக்கு இந்தத் தாக்குதல் ஒரு முடிவில்லாமல் முடிந்துவிட்டது. ஆனால் இதுவே முடிவான முடிவல்ல. எல்லோருக்கும் இது தெரியும். நாளைக்கே இன்னொரு காரணத்தை சொல்லிக் கொண்டு இஸ்ரேல் மேற்குக் கரை மீது இன்னொரு மிருகத் தாக்குதலை தொடங்கலாம். காரணங்களுக்கு அங்கே பஞ்சமே இல்லை. பாலஸ்தீனில் முஸ்லிம்கள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணம் போதாதா? அறுபது வருடங்களாக தொடர்ந்து இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதை நிறுத்துகிற வழியை காணோம்.
இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. பாலஸ்தீனப் பிரச்சினையை அங்குள்ள அரபிகளின் அரசியல் விவகாரமாக மட்டும் பார்க்கப் படக் கூடாது. உலக முஸ்லிம்களின் தன்மானத்தோடும் பக்தியோடும் தொடர்புடைய உயிர் அம்சமாக பார்க்கப் படவேண்டும். அதனடிப்படையில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஒரு பாதிக்குள் இஸ்ரேல் விவகாரத்திற்கு ஒருமித்த ஒரு முடிவு கட்டப் படவேண்டும். பாலஸ்தீனிற்குள் ஒரு முனிசிபாலிட்டியாக இஸ்ரேல் இருக்க மட்டுமே முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். மற்றெந்த மற்றெந்த குறுக்கீடுகளையும் உடன்பாடுகளையும் திரும்பியும் பார்க்கக் கூடாது. ஒரு சமுதாயம் இலட்சியத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிற வரை மட்டுமே அந்த சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
உலக முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய உறுதியை தெளிவையும் மறு பரிசீலனை செய்து கொள்வதற்கு வசதியாக இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் கூரியன் செய்த ஒரு பிரகடணத்தை மட்டும் நினைவூட்டுகிறேன்.
1967 ம் ஆண்டு ஜெரூஸலத்தை கைப் பற்றிய பிறகு பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்கருகே நின்று கொண்டு தன்னுடை வீரர்களிடமும் மக்களிடம் உரையாற்றிய பென் கூரியன் இறுதியாக இப்படி முடித்தார். "கதிஸ்தவல்லைனா அலல் குதுஸ். வ நஹ்னு பீ தரீகதீனா இலா யத்ரிப்."
"நாம் பைத்துல் முகத்தஸை வென்றுவிட்டோம். இனி நமது பயணம் யத்ரிபை நோக்கி."
உங்களுக்கு நான் நினைவு படுத்த வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். யத்ரிப் என்பது "மதீனா" வின் புராதானப் பெயர்.

ஹிஜ்ரத் புலம் பெயர்தலில் ஒரு புரட்சி

இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீரீ ஆண்டு என அடையாளப்படுத்தப்படுகிறது. ஹிஜ்ரீரீ காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாக கொண்டது. சந்திரக் காலண்டரே எல்லா இடத்திற்கும் அனைத்து வகைப்பட்ட மனிதருக்கும் எளிமையானது. ஆய்வுக்கருவிகளின் தேவையில்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக்கூடியது. அதன் காரணமாகவே சீனர்கள் இந்தியாகள் அரேபியாகள் என பெரும்பாலான பழைய கலாச்சாரங்களச்சாந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே தங்களது நாட்களை கணக்கிட்டு வந்துள்ளனர்.

கீ பீ காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டா என்று பெயர் அது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இன்று நாம் சிவகாசிக் காலண்டா களின் புண்ணியத்தில் சூரிய நாட்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்கி றோம். இல்லை எனில் சூரியன் நிற்கும் திசையை வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது.

கிராமத்து கிழவனோ கிழவியோ வானத்தில் உலாவும் வட்ட நிலாவை அண்ணாந்து பாத்து விட்டு இன்றைக்கு வளர்பிறை பத்து என்று நொடியில் செல்லிவிட முடியும். சூட்டெறிக்கும் சூரியனை கைகுவித்து பத்து தடவைப் பார்ததாலும் கருவிகளின் துணையின்றி அறிவியல் மாணவன் கூட தேதியை சரியாக சொல்வது சிரமம். எனவே பழமையான எளிமையான நாட்காட்டி நடைமுறையான சந்திர மாதக்கணக்கே இஸ்லாமிய மாதக் கணக்காகவும் அங்கீகாக்கப்பட்டது.

ஹிஜ்ரீரீ ஆண்டின் மாதங்கள் முஹர்ரமில் தொடங்கி துல்ஹஜ்ஜில் முடிவடைகின்ற 12 மாதங்களாகும்.

அரபு மக்களிடம் மாதங்களை குறிப்பிட 12 பெயர்கள் இருந்தன. அவர்களது நாட்டின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கேற்பவும் கலாச்சார அடிப்படையிலும் அப்பெயர்களை சூட்டியிருந்தனர். அப்பெயர்களில் பல் வேறு பகுதிகளிலிருந்தும் இறக்குமதியானவை. ஆனால் வருடத்தை தொடர்ச்சியாக அடையாளப்படுத்துவதற்கு அவர்களிடம் குறிப்பித்தக்க எந்த அடையாளமும் இருக்கவில்லை. ஏதேனும் முக்கிய நிகழ்வுகளைச் சார்ந்து ஆண்டுக்கு அடையாளமிட்டுக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சற்று முன்னதாக எமன் தேசத்து அரசன் ஆப்ரஹா யானைப் படையோடு கஃபாவை அழிக்க வந்து அழிது போன நிகழ்ச்சி நடை பெற்றதால் அந்த ஆண்டை “யானை ஆண்டு” என்று அடையாளப் படுத்தினர். அன்றைய அரபுகளின் சமூக அமைப்பு ஆவணங்களை பராமரிக்கும் சமுதாயாமாக முறைப் படுத்தப் படாத காரணத்தால் இது பற்றிய தேவை அவர்களுக்கு இருக்க வில்லை.

பின்னர்ட்களில் இஸ்லாமின் எழுச்சிக்குப் பிறகு அரபுகளின் தேசீய கட்டமைப்பு உருவாக்கப் பட்டு இஸ்லாமின் பேரரசு நிலை நாட்டப் பட்ட போது வரலாற்றுத் தகவல்களை கனக்கிடுவதிலும் ஒப்பந்தங்களின் கால நிணயத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வருடத்தை குறிப்பதற்கு ஒரு அடையாளப் பெயரின் அவசியம் உணரப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 ல்) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அன்னார் ஓரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டா ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உணாந்தார்கள்.

எனவே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்படன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.

1) அண்ணலாரின் பிறப்பு
2) அண்ணலாரின் இறப்பு
3) அண்ணலார் நபியாக தேர்வு செய்யப்பட்டது
4) அண்ணலார் மக்காவிலிருந்து மதீனர்விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது.

உமர்(ரலி) அவர்கள் “ஹிஜ்ரத்”தை தேர்வு செய்தார்கள்.

மற்ற மூன்று விசயங்களும் கூட உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது .என்பதே உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு காரணம். ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படுவதற்கு மிகவும் பொருத்தமான ஆதே நேரத்தில் அழுத்தமான பொருளை தரக்கூடிய பெயரையே உமர் (ரலி) அவர்கள்தேர்வு செய்தார்கள்.

அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. ஆன்று தொடங்கிய ஹிஜ்ரீ ஆண்டின் வரலாறு இன்று 1431 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.

சீனர்கள் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டுப் பெயர்களாக சூட்டியுள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முந்தைய சீன ஆண்டுக்கு “நாய் ஆண்டு” என்று பெயர். நாய் ஆண்டு பிறப்பதற்கு முதல் நாள் இரவு நாய்களுடன் ஜந்து நட்சத்திர ஹோட்ல்களில் விழா கொண்டாடுகிற சீனர்களை தொலைகாட்சிகள் வினோதமாக கட்டின.

இது போல ஹிஜ்ரீ என்பது வேடிக்கை விநோதம் நிறைந்த விளையாட்டுப் பெயர் அல்ல. ஹிஜ்ரீ அலாதியான அத்த புஷ்டி மிகுந்த சொல்லாகும்.

ஹிஜ்ரத்தின் வரலாற்று பின்னணி கனமானது. ஹிஜ்ரத் என்ற அரபி வார்த்தைக்கு “குடிபெயர்தல்” என்று பொருள். எல்லா குடிபெயர்தலும் ஹிஜ்ரத் தான் என்றாலும் “மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்வதற்கே இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும்.

பொதுவாக அகதியாக இன்னொரு ஊரில் குடிபெயர்வது மிகவும் அவலமானது. சுயமரியாதை, கவுரவம், சுகமான வாழ்க்கை அகியவற்றை பறித்துவிடக் கூடியது. சகலவிதமான கலாச்சார தீமைகளுக்கும் இடமளிக்க்கூடியது.

உலக வரலாறு நெடுகிலும் அகதிகளின் வாழ்கை முறையைப் பற்றிக் கிடைக்கிற தகவல்கள் இப்படித்தன் அவர்களது வரலாற்றை படம் பிடிக்கின்றன.

பல வ்ருடங்களுக்கு முன்னாள் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகத்திற்கு வரதொடங்கிய காலகட்டத்தில் இராமேஸ்வரம் பகுதியில் நடை பெற்ற ஒரு நிகழ்வு பத்ரிகைகளில் வெளியாகி இருந்தது.

ராமேஸ்வரம் கடற்கரையோரமாக ஒரு நடுத்தவர வயதுடையவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வருவோர் போவோரிடம் நாசூக்காக யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தமிழ் நாட்டுக் காரருக்கு கோபம் வந்து விட்டது. ஏனய்யா! கை காலெல்லாம் நல்லாத் தானே இருக்கு! ஏதாவது வேலை செய்து உழைச்சு சாப்பிடலாமில்லே.. என்று அவரை அதட்டினார். அந்த மனிதருக்கோ அழுகை வந்து விட்டது. சற்று நிதானித்து விட்டு அவர் சொன்னார். “ஐயா! நான் சில நாட்களுக்கு முன்பு வரை இலங்கையில் இலட்சாதிபதி என் கடையிலும் வீட்டிலும் வேலை செய்ய பலர் இருந்தார்கள். நான் திடீரென்று எல்லாவற்றையும் இழந்து விட்டு. இங்கே வந்திருக்கிறேன். எங்கே செல்வது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. பசி தாங்க இயலவில்லை அதனால் தான் இப்படி..” என்று சொல்லி அழுதார். அதைப் பார்த்து அதட்டியவருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. தன்னிடமிருந்த சில்லரைகளை கொடுத்த அவர் இந்தச் செய்தியை பத்ரிகைகு எழுதி அனுப்பியிருந்தார்.

அகதிகளின் மறுவாழ்வுப் பிரச்சினைதான் இன்றைய முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள்க்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா வின் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் கூறியுள்ளார்.

இலங்கை,பாகிஸ்தான்,சோமாலியா ஆகிய நாடுகளில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களால் அகதிகள் பிரச்சினை நிச்சயம் பெரிய அளவில் தலையெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

2008 ம் ஆன்டில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பின் படி உலகில் 1 கோடியே 52 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர் . அவர்களில் 47 வீதம் பேர் பெண்களும் சிறுவர்களுமாவர். 2006ல் இந்த எண்ணிக்கை 84 லட்சமாக இருந்தது.

ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் அரைப்பங்கைக் கொண்டிருந்தன என்று ஒரு த்கவல் கூறுகிறது. அத்தோடு உலகில் உள்ள அகதிகள்ல் 8.27. 000 பேர் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது..

ஸ்வாத் பள்ளத்தாக்கில் தாலிபான்களுக்கு எதிரான யுத்தத்தால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 30 இலட்சம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

.சோமாலியாவில் 17 வருடங்களுக்கு முன் உடைந்த மத்திய அரசாங்கத்தால் அங்கு இரு தலைமுறைகளாக அகதி முகாமிலேயே வசித்து வரும் மக்கள் தொகை தற்போது 13 இலட்சம். மேலும் 4 இலட்சம் சோமாலியர்கள் கென்யா யேமென் போன்ற அயல் நாடுகளில் உள்ளனர்.

1990 களில் இலங்கையின் வட பகுதிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களில் சுமார் 1 லட்சம் பேர் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். இலங்கiயில் 30 ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

2004இல் சுனாமி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் 5 இலட்சத்திற்கும் அதிகம். இதில் ஐ.நா அறிக்கைப் படி 2009 இன் முதல் 3 மாதங்களில் மட்டும் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகம். 2009ஆம் ஆண்டு வட பகுதியில் நடைபெற்ற நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்

புலம் பெய்ர்ந்த இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75,738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மேற்குகரை, ஜோர்டான், காசா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் அகதி முகாம்களில் 44 லட்சம் பாலஸ்தீன அகதிகள் தங்கி இருக்கிறார்கள்.

இந்த அகதிகளின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமானது. பெரும்பாலும் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத வாறு அகதிகளின் வாழ்கை சிதைக்கப்பட்டிருக்கிறது.

போதுமான உணவு கிடக்காது. குழந்தைகளிக்கான பால் கூட கிடைக்காது. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு பால் கூட வழங்கப்படவில்லை என்று சமீபத்திய செய்தி ஒன்று கூறுகிறது.

அகதிகளின் மானத்திற்கு மரியாதைக்கும் எந்த வித உத்திரவாதமும் இல்லை. இந்த மாதம் 21 ம்தேதி வெளியான தினகரன் பத்ரிகையில் இலங்கை அகதி முகாம்களில் தமிழ் பெண்கள் இராணுவத்தால் மானபங்கப் படுத்தப் படுவதாக அதை நேரில் பார்த்து விட்டு வந்த இலண்டனில் வசிக்கிற இலங்கை பெண் மருத்துவர் இராணி சொன்ன செய்தி வெளியாகி இருக்கிறது. இராணுவ வீரர்களின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் தருகிற உணவுப் பொருட்களுக்காகவும் இதைப் பற்றி பாதிக்கப் பட்ட பெண்கள் வெளியே சொல்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். அது போல செய்தி வருவது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்கிற இலங்கை அரசு குறிப்பிட்டு புகார் தெரிவிக்கப் பட்டால் தவிர தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது.

இலங்கையின் வடமேற்குப் பக்கமான வங்காலை கிராமத்திலிருந்து வந்திருக்கும் 41 வயதான பிரின்ஸா லம்பேர்ட் என்பவர் கூறுகையில்;
“நான் கடைசியாக எப்போது அமைதியாக தூங்கினேன் என்பதையே என்னால் நினைவுபடுத்த முடியாது என்கிறார்.

சமீபத்தில் பதிரிகைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி இது. இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் அகதிகளின் படகுக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீட்டர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகவும் கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா இந்தொனேசியா உள்ளிட்ட நாடுகள் காலம் கடத்துவதாகவும் செய்திகள் இதயத்தை பிழிகிற வண்ணம் இருக்கின்றன.

பாலஸ்தீன அகதிகள் வாழ்கிற முகாம்களில் நிலமை இன்னும் மோசம். உலகம் இரத்தக் க்ண்ணீர் வடிக்காமக் அந்தச் செய்திகளை வாசிக்க முடியாது.

சமீபத்தில் லெபனானான் முகாமில் வசிக்கும், பாலஸ்தீன இளைஞர்கள் தயாரித்த குறும்படம் ஒன்று, பாலஸ்தீனியர்கள் அவல வாழ்வைப் பற்றி எடுத்துக் காட்டுகின்றது.தமது முகாமில் இருந்து ஆரஞ்சு பழத்தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளரைப் பற்றிய விவரணப்படம் இது.

கடந்த 60 வருடங்களாக லெபனானில் 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்களை லெபனானிய மக்களோடு சேர்க்காமல், இன்றும் அகதிகளாக அந்நாடு ஒதுக்கியே வைத்திருக்கிறது.

லெபனான் சட்டப்படி அவர்கள் வெளிநாட்டவர்களாக பார்க்கப்படுவதால், எந்த ஒரு அரசியல்-சமூக உரிமைகளோ, சலுகைகளோ இன்றி, முகாம்களுக்குள் காலம் கடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பல முக்கியமான வேலைகளை செய்வதற்கு, பாலஸ்தீன அகதிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு மருத்துவப்படிப்பை முடித்த ஒரு அகதி அரசு மருத்துவ மனைகளில் மருத்துவராக பணி புரிய முடியாது. தனியார் மருத்துவனைகளில் ஒருவேளை பணி கிடைத்தாகும் அது கூட தகுதிக்கேற்ற சம்பளமற்ற, தராதரம் குறைந்த வேலையாக இருக்கும்.

சக லெபனானிய தொழிலாளரில் இருந்து பாகுபாடு காட்டப்படுதல். மிகக் குறைந்த சம்பளம் வழங்கி, உழைப்பை சுரண்டும் முதலாளிகள். நெருப்பாக கொளுத்தும் வெயிலிலும், எலும்பை உருக்கும் பனிக்குளிரிலும், வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளை, தொழிலாளர்களே சொல்லக் கேட்டு, யதார்த்தத்தமாக அதை படம் பிடித்துள்ளனர்,


விலங்குகளை வளர்ப்பதாக இருந்தால் கூட அதற்காக வசிப்பிடம் தகுந்ததாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தச் சொல்கிற ஆஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோஷம் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.

உலகம் முழுவதிலும் அகதிகளை அரவணைக்கும் மனிதாபிமானம் என்பது ஒரு வகையில் மனிதாபிமானத்தை கேலி செய்வ்தாக அமைந்திருக்கிறது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவரின் கட்டளைக்கேற்ப மதீனாவுக்கு குடிபெயர்ந்து சென்றவர்களுக்கும் அற்புதமான வாழ்வாதாரங்களும் மரியாதையும் மதீனாவில் கிடைத்தன.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களோடு பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மதீனர்விற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மதீனர்வில் செழிப்பான வாழ்கை காத்திருந்தது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து குடிபெயர்ந்து மதீனர்விற்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவரை சஃது பின் ரபீஃ என்ற மதீனர் தோழரின் குடும்பத்தில் ஒருவராக இணைத்துவிட்டாகள். அந்த தோழர் தனது அகதி சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக் சென்று அவரது கையைப்பிடித்துக் கொண்டு
“சகோதரரே! எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு தோட்டங்கள் இருக்கின்ற ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மனைவியர் இருக்கிறாகள். அவர்களில் ஒரு வரை தேர்வு செய்யுங்ககள் அவரை நான் விவாக விலக்கு செய்து உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்”
என்று சொன்னர். நெகிழ்ந்து போன அப்துரரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு குடும்பத்திலும் செல்வத்திலும் அருட்செய்யட்டும். எனக்கு கடைவீதிக்கு வழி காட்டுங்கள் இவை எதுவும் எனக்கு தேவை இல்லை என்று சொன்னர்கள்.

கடைவீதிக்கு சென்று சிறிய அளவில் வெண்ணை வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கிய அப்துர் ரஹமான் பின் அவ்ப் (ரலி) பின்னாட்களில் அரபுலகின் மிகப் பெரிய செலவ்ந்தராக உயர்ந்தார்கள்.

இத்தகைய ஒரு சிறப்பான் சூழ்நிலை ஏற்படக் காரணம் புலம் பெயர்ந்தோருக்கான மறுவாழ்வை அமைத்துத் தருவதில் நபிகள் அவர்கள் ஏற்படுத்திய புரட்சிகரமான வ்ழிமுறையேயாகும்.

மதீனா நகருக்கு நபிகள் அவர்கள் புலம் பெயர்ந்த போது மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்காக அவர்கள் தனி முகாம்களை உருவாக்க வில்லை. அப்படி ஒர் திட்டத்தை அவர்கள் யோசிக்கவே இடம் தரவில்லை.

மக்காவின் அகதிகளை மதீனா மக்களின் சகோதரர்களாக நபிகள் இணைத்து விட்டார்கள். மக்காவின் அகதிகளை தங்களது வீடுகளில் வத்து பராமரிக்குமாறு பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

நபிகள் அவகள் சொன்னார்கள் “மதீனாவின் மக்களே! நீங்கள் விரும்பினால் உங்களது வீடுகளிலிலும் சொத்திலும் அகதிகளுக்கு இடமளியுங்கள். இல்லை எனில் நான் அவர்களுக்கு இனி கிடைக்கப் போகும் வெகுமதிகளை வழங்கிவிடுகிறேன் என்றார்கள்.

மதீனாவின் தோழர்கள் தங்களது வீடுகளிலும் சொத்துக்களிலும் மக்காவின் அகதிகளுக்கு இடமளித்த்னர்.

அபூபக்கர் (ரலி) அவர்களை காரிஜா தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
உமர் அவர்களை இத்பானும் (ரலி),உஸ்மான் அவர்களை அவ்ஸும் (ரலி)
சுபைர் அவர்களை சலமாவும் (ரலி),அப்துர் ரஹ்மான் பின் அவபை சஃதும் (ரலி)
அபூ உபைதா அவர்களை இன்னொரு ஸஃதும் (ரலி) தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.அன்றைய தினமே 45 அகதிகளுக்கு 45 உள்ளூர் வாசிகள் பொறுப்பேறுறுக் கொண்டனர்.

அகதிகளாக வந்தவர்களுக்கு தங்களது குடும்பத்தை பற்றிய கவலை வாட்டாதிருக்கவும் நபிகள் அவர்கள் கட்டமைத்த ஒரு சமூக அமைப்பில் மனிதர்கள் வசிப்பிடத்தின் அடிப்படையில் பிளவு படாதிருக்கவுமான ஒரு அற்புதமான ஏற்பாடாக அது அமைந்தது.

அகதிகளை ஆதரித்தல் என்பதற்கான ஒரு புதிய புரட்சிகரமான திட்டத்தை அது வழங்கியது. அகதிகளுக்கு ஆதரவு தெரிவிபதற்கான மனிதாபிமானப் பாடத்தை அது வரையறுத்தது. யாரும் தங்களது நாட்டில் குடியேறிய அகதிகளை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதக் கூடாது என்பதே ஆதரித்தல் என்பதன் சரியான பொருள் என்பதை அது உறுதிப்படுத்தியது.

அகதிகளை ஏற்குதல் என்பதில் மட்டுமல்ல அனாதைகளை ஆதரித்தல் என்பதற்கும் இஸ்லாம் தருகிற பொருள் இதுவேயாகும்.

அநாதைகளை பராமரிப்பவரும் நானும் சொர்க்கத்தில் இருவிரல் போல நெருக்கமாக இருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி 5304)
தான் சாப்பிடும் போது பருகும் போது கூட ஒரு அநாதையை சேர்த்துக் கொள்பவர் சொர்க்கம் செல்வார்.என்றும் நபிகள் அவர்கள் சொன்னார்கள். (திர்மிதி 1840)
அநாதைகளுக்கு உபகாரகமாக இருக்கிற வீடே சிறந்த வீடு அநாதைகளுக்கு தொல்லை தருகிற வீடு கெட்ட வீடு என்றும் நபிகள் அவர்கள் சொன்னார்கள்.(இப்னுமாஜா 3669)
தனது இதயம் கடினமாகவே இருப்பதாக முறையிட்ட ஒரு தோழருக்கு “உனது இதயம் மென்மையடைய வேண்டுமெனில் அநாதைகளுக்கு உணவு கொடு!, அவர்களின் தலையை தடவி விடு!” (அஹ்மது 7260)என்று நபிகள் அவர்கள் அறிவுரை சொன்னார்கள்.

இந்த அறிவுரைகளின் பொருள் அநாதைகளை ஆதரிக்க அநாதை நிலையங்களை தொடங்குங்கள் என்பதல்ல. அநாதைகளை உங்களது சொந்தப் பொருப்பில் பராமரியுங்கள் என்பதாகும். இதுவே அநாதைகளை பராமரித்தல் என்பதற்கு இஸ்லாம் கூறிய முதன்மை பொருளாகவும்.

இதிலுள்ள தத்துவம் மிக் எளிதானது. அதே நேரத்தில் மிக முக்கியமானது. அநாதகளை சொந்த வீட்டில் வைத்து பராமரிக்கும் போது அவர்களுக்கு குடும்ப உணர்வும் உறவின் நெருக்கமும் கிடைக்கும். உடலின் பசியை மட்டுமல்ல மனதின் காயத்திற்கும் அது ஆறுதலை தரும். சமூகத்தின் மீது ஒரு நல்லெண்ணத்தையும் அக்கறையையும் அது அவர்களிடம் விதைக்கும். அநாதைகளை நிலையங்களி தனிமைப்பாடுத்வது முழு மனிதாபிமானமாகாது என்பது மட்டுமல்ல அது ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைகவும் செய்யாது.

ஒரு தொழிலதிபர் சென்னையில் உள்ள ஒரு அநாதை நிலையத்திற்கு சென்றார். அங்குள்ளவர்களுக்கு தனது பங்களிப்பை தந்தார். அதன் பிறகு அந்த நிலையத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகிற போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து உனது பெயர் என்னப்பா என்று வாஞ்சையோடு விசாரித்திருக்கிறார். அந்தப் பையன் வெடுக் கென்று தனது பெயரைச் சொல்லிவிட்டு அகன்று விட்டான். அந்த தொழிலதிபர் சொன்னார். அந்த பையன் சமூகத்தை தூ என்று உதறித்தள்ளியது போல இருந்தது. அவன் முகத்தில் ஒரு வெறுமையும் கோபமும் தெரிந்தது என்றார்.

இதுதான் ஆதரிக்க வேண்டியவர்களை தனிமைப் படுத்தி வைப்பதின் தீய விளைவு. என்னதான் அவர்களுக்குத் தேவையானதை செய்தாலும் அன்புக்கும் அரவனைப்புக்கும் அது ஈடாகாது.

ஹிஜ்ரத் கற்றுத்தருகிற் அற்புதமான செய்திகளில் இதுவும் ஒன்று.

ஹிஜ்ரீரத் என்பது ஒரு வரலாறு அல்ல. நூற்றுக்கணக்கான உணாவெழுச்சிமிகுந்த வரலாறுகளின் தொகுப்பு.

அந்த வரலாறுகளின் வழியே பார்வையை செலுத்தினர்ல்..
• ஹிஜ்ரத் என்பது லட்சியத்திற்கான குறியீடு.
• ஹிஜ்ரத் என்பது எதிப்பு வேதனை ஏளனம் அனைத்திற்குமான முடிவு .
• ஹிஜ்ரத் என்பது வெற்றியின் தலைவாசல்
• ஹிஜ்ரத் என்பது திட்டமிடுதலை கற்றுத்தரும் பள்ளிக்கூடம்.
• ஹிஜ்ரத் என்பது நம்பிக்கையின் வௌச்சக் கீற்று..
• ஹிஜ்ரத் என்பது நட்பின் உரைகல்
• ஹிஜ்ரத் என்பது வளமான வாழ்கையின் முன்னறிவிப்பு
• ஹிஜ்ரத் என்பது இறைநம்பிக்கை - தவக்குலின் சிகரம்.
• ஹிஜ்ரத் என்பது சொர்கத்தின் வழித்தடம்.
• ஹிஜ்ரத் என்பது வீரத்தின் வெளிப்பாடு
• ஹிஜ்ரத் என்பது லட்சியத் துணைகளின் எடுத்துக்காட்டு.
• ஹிஜ்ரத் என்பது மகோன்னதாமான மனிதாபிமானிகளின் வரலாறு.

சிந்திக்க சிந்திக்க பெருகி வரும் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமானவை. இரத்தமும் சதையுமாய் உலாவிய உதாரணங்களைக் கொண்டவை.

ஹிஜ்ரத்திற்குப்பிறகு தான் இஸ்லாம் வளாந்தது; செழித்தது; உலகம் முழவதிலும் வியாபித்தது. இன்று இஸ்லாம் உலகமயமாகி இருக்கிறதென்றால், அதறகு வாசலை திறந்து விட்ட பெறுமை ஹிஜ்ரத்தையே சாரும்!.

புதிய ஹிஜ்ரீ ஆண்டு ஹிஜ்ரத்தின் புனித உணர்வுகள் அத்தனையையும் மொத்தமாய் புமிக்குத் தந்து மானுடத்தின் வாசலில் மகிழ்ச்சித் தோரணம் கட்டட்டும்.

ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம்

ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம்

கடந்த ஆண்டு நான் எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ்ஜுக்கு சென்றிருந்தேன். அப்போது நணபர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்த்னர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார். அது ஒரு மகத்தான செய்தி.

ஹஜ்ஜு முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. ஹஜ்ஜில் கண்ட இட்மெல்லாம் அந்தக் கருத்து ஒரு ஸ்க்ரோலிங் செய்தி போல திரும்பத் திரும்ப ஓடுவது போல நான் உணர்ந்தேன்.

அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள். அடால் ஹிட்லர். மேற்கத்திய ஊடகங்கள் மிககெட்டவராக அடையாளம் காட்டட்படுகிற இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமான சாட்சாத அதே ஹிட்லர் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அடால்ப் ஹிட்லர் கூறயுள்ளதாக நண்பர் சொன்ன முழு வாசகம் என் நினைவில் இல்லை. என்னும் அதில் பிரதான மாக இருந்த கருத்து.

“முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மகத்தான ஒருங்கிணைப்பாளர். அவரது ஒருங்கிணைப்பின் சாதனைக்கு மிகப் பெரிய உதாரணம் அவருக்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைப்பாளரின் தேவையில்லாமலே ஒரு அமைப்பு வெற்றி நடை போடுகிறது.”

நண்பர் சொல்லிக்கொண்டு போன வேகத்தில் இந்தக் கருத்தை எத்தனை பேர் கவனத்தில் கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால அவர் சொல்லச் சொல்லவே என்னுள் இது பசை போட்டு உட்காந்ந்து கொண்டது.

மனிதர்களில் சாதனையாளர்கள் பலர் இருக்கலாம். அவர்களது சாதனைகளும் பெரிதாக இருக்கலாம். ஆனால் அவர்களில் “ஆர்கணைசிங் கெப்பாசிட்டி” என்பப்டும் ஒருங்கிணைப்புத் திறன் கொண்ட மனிதர்களை காண்பது மிக அரிது. நாலு பேரை ஒருங்கிணைத்து ஒரு காரியத்தை செய்து அந்த நாலு பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிற திறன் எல்லா சாத்னையாளர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை.
சிலர் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.ஆனால், அவர்களால் நாலு பேர்களோடு சேர்ந்திருப்பதே சிரம்மாமக இருக்கும். இன்றைய உலகின் மிக மரியாதையான் விருதாக கருதப்ப்டுகிற நோபல் பரிசை வழங்குவதற்காக தனது சொத்துக்களை தானமளித்த ‘ஆல்பிரட் நோபல்’ டைன்மைட், ஜெலட்டின், செய்றகை பட்டு, செய்றகை ரப்பர், போன்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். ஆனால் கடைசிவ்ரை அவர் யாரோடும் அனுகி இருக்காமல் தனிமையில் வாழ்ந்தார். திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.

சிலர் நான்கு பேரை கவர்கிற ஆற்றல் கொண்டிருப்பார்கள் ஆனால் அந்த நாலு பேரை நிர்வகிக்கிற சக்தியோ அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அரிய காரிய்த்தை செய்து முடிக்கிற ஆற்றலோ குறைந்த பட்சம் தனது ஆதரவாளர்களை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்திச் செல்கிற திறனோ அவர்களுக்கு இருக்காது.

இத்தகையோரது சாதனைகள் மதிப்பிற்குரியவையாக இருந்தாலும் அவை பிரம்மாண்டமானவையாகவோ வரலாற்றை வாழ வைப்பதாகவே அல்லது ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதாக்வோ இருக்காது. காலத்தால் அது முறிய்டிக்கப் படும். அல்லது விஞ்சப்ப்டும்.

என்வே தான் சாதனையாளர்கள் மத்தியில் “ஆர்கணைசிங் கெபாசிட்டி” ஒருங்கிணைப்புத் திறன் என்பது மிக மதிப்பாகவும் கவர்ச்சியாகவும் கவனிக்க்ப் படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனியர்களை ஒன்றிணைத்து மிக வலிமையாக வழி நடத்திச் சென்ற அடால்ப் ஹிட்லரரின் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அந்தப் பெரும் சாதனை பிரதானமாக தென்பட்டிருக்கிறது.

உலக வரலாறு பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்ற ஒரு ஒருங்கிணைபுச் சாதனையாளரைப் பார்த்ததில்லை.